Thursday, 28 November 2019

சாதக பலன் உரைக்கும் பாங்கு

         

சாதக பலன் உரைக்கும் பாங்கு


                   
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

 சோதிடர்களாகிய நம்மிடம் பலன் பெற வரும் சாதகர்களுக்கு எவ்வாறு பலன் அளிப்பது?" என்பதனை
" சாதக அலங்காரம்" சோதிட நூல் தரும் பாடல் வழிநின்று விளக்கும் நோக்கோடு இப்பதிவை கொண்டு செல்கிறேன். இது ஆரம்ப நிலையில் உள்ள  சோதிடர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

பாடல்
"சாற்றிய துவா தசமாம்
லக்கினம் தன்னை ஓர்ந்து
நேர்த்தியாய் சுபரும் பாவர்
நிறையோக மார கங்கள் போற்றியே அவர்தம் வீட்டில்
பொதுப் பலன் உரைக்கும் நூலின்
தேற்றமே அறிந்து கொண்டு
செய்பலன் உரைப்பாய் தானே"

பொருள் ;-

   மேசம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு லக்கினங்களுக்கும் அந்தந்த லக்னத்திற்குரிய சுபர் யார்? பாவர் யார்? யோகர் யார்? மாரகர் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் .
பின்னர் இவற்றின் அடிப்படையில் பலன் உரைக்கும் முறைகளைக் கூறும் நூல்களை கற்றுத் தெளிந்து ஆராய்ந்து பலன் சொல்ல பழக வேண்டும்.

  விரிவாகப் பார்ப்போமானால் துவாதசம் என்பது பன்னிரெண்டு ஆகும். ஒரு கிரக  வலிமையை கண்டறிவதற்கு ராசி, அம்சம் திரேக்காணம்  நவாஅம்சம்.... என்ற வகையில் 12 வகையான கட்டமைப்புகளையும் ஆராய வேண்டும்.

   பலன் சொல்ல முற்படும் ஒவ்வொரு ஜோதிடரும் முதன்முதலில் ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் யார் சுபர், பாவர், மாரகர் என்பதை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 பொதுவாக எந்த ஒரு லக்னத்திற்கும் திரிகோண ஸ்தானமான லக்கினம் ,ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம்  இட அதிபதிகள் இயற்கையிலேயே சுப கிரகமாக இருந்தாலும், பாவ கிரகமாகவே  இருந்தாலும் அந்த லக்கினத்தின் யோகர்களாக கருதப்படவேண்டும்.
 இவர்கள் நல்ல பல யோகமான பலன்களை தன் தசையில் தருவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

   ஒரு ஜாதகருக்கு மறைவிட ஸ்தான அதிபதிகளான 3, 6, 8, 12 ஆம் இடத்துக்குரியவர்கள் அந்த லக்கினத்தின் பாவர்களாக கருதப்படுவார்கள். இவர்கள் தனது திசையில் பொதுவாக தீய பலன்களை தருவார்கள் என்றே கருத வேண்டும் இதில் ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் மேற்கூறியவாறு முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் விதிவிலக்காக 3 மற்றும் பன்னிரெண்டாம் இடத்துக்கு உரியவர்கள் அதிக தீய பலனை தருவதில்லை என கருதப்படுகிறது.

ஒரு கிரகமே 
யோகராகவும், பாவராகவும் செயல்பட வாய்ப்பு உண்டு அதனையும் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக கடக லக்னத்தை எடுத்துக் கொண்டால் குரு பகவான் ஆறுக்கு உடையவராகவும், ஒன்பதாம் இடத்திற்கு உரியவராகவும் ஆகிறார். இந்த நிலையில் அந்த கிரகத்தை  9-க்கு உரியவர் என்ற வகையில் யோகா ராகவும், 6-க்குடையவர் என்ற வகையில் தீயவர் ஆகவும் கருதப்பட வேண்டும் . தீய ஆதிபத்தியத்திற்கான தன்மைகளையும் அந்த கிரகம் பிரதிபலிக்கச் செய்யும் என்ற போதிலும், யோகா ஆதிபத்திய தன்மையே மேலோங்கி நிற்கும் என்பதால் குருபகவானை யோகர் என்றே கூறவேண்டும்.

 லக்னாதிபதிக்கு நண்பராக வருபவரை பாவர் என்று கூறிவிட முடியாது .
 சுபர்,பாபர் இரண்டுக்கும் இடைப்பட்ட "நடுநிலையாளர் "என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை உதாரணம் மூலம் விளக்குகிறேன் பாருங்கள் .

 உதாரணமாக மிதுன லக்னத்திற்கு சூரியன் மறைவிட ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு அதிபதி என்ற போதிலும் அவர் லக்னாதிபதிக்கு நண்பர் ஆவார் என்பதால் அவரை நடுநிலையாளர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

  பொதுவாக ஒரு ஜாதகருக்கு கோண அதிபதிகளை " யோகர்" என்றும், மறைவிட ஸ்தான அதிபதிகளை "பாவர்" என்றும் கருதுகிறோம்.

 கோண மற்றும் மறைவிடத்தை அதிபதிகளை தவிர்த்து 
 2, 4 ,7, 10, 11 ஆகிய இடங்களின் அதிபதிகளை சுபர் என்ற வரிசையில் அடக்கலாம் .ஆனால் இவர்கள்  யோகர்களைபோல் பெருமளவு நன்மைகளை செய்ய மாட்டார்கள். ஆனால் இவர்களால் ஓரளவுக்கு நன்மைகளும் உண்டு .அதேநேரத்தில் இவர்களுக்கு வேறு தீய ஆதிபத்தியம் இருக்குமானால் இவர்களை சுபர் என்று கருதி விடவும் முடியாது.அந்தநேரத்தில் இவர்களை பாவர் என்றே கூற வேண்டும்.

 இவைதான் ஒரு லக்கனத்திற்கு பாவர்,சுபர் மற்றும் யோகர் என்று அறிவதற்கான பொதுவான விதியாகும்.

  சிலர் இதில் கருத்து வேறுபாடு கொள்கின்றனர் அதாவது 11-க்குடையவர் எல்லா இலக்கினங்களுக்கும்  பவராக கருதப்பட வேண்டும் என்று கூறுகின்றனர் .ஆனால் இது பொருந்தாது. அனுபவத்தில் அது சரியாக வரவில்லை.

 அடுத்து மாரகர்கள் அதாவது மரணத்தை ஏற்படுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் என்று பொருள்.

 பொதுவாக எல்லா இலக்கனங்களுக்கும் 
2 ,7-க்கு உரியவர்கள் மாரகர்கள் ஆவார்.

 சிறப்பாக
 சர லக்னங்களுக்கு 
2 ,7 க்குரியவர்களும், ஸ்திர லக்கினத்திற்கு 3, 8 க்குரியவர்களும், உபய லக்னங்களுக்கு 7, 11 க்குரியவர்களும் மாரகர்களாக கருதப்படுவார்கள்.
ஆனால் அதே நேரத்தில் மாரகாதிபதிகள் லக்னாதிபதிக்கு நண்பனாக இருப்பின் மாறாக செய்யும் வாய்ப்பு குறைவு.

    இவர்களைத் தவிர ஒரு லக்னத்திற்கு பாவிகளாக வருபவர்களும் மாரகம் செய்ய அதிகாரம் படைத்தவர்கள் ஆவார்.
 இவர்கள் தங்கள் திசையில் மாரகம் செய்வார்களா? என்பதை சாதகரது ஆயுள் பலம் என்ன? என்பதை கண்டறிந்த பின் தான் முடிவு செய்ய வேண்டும்.

 மரணத்தை ஏற்படுத்தும் அதிகாரம் படைத்த மாரகாதிபதிகள் கஷ்ட, நஷ்டங்களை மட்டுமே நல்குவர் என்று கூறிவிடமுடியாது.
 சாதக அமைப்பைப் பொறுத்தும் பலவித நன்மைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

  இதனை பின்வரும் உதாரணம் மூலம் பார்க்கலாம் .
உதாரணமாக சர ராசியான கடக ராசிக்கு
 2, 7-க்கு உடையவர் மாரகாதி ஆவார்.
  ஆதலால் இரண்டிற்கு உரிய சூரியன் பகவான் மாரக ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அந்த இலக்கனத்திற்கு பெருமளவு நன்மைகளையே செய்வார் .
காரணம் அவர் லக்னாதிபதியான சந்திர பகவானுக்கு நெருங்கிய நண்பராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு கிரகங்களை யோகர், சுபர், பாவர் என்ற பிரித்த போதிலும் சாதகத்தில் கிரகங்கள் நின்றிருக்கின்ற நிலையைப் பொறுத்து யோகர்கள் ஆனவர் யோக பலனை தராமலும் போய்விடலாம்.
அதேநேரத்தில் பாவர்கள் விபரீதமாக செயல்பட்டு யோக பலன்களை தரக்கூடியவராகவும் மாறலாம் .

     ஆமாம் இதனை நன்றாக கூர்ந்தாய்வு செய்து கவனிக்கப்பட வேண்டும். மறைவிட ஸ்தான அதிபதிகள் என்று சொல்லக் கூடிய கிரகங்கள் தன் திசையில் பாவராக இருந்தாலும் யோக பலன்களை தரக் கூடிய வாய்ப்பு உண்டு . எவ்வாறெனில் மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு நிற்கும் பொழுது எதிர்பாராத விபரீத ராஜ யோகத்தை தரலாம்.

இவ்வாறாக சாதக பலன்களை துல்லியமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சி அறிவு மட்டுமல்லாமல் ஜாதகருக்கு அனுபவ அறிவும் மற்றும் இறைபக்தியும் கண்டிப்பாக தேவை.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
     செல்
   9715189647
   7402570899
    
   அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd,
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot 

 AstroRavichandran .blogspot .com

AstroRavichandrannsevvai.blogspot .com

                                   

No comments: