மனிதனை வழி நடத்தி செல்லும் ஜோதிடம்

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு சிலருக்கு அறிவும், திறமையும் இருந்தும் அடிப்படையான செலவுகளுக்கே கஷ்டப்படக் கூடிய நிலையில் இருக்க,
ஒரு சிலர் சரியான அடிப்படையான திறமையும் கல்வியும் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க கூடிய நிலையை அடைந்து விடுவதற்கான காரணத்தை ஆய்ந்து நோக்க அவர்கள் ஜெனன காலத்தில் வான வீதியில் சஞ்சாரம் செய்யும் கிரகநிலைகளும் மற்றும் உகந்த தசா அமைப்புக்கள் அவர்கள் வாழ்வில் சரியான வயதில் வந்து விடுவதுமே காரணமாக அமைகிறது.
பெரும்பாலான நபர்கள் வாழ்வில் செட்டிலாக ஒரு சில லட்சங்களை சம்பாதித்தாலே போதும் என்ற நிலையில் போராடி அதை அடைய முடியாத நிலையில் இருக்க,
ஒரு சிலர் மட்டும் சில மாதங்களிலேயே பல கோடிகளை தன் வாழ்வில் சம்பாதித்து அதற்கு அரசிடம் கணக்கு காட்டவே திணறும் நிலையில் பொருளாதார நிலை அடைவதற்கான காரணமும் அவர்களுடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளும் அந்த தசா அமைப்புகளுமே காரணமாக அமைகிறது.
ஒருவர் தன் வாழ்வில் மிகுதியாக தனம் ஈட்ட உகந்த ஸ்தானங்களும் கிரக நிலைகளும் என்ன என்று ஆராய்ந்து இந்த கட்டுரையில் ஆராய்ந்து பார்ப்போம்.
ஒருவர் மிகுதியாக தனம் ஈட்ட வேண்டும் என்றால் அவர்களது ஜாதகத்தில் முதலில் லக்கினாதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும் .
பிறகு தன ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி, பாக்கியஸ்தானம் என்று செல்லக்கூடிய ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி மற்றும் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பதினோராம் இடம் மற்றும் அதன் அதிபதி இவை தவிர மேலும் தனகாரகன் குரு பகவான் ஆகியவற்றை ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி,தனாதிபதி ,பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி பலமடைந்து தங்களுக்குள் பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை நிலை பெற்று மேற்கூறிய இவைகளில் ஏதாவது ஒரு தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்கள் பாக்கியவான்கள் ஆகும்.
தன ,பாக்கிய மற்றும் லாபதிபதியின் சேர்க்கையானது பாவ கிரக சேர்க்கையாக இருப்பின் அக்கிரக சேர்க்கையானது ஏதாவது ஒரு வகையில் சுபத்துவம அடைந்திருக்க வேண்டும்.
உதாரணமாக மேஷ லக்கினத்திற்கு தனாதிபதி சுக்கிரன், பாக்கியாதிபதி குரு, மற்றும் லாபாதிபதி சனி பகவான் ஆகும்.இரண்டாம் இடத்திலோ அல்லது 9-ஆம் இடத்திலோ அல்லது பதினோராம் இடத்திலோ சுக்கிரன் சனி இணைந்து இருக்கும் பொழுது அதை ஏதோ ஓர் இடத்தில் இருந்த குருபகவான் பார்க்கும் பொழுதுதான் நல்ல பலனைத் தரும்.
x
No comments:
Post a Comment