Thursday, 28 November 2019

கேது பகவான்

                கேது பகவான்

                           

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார் .இவர் சக உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற  நிலையெல்லாம் மீறி ஓரறிவு படைத்த புல் , பூண்டு வாடினாலும் தன் மனம் வாடுவதாக குறிப்பிடுகிறார்.

      இப்பிரபஞ்சத்தில் "எவ்வுயிரையும் தம் உயிராய் நேசிக்கும் ஞானிகள், மகா தபஷிகள்,
தவப்புருஷர்கள்  மற்றும் சித்தர்கள் போன்றவர்களை உருவாக்கக்கூடிய பங்கு நவகிரகங்களில்  நிழல் கிரகமான செந்நிற பாம்பு மற்றும் ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவானே முதல் முக்கிய காரணமாகும். 

  கேது பகவானுடைய அருளாசி கிடைக்க அவரது ஜாதகத்தில் குரு பகவான் ஒத்துழைப்பு அவசியம் ஆகும்.

   பலமடைந்த கேது பகவானை  குருபகவான் பார்ப்பதால் அல்லது சேர்ந்திருக்கும் தன்மையால் பலன்கள் பல மடங்காக இயலும்.

     கையைப் பிடித்துப் பார்த்து வைத்தியம் சொல்லும் வைத்தியரையும்,
 முகம் பார்த்து மன ஓட்டத்தை கணிக்கும் நபர்களையும் உருவாக்கித் தருவது கேது பகவானின் அருளாசி ஆகும்.

  கேது பகவான் அருளாசி உடையவர்கள் மட்டுமே  மிக அரிதான மூலிகை தாவரங்களை  ஞானக் கண்களால் கண்டறியமுடியும்.

 இது போன்ற அரிய மூலிகைகளிடம்  இருந்து ஒரு சில இலைகளை பறித்து வைத்தியம் பார்ப்பதற்கு அந்த மூலிகை தாவரங்களிடம் அனுமதி பெற்றே பறிப்பவர்கள் உள்ளார்கள்.

 அதாவது மூலிகை இலையையோ அல்லது அதன் கிளை போன்ற பகுதியையோ அல்லது வேரினையோ  பறிப்பதற்கு முதல்நாள் விரதமாக இருந்து அந்த மூலிகை செடிக்கு முன்பு அமர்ந்து உலக நன்மைக்காக ஒரு நபரின் உயிரை காப்பாற்றுவதற்காக உன்னிடமிருந்து ஒரு சில பகுதியை சிதைக்க வேண்டியதாக உள்ளது.

   இவ்வாறு சிதைக்கப்பட்ட உமது பகுதியானது அவருடைய நோயை குணப்படுத்த வேண்டும் என வேண்டி பிறகு மறுநாள் காலையில் பறித்துதான் வைத்தியம் பார்ப்பார்கள்.

 இதுபோன்ற ஞான வைத்தியர்கள் நமது தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர்.  போகரின் சீடரான புலிப்பாணி கூட "புலிப்பாணி சோதிடம் 300" என்ற நூலை போல வைத்தியத்திற்கும் "புலிப்பாணி 500" எனும் வைத்திய நூலை எழுதியுள்ளார்.

இதுபோன்ற ஞானப் புருஷர்களை உருவாக்கக்கூடிய தன்மை கேது பகவானுக்கு மட்டுமே உரியது.

 முன்னுணர்வு(intution) தன்மையை அளிக்கக் கூடியவர் கேது பகவான் ஒருவரே ஆவார்.எனவே அருள் வாக்கு சோதிடர்களை உருவாக்குகிறார்.

 கேது பகவான் ஒருவரது சாதகத்தில் பலமடைந்து நின்றால் நன்மைகள் பல தரக்கூடியவராக உள்ளார். ஒருவர் பிரபஞ்ச ரகசியங்களையும் மற்றும் சூட்சும உண்மைகளையும் வெளிப்படுத்த கூடிய தன்மை கேது பகவானுக்கு உண்டு.

 மனிதனாக பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை (Seventh sense)  தரக்கூடியவர் கேது பகவானே ஆகும்.ஏழுலக இரகசியங்களை அறிந்து கொள்ள கேது பகவான் காரண கர்த்தாவாக உள்ளார்.

  மரம்,செடி,கொடிகளுடன் பேசக்கூடியவராக இருப்பர்.பஞ்சபூத தத்துவங்களை அறியவும்,வேத விசாரணை செய்யவும் வைக்கிறது.இரசவாத வித்தைகளை தெரிந்து கொள்ளவும்,புதியன படைக்கும் எழுத்தாளராகவும் திகழச்செய்கிறது.

 ஜோதிட சாஸ்திரத்தில் கேது பகவானுக்கு "மாற்றங்களை தரக்கூடியவர்" என்ற புனைப்பெயரும் உண்டு. அவருடைய திசை, புத்தி மற்றும் அந்தரங்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது போல நல்ல செய்தி தருவதும் ,அதே தசை, புத்தி மற்றும் அந்தரங்களில் ஒருவருக்கு வேலையை பறிகொடுப்பதும் இது எதிர்பாராத ஏற்றம் மற்றும் இறக்கங்களை தர வல்லவர்.நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் இவருடைய தசை, புத்தி அந்தரங்களில் தரக்கூடியவர் ஆதலால் இவள் மாற்றங்களை தரக்கூடியவர் என அழைக்கப்படுகிறார்.

 எதிர்பாராத பயணங்கள் இவருடைய திசை, புக்தி மற்றும் அந்தரங்களில் நடைபெறும். ஒரு சிலர் எதிர்பாராத விதமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்

சர ராசிகளான மேஷம் கடகம் துலாம் மற்றும் மகரம் போன்ற ராசிகளில் கேது பகவான் அமர்ந்து 8 மற்றும் 12ஆம் இடம் தொடர்பு பெரும்பொழுது அதன் தசை புத்தி காலங்களில் வெளிநாடு செல்ல வைப்பார்.

  தான் இருக்கும் இடத்தை ராகு பகவானைப் போல கேது பகவான் கெடுப்பவர் இல்லை.எனவேதான் "ராகுவைப்போல கெடுப்பார் இல்லை,கேதுவைப்போல கொடுப்பவர் இல்லை"-எனலாம்.

 திருமண ஸ்தானமான 1,2,7,8 போன்ற இடங்களில் கேது பகவான் அமர்ந்தால் ராகு பகவானைபோல கெடுபலன் அதிகம் தருவதில்லை. 

   இதேபோல புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமரும் போது ராகு பகவான் அளவிற்கு புத்திர தோஷத்தை தருவதில்லை.

 கடகம்,  தனுசு ,மீனம் மேஷம் மற்றும் விருச்சிகம் லக்கனங்களுக்கு கேது பகவான் சுப சூட்சும வலுவுடன் சுபர்களின் தொடர்பு பெற்று நிற்கும் நிலையில் நல்ல பலன்களை தருவார்.

 குரு பகவான் உடன் இணைந்த கேதுபகவான் கேளா யோகத்ததை தருகிறது. கேது பகவானை குருபகவான் மற்றும் சனி பகவான் பார்த்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் சாதகரை ஆன்ம ஞானப் பாதையில் செயல்பட வைக்கிறது.

  கேது பகவான் 1,2,5,9,10 மற்றும் 12 உடன் இடம்பெற்ற குரு மற்றும் சனி பகவான் தொடர்பு பெற்ற நிலையில் சாதகரை ஆன்மீக பாதையில் இட்டுச் செல்கிறது.

 கேது பகவான் பற்றிய அடிப்படை தகவல்கள்

காரக அம்சம் ; ஞான காரகன்

தேவதை: இந்திரன்

பிடித்த தானியம் ; கொள்ளு

உலோகம் ; துருக்கல்

பிடித்த நிறம் ; சிவப்பு (செந்நிறம்)

குணம்: தாமஸ்

பிடித்த சுவை ; புளிப்பு

திக்கு : வடமேற்கு

உடல் அம்சம் ; உள்ளங்கால்

நோய் ; பித்தம்

பாலினம் ; அலி

உப கிரகம்: தூம கேது

விரும்பும் சமித்து : தர்ப்பை

உரிய ரத்னம்: வைடூரியம்

அதிதேவதை : விநாயகர், சரஸ்வதி, பிரம்மா,சித்ர குப்தர்

மனைவி பெயர் ; சித்ரலேகா

காலம் : எம கண்டம்

பஞ்ச பூதம் ; நீர்

பாலினம் ;. அலி

உகந்த கிழமை ; சனி கிழமை

நட்சத்திரம் : அசுபதி , மகம், மூலம்

திசை இருப்பு ; 7 வருடங்கள்

நட்பு ராசி: மிதுனம், கன்னி, துலாம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்.

சம ராசி ; இல்லை

நீச ராசி: ரிஷபம்

உச்சம் ராசி: விருச்சிகம்

பகை ராசி; மேஷம்,கடகம் மற்றும் சிம்மம்

நட்பு கிரகம்; சுக்கிரன், சனி

சமம் ; புதன், குரு

பகை கிரகம் ; சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்

 ராகுவுக்கு ஏழாம் இடத்தில் அதாவது 180 பாகை வித்தியாசத்தில் கேது பகவான் ஒரு ராசியில் பதினெட்டு மாதங்கள் வாசம் செய்கிறார்.

 பன்னிரெண்டு ராசிகளை கடக்க பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது.

பாம்பு தலையும்,  மனித உடலும் கொண்டது.

ஆட்சி வீடு கிடையாது.கேது இடம் பெறும் வீட்டினையே சொந்த வீடாக எண்ணி வாசம் செய்யும்.மூல திரிகோணம் கிடையாது.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   9715189647

  செல்
   9715189647
    7402570899

  அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
       M.Sc,M.A,BEd
(ஆசிரியர் &சோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

                           

No comments: