ஜோதிடம்- ஒரு பிரபஞ்ச விஞ்ஞானம்
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென ஒரு குறிப்பிட்ட அதிர்வினை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்வாறாக தானாக இயல்பாக வெளியிடுகின்ற அதிர்வுகளை "இயல்பு அதிர்வுகள்" என்றழைக்கிறோம் .
ஒரு சில நேரங்களில் வேறு சில புறக் காரணிகளால் ஒரு பொருளின் மீது அதிர்வுகள் திணிக்கப்படுகிறது.
இதனை "திணிப்பு அதிர்வுகள்" என்று அழைக்கிறோம்.
இப்பிரபஞ்ச உலகில் உயிருள்ள பொருட்கள் மட்டும் அதிர்வுகளை வெளியிடுகிறது என முடிவு செய்து விட முடியாது. உயிரற்ற பொருள்களும் அதிர்வுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.
இன்றைய நவீன கால இனையத்தை கைக்குள் பயன்படுத்தும் நவநாகரிக இளைஞன் நம்மை பார்த்து கேள்விகள் கேட்கலாம்.பிரபஞ்சத்தில் எங்கே விண்வெளி மீது சுற்றி கொண்டுள்ள கோள்கள் (planets) ஒரு மனிதனுடைய வாழ்வை எவ்வாறு பாதிக்கும் என கிண்டல் கேலி செய்ய கூடும்.
இதற்காகவே அவர்கள் மொழியில் விஞ்ஞானத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சோதிடத்தை விளக்க முயல்கிறேன்.
இதேபோல இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது அவ்வாறு ஒரு பொருள் வெளியிடக்கூடிய ஆற்றலின் அளவை "குவாண்டம்" என்ற அறிவியல் வார்த்தையால் அளக்கப்படுகிறது.
இயற்க்கையில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலையும், அதிர்வுகளையும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
சில நேரங்களில் ஒரு பொருளின் இயல்பான அதிர்வும், திணிக்கப்பட்ட அதிர்வும் சமமாகும்போது பேரளவு அதிர்வு உருவாகி "ஒத்ததிர்வு" ஏற்படுகிறது.
எனவே இயற்கையாகவே ஒவ்வொரு மானிதனுக்குள்ளும் உள்ள ஆற்றலை "உள் ஆற்றல்"(internal energy) என்கிறோம்.
இயற்கையாகவே ஒரு சில மனிதர்களுக்கு மட்டும்தான் இந்த உள் ஆற்றலின் அளவு அதிகமாக இருக்கும்.இது கடவுளின் கொடை எனலாம். ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த உள் ஆற்றலின் அளவை அதிகரிக்க வெளியிலிருந்து கொடுக்கப்படும் அதிர்வுகள் மூலமாக உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோப்படுகிறது.
இந்த உள் ஆற்றலின் அளவை அதிகரிக்க வெளியிலிருந்து கொடுக்கப்படும் புறக் காரணிகளாக தியானம், யோகா மற்றும் கடவுள் வழிபாடு போன்றவை உதவுகிறது.
பெரும்பாலும் இந்த உள் அதிர்வுகளையும் மற்றும் ஆற்றலையும் நிர்ணயம் செய்வதில் கிரகங்களின் பங்கு முக்கியமானது. அதாவது அவர் ஜனன காலத்தில் உள்ள கிரக நிலையும் மற்றும் தற்போது உள்ள கோச்சார நிலையை பொருத்தும் பாதிக்கப்படுகிறது.
இந்த அதிர்வுகளைதான் நாம் ஆங்கிலத்தில் frquency என்கிறோம்.இந்த அதிர்வுகளை அதன் அதிர்வெண் அடிப்படையில் வரிசையாக அடுக்கி வைப்பதை அலைவரிசை என்கிறோம். இந்த அலைவரிசை தான் ஸ்பெக்ட்ரம்(spectrum) என்றும் அழைக்கப்படுகிறது.
மின்காந்த அலைகளின் மிக முக்கியமான சிறப்பு என்னவெனில் இவை பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை(no need media to spread the atmosphere).
ஒலி-ஒளி அலைகள் பரவ கட்டாயம் திட,திரவ மற்றும் வாயு போன்ற ஊடகங்களின் (media) உதவி அவசியமாகிறது. வெற்றிடத்தில் ஒளி மற்றும் ஒலி அலைகள் பரவுவதில்லை.
வளிமண்டலத்தை தாண்டி காற்றில்லாமல் வெற்றிடமாக இருப்பதால் ஒலி-ஒளி அலைகள் பரவுவதில்லை.
குறிப்பிட்ட அலைவரிசையில் வளிமண்டலத்தை தாண்டி பரவி செல்வதற்கு ஒளி மற்றும் ஒலி அலைகளை பயன்படுத்த இயலாத சூழலில் மின்காந்த அலைகள் (elctro-magnatic waves) பயன்படுத்தப்படுகிறது.
மின்காந்த அலைகளை ஒருகுறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதாவது அலைவரிசையில் விண்ணில் செலுத்துதலையே
"அலை வரிசை எண் " என அழைக்கப்படுகிறது. அலைவரிசை எண் ஒதுக்கீடு அரசால் செய்யப்படுகிறது.
இந்த அடிப்படையில்தான் இன்றைய தொலைக்காட்சி சேனல்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகிறது.
இப்பிரபஞ்சத்தில் பரவியுள்ள ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் உள்ள மின் காந்த அலைகளை ஒரு ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் முடுக்கி நிகழ்ச்சி ஒளிபரப்புகள் பெறப்படுகிறது.இதனை programme setting என்கிறோம்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள அலைவரிசையை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் சிறிய கையடக்க முடிக்கி விடப்பட்ட (activate) ரிமோட் கண்ட்ரோல் மூலம் பெறமுடிகிறது என்பது அறிவியல் அறிவு உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை ஆகும். இதே அடிப்படையில் தான் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள கோள்களும் தனது குறிப்பிட்ட
அதிர்வெண்ணில் மனிதனுடைய செயல்பாடுகளை பாதிப்பு உண்டாகிறது.
நபருக்கு நபர் இந்த அதிர்வின் தாக்கம் ஜனன காலத்தில் பால்வீதியில் உள்ள கிரக நிலையை பொருத்தும் மற்றும் அன்றைய கோசார நிலையை பொருத்தும் அமைகிறது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் வெளிப்படுத்தும் தனது எண்ண அலைகளால் இப்பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களைப் பாதிக்கிறது. எனவேதான் நல்ல எண்ண அலைகள் நம்மைச் சுற்றி பரவி நம்மை பலப்படுத்துவதோடு நம்மை சுற்றியுள்ள சமூகத்தையும் பலமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது.
கெட்ட எண்ண அலைகள் தம்மையும் பலமிழக்கச் செய்வதோடு சுற்றியுள்ள சமூகத்திலும் கெட்ட அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
தியான வலிமையால் மனதை தன் வசப்படுத்திய இரு சித்தர்கள் அல்லது தவ வலிமை மிக்கவர்கள் சந்திக்கும் பொழுது அவர்கள் ஒருவருக்கொருவர் வாய்மொழி வழியாக பேசிக்கொள்வதில்லை.
அவர்கள் தங்களுக்குள் எழும் சந்தேகங்களை எண்ண அலைகள் மூலம் மற்றவருக்கு வினா எழுப்ப , அதற்கு மற்றொருவர் தனது எண்ண அலைகளாலே பதிலை அனுப்ப
தங்களுக்குள்
பேசிக் கொள்ளாமலே செய்திகளை பரிமாறி கொள்கின்றனர். இதனைதான் " பரிபாசை" என்று சொல்வார்கள்.
பொதுவாக பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. அணுவைப் பிளக்க அளப்பரிய ஆற்றலும்,அலைவீச்சும் வெளிப்படுகிறது என விஞ்ஞானம் கூறுகிறது.
மின்காந்த அலைகள் மூலமாக செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக கொண்டுசெல்ல முடிகிறது என்ற உண்மை நவீனகால இளைஞர் அனைவருக்கும் தெரியும்.
அலைபேசியை எடுத்து கால் செய்து ஹலோ என்று நாம் சொன்னால் பல மைல்களுக்கு அப்பாலுள்ள எதிர் முனையில் உள்ள நபர் எந்தவித காலதாமதமின்றி உடனே "ஹலோ" என்று சொல்லுமளவிற்கு அவ்வளவு விரைவாக இந்த செய்தியை மின்காந்த அலைகள் கொண்டு செல்வதை நாம் அனுபவ பூர்வமாக காண்கிறோம்.
இதேபோல்தான் பல மைல்களுக்கு அப்பால் உள்ள விண்வெளியில் சுற்றிக் கொண்டுள்ள நவ கோள்களிலிருந்து வெளிப்படக்கூடிய கதிர்வீச்சால் ஒரு குழந்தை இப்பிரபஞ்சத்தில் ஜெனிக்கும் போது ராசி கட்டத்தில் எந்த இடத்தில் அமர்ந்து கதிர்வீச்சினை வெளியிடுகிறது என்பதை பொருத்தும் அக்குழந்தையின் வளர்ப்பில் பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை விளக்குவதே ஜோதிடவியல் ஆகும்.
நன்றி
விந்தைகள் தொடரும்...
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப.ரவிச்சந்திரன் (ஆசிரியர் &ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment