பேய், பில்லி, சூனியம் பாதிக்கும் காலங்களும்,பரிகாரமுறைகளும்.
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
இன்றைய நவீன யுக வளர்ச்சியில் நவநாகரீக இளைஞரிடம் நாம் சென்று பேய், பில்லி, சூனியம் பற்றி பேசினால் அவருக்கு அது கிண்டலாக தெரியும்.
" என்ன சார் ,உங்களைப் பார்த்தால் நிறையப் படித்தவர்கள் போல் தெரிகிறது .ஆனால் இந்த கால கட்டத்தில் நீங்கள் போய் " பேய் ,பில்லி, சூனியம் பற்றி ரீல் விடுறீங்களே சார்" என்று கிண்டல் அடிப்பார்கள்.
ஒருவருக்கு நல்ல நேரம் நடக்கும் வரை இது போன்ற தாக்குதல் இருந்தாலும் அந்த தாக்குதல் அந்த ஜாதகரை பாதிப்படையச் செய்வதில்லை. அதே நேரத்தில் அவருக்கு நடக்கக்கூடிய திசையானது நல்ல திசையாக அமையாத பட்சத்தில் பேய், பில்லி சூனியம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவர்.
'யார் ஒருவரும் வெற்றி மேல் வெற்றி வரும் பொழுது அந்த வெற்றி தனது திறமையால் நடந்தது என்று பெருமை பீற்றிக் கொள்வதும், ஆனால் அதே நேரத்தில் தோல்வி மேல் தோல்வியாக ஒருவர் சந்திக்க நேரும் போது மட்டும் நேரம் சரியில்லை என்று கூறுவது சாதாரண மானிடரின் பண்பாகும்."
ஒரு ஜாதகருக்கு எந்த நேரத்தில் பேய், பில்லி, சூனியம் வேலை செய்யும் என்பதை தற்பொழுது பார்ப்போம்.
1) ஒருவருக்கு பாதகாதிபதி தசை நடந்து சத்துரு ஸ்தானாதிபதி புத்தியிலும்,
2) சத்ரு ஸ்தானாதிபதி திசை பாதகாதிபதி புத்தி நடைபெறும் காலங்களிலும் ,
3) ஒருவர் ஜாதகத்தில் அஷ்டமஸ்தானத்தில் சனி, ராகு ,கேது போன்ற கிரகங்கள் இருந்து அந்த கிரகங்களின் திசை நடைபெறும் காலங்களிலும் சாதகருக்கு மேற்கண்ட பாதிப்பு ஏற்படுகிறது.
அல்லது
அஷ்டமத்துடன் தொடர்புடைய சனி ,ராகு, கேது புத்திகளிலும் மேற்கண்ட தோஷம் உருவாகிறது.
4) கோசாரப்படி அஷ்டமத்தில் சனி, ராகு கேது ,போன்ற பாவ கிரகங்களின் ஆதிக்கம் தொடர்ந்து முடியும் வரை மேற்கண்ட பாதிப்பு உருவாகிறது.
சாதகருக்கு யாரால் செய்வினை தோஷம் செய்யப்பட்டது என்பதை கண்டறிவதற்கு 'ஆறாம் அதிபதி இருக்கும்" இடத்தைப் பொறுத்தும் செய்வினையை யார் உருவாக்கியது? என சொல்லிவிடலாம்
எதனால் இந்த செய்வினை தோஷம் உருவானது என்பதை கண்டறிய 'பாதகாதிபதி அமையும் இடத்தைப் பொருத்து" கண்டறியலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும், மனநிலைக்காரகன் சந்திரன் பலமிழந்து சூழலில் மேலே குறிப்பிடப்பட்ட தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு செய்யப்பட்ட செய்வினை தோஷம் தாங்கும் மனநிலை அற்றவராக பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
பாதகாதிபதி தசையை விட பாதகஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் அதன் தசாபுக்தி காலங்களில் மிகுந்த பாதிப்பை தருகிறது.
அதேபோல ஆறாம் அதிபதியை விட ஆறாம் இடத்தில் அமைந்த கிரகங்கள் மேற்கண்ட தோஷ பாதிப்பு அதிகம் தருகிறது.
இதேபோல அஷ்டமாதிபதியை விட அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி, ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் அதிகமான பாதிப்பைத் தருகிறது.
பேய் பில்லி சூனியம் போன்ற செய்வினை தோஷங்கள் மேலே குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட தசை காலங்களில் மட்டும் அல்லது புத்திக் காலங்களில் மட்டும் மற்றவர் ஏவிய பாதிப்பு சாதகரை வந்தடைகிறது. அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவை அதனை ஏவி விட்டவரை அல்லது ஏவி விட்டு காரணமானவரை நோக்கி பாய்கிறது.
இதுபோன்ற பில்லி, சூனியம் செய்பவர்கள் "சுவற்றின் மீது வீசி எறியப்பட பந்து எப்படி நம்மை திரும்பி வந்து அடைகிறதோ" அதேபோல அதை செய்தவர்களை நோக்கி இரண்டு மடங்காக திரும்புகிறது.
"கெடுவான் கேடு நினைப்பான் " என்ற பழமொழிப்படி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பலத்த பாதிப்புக்குள்ளாவதை அனுபவ அடிப்படையில் நான் பார்த்திருக்கிறேன்.
அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கினால் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி "ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு"(action and reaction equal but opposite) என்ற அடிப்படையிலும் ,
"வினை விதைத்தவன் வினையை அறுப்பான், தினை விதைத்தவன் தினையை அறுப்பான்" என்ற பழமொழிபடியும் இது போன்ற கெட்ட செயலில் ஈடுபடுவார்கள் அந்த கெட்ட செயலாலே பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது இயற்கை நியதி ஆகும்.
பேய் பில்லி சூனியம் நீங்க பரிகாரங்கள்
1) ஒரு குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டங்கள் வர சில நேரங்களில் பேய் பில்லி சூனியம் அல்லாது வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஒரு சமயம் தங்களது குல தெய்வத்தை வழிபட மறந்திருக்கலாம் ஒருவருக்கு ஏனைய தெய்வ வழிபாட்டை விட குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமானதாகும் எனவே மூன்று பௌர்ணமி தொடர்ந்து தனது குலதெய்வ கோயிலுக்குச் சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து வர வேண்டும்.
2) உங்கள் ஊருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு சனிக்கிழமை சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு கீழ்க்கண்ட பொருட்களை வைத்து பூசை பூசை செய்து வழிபடலாம்.
தேங்காய் -9
வாழைப்பழம்-18
வெற்றிலை-18
கொட்டை பாக்கு-18
கதம்பம்-9 முழம்.
3) வீடு அல்லது வியாபார ஸ்தலத்தில் பரிகாரம்.
. தங்களது வீடுகளில் அல்லது வியாபார ஸ்தலங்களில் குலதெய்வத்திற்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டு பிறகு 27 எலுமிச்சம் பழம் எடுத்து சாறு பிழிந்து ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வீடு அல்லது வியாபார ஸ்தலத்தை சுற்றி தெளிக்கலாம். பிறகு அந்த பிழிந்த 27 எலுமிச்சைப் பழத் தோலை 27 அரசங்குச்சியுடன் வைத்து எரித்து அந்த சாம்பலை வீடு அல்லது வியாபார ஸ்தலத்தை சுற்றி வீசலாம்.
நன்றி!
(தங்களது ஜாதக பலன், திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
No comments:
Post a Comment