Monday, 28 October 2019

குரு பலம் யாருக்கு?

               

குரு பலம் யாருக்கு திருமணம் தரும் ?


செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     குரு பகவான் ராசிக்கு 
2 ,5 ,7, 9 ,11-ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் வந்து விட்டது என்பது பொருளாகும். இது பொது விதி என்பது அனைவரும் அறிந்ததே.

  பலருக்கு குருபலம் நடைமுறைக்கு வந்த பின்னரும் திருமணம் நடைபெறாமல் காத்திருப்பதும், சிலருக்கு குரு பலம் இல்லாமல் திருமணம் இனிதே நடந்து முடிவதும் நாம் நடைமுறையில் பார்க்கும் பொழுது முன்னுக்குப்பின் இது முரணாக அமைவதை சோதிடர்களாகிய நாம் அனைவரும் அறிந்த உண்மை ஆகும்.

 ஏன் இந்த முரண்பாடு திருமணத்திற்கு குரு பலம் மட்டும் போதுமா? திருமணத்திற்கு குரு பலம் எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.

  மேலும் திருமணத்தை பற்றி அறிந்துகொள்ள எந்தெந்த பாவங்களை ஆராய வேண்டும்.
 எந்த திசை திருமணம் தரும் என்றும் ஆராய வேண்டும்.

  பொதுவாக திருமணத்தைப் பற்றி அறிந்துகொள்ள இலக்கனம் எனப்படும் சாதகர், இரண்டாம் இடமாகிய குடும்பஸ்தானம், ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என அழைக்கப்படும் எட்டாமிடம் இத்துடன் அதன் அதிபதிகளையும், களத்திரகாரகன் என்றழைக்கப்படும் சுக்கிர பகவானையும் ஆராய்ந்து அறியப்படப்படவேண்டும்.

  எனது அனுபவத்திற்கும், ஆய்வுக்கும் மிகச்சரியாக வருகின்ற திருமணத்தைப் பற்றிய பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"ஏழினுக்குடையோன் தன்னோ டோகிய கிரகம் ஏழின் வாழ்வெனும் கிரகமின்னோர் வருதிசை அபகாரத்தில்ஊழ்வினையான பெண்டிர் உதவுமாம் இரண்டிற்கோளன்சூழ்திசை அபகாரத்தில் சுப கல்யாணம் சொல்லே"


     ----ஜாதக பாரிஜாதம்

 திருமண காலத்தை நிர்ணயம் செய்வதற்கு ஏழாம் இடத்து அதிபதி, ஏழில் உள்ள கிரகம் , ஏழாம் இடத்து அதிபதியோடு கூடியவர்கள், இரண்டாமிடம், இரண்டாமிடத்து அதிபதி இவர்களுடன் கூடியவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

  மேலும் ஒரு ஜாதகருக்கு சுப கல்யாணம் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர்களை பார்ப்போம்.

   ஏழாம் அதிபதியுடன் தொடர்பு பெற்ற 2, 4, 5 ,9 மற்றும் 11-ஆம் அதிபதிகள்  ஆகிய இவர்கள் திசையில் சுப திருமணம் நடக்கும்.

    மேலும் சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் ஏழில் நின்று திசை நடத்தினால் சுப கல்யாணம் தருவார்கள் என்பது திண்ணம்.

   மேலும் ஏழாம் அதிபதி உடன் சேர்ந்த மாறைவிட ஸ்தானாதிபதி (3, 6, 8 12)  திசை நடந்தால் திருமணத்தில் வில்லங்கம், விவகாரம், வழக்கு, வீண் விரயம் போன்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நேரிடும்.

  மேலும் ஜாதகருக்கு குரு பெயர்ச்சி பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் ஜெனன கால ஜாதகத்தில் குரு தசை ,குரு புத்தி அல்லது குருவின் சாரம் பெற்றவர்கள் திசையோ, புத்தியோ நடைபெற வேண்டும் என்பது நடைமுறையாகும்.

 குரு பகவான் என்ன ஆதிபத்தியம் பெற்று தசை நடத்துகிறாரோ அதற்கு ஏற்ற பலனை தருவார். சசுப ஆதிபத்தியம் பெற்றிருந்தால்  சுப பலனையும் , அசுப ஆதிபத்தியம் பெற்றால் அசுப பலனையும் தவறாமல் தருவார்.

  திருமணத்தை தீர்மானிக்க குருபகவான் லக்னம் அல்லது சந்திரனுக்கு இரண்டாம்இட அதிபதியாகவோ அல்லது ஏழாம் இட அதிபதியாக வரவேண்டும்.

   குரு பகவான் இரண்டாம் இட அதிபதியாகவோ அல்லது  ஏழாமிட அதிபதியாகவோ அமைந்து ,  லக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில்  இரண்டாமிடத்தை அல்லது ஏழாம் இடத்தைப் குரு பகவான் பார்க்கும் போது குடும்ப உறவுகளையும் களத்திர சுகத்தையும் தவறாமல் தருவார்.

  குரு பகவான் ஐந்தாம் அதிபதியாகவோ அல்லது ஒன்பதாம் அதிபதியாகவோ அமைந்து லக்கனம் அல்லது ராசிக்கு கோட்சாரத்தில் ஐந்தாம் இடத்தையும் , ஐந்தாமிட அதிபதியையும் , ஒன்பதாம் இடத்தையும், ஒன்பதாம் இட அதிபதியும் பார்க்கும் போது குரு பகவான் புத்திர பாக்கியத்தை கொடுப்பார். புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.

  குரு பகவான் பதினொன்றாம் அதிபதியாக அமைந்து இலக்கனம் அல்லது ராசிக்கு பதினொன்றாம் இடத்தையோ அல்லது பதினொன்றாம் இட அதிபதியையோ பார்க்கும்போது சாதகரின் அபிலாசைகள், நீண்டநாள் கனவுகளையும் புத்திர பாக்கியம் தருவார் .11-ஆம் இடம் என்பது வாழ்க்கை துணைக்கு ஐந்தாம் இடம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவார்.

   முக்கியமாக புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் தொடர்பு பெற்ற திசை மற்றும் புத்தி  காலங்களில் மட்டுமே குரு பலம்  திருமணத்தை சாதகருக்கு தரும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

 வாட்ஸ் அப்
   9715189647

  செல்
    9715189647
      7402570899



   அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
 (ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
  ஓம் சக்திஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: