Monday, 3 January 2022

எல்லாவற்றிற்கும் காலம், நேரம் வேண்டும்.

 "எல்லாவற்றிற்கும் காலம், நேரம் வேண்டும்"


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


"எல்லாவற்றிற்கும் காலம், நேரம் வேண்டும்"

 என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இந்த வார்த்தை ஒருவருடைய மனதின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு ஏக்க சிந்தனையாகும். 


  வாழ்வின் அடிமட்டத்தில் இருந்த ஒரு மனிதன் புயலின் உச்சாணிக்கொம்பில் ஏறி நிற்கும் போது அவரது இளம் பிராயத்தை அடிக்கடி பார்த்த நபர்கள் நாமும் அவ்வாறு ஆக முடியவில்லையே என்பதோடு மட்டுமல்லாமல்

அவன் என்னைவிட அறிவும், திறமையும் குறைந்தவன் தான் ஆனால் அவன் இன்றோ மேல் மட்ட நிலையில் உயர்ந்து இருக்கிறான் இது அவனது உழைப்பா? அல்லது அறிவா? 

அல்லது திறமையா? அல்லது அவர் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டமா ?என்று ஒரு வழக்காடு மன்றம்  அவர் மனதுக்குள் நித்தம் நித்தம் நடக்கும் அதன் முடிவாக வெளியிடப்படும் வார்த்தை தான் மேற்கண்ட வாசகம்.


 ஆமா உண்மைதான்.

ஒரு மனிதன் என்னதான் அறிவும், திறமையும் மற்றும் உரிய கல்வியும் பெற்றிருந்தாலும் இந்த மூன்றையும் தொடர்புபடுத்தி வெற்றி பெறக்கூடிய அதிர்ஷ்டம் அடையக் கூடிய வாய்ப்பை தருவது அவர்கள் ஜாதக கட்டத்தில் நல்ல முறையில் அமைந்த கிரகங்களும் மற்றும் அந்த கிரகத்திற்குரிய தசைகள் உரிய காலத்தில் வந்து விடுவதுமே ஆகும்.


 எனவேதான் ஒரு அன்னை பட  பாடலில் கவிஞர் கண்ணதாசன் தத்துவார்த்தமாக எழுதியிருப்பார்.


"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"


மேற்கண்ட இந்த பாடல் வரிகள் சோதிடம் தொடர்புடைய தத்துவ உன்னத வார்த்தையாகும்.


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்களே இவருக்கு என்ன தான் யோகம் வந்தாலும் யோகத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமாயின் அவரது ஜாதகத்தில் உயிர் என்று அழைக்கக்கூடிய லக்கினாதிபதி பலம் அடைந்து இருக்கவேண்டும்.


 யோக ஜாதகங்களை எடுத்து கையில் பார்க்கும்போது அந்த கட்டங்கள் ஜெகஜோதியாக ஜொலிப்பதை காணலாம்.


 அவரது ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய கிரகங்கள் சனி, ராகு, கேது,தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த புதன் போன்ற எவ்வித பாவர்கள் கலப்பின்றி தனித்துவமாக நின்று இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன் ஆகியவற்றால் பார்க்கப்பட்டு தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய தொடர்பு பெற்று இருக்கும்.


 சாதகர் வாழ்வில் கெடுதல் தரக்கூடிய கிரகங்கள் அவரது ஜாதகத்தில் பலவீனம் அடைந்து இருக்கும்.


 உரிய வயதில் அவர்கள் ஜாதகங்களில் தொடர்ச்சியாக குரு பார்த்த யோக தசைகளோ  அல்லது வளர்பிறை சந்திரனுடைய பார்வையில் பட்ட கிரகங்கள் தசைகளோ அல்லது தர்மகர்மாதிபதிகள் தசைகள் அல்லது குரு அணியை சேர்ந்த இலக்கனங்களுக்கு குரு அணியைச் சேர்ந்த சூரிய, சந்திர ,செவ்வாய் மற்றும் குரு தசைகளும் அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் அணியைச் சேர்ந்த சுக்கிரன், சனி, புதன் ஆகிய கிரகங்கள் தசைகளும் எவ்வித பங்கமமும் அடையாத நிலையில் தொடர்ந்து வந்து சாதகரை உயர்த்தி பிடிக்கும் வாழ்வில் கொடிகட்டி பறக்க வைக்கும்.


  ஒருவரது வாழ்வின் யோக தசை நடக்க கூடிய காலகட்டங்களில் கோச்சார அடிப்படையில் ஏழரை , அஷ்டம சனி போன்றவை நடப்பில் வராமலும் இருக்கும்.


  ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனம் அடையக்கூடாது என்று அடிக்கடி சொல்லி வருகிறோம் அவ்வாறு பலம் இழப்பதற்கும் அல்லாது பலவீனம் அடைவதற்கும் அல்லது பங்கமடைந்து நிற்பதற்கும் உரிய விதிமுறைகளை பின்வருமாறு பார்ப்போம்.


 1) கிரகங்கள் மறைவு இடங்களுக்குச் செல்லுதல்.

விதிவிலக்காக அவ்வாறு மறைவிடங்களில் சென்றாலும் இயற்கைச் சுபக்கிரகங்களது தொடர்பு பெறாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை பலவீனமடைகிறது.


  சில நேரங்களில் மறைவிட ஸ்தானங்களில் மூன்றாம் இடமும் பன்னிரெண்டாம் இடமும் மிகப்பெரிய மறைவு ஸ்தானமாக கருதப்படுவதில்லை. இதில் விதிவிலக்காக சுக்கிரனுக்கு மட்டும் ஆறாமிடம் மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் மிகப்பெரிய மறைவிடமாக கருதப்படுவதில்லை.


2) கிரகங்கள் நீசம் அடைந்த நிலையில் இருத்தல். இதில் விதிவிலக்காக கிரகங்கள்

நீசபங்கம் அடையாத நிலையில் இருந்தால் மட்டுமே பலவீனமாக கருதப்படுகிறது.


(நீசம் பெற்ற கிரகத்தை நீச்சம் பெற்ற கிரகம் பார்ப்பது,

 நீசம் பெற்ற வீட்டில் ஒரு உச்சம் பெற்ற கிரகம் இருப்பது,

 ராசியிலும் மற்றும் அம்சத்திலும் ஒரே வீட்டில் நீசம் பெற்ற கிரகம் இருப்பது,

 நீசம் பெற்ற கிரகத்தின் வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெற்று நிற்பது

நீசம் பெற்ற வீட்டின் கிரகம் சந்திர கேந்திரத்தில் இருப்பது,

 போன்றவை   நீசபங்கம் அடைவதற்கான விதிமுறைகள் ஆகும்.)


3) ஒரு கிரகத்துடன் இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய் ,ராகு  கேது, தேய்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் நெருக்கமாக எட்டு பாகைக்குள் இணைந்து இருப்பின்,

(இதில் விதிவிலக்காக இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித புதன் சுக்கிரன் ஆகிய சுபர் தொடச பெறாமல் இருப்பது)


மேற்கண்ட காரணங்களால் ஒரு கிரகம் பலவீனமடைந்து விடுகிறது.


மேற்கண்ட காரணங்களால் ஒரு கிரகம் பலவீனம் அடையாமல் இலக்கண யோகராகக இருந்து உச்சம் ,ஆட்சி மற்றும்  நட்பு போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்றோ அல்லது மறைவிடங்களில் நின்றாலும் சுபத்துவம் பெற்று பலம்பெற்று நின்று இயற்கை சுப கிரக தொடர்பு பெற்று இருந்து அவ்வாறு பெற்ற கிரகத்தின் தசை உரிய காலத்தில் நடப்பில் இருக்கும் போது ஒருவர் வாழ்வில் நினைத்ததெல்லாம் மற்றும் தொட்டதெல்லாம் பொன்னாக மாறி சாதனையாளராக திகழ்வார்கள்.


நன்றி!


வாட்ஸ் அப்; 9715189647


     செல்

  9715189647

  7402570899


Email; masterastroravi@gmail.com


                  



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(Teacher & Astrologer)


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

No comments: