Thursday, 23 June 2022

கவர்ந்து இழுக்கும் தேஜஸ் கொண்ட நபர் யார்?-ஜோதிடவியல் வழி நின்று தரும் விளக்கம்.

 கவர்ந்து இழுக்கும் தேஜஸ் கொண்ட நபர் யார்??-ஜோதிடவியல்  வழி நின்று தரும் விளக்கம்.

                             


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு சிலரைப் பார்க்கும்போது மட்டும் படைப்புக்குக் காரணமான பிரம்மா மீது கோபம் வந்துவிடுகிறது. வைத்த கண் எடுக்காமல் பார்க்க வைக்கும் அளவிற்கு பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் வசீகர தேஜஸ் கண்டு அசந்து ஏக்க பெருமூச்சு விடத்தான் செய்து விடுகிறது . 

ஏன் இந்த ஓரவஞ்சனை  என எல்லோருக்கும் எழும் கேள்வி தான் என்னுள்ளும் எழுவது உண்டு.ஆனால் இந்த

தேஜஸ் என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது.தேஜஸ் என்பதன் விளக்கம் ஒளி பொருந்திய பிரகாசமான முகம் ஆகும்.இவை இரு பாலருக்கும் பொருந்தும் பதிவு ஆகும்.


   உளவியல் அடிப்படையில் இந்த தேஜஸ் உடைய தோற்றத்திற்கு அவர்களது ஆளுமை தன்மையே காரணமாக அமைகிறது. ஒரு சிலரது நல்லஎண்ணம், நல்லசெயல், மனதை அலைபாயவிடாமல்  

ஒருமுகப்படுத்தக்கூடிய திறமை போன்றவை காரணமாகவும் அமைகிறது .


 அழகு என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒன்று என்று நீங்கள் வியாக்கியானம் செய்தாலும் உங்களையும் அறியாமல் உங்கள் கண் வம்படியாக இழுத்து பார்க்க வைத்து விடுவதுண்டு.


 நீங்கள் சொல்லும் விளக்கம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.இந்த வசீகர  தோற்றத்திற்கு என்ன காரணம் அதை முதலில் சொல்லி புட்டு அப்புறம் உன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்து என மனதுக்குள் குமைவது புரிகிறது.


 ஒருவரது தேஜஸ் உடைய வசீகரமான தோற்றத்தை தருவதில் லக்கனம் , ராசி ,லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதி ஆகியவை முழூ முதல் காரணமாக அமைகிறது.நவகிரகங்களில் கவர்ச்சி நாயகன் சுக்கிரன் பகவான் மற்றும் அழகு நாயகி சந்திரன் பகவான் ஆகிய இரு கிரகங்களும் ஆகும்.


  ஒருவரது ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கனம்  ஆகிய இரண்டையும் சனி பகவான் பார்வை செய்யகூடாது.மாறாக வளர்பிறை சந்திரன், சுக்கிரன் மற்றும் குரு பகவான் போன்ற இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட அமைப்பை பெற்று இருக்க வேண்டும்.


 ராசி அல்லது லக்கனத்தில் சனி பகவான் அல்லது நிழல் கிரகமான ராகு, கேதுக்கள் அமரக்கூடாது.


  ராசி அல்லது லக்கினத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன், இடம் பெறுவதோ அல்லது பார்க்கப்படுவது வசீகரமான தோற்றத்தை தருவதற்கு ஏதுவான ஜாதக அமைப்பாகும்.


   ஒருவரது வசீகரமான கவர்ந்து இழுக்கும் தோற்றம் உடையவராக இருப்பதற்கு சுக்கிரன் பகவான் பங்கு அலாதியானது. சுக்கிரன்  ராசி மற்றும் இலக்கணத்தோடு தொடர்பு கொண்ட அமைப்பு பெற்றவர்கள் தன்னை அழகாக மற்றவருடன் காட்டிக் கொள்வதில் அக்கறை கொள்வார்கள். தங்களது நடை, உடை ,நளினம் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.அவர்களது அங்க அவயங்கள் ஒரு நல்ல ஒரு சிற்பியை கொண்டு செதுக்கியது போல இருப்பார்கள்.இவர்கள் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருப்பார்கள்.


 பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு நல்ல தேஜஸ் உடையவர்களாக இருப்பதற்கு அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி  குருவாக இருந்து லக்கனத்தில் நின்றாலும்  அல்லது லக்கினத்தில் குரு அல்லது இலக்கணத்தை குரு பார்க்கும்  அமைப்பு பெற்றவர்கள் மற்றவர்கள் வணங்கும்படியான ஒரு ஒளிவட்டம் அவரைச் சுற்றி இருக்கும்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் இளமைக்கும் மற்றும் புதுமைக்கும் காரகனான புதன் பகவான் வலுப்பெற்று லக்கினத்தில் இருந்தாலும் அல்லது இலக்கணத்தோடு தொடர்பு கொண்டாலும் என்றும் மனதை இளமையாக வைத்து புதுமையை நோக்கி தன்னை அப்டேட் செய்து கொள்ளும் நபராக அறிவு திறன் மிக்கவராக ஒருவர் திகழ்வார்.


  ஒருவரது ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் லக்கினம் மற்றும் லக்கினாதிபதி உடன் பார்வை மற்றும் சேர்க்கை போன்ற அமைப்பில் தொடர்பு கொள்ளும்பொழுது அழகு வதனம் கொண்ட நபராக ஜொலிக்க காரணமாக அமைகிறது.


     ஒருவரது ஜாதகத்தில் சிம்மமும் மற்றும் சூரியனும் வலுவான அமைப்பை பெற்று அவை ராசி மற்றும் இலக்கணத்துடன் தொடர்பு கொண்டுள்ள அமைப்பை உடையவர்கள்    நல்ல நேர்மையான நிர்வாகம் திறன் கொண்ட ஆளுமை மிக்கவர்களாக திகழ்வார்.உடல் ,பொருள் ,ஆவி அனைத்தையும் தன்னை சார்ந்தவர்களுக்கு அர்ப்பணிக்கும் நல்ல குணம் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி நல்ல ஒரு ஒளிவட்டம் இருக்கும்.


      ஒரு நாட்டையே  நிர்வாகிக்கும் நேர்மையும் நாணயம் மிக்கவராக மற்றவர் போற்றும் படியான, அவரது பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அடங்கிப் போகும் தன்மை கொண்ட தோற்றமாக மற்றும் ஆளுமை தன்மை கொண்டவராக திகழ்வார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

   9715189647


  செல்

  9715189647

‌‌.  7402570899


Email ;  masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                  



அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்) கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: