Monday, 3 January 2022

ஒரு கிரகம் யோகத்தை அள்ளி தர..?

                         

ஒரு கிரகம் யோகத்தை அள்ளி தர ?


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு தசை நடத்தும் கிரகமானது யோகத்தை அள்ளி தர வேண்டுமாயின் ஜோதிடவியலில்

 சில பொதுவான விதி முறைகளை  கொண்டுள்ளது.


1) தசை நடத்தும் கிரகமானது உச்சம், மூலதிரிகோணம், ஆட்சி , நட்பு மற்றும் நீசபங்கம்  போன்ற நிலைகளில் ஸ்தான வலிமை பெற்றிருக்க வேண்டும்.


2) தசை நடத்தும் கிரகமானது  கேந்திரம்(1,4,7,10) மற்றும் கோணங்களில்(1,5,9) அமர்ந்திருக்க வேண்டும். மறைவு ஸ்தானமான இடங்களுக்கு(3,6,8,12) செல்லக்கூடாது.


3) தசை நடத்தும் கிரகமானது இயற்கை சுப கிரகமாக இருக்க வேண்டும்.

(குரு வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவை இயற்கை சுப கிரகங்களாக கருதப்படுகிறது.

 சனி, செவ்வாய், பாவியோடு சேர்ந்த புதன், தேய்பிறை சந்திரன், நிழல் கிரகங்களான ராகு, கேது  மற்றும் சூரியன் போன்றவை பாவ கிரகங்களாக கருதப்படுகிறது. இங்கு சனி பகவான் ஆனவர் முழு பாவர் , செவ்வாய் பகவான் முக்கால் பாவர் மற்றும் சூரியன் அரை பாவர் ஆவார்.)


4) வர்கோத்தமம், 

சுப பரிவர்த்தனை மற்றும் கிரகத்திற்கு வீடு தந்தவன் உச்சம் போன்ற நிலைகளில் வலுப்படுத்தல் போன்ற நிலைகளிலும் தசை நடத்தும் கிரகம் வலுப்பெற்று இருக்கும்.


5)தசை நடத்தும் கிரகத்துடன்  பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ,ராகு   மற்றும் கேது போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு பெறாமலும் மற்றும் இயற்கை சுப கிரகங்களுடன் சேர்க்கை மற்றும் பார்வை பெற்ற அமைப்பும் ஒரு கிரகம் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது.


6) தசை நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று நிற்பின் அதன் தசை காலங்களில் யோக பலன்களை தரும்.


 இவ்வாறு மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் பொதுவான விதிமுறைகள் ஆகும்.


 இந்த விதிமுறைகளை அப்படியே எடுத்துக்கொண்டு பலன் பார்க்க சென்றால்  துல்லியமான பலன்களை ஜாதகருக்கு தருவதில் நீங்கள் தவறி விட நேரிடலாம்.


 இந்த விதிமுறைகள் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை ஆகும்.


 தசை நடத்தும் கிரகம் இயற்கை சுப கிரகமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது ரிஷபம் மற்றும் துலாம் லக்கனங்களுக்கு இயற்கை சுப கிரக தசையான குரு மற்றும் தனுசு மற்றும் மீனம் லக்கனங்களுக்கு புதன் ஆகியவை உகந்த. யோக தசையாக அமையவில்லை.இங்கு குரு பகவான் மற்றும் புதன் பகவான் ஆனவர் இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் ஸ்தான அடிப்படையில் அவயோகியாக இருப்பதால் யோகக் பலன்களை அதன் தசையில் தருவதில்லை.


 ஒரு கிரகம் ஆனவர் உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருந்தால் நல்ல பலன்களை தரும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் இயற்கை பாவ கிரகங்களான சனி , செவ்வாய்  போன்றவை உச்சம், ஆட்சி போன்ற நேர்வலு அடையக்கூடாது என்ற விதி அடிப்படையிலும் சில விதிவிலக்குகள் உண்டு.


 தசை நடத்தும் கிரகமானது கேந்திர மற்றும் கோணங்களில் நின்று தசை  நடத்தும் போது யோகத்தை தரும் என்பது பொது விதியாக இருந்தாலும்,

 தனுசு , மீனம் போன்ற உபய லக்னங்களுக்கு இயற்கை சுப கிரகமான புதன் மற்றும் குரு பகவான் கேந்திரங்களில் நின்று உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து நின்ற பொழுதும் அவை "கேந்திராதிபத்திய தோஷத்தை "  பெற்று அதன் காரணமாக பொதுவிதியில் குறிப்பிட்டதை போல அதன் தசைகளில் யோகம் பலன்களை தருவதில்லை. 


 இந்த இடங்களில் ஒரு கிரகமானது கேந்திர கோணங்களில் நின்றால்  நல்ல யோக பலனை தரும் என்ற பொது விதி மாறி மறைவிடங்களிலும் அல்லது கோணங்களிலும் சென்றால்தான் யோக பலனை தரும் என்ற விதிவிலக்கு உட்படுகிறது.


  ஆதலால் ஒரு நடக்கும் தசைக்கு பலனளிக்க முற்படும் பொழுது முதலில் விதிகளை பார்த்துக்கொண்டு அந்த விதிகளுக்குள்  விதிவிலக்கு ஏதாவது உண்டா? என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகே அவருக்கு பலனளிக்க முயல வேண்டும் .


நன்றி வணக்கம்.


வாட்ஸ் அப்

  9715189647


     செல்

  9715189647

    7402570899

                    



அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

  M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: