Monday, 28 October 2019

திருமணம் ஏன் காலதாமதம் ஆகி கொண்டே செல்கிறது?வணங்க வேண்டிய கோவில்களும் மற்றும் பரிகாரங்களும்

                                     

திருமணம் ஏன் காலதாமதம் ஆகி கொண்டே செல்கிறது? வணங்க வேண்டிய

கோவில்களும் மற்றும் பரிகாரங்களும்.

  செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

                         


     திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் நிகழ்வு மட்டுமல்ல. இரண்டு உறவுகளை இணைக்கும் வைபோகம் ஆகும். எனவேதான் "திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" என்கிறார்கள் நமது முன்னோர்கள்.

"வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப் பார்" என்பது ஒரு சொல்லோடை. அந்த அளவிற்கு கல்யாணம் என்னும்  நிகழ்வு மனித வாழ்வின் இன்றியமையாத உயிர் செயல் ஆகும்.

   மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு இடையே எவ்வித மனம் நோகும்படியான செயல் நடைபெறாதவாறு ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது என்பது மிகவும் புனிதமான செயல் ஆகும். ஏனெனில் "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்றாகும்.

    இதற்க்காகத்தான் இருமனம் இணையும் திருமணத்தை நடத்தி வைப்பவரது செயல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு சமமாகும். திருமண பந்தத்தில் ஈடுபட வைப்பவர்கள் "ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்க வேண்டும்" என்கிறார்கள்.

இந்த தமிழ் வழக்குச்சொல் மருவி "ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை முடிக்க வேண்டும்" என இன்றைய நடைமுறையில் உள்ளது.

                          


ஒருவரது ஜாதக கட்டத்தில் திருமணம் பற்றி அறிவதற்கு கட்டாயம் கீழ்க்கண்ட ஸ்தானங்களையும் மற்றும் கிரகங்களையும் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.

* லக்கனம் என்னும் ஒன்றாம் இடம்(1)
* குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாமிடம்(2)
* களத்திர ஸ்தானம் என்னும் ஏழாமிடம்(7)
* மாங்கல்ய ஸ்தானம் என்னும் எட்டாமிடம்(8)

இவை மட்டுமல்லாமல் ஒரு திருமணத்தின் வெற்றியே புத்திர பாக்கியத்தில்தான் அமைகின்றது என்பதால் புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இவ்வித நவகோள்களில் ஆண்களுக்கு களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் பகவானையும் , பெண்களுக்கு மங்களகாரகன் எனப்படும் செவ்வாய் பகவானையும் மற்றும் புத்திரகாரகன் எனப்படும் குரு பகவானையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

                        


திருமணத் தடை மற்றும் தாம்பத்ய வாழ்வில் சிக்கல் உருவாக காரணங்கள்:

ஒரு சிலருக்கு திருமணம் காலதாமதம் ஆகிக்கொண்டே செல்வதற்கும் மற்றும் திருமணம் புரிந்தவர்களுக்கு இடையே அன்யோன்யமான நிலை உருவாகாததற்கும் கிரகங்கள் படுத்தும் பாடே காரணமாகும். இதற்கான காரணங்கள்: -

1. ஒருவரது ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட திருமண ஸ்தானங்களான 1,2,7,8 ஆகிய இடங்களில் அரவுகளான ராகு, கேது மற்றும் பாவ கிரகங்களான செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் இடம்பெறுவதே முக்கிய காரணம் ஆகும்.

2. திருமண ஸ்தானமான 1,2,7,8-ன் அதிபதிகள் பகை, நீசம், அஸ்தமனம், பாவர்களின் நட்சத்திர சாரம் மற்றும் பார்வை, மறைவிட ஸ்தானங்களான 6,8,12-மிடம் சென்று சேருதல் முதலியவை ஆகும்.

3. திருமண ஸ்தானமான 1,2,7,8-ஆம் இடத்தினை பாவக்கிரகங்கள் பார்வையிடுதல் , மறைவிட ஸ்தான அதிபதிகள் மேற்கண்ட ஸ்தானங்களில் இடம்பெறுதல் முதலியவை ஆகும்.

4. களத்திரக்காரகன்  சுக்கிரன் உடன் சூரியன், சனி அல்லது ராகு, கேது கூடியிருந்தாலும்  அல்லது பாவர்களின் பார்வை மற்றும் பாவர்களின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும்   திருமண தடை உருவாகிறது.

 5) களத்திர காரகன் சுக்கிரன் பகவான் பகை, நீசம், அஸ்தங்கம் , வக்கிரம் ,மறைவிட ஸ்தானங்களுக்கு செல்லுதல் மற்றும் மறைவிட ஸ்தான அதிபதிகள் சுக்கிரன் பகவானுடன் இணைதல் போன்ற காரணங்களாலும் திருமண தடை உண்டாகிறது.

                          


திருமணத்தடை போக்க வணங்க வேண்டிய தெய்வங்கள்:-

நாக தோஷம்:

ஒருவரது ஜாதகத்தில் 1,2,7,8 ஆம் இடத்துடன் ராகு,கேது தொடர்பு உடையவர்களுக்கு  சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும்.

ராகு பவான் திருக்கோவில்கள்:

1. நாகநாதசுவாமி திருக்கோவில், திருநாகேசுவரம், தஞ்சாவூர் மாவட்டம்

2. சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருபாம்புரம், திருவாரூர் மாவட்டம்

3. காளத்தியப்பர் திருக்கோவில், ஸ்ரீகாளகஸ்தி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா

4. அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்

கேது பகவான்:

1. நாகநாதர் திருக்கோவில், கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவடடம்

2. காளத்தியப்பர் திருக்கோவில், ஸ்ரீகாளகஸ்தி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா

செவ்வாய் தோஷம்:

லக்கனம் (or) ராசி(or)சுக்கிரனுக்கு 2,4,7,8,12-ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷம் ஆகும். இதில் சில விதிவிலக்கு உண்டு.

செவ்வாய் தோஷம் தடை நீங்க வேண்டிய தெய்வங்கள்:

* வைத்தியஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி
* திருச்செந்தூர் முருகன் கோவில்
* ஆலங்குடி தெட்சிணாமூர்த்தி

                      


திருமண தடை விலக கீழ்குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட திருமண  தடை அகலும்:

1. திருமணஞ்சேரி - உத்வாக நாதர் கோவில், நாகப்பட்டின மாவட்டம்(கும்பகோணம் to மயிலாடுதுறை வழியில்)

2.  திருக்கருகாவூர் - முல்லைவன நாதர் கோவில்(தஞ்சாவூர் மாவட்டம்)

3. திருமங்கலக்குடி - பிராண நாதேசுவர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் (கும்பகோணம் to மயிலாடுதுறை நெடுஞ்சாலை)

4. திருவிடைக்கழி - சிவன் கோவில், நாகப்பட்டின மாவட்டம்

5. சென்னை - அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் (காஞ்சிபுரம் மாவட்டம்)

6. திருக்கழுங்குன்றம் - வேதகிரிஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம் மாவட்டம்)

7. திருச்சி - ஸ்ரீலிவனேஸ்வரர் கோவில், (மண்ணச்சநல்லூர் வட்டம்), திருச்சி மாவட்டம்

8. திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் கோவில் . நாமக்கல் மாவட்டம்.

9. திருகோஷ்டியூர் - செளமிய நாராயணப் பெருமாள் கோவில் . சிவகங்கை மாவட்டம்.

10. காஞ்சிபுரம் - சித்ரகுப்தர் கோவில் . காஞ்சிபுரம் மாவட்டம்

11. ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆண்டாள் திருக்கோவில் விருதுநகர் மாவட்டம், (விஷ்ணு தலம் )

12. மதுரை - அழகர் கோவில் . மதுரை மாவட்டம்.

மேற்கண்ட கோவில்களில் எதாவது ஒரு சில கோவிலுக்கு சென்று வழிபடலம். இவை தவிர உங்களுக்கு என்ன திசை நடக்கிறதோ அந்த திசைக்கு உரிய நவக்கிரக கோவிலுக்கு சென்று வழிபட திருமண தடை அகலும்.

                        


1. சூரியனார் கோவில் - ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்)

2. சந்திரன் - திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

3. செவ்வாய் - வைத்தியஸ்வரன் கோவில் (நாகப்பட்டினம் மாவட்டம்)

4. புதன் - திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்)

5. குரு - ஆலங்குடி குரு ஸ்தலம் (திருவாரூர் மாவட்டம்)

             - திட்டை வசிஸ்டேஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

             - திருச்செந்தூர் முருகன் கோயில் (தூத்துக்குடி மாவட்டம்)

6. சனி - திருநள்ளாறு
தர்ப்பாரண்யேசுவரர் கோவில் (காரைக்கால் மாவட்டம்)
     -திருக்கொள்ளிக்காடு-பொங்கு சனீஸ்வரர் ஸ்தலம்.(திருவாரூர் மாவட்டம்).

  திருமண தடை அகல எளிய பரிகாரம்

                         


   திருமணத் தடை அகல பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமலும் இதற்கான தீர்வை எளிதில் காணலாம்.

 வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.

  பூஜைக்கு முன்பு இடத்தை சுத்தமாக மஞ்சள் சந்தனம் இட்டு மொழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து ஊற்றி அதை ஏற்றலாம்.

 தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல் ஓர் ஊதுபத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

 விளக்கின் முன்பு அருகம்புல், துளசி கலந்த தீர்த்தம் மற்றும் நல்ல பழுத்த எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும்.

 இரண்டு எலுமிச்சை பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அந்த சாற்றுடன் தேனும், சர்க்கரையும் கலந்து படைக்க வேண்டும்.

 அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி  மொத்தம் மூன்று அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் (குறிப்பாக சனிக்கிழமை எனில் காலை 9-10.30) கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபட திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமைந்து மங்களகரமாக திருமணம் நடைபெறும்.

மந்திரம்

"ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ!
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ!
ஓம் வல்லி தேவ சேனா சுப்ரமண்யாய நமஹ!
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி!
சித்தி சுந்தரி ,கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம முக ஹ்ருத! "

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
                            


அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc, M.A, BED
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் சோதிட நிலையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: