சாதக பலனை கணிக்கும் போது கவனிக்க வேண்டியவை
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவரது ஜாதகத்தில் சாதக பலனை கணிக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய சில விதிமுறைகளை இந்த சோதிட பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றின் நிலையை கவனிக்கப்பட வேண்டும்.
ஜாதக கட்டத்தில் உள்ள ஒன்பது கிரகங்கள் எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளது என்பதை கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு கிரகம் ஒரு ராசியில் எத்தனையாவது பாகையில் நிற்கிறது என்பதையும் கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு கிரகத்தின் ஸ்தான வலிமை, பார்வை பலம், சேர்க்கை நிலை போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.
கிரகம் நின்ற வீட்டின் அதிபதி ராசி கட்டத்தில் எங்கு உள்ளார் என்பதையும் அவரது ஸ்தான வலிமை, பார்வை பலம் மற்றும் சேர்க்கை பலம் லக்கனாதிபதிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை பற்றி கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு ராசி கட்டத்தில் இடம்பெற்ற கிரகங்கள் தனக்குள்ளும் மற்றும் அந்த ராசிக்கும் இடையையான உறவு நிலை (நட்பு சமம் மற்றும் பகை) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
விதிகளுக்குள் விதிவிலக்குகள் இருப்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் ஜோதிட பலன்களை கணித்து பலனளிக்க பழக வேண்டும். அதாவது கிரகங்கள் கேந்திர கோணங்களில் இருந்தால் அதிக பலன் தரும் என்றும்,
உச்சம், ஆட்சி, நட்பு போன்ற நிலைகளில் இருந்தால் அது வலிமை பெற்ற கிரகமாக கருதுவதும் விதியாக இருந்தாலும், விதிவிலக்காக அந்த கிரகங்களை இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தொடர்பை பெரும்பொழுது எதிர்பார்த்ததற்கு மாறாக அக்கிரகம் வலிமை பெற்று அதன் தசை காலங்களில் நல்ல பலனைத் தரும் என்பதை உணர்ந்து பலனளிக்க பழக வேண்டும்.
ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்தாலும் அக்கிரகம் வேறு சில வகையில் வர்கோத்தமம் அல்லது நீசபங்கம் போன்ற வகையில் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுள்ளதா? என்பதையும் உணர்ந்து பலனளிக்க பழக வேண்டும்.
ராசியில் உள்ள கிரகம் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளதா ?
அசுப வர்க்கம் ஏறி உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
சூரியனுடன் நெருங்கி இணைந்திருக்கும் கிரகங்கள் அஸ்தமனம் பெற்றுள்ளதா? என்றும் மற்றும்" வக்கிர நிலை" போன்றவற்றையும் ஆராய்ந்து பலன் அளிக்க வேண்டும்.
வக்கிரம் பெற்ற கிரகங்கள் இயல்புக்கு மாறான பலனைத்தரும் என்பதையும், ஒரு கிரகம் உச்சம் பெற்று வக்கிரம் பெற்றால் அவை நீசத்திற்கு நிகரான பலனையும், நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் உச்சத்துக்கு நிகரான பலனையும் தரும் என்பதையும் உணர்ந்து பலன் அளிக்கப்பட வேண்டும்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சி பலத்துக்கு நிகரான பலத்தைப் பெற்று அதன் தசை காலங்களில் முழு பலம் பெற்ற கிரகமாக திகழ்கிறது.
ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் இடம் பெற்றுள்ள கிரகங்கள் வர்கோத்தமம் பெற்று பலம் பெற்ற கிரகமாக கருதப்படுகிறது என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
உச்சம், ஆட்சி மற்றும் நட்பு பெற்ற கிரகங்களும் மற்றும் கேந்திர கோணங்களில் உள்ள கிரகங்கள் மட்டுமே நன்மையை தந்துவிடும் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது .
சில நேரங்களில் மறைவிடங்களில் பலமிழந்த கிரகங்கள் கூட இயற்கை சுப கிரக தொடர்பால் சுபத்துவ நிலையைப் பெற்று அதன் தசா காலங்களில் நல்ல பலனைத் தந்து விடும் என்பதையும் உணர்ந்து பலனளிக்க பழக வேண்டும்.
ஒரு கிரகம் என்னதான் வலிமை பெற்றுத் திகழ்ந்தாலும் இயற்கைப் பாபக் கிரகமான சனி, செவ்வாய் ,ராகு, கேது தொடர்பினை பெற்ற கிரகங்கள் வலிமை குன்றிய கிரகங்களாகவே கருதப்படுகிறது. இவற்றை இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பை பெரும் பொழுது மட்டுமே மறுபடியும் இழந்த பலனை பெறும் என்பதையும் உணர்ந்து பலன் அளிக்க வேண்டும்.
நன்றி!
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
My website.Click here
www.astroravichandransevvai.in
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர், கரம்பகுடி புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment