அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்பு எது?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
அதிர்ஷ்டம் என்பது அவரவர் மன நிலையினை பொருத்தது ஆகும். ஆசைக்கு அளவு கிடையாது.
நிறைவேறும் வரை அதை நினைத்து மனது ஏங்கும் அது நம் கைக்கு கிடைத்தவுடன் அவை நமக்கு சாதாரணமாக போய் விடும்.பிறகு மனமானது அடுத்த ஒன்றின் தேவையின் மீது எண்ணம் தோன்றி மனம் அதை அடைய ஏங்கும்.
மனதளவில் நிறைவு இல்லாதவர்களுக்கு மலை போல் செல்வம் குவிந்தாலும் அவர்களது மனமானது என்றும் ஏழையாகவே இருக்கும். எனவே சொத்துக்களுக்கும், செல்வ வளத்திற்கும் போதும் என்ற அளவுகோல் கிடையாது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள். மற்ற எந்த ஒன்றை பிறர் கேட்டு தானமாக கொடுத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கேட்டு இருக்கலாமோ ! என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அன்னத்தை தானம் செய்யும்போது மட்டும்தான் வயிறு நிரம்பி முழு உவகையோடு போதும் என்ற முழு மனது வரும்.
எல்லோருக்கும் தனது ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பு இருக்கிறதா? என்பதையே முதலில் சோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் தோன்றும். அவ்வாறு இருப்பின் அது எந்த வயதில் வருகிறது? என்பதை கேட்பதில் மிக ஆர்வமாக இருப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் தரும் அமைப்பே இருந்தாலும் அந்த அமைப்பை தரக்கூடிய யோக தசைகள் உரிய காலத்தில் அனுபவிக்க வேண்டிய நேரத்தில் பெறக்கூடிய அமைப்பை பெற்றவர்கள்தான் பாக்கியசாலிகள் ஆவார்.
ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் உச்சம்,ஆட்சி மூலத்திரிகோணம் போன்ற வலிமை பெற்று கேந்திர கோணங்களில் நின்றால்தான் யோகத்தை தரும் என்று நினைப்பது தவறு. சில நேரங்களில் அவ்வாறு நிற்கக்கூடிய கிரகங்களின் தசை அவரது வாழ்நாளில் வராமல் கூட போய் விடலாம்.
ஒரு கிரகம் ஸ்தான வலுவிழந்த நிலையில் நின்றாலும் மற்றும் அவர்களோடு பாவர்கள் சேர்ந்தே நின்றாலும் மறைமுக வழியில் சுபத்துவம் பெற்ற நிலையில் அந்த கிரகம் அந்த ஜாதகரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விடுவது உண்டு.
உதாரணமாக ரிஷப ராசிக்கு யோகரான சனிபகவான் லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் அதாவது மறைவிடத்தில் நின்று நீசம் பெற்று தன் ஸ்தான பலத்தையும் இழந்து நிற்கும் சனி பகவான் தன் தசையில் மிகுந்த யோகத்தை சாதகருக்கு தந்துவிடுவதுமுண்டு.
அல்லது
ரிஷப லக்னத்திற்கு யோகரான சனி பகவான் தன் வீட்டிற்கு ஆறில் மறைந்து உச்சம் பெற்ற நிலையில் அவருக்கு மிகுந்த யோக பலனை சாதகருக்கு தந்து விடுவது உண்டு.
தனுசு லக்கினத்திற்கு தர்ம-கர்மாதிபதி யோகத்தினை தரக்கூடிய சூரியன் பகவானும், புதன்பகவானும் தத்தம் வீடுகளில் உச்சம், மூல திரிகோணம், ஆட்சி போன்ற நிலைகளில் ஸ்தான வலுப்பெற்று நிற்பதை விட தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்பது மிகுந்த யோக பலனை தருகிறது .
ஒரு சில ராசிகளுக்கு வலுப்பெற்ற கிரக ஸ்தான அமைப்பைப் பெற்ற இயற்கை சுப கிரகங்கள் அதன் தசை காலங்களில் மிகுந்த வேதனையை சாதகருக்கு தந்துவிடும்.
மீன லக்கினத்திற்கு உச்சம்பெற்று லக்னத்தில் இருக்கும் இயற்கை சுப கிரகமான சுக்கிர பகவான் தனது தசை காலங்களில் மீன லக்னத்திற்கு மிகுந்த யோக பலனை தந்து விடுவதில்லை.
மேஷ லக்கினத்திற்கு ஆறாமிடத்தில் உச்சம், மூலத்திரிகோனம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருக்கும் புதன் பகவானை விட , பன்னிரண்டாம் இடத்தில் நீசம் பெற்று அந்த இடத்தில் நிற்கும் உச்சம் பெற்ற சுக்கிரனால் நீசபங்கம் பெற்று மறைமுகமாக வலுப்பெறும் புதன் பகவான் மிகுந்த யோகத்தை அதன் தசைகளில் சாதகருக்கு தந்துவிடும்.
மீன லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்ற குரு பகவான் அதன் தசை காலங்களில் அவரது வாழ்க்கைத் துணைக்கு பல இன்னல்களை தந்து விடுவது உண்டு.
உபய லக்னத்திற்கு இயற்கை சுப கிரகங்களான குரு பகவானும் , புதன் பகவானும் கேந்திரங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் இருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம் என்ற வகையில் யோக பலனை தருவதில்லை.
ஆதலால் இயற்கை சுப கிரகம் யோகத்தை தரும் என்றும், இயற்கைப் பாவக் கிரகங்கள் யோகத்தைத் தராது என்றும் நம்மால் தீர்மானித்து விட முடியாது.
இயற்கை சுப கிரகமான சுக்கிர பகவான் தனுசு மீன லக்னத்திற்கு யோகத்தை தருவதில்லை. இயற்கை சுப கிரகமான புதன் பகவான் மேஷ, விருச்சிக லக்னத்திற்கு யோகத்தை தருவதில்லை. இயற்கை சுப கிரகமான குரு பகவான் ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு யோகத்தைத் தருவதில்லை.
மாறாக இயற்கைப் பாபக கிரகமான சனிபகவான் ரிஷப மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு யோகத்தினை தருகிறது. இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் பகவான் தனுசு மீன லக்னத்திற்கு யோகத்தை தருகிறது.
ஒருவர் தொடர்ந்து யோகத்தை அனுபவிக்க வேண்டுமெனில்
" எவர் ஒருவருக்கு குரு பார்த்த தசை தொடர்ந்து நடப்பில் வருகிறதோ அல்லது சந்திர அதியோகத்தில் பூரன சந்திரனுக்கு 6, 7, 8 -ல் இயற்கை சுப கிரகங்களான குரு ,புதன், சுக்கிரன் நின்று அதன் தசை தொடர்ந்து வருகின்றதோ , தர்மகர்மாதிபதி யோகம் பெற்று அதாவது
9 ,10- க்குரியவர்கள் சேர்ந்தோ பார்த்து அல்லது பரிவர்த்தனை பெற்று நின்று அதன் தசைகள் அடுத்தடுத்து வரும் காலங்களிலும் யோக பலனை அளிக்கக் கூடிய அமைப்பாகும்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி முழுவதும் வலுப்பெற்று தன ,பாக்கியம் மற்றும் லாப அதிபதிகள் நல்ல சுபத்துவம் பெற்று ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை, சேர்க்கை மற்றும் பார்வை மூலம் தொடர்பு பெற்று
1,2,9, 11-ஆம் இடங்களில் பார்வை, சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை போன்ற நிலைகளில் நிற்கும் இவர்களை தன காரகனான குரு பகவான் எவ்வித பங்கமும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் அமைப்பினை பெற்று அதன் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பையும் பெற்றவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் தரும் யோகத்தைப் பெற்றவர்கள் ஆவார் .
ஒருவர் ஜாதகத்தில் திரிகோன அதிபதிகளான 1,5,9 - க்கு உடையவர்கள் எவ்வித நிலையிலும் பங்கப்படாத அமைப்பை பெற்று அதன் தசை உரிய காலத்தில் தொடர்ந்து வரும் அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்பை பெற்றவர் ஆவார்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & டெலிகிராம்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment