Monday, 3 January 2022

இண்டர்நெட் (internet) முலம் அதிக பணம் ஈட்டுபவர் யார

இன்டர்நெட் (Internet) வழியாக அதிக பணம் ஈட்டுபவர்  யார்?


                         


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஆரம்ப காலத்தில் முகநூல்( face book), டிவிட்டர்(Twitter), யூடியூப்(youtybe) வாட்ஸ்அப் (whats app) மற்றும் இன்ஸ்டாகிராம்(instagram) போன்ற சமூக  ஊடகங்களை(Social media) பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது .


எப்பொழுது அன்லிமிட்டட் டேட்டா பிளான்(unlimited data plan)  நடைமுறைக்கு வந்த பின் மேற்கண்ட இணையவழி பயன்பாடுகள் அனைத்தையும்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன.


சமையல், ஜோதிடம், சினிமா விமர்சனம், கதை சொல்லல், இலக்கியம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்,

நூல் விமர்சனம், நாடகங்கள், ஷேர் மார்க்கெட்...... போன்றவற்றை யூடியூப் சேனலில் வழியாக மக்களிடம் மனம் கவரத்தக்க வகையில் வேறு யாரோ ஒருவருடைய உதவியை நாடாமல் தானாகவே அல்லது பிறரை சார்ந்திருக்காமல் மக்களிடம் கொண்டு சென்று லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான பணத்தை ஈட்டும் படியாக யூடியூப் சேனல் மற்றும் டிவி நிறுவனங்கள் வந்துவிட்டது.


    இன்றைய இணைய வழி பயன்பாட்டிற்கு மிக முக்கியமாக காரகராக திகழக்கூடிய கிரகம் நவக்கிரகங்களில் ராகு பகவானே முதன்மைப் பங்கு வகிப்பார். 


      கணினி துறையில் வன்பொருள்(hardware) மற்றும் மென்பொருள்(Software) போன்றவற்றிற்கு மூளையாக திகழக்கூடிய நவகிரகங்களில் காரகராக திகழ்பவர் புதன் பகவானே முதன்மையானவர் ஆவார்.


  எவர் ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் வேறு எந்த வகையிலும் பங்கமடையாமல்

வளர்பிறை

 சந்திர கேந்திரத்தில் நின்று தொழில் ஸ்தானத்துடன் அதிக சுபத்துவ நிலையில் தொடர்பு கொள்ளும்பொழுது அவர் கணினித்துறையில் கொடி கட்டி பறக்க கூடிய ஞானம் பெற்றவராக திகழ்வார்.


  சில நேரங்களில் 

ஒருவர் ஜாதகத்தில் 

புதன் பகவான் ,

ராகு பகவானுடன் நெருக்கமாக இணைந்து நின்று இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், மற்றும் சுக்கிரன் 

ஆகியவருடைய தொடர்பு பெற்று நிற்கும் நிலையில் தனது கல்வி அறிவால் இண்டர்நெட்டை பயன்படுத்தி அதிகமாக பொருளீட்டும் தன்மை பெற்றவராக எடுத்துக் கொள்வார்.


  ஒருவர் ஜாதகத்தில் புதன் பகவான் ராகு பகவானுடன் இணைந்து அந்த ஜாதகர் அந்த ஜாதகத்திற்கு தர்மகர்மாதிபதிகளின் தொடர்பை பெற்றிருந்தாலும் அல்லது

புதன் அல்லது ராகு பகவான் நிற்கும் வீட்டின் அதிபதி  அதிபதி உச்சம் பெற்ற நிலையில்  ராகு தசை புதன் புத்தி அல்லது புதன் தசை ராகு புத்தி  போன்ற காலங்களில் இணையம் வழியாக அதிக பொருளீட்டும் நபராக திகழ்வார்.


  ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு தொடர்புகொண்டு அந்த வீட்டு அதிபதி உச்சம் பெற்ற நிலையில் அந்த ஜாதகர் இணைய வழியாக பொருளீட்டும் யோகம் பெற்றவராவார்.

மேற்கண்ட இந்த அடிப்படையில் பார்த்தால் தனுசு லக்கினத்திற்கு ராகு பகவான் மிதுன வீட்டில் இருந்து பத்தாம் இடத்தில் புதன் பகவான் உச்சம் பெற்ற நிலையில் குரு பகவான் தனுசு வீட்டிலோ அல்லது கும்ப வீட்டிலோ அல்லது துலாம் வீட்டிலோ இருந்து ராகு பகவானை பார்க்கின்ற அமைப்பையும் பெற்றிருப்பின் இந்த யோகம் கூடுதலாக வேலை செய்யும்.


நன்றி.


வாட்ஸ் அப்

   9715189647

        செல்

   9715189647

     7402570899

                     


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்

 ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: