Monday, 3 January 2022


                                  


 "இந்து லக்கனம்" என்பது......


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு ராசி கட்டத்தில் இடம்பெறக்கூடிய நவகிரகங்களது நிலைமையைக் கொண்டும் மற்றும் லக்னாதிபதியின் வலிமையைக் கொண்டும்  பல்வேறு வழிமுறையை பயன்படுத்தி 

 விதிகள் மற்றும் விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில்  மானிட வாழ்வின் எதிர்கால பலனை துல்லியமாக அறிய முற்படுகிறோம்.


   துல்லியமான பலனை அறிய பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் அதன் துணை அமைப்புகளாக

திதி சூனியம், புஷ்கர நவாம்சம், தாரா பலன் ... போன்றவைகளின்  வரிசையில் 

"இந்து லக்னம் "

பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


  இந்து லக்னம் பற்றி அறிவதற்கு முன்பாக கிரகங்களில் ஒளி அளவை முதலில் தெரிந்து கொள்வோம் இந்த ஒளி அளவைக் கொண்டுதான் 

"இந்து இலக்கனத்தை" கணக்கிட பேருதவியாக அமைகிறது.


  ஒளி அளவைக் கொண்டு தான் கிரகங்களை இயற்கை சுபர் மற்றும் இயற்கை பாவர் என்று வகுத்து இருக்கிறோம். இந்த கருத்து  ஒளி அளவை கொண்டே  உறுதி செய்யப்படுகிறது.


கிரகங்களில் சூரியனே முதன்மையானது ஆகும். சூரியனுடைய ஒளியை வாங்கி பிரதிபலிக்கக் கூடிய கிரகம் சந்திரன் ஆகும். அதாவது சூரியனுடைய ஒளியை வாங்கி அதிகமாக பிரதிபலிக்கக் கூடிய கிரகம் இயற்கை சுப கிரகம் என்று அழைக்கப்படுகிறது.

ஒளியை வாங்கி குறைவான அளவு பிரதிபலிக்கக் கூடிய கிரகங்களை "இயற்கை பாவ கிரகம்" என்று அழைக்கிறோம்.


கிரகங்களில்  சூரியனையும், சந்திரனையும் ஒளி கிரகங்களாக கருதப்படுகிறது. 

இருள் கிரகமாக சனியையும் மற்றும் சாய கிரகங்களாக ராகு மற்றும் கேதுவும் அழைக்கப்படுகிறது.


சூரியனனால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 30 ஆகும்.


சந்திரனால் பூமிக்கு கிடைக்கக்கூடிய உடைய ஒளி அளவு 16 ஆகும்.


   சுக்கிரனால் புவிக்கு கிடைக்கும் ஒளி அளவு 12 ஆகும்.


இதற்கு அடுத்தபடியாக குருபகவானால் கிடைக்கும் ஒளி அளவு 10 ஆகும்.


புதன் பகவானால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 8 ஆகும்.


செவ்வாய் பகவானால் பூமிக்கு  கிடைக்கும் ஒளி அளவு 6 ஆகும்.


நிறைவாக சனிபகவானால் புவிக்கு கிடைக்கும் ஒளியளவு 1 ஆகும்.


இந்து லக்கனம் கணக்கிடும் முறை


லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய அதிபதியின் ஒளி அளவு மற்றும் ராசிக்கு ஒன்பதாம் இடம் அதிபதியின் ஒளி அளவு ஆகிய இரண்டின் ஒளி அளவினை கூட்டி அவ்வாறு

கூட்டி வரும் எண்ணை பன்னிரெண்டால் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்து கிடைக்கும் மீதியை ஒருவரது ராசியில் இருந்து எண்ணி வரவேண்டும்.


  உதாரணமாக தனுசு லக்னம்  மற்றும் கடக ராசி என்று வைத்துக்கொண்டால் லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சூரியன் ஆகும் அதன் ஒளி அளவு 30 ஆகும். கடக ராசிக்கு ஒன்பதாம் இட அதிபதி குரு பகவானாவார் .

அதன் ஒளி அளவு 10 ஆகும். ஆக இரண்டின் கூட்டுத்தொகை 

 30+10= 40 ஆகும்.


 இந்த நாற்பதை பன்னிரெண்டால் வகுக்க கிடைக்கும் மீதி 4 ஆகும். சாதகரது ராசி கடக ராசி என்பதால் கடகத்தில் இருந்து எண்ணி வர வேண்டும். இவ்வாறு எண்ணி வர  நான்காவது ராசியாக வருவது துலாம் ராசி வருகிறது. ஆகவே துலாம் ராசியை

" இந்து இலக்கனமாக" கருதப்படவேண்டும்.


  சார்  ஒரு சமயம் 

மீதியானது

 பூஜ்ஜியம் என்று வந்தால் என்ன சார் செய்வதது ? என நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது.


இதற்கு ஒரு உதாரணம் மூலமாக விளக்குவோம்..


  சாதகர் தனுசு இலக்கனம்  மற்றும் 

 மீன ராசி  என வைத்துக் கொண்டால், லக்னத்திற்கு 9ம் இட அதிபதியான சூரியனின் ஒளி அளவு எண் 30 ஆகும்.


 மீன ராசிக்கு 9-ஆம் இடம் அதிபதியான செவ்வாயின் ஒளி அளவு 6 ஆகும்.


ஆக 30+6 ஆகிய இரண்டையும் கூட்டினால் கிடைப்பது முப்பத்தி ஆறு ஆகும்.


 இவ்வாறு கிடைக்கும் 36 ஐ 12  ஆல் வகுக்க 

மீதி 0 வருகிறது.


இப்பொழுது என்ன செய்வது என்றால் 

மீதி பூஜ்ஜியம் என வந்தால் ஜாதகருடைய ராசிக்கு முந்தைய ராசியை இந்து லக்கினமாக எழுதப்படவேண்டும். இந்த விதிப்படி மீன ராசிக்கு முந்தைய ராசியான கும்ப ராசியை இந்து லக்கினமாக கருதப்படுகிறது.

 

     இந்து லக்னம் காண்பதற்கு இத்துடன் இந்த பிரச்சனை தீர்ந்து விடவில்லை .


     ஒரு சில ராசி மற்றும் இலக்கனங்களுக்கு 

இந்து லக்னம் காணும்போது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் ராசிக்கு ஒன்பதாம் அதிபதியின் ஒளி அளவை கூட்டி வரும் எண்ணானது  பன்னிரன்டை விட குறைவாக வந்து பன்னிரண்டால் வகுக்க இயலவில்லை எனில்

"அப்போ என்ன செய்வீங்க?

" அப்போ என்ன செய்வீங்க?

 என மனதிற்குள் நீங்கள் கேட்கும் கேள்வி மைண்ட் வாய்ஸ் ஆக என் காதில் விழுகிறது.


  பன்னிரண்டால் வகுக்க முடியாத அளவிற்கு 12 விட குறைவாக இருந்தால் ஜாதகருடைய ராசியிலிருந்து அந்த குறைவான எண் எதுவோ அதுவரை  எண்ண வேண்டும் .எண்ணி வரும் ராசி எதுவோ,

அதுவே   இந்து இலக்கனமாகக் கொள்ளப்படுகிறது.


   உதாரணமாக மிதுன லக்கனம் மற்றும் மீன ராசியாக இருந்தால்,


மிதுன லக்னத்திற்கு ஒன்பதாம் இட அதிபதி சனி பகவான் ஆகும். அதன் ஒளி அளவு ஒன்று ஆகும். அதேபோல மீன ராசிக்கு ஒன்பதாம் இட அதிபதி செவ்வாய் ஆகும். அதன் ஒளி அளவு ஆறு ஆகும்.


  இரண்டையும் கூட்ட

1+6=7 ஆகும். 

எண்  ஏழு ஆனது பன்னிரெண்டை விட குறைவாக இருப்பதால் , இதனைப் பன்னிரண்டால் வகுக்க தசம எண் வரும் என்பதால் ஜாதகருடைய ஜென்ம ராசியான 

மீன ராசியிலிருந்து எண்ணி வர  ஏழாவது ராசியான கன்னி ராசியை இந்து லக்கினமாக கருதப்படுகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இந்து லக்னத்தில் உள்ள கிரகங்கள் தசையோ அல்லது இந்து இலக்கனத்தை பார்க்க கூடிய கிரகங்களின் தசை வரும் போது ஒருவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் அல்லது உயரிய வேலையில் அமரக்கூடிய யோகம் போன்றவை கிடைக்கும் என்பது உண்மையாக இருந்தாலும் வெறும் இந்து இலக்கணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சாதகர் உடைய யோக பலனை முடிவு செய்து விட முடியாது.ஏனைய பிற அமைப்புகளையும் கவனிக்கப்பட வேண்டும்.


 ஒரு ஜாதகரை வழிநடத்தி செல்லும் கேப்டனாக திகழக்கூடியவர் லக்கனமும் மற்றும் லக்கனாதிபதியுமே ஆகும். இவர்கள் இருவரது கிரக வலிமை மற்றும் யோக திசைகள் மற்றும் கோச்சார பலன்கள் போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவு செய்யப்பட வேண்டும்.


 ஒரு சில நேரங்களில் ஒரு சில நபருக்கு அவரது ஜாதக கட்டத்தில் மேற்குறிப்பிட்ட எந்த ஒன்றும் நல்லபடியாக அமையாத பட்சத்திலும் ஒருவர் செல்வம் கொழிக்கும் நிலையில் சிறப்பாக வாழ்வதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆராய்ந்து பார்த்தால், ஏனைய பிற அமைப்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்து லக்னத்தில் உள்ள கிரகம் அல்லது இந்து லக்கனத்தை பார்க்க கூடிய கிரகங்களின் தசை நடப்பில் இருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்

  9715189647


   செல்

    9715189647

      7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் )

ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: