Wednesday, 19 June 2019

கிரகங்கள் படுத்தும் பாடு

                             கிரகங்கள் படுத்தும் பாடு


                                                                                  

செவ்வாய்ப்பட்டி  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


                   ஒரு சில ஜாதகங்களில் ஒரு சில கிரகங்களை தவிர மற்ற கிரகங்கள் சரியாக பலப்படாமல் பலவீனப்பட்டு இருக்கஅந்த ஒரு சில பலமடைந்த கிரகங்களின் திசைகள் வாழும் காலத்தில் உரிய வயதில் வந்து சாதகரை எதிர்பாராத உயர்வு நிலைக்கு கொண்டு சென்றுவிடும். 
    ஆனால் அவர் ஜாதகத்தை பார்க்கும்போது மிகவும் மோசமான நிலையில்  காணப்படும்.

                   ஆனால் ஒரு சில ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு சில கிரகங்களை தவிர பெரும்பாலான கிரகங்கள் உச்சம் ஆட்சி போன்ற பலமடைந்த நிலையில் காணப்படும் . ஆனால் அந்த பலமடைந்த நிலையில் காணப்படும் கிரகங்களின் திசைகள் இளவயதில் வாழும் காலத்தில் வராமல் சாதகரை துன்பம் கொள்ள செய்யும். இது ஒரு துரதிருஷ்டமே.


           ஒரு சிலருக்கு ஏழரை மற்றும் அஷ்டமச் சனி காலங்களில்  நிறைய எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தந்து வாழ்க்கையை உயர்நிலைக்கு கொண்டு சென்றிருப்பதை காணலாம்.


                ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு சனி பகவான் யோகராக செயல்படுவதால்  இது போன்று ராசிகளுக்கு ஏழரை மற்றும் அஷ்டமச் சனி காலங்களில் எதிர்பாராத  அதிர்ஷ்டங்களை தந்து வாழ்வில் உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது.


          இயற்கை சுபராக இருந்தாலும் குருபகவான் தசையானது துலா ராசிக்கும், புதன் திசையானது மேஷ ராசிக்கும், சுக்கிரன் திசையானது மீன ராசிக்கும் நல்ல பலனைத் தந்துவிடுவதில்லை.


         இது போல பாவராக இருந்தாலும் செவ்வாய் திசையானது கன்னி ராசிக்கும், சூரியன் திசையானது மீன ராசிக்கும் நற்பலனை தந்து விடுவதில்லை.


             ஒரு ஜாதகத்தில் கோசாரப்படி ஏழரை, அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் ராகு பகவான் அல்லது சந்திரன் திசையோ  நடப்பில் இருக்கக் கூடாது. இவை மிதமிஞ்சிய கஷ்டங்களை சாதகருக்கு தந்துவிடும்.


        "குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்ற வகையில் ஒரு ஜாதகருக்கு துவக்க திசையே  சுக்கிர திசையாக இருந்து அத் திசை ஜாதகருக்கு இளம்பிராயத்தில் வரும்பொழுது ஜாதகரை இழப்பிராய  வேகத்தில் செயல்பட்டு சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் கஷ்டங்களை  அனுபவிக்க நேரிடும் என்பதால் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்றார்கள்.


           ராகு பகவானுக்கு சொந்த வீடு இல்லை என்பதால் அவை இருக்கும் வீட்டினையே சொந்த வீடாகக் கொண்டு செயல்படும்.


          ராகு திசை ஆனது எந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது அந்த வீட்டின் அதிபதி பலனை உறிஞ்சி அதன் தசையில் தர முயலும். அத்துடன் மட்டுமல்லாமல் ராகு பகவானை பார்த்த மற்றும் சேர்ந்துள்ள கிரகங்களில் பலனை எடுத்து தனது திசையில் தரக் கூடிய வாய்ப்பு உண்டு .சில நேரங்களில் ராகு பகவான் தான் பெற்றுள்ள நட்சத்திர சார அதிபதியின் பலனையும்‌தனது திசை காலங்களில் தர முயலும்.


               நடைபெறும் திசையானது சாதகருக்கு யோக பலனை தர வேண்டும் எனில் அது லக்னாதிபதிக்கு நட்பாக அமர்ந்து லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கு கேந்திர ,கோணங்களில் அமர்ந்து இயற்கை மற்றும் ஸ்தானத்தின் அடிப்படையில் சுபராக இருந்து  திசை நாதன் மீது அதன் பார்வை பட நடைபெறும் திசையானது  ஜாதகருக்கு அந்த திசை நடைபெறும் காலங்களில் யோகா பலன்களை  அள்ளிக் கொட்டுகிறது.


            நடைபெறும் திசையானது லக்னாதிபதிக்கு பகையாகவும் அல்லது லக்னாதிபதி இருக்கும் இடத்திற்கு மறைவிடங்களிலும் நின்று இருப்பின் அந்த திசையானது யோகப் பலனைத் தராது.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்க்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


                                              வாட்ஸ் அப்                                                                       9715189647


                                                   செல் 

                                         9715189647  

                                              74025708999


                                                             
                                     அன்புடன்

                  சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்  

                                             M.Sc,M.A,BEd,

                   (ஆசிரியர்& சோதிட ஆராய்ச்சியாளர்)

          ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்                                கறம்பக்குடி 

                         புதுக்கோட்டை மாவட்டம்

No comments: