Monday, 20 September 2021

பெருமை சேர்க்கும் பிள்ளைகள் பிறக்க ஜாதகம் கூறும் அமைப்பு


 பெருமை சேர்க்கும் பிள்ளைகள் பிறக்க ஜாதகம் கூறும் அமைப்பு 

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


                  


    ஒருவருக்கு பெருமை சேர்க்கும்  புத்திரர்கள் பிறக்க அவரது ஜாதகத்தில் மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


1 ) புத்திர ஸ்தானமான ஐந்தாமிடம்

 2) புத்திர ஸ்தானாதிபதி 

 3) புத்திரகாரகன் குரு


    எவரொருவர் ஜாதகத்தில் மேற்கண்ட மூன்று வகையில் ஆய்வு செய்து பார்க்கும்போது ஐந்தாமிடத்தில் எவ்வித பாவ கிரகங்கள் இடம்பெறாமல் ஐந்தாம் இடத்தை இயற்கை சுப கிரகங்களால் பார்க்க பெற்றும், ஐந்தாம் இட அதிபதி கேந்திர, கோணங்களில் உச்சம் ஆட்சி,மூல திரிகோணம் மற்றும் நட்பு போன்ற ஏதாவது ஒரு நிலைகளில்  பலம் பெற்று அமைந்து இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அல்லது தொடர்பு பெற்ற அமைப்பை பெற்று புத்திரகாரகன் குரு பகவானும் எந்த விதத்திலும் பங்கப்படாமல் நின்று இவர்களுடன் தொடர்புகொள்ள பெருமை சேர்க்கும் புத்திரர்கள் நிச்சயம் அந்த தம்பதிகளுக்கு பிறக்கும். இலக்கனம் மற்றும் ராசிக்கு என்ற இரு வகையிலும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


   ஐந்தாம் அதிபதியும் ,

வித்தைகாரன் புதன்பகவானும் ஒருவரது ஜாதகத்தில் வலிமை பெற்று விளங்கினால் நல்ல அறிவும், குணமுடையவன் ஆவான். 


   லக்கனம் மற்றும் ஐந்தாம் இடங்களில்  புதன் , குரு ஆகியவை நட்பு நிலையில் அதி பலம் பெற்றால் நல்ல யோகம் உடையவனாவான்.


 ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும் , ஐந்தாம் அதிபதியும் இணைந்து லக்னத்தில் இருந்தாலும் பார்த்தாலும் மற்றும் பரிவர்த்தனை பெற்றாலும் பெருமை சேர்க்கும் பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரம் உடையவர்களாக இருப்பர்.


 ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் மற்றும் 1,5,7 ஆம் அதிபதிகள் ஆகிய இவற்றில் ஒன்றை 

குரு பகவான் பார்த்தாலும் பிள்ளைகளால் பெற்றோர்கள் இன்பம் அடைவார்கள். சந்திரபகவானும் மற்றும் பார்க்கும் கோளும் அம்சத்திலும் வலுப்பெற்று இருக்க வேண்டும்.


  லக்கினாதிபதிக்கு நான்காம் இடம் அதிபதியானவர்  லக்னாதிபதியை பார்த்தாலும் மற்றும் நட்புறவாக இருந்தாலும் தந்தைக்குப் பின் உரிய பிள்ளைகள் வாழ்ந்து வருபவர்.


   ஐந்தாம் அதிபதியும், சுக்கிரனும் ,சந்திரனும் கூடினாலும்  மற்றும் பார்த்தாலும் வெகு புத்திரர் உண்டு.


  ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி ஏழாம் இடத்திலும்,  நான்கு மற்றும் ஏழாம் இட  அதிபதிகள் சேர்ந்து நின்ற நிலையில் இரண்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தாலும் திறமையும் சாமார்த்தியம் உடைய பிள்ளைகள் பிறப்பர். இரண்டாம் அதிபதி ஐந்தில் இருந்து குரு பார்வை பெறுவதால் புத்திர பாக்கியம் உண்டு.


  சந்திரன் நின்ற வீட்டு அதிபதி மற்றும் 

ஒன்று மற்றும் ஐந்தாம்  இட அதிபதிகள் ஐந்தில் இருந்தாலும், ஐந்தாம் அதிபதி குருவுடன் சேர்ந்தாலும் குழந்தைப்பேறு உண்டாகும் புகழ் பெற்ற குழந்தைகள் பிறப்பார்கள்.


    ஐந்து மற்றும் ஒன்பதாமிடம் அதிபதிகள் குருவுடன் கூடி ஒன்பதாம் இடத்தில் இருப்பது அல்லது குரு, புதன், சுக்கிரன் ஆகியவை ஐந்தாம் இடத்தில் இருந்து, 1-9 ஆம் அதிபதிகள் நான்கினில், நான்காம் அதிபதி குரு வீட்டில் இருப்பது புகழ் பெறும் அதிர்ஷ்டம் நிறைந்த பிள்ளைகள் ஜாதகருக்கு பிறக்கும்.


  சூரியபகவானுக்கு 5,7,9 வீடுகளில் சந்திரன் இருந்த அந்த வீடு சந்திரனுக்கு நட்பு, ஆட்சி, உச்சம் ஆகிய வீடாகவும் இருந்து குருவின் பார்வையும் சந்திரனுக்கு கிடைத்தால் தந்தையை விட செல்வம் அதிகம் சேர்ப்பார்கள் சுக்கிரன் பார்த்தால் மிகுந்த சுகபோகங்களை அனுபவிக்கும் ‌ யோகம் உடையவனாக திகழ்வார்.


  பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும், லக்னாதிபதியும் நட்பாகவும், ஐந்தாம் அதிபதி உச்சம் பெற்று சுபமாக 11-ஆம் இடத்தில் இருந்தாலும் தந்தை சொல் தவறாமல் நடக்கும் பிள்ளைகள் பலர் உண்டு. ஐந்துக்குரியவருடன்  சேர்ந்துள்ள கோள்கள் எத்தனையோ அத்தனை நல்ல பிள்ளைகள் உண்டாகும்.


 புத்திர ஸ்தான அதிபதியான ஐந்துக்கு உரியவரும் மற்றும் புத்திரகாரகன் குருவும் உச்சம், ஆட்சி, நட்பு, கேந்திரம் மற்றும் கோணம் ஆகிய நிலைகளில் ஸ்தான வலுப்பெற்று நின்றாலும், ஐந்து உரிய புத்திர காரகன்  குரு பகவான் மற்றும் 5ஆம் வீடு ஆகியவற்றுடன் நற்கோள்கள் சேர்ந்தாலும் குழந்தைகள் அதிகம் உண்டாகும்.


  லக்கினாதிபதி, 5 ஆம் அதிபதியுடன் கூடியிருக்க முழு வலிமையுடன் குரு பார்க்க வெகு புத்திர பாக்கியம் உண்டு.


 பொதுவாகவே ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதியும்  மற்றும் 5ஆம் அதிபதியும் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று, புத்திரகாரகன் குரு பகவானால் பார்க்கப்பட அமைப்பை உடையவர்களுக்கு  பிறக்கும் குழந்தைகள் நல்ல பலவானாம்.


 ஒருவர் ஜாதகத்தில் நான்கு மற்றும் ஐந்துக்கு உரியவர்கள் தன,பாக்கிய மற்றும் லாப ஸ்தானங்களில் பலம் பெற்று நின்றாலும் அல்லது உச்சம் பெற்று கேந்திர , திரிகோணம் பெற்று இருந்தாலும் தந்தை, தாயுடன் அந்த சாதகன் அளவில்லாத மகிழ்ச்சியுடன் சுகமாய் நன்கு வாழ்வான்.


   நான்காம் அதிபதியும் சுக்கிரனும் கூடினாலும் அல்லது இருவரும் கேந்திரம் பெற்று நின்றாலும் அல்லது நான்காம் அதிபதியும், சந்திரனும் கூடி லாப ஸ்தானமான 11-ல் இருந்தாலும் பல வகையான வாகனங்கள் உடையவனாக திகழ்வான்.


 நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


 வாட்ஸ் அப்

   9715189647


     செல்

   9715189647

    7402570899


             




அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: