Wednesday, 19 June 2019

குரு பகவானும் ,சனி பகவானும்

                                குரு பகவானும் சனிபகவானும்


                               

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                            ஜாதகத்தில் குரு பகவானும் சனிபகவானும் எதிரிடையான கருத்துக்களைக் கொண்டவர்கள் .குரு பகவான் மேல்மட்ட நிலை கொண்டவர் .சனிபகவான் கீழ்மட்ட நிலையிலும் உள்ளவர்களை ஆதரிப்பவர்.

                      குரு பகவான் பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ஞானம் ,வேதம் மற்றும் புத்திர பாக்கியம் போன்றவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாக விளங்குபவர் .

                   குரு பகவான் ஜாதகரை மனநிலையிலும் மற்றும் உடல் நிலையிலும் தான் உடுத்தும் உடை ,பேசும் பேச்சு போன்ற எல்லாவற்றிலும் நேர்மையையும் நாணயத்தையும் கடை பிடிப்பவராக இருப்பார். சற்று கர்வமுடையவராகவும், ஞானச் செருக்கு உடையவராகவும் இருப்பார்.

                  தனக்கு சரிசமமாகவும் மற்றும் மேலான நிலை உள்ளவர்கள் மட்டும் பழக கூடியவராக இருப்பர்.

               வேதம் இயற்றுதல் சொற்பொழிவு பாடம் நடத்துதல் மற்றும் படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்வார்.

                சனி பகவான் சாதகர் எப்பொழுதும் கிழிந்த மற்றும் மசகு பிடித்த சட்டையை அணிபவராகவும் திகழ்வார் இவர் இருக்கும் இடத்தை சுற்றி குப்பைகளும்,
கூளங்களும் மிகுந்திருக்கும்.

                இவர்கள் தனக்கு கீழான நிலை உள்ளவர்களிடம் பழகக் கூடியவர்கள். இவர்கள் பேச்சிலும் செயலிலும் மற்றும் நடத்தையிலும் ஒருவித நேர்மை மற்றும் நாணயத்தன்மை காணப்படாது.

                    அதே நேரத்தில் சனி பகவான் சுப சாரம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டாலும் பத்தாமிடத்தில் அமரும்போது அமலயோகம்  பெற்று மக்கள் போற்றும் மகத்தான தலைவராக திகழ்வார். இருப்பினும் இவர்கள் எண்ணத்திலும் செயலிலும் ஒரு வித கீழான நிலை மற்றும் புத்தி காணப்படும்.

               குரு பகவான் white colour job என்று சொல்லக்கூடிய நிர்வாகத் திறன் உள்ள  தனது அறிவைக் கொண்டு பிழைக்கும் வேலை கிடைக்கும் .

                  சனி பகவான் பாவர் சாரம் பெற்று மிகக் கூடிய சூழலில் தனது சட்டையை கழட்டி வைத்து விட்டு வேறு உடை அணிந்து உடல் முழுவதும்  ஆயில்,மசகு போன்றவற்றை அப்பிக்கொண்டு வேலை பார்க்கும் மெக்கானிக்காக இருப்பார். அதே வேகத்தில் சனி பகவான் சுபர் சாரம் பெற்று நிற்கும்பொழுது  இதுபோன்ற மெக்கானிக்கை நிர்வாகிக்கும் பொறியியல் நிபுணராக அல்லது மேலாளராக இருப்பார்.

               குரு பகவான் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கோயில் குருக்கள் ,ஆன்மீக சொற்பொழிவாளர்கள், கோயில் ஓரத்தில் கோவில் பூஜைக்கு தேவையான பொருட்களை விற்றுப் பிழைக்கும் முதலாளிகள், ஆன்மீக ,இலக்கிய மற்றும் பட்டிமன்ற சொற்பொழிவாளர்கள், புரோகிதர்கள், கல்வி நிலையங்களை வைத்து  நடத்தி பொருளீட்டும் முதலாளிகள் மற்றும் குறி சொல்லும் பூசாரிகள் போன்றவர்களை உருவாக்குவதில் குருபகவான் பங்கு மேலானது.

                     சனிபகவான் ஆனவர் இரும்புக்கு காரகன் ஆவார் .எனவே கட்டிடத்திற்கு தேவையான இரும்புக் கம்பிகளை விற்கும் முதலாளிகள், கட்டடங்களைக் கட்டும் பொறியாளர்கள், கட்டடங்களைக் கட்டி விற்க்கும்  முதலாளிகள், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிகல் பொருள்கள், பாத்திர கடை முதலாளிகள் ,மெக்கானிக்,இரும்பு வியாபாரம், பழைய இரும்பு பொருட்களை வாங்கும் பழைய இரும்புக் கடைக்கு முதலாளிகள் ,பெரிய கனரக இயந்திரங்களை வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள், டிரைவர்கள் போன்ற  தொழில்களையும் சாதகருக்கு தருவதில் சனி பகவான் பங்கு அலாதியானது.

                        குரு பகவான் ஆனவர் இலக்கணத்தில் திக்பலம் பெறுகிறார்.  சனி பகவான்  ஏழாமிடத்தில் திக்பலம் பெறுகிறார். ஆனால் நன்றாக கவனித்தால் இதில் ஒரு சூட்சுமம் உண்மை புலப்படும்.  என்னவாக இருக்கும் என யோசிக்கிறீர்களா? இதோ விளக்குகிறேன். குருபகவான் ஆனவர் திக்பலம் பெற்ற இடத்தில் சனி பகவான் தனது திக் பலத்தை இழந்து நிற்கிறார். இதேபோல சனிபகவான் திக் பலம் பெறும் ஏழாம் இடத்தில் குரு பகவான் தனது பலத்தை இழந்து நிற்கிறார்.

                         இதிலிருந்து அறிந்து கொள்ளவேண்டிய சூட்சும உண்மை என்னவெனில் குரு பகவான் பலம் பெற்று இருக்கும் இடத்தில் சனி பகவான் தனது பலத்தை இழந்து நிற்கிறார் . அதேபோல சனி பகவான் பலம் பெற்று இருக்கக் கூடிய அமைப்பில் இருக்கும் போது குரு பகவான் தனது பலத்தை இழந்து நிற்கிறார்.

                குரு பகவானுடன் சனிபகவான் சேரும்போது குரு சண்டாள யோகம் தந்து குருவினுடைய தன்மையான  ஆன்மீகம் போன்ற தன்மையிலிருந்து மாறி பகுத்தறிவு கருத்து உள்ளவர்களாக சாதகரை மாற்றிவிடுகிறது. இதேபோல குருவும், சனியும் சமசப்தம பார்த்துக் கொள்ளும் போது கூட குருவின் இயல்பான தன்மையை சனிபகவான் மாற்றி அமைத்துவிடுகிறது.

                 ஆனால் குருபகவான் ஆனவர் சனிபகவானை 5 மற்றும் 9ம் பார்வையால் பார்க்கப்படும்போது ஜாதகரை ஆன்மீகத் தலைவராக  அல்லது ஆன்மிக ஞான விஷயங்களில் ஈடுபடுவராக மாற்றி விடுகிறது.

                குரு பகவானால்  நீதிநெறி கதைகளையும், நீதிமானாக எவ்வாறு திகழ்வது என்பதை ஜாதகருக்கு புரியவைக்கிறார் .ஆனால் சனி பகவான் நீதி வழங்கும் நீதிமானாக உள்ளார்.

                   குரு பகவான் ஆன்மீக காரகன், புத்திர காரகன் மற்றும் தனகாரகன் என்று அழைக்கிறோம். சனிபகவானை கர்மகாரகன், இரும்புக்காரகன், மற்றும் ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரது புத்தி ,அறிவு சிந்தனை மற்றும் செயல் போன்றவற்றை தீர்மானிப்பதில் குருபகவானின் பங்கு அலாதியானது .

               ஆனால் சனிபகவான் ஆனவர் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பது மிக முக்கிய காரணகர்த்தாவாவார். ஒருவர் அவர் செய்யும் கர்மவினைக்கு ஏற்பவும் மற்றும் முற்பிறப்பில் செய்த ஊழ்வினைப் பயனுக்கு ஏற்பவும் ஒருவருக்கு ஆயுளை வழங்குவதில் சனி பகவான் முக்கியமானவர். மேலும் ஒருவருக்கு வரக்கூடிய மரணத்தின் நிலையையும் முடிவு செய்பவர் சனி பகவானே ஆவார்.

நன்றி

(தங்களது ஜாதகபலன், திருமணப்பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற , தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647

  செல்
  9715189647
    7402570899



  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ),
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: