Wednesday, 22 June 2022

ஜோதிட சூத்திரங்கள் -(4) (செவ்வாய் பகவான்)

         ஜோதிட சூத்திரங்கள்-(4 ) (செவ்வாய் பகவான்)

                   



ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    கிரகங்களில் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய இரு வீடுகளை ஆட்சி வீடாகவும் ,மேஷ வீடு மூல திரிகோண வீடாகும், மகர வீடு  செவ்வாய் பகவான் உச்ச  வீடாகவும், 

கடக வீட்டில் நீச வீடாகவும் கொண்டுள்ளது,


   செவ்வாய் பகவான் சூரியன் ,சந்திரன் மற்றும் குரு பகவானினை  நட்பாகவும், சுக்கிரனையும் சனி பகவானையும் சமமாகவும் மற்றும் புதன் ராகு கேது ஆகிய வற்றை பகை கிரகங்களாக கொண்டு உள்ளது.


 மிருகசீரிடம் சித்திரை, அவிட்டம் ஆகிய  மூன்று நட்சத்திரங்களுக்கு செவ்வாய் தசை நாதனாகவும் கொண்டு தனது தசை கால அளவு ஏழாக கொண்டுள்ளது.


 செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் தங்குவார்.செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு சகோதர காரகராகவும் செயல்படுகிறார்.


 செவ்வாய் பகவான் இரத்தத்திற்கு காரகராகவும் திகழ்கிறார்.இரத்த வகைகளுக்கும் செவ்வாய் பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.


 செவ்வாய் பகவான் " மங்கள காரகன்" என்று அழைக்கப்படுகிறது. காமத்திற்கும் காரகர் செவ்வாய் பகவான் திகழ்கிறார். செவ்வாய் பகவானுடன் சனி ராகு மற்றும் சுக்கிரன் ஆகியோருடைய சம்பந்தம் ஒருவரை மாறுபட்ட காமம் உடையவராகவும் சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய காம உணர்வு மற்றும் தொடர்பு கொண்டவராக இருப்பார் 


 செவ்வாய் பகவான் பாவத்துவ நிலையில் திருமண ஸ்தானமான லக்கனம்/ராசி , குடும்ப ஸ்தானமான  இரண்டாம் இடம் , 

களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான  எட்டாம் இடம் போன்றவற்றில் இருப்பதோ அல்லது அந்த ஸ்தானங்களை  பார்ப்பதோ அல்லது அந்த அதிபருடன் நெருக்கமாக இணைந்து இருப்பதும் திருமணத் தடையை உண்டாக்குகிறது.


ஒரு மனிதனுக்கு சுகமான திருமண வாழ்வை தருவதில் செவ்வாய் பகவான்  பங்கு மிக முக்கியமானது 


 ராசி/ லக்கனத்திற்கு 2, 4 ,7 ,8 ,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.

செவ்வாய் தோஷம் என்னை பொறுத்தவரை உயிரை கொல்லும் அளவிற்கு பயப்படக்கூடிய தோஷமே அல்ல.


 செவ்வாய் பகவானை குரு சனி புதன் , வளர்பிறை சந்திரன், சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ தோஷம் இல்லை என்பதும் உச்சம் பெற்ற செவ்வாய் வீட்டில் இருந்தாலும் ,ஆட்சி பெற்ற மேஷம் மற்றும் விருச்சிகம் வீட்டில் இருந்தாலும் மற்றும் நீசம் பெற்ற கடக வீட்டில் இருந்தாலும் தோஷம் இல்லை என்பதும் , பொதுவான செவ்வாய் தோஷம் விதிவிலக்குகள் ஆகும்.


   செவ்வாய் தோஷத்திற்கு பயப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் அவை இலக்கனத்தை கெடுப்பதோடு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தையும் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்த்து பாவத்துவம் அடைய செய்கிறது.


     இரண்டாமிடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை குடும்ப ஸ்தானத்தை பாதிப்பு அடைய செய்வதுடன்  , அதன் பார்வையால் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்வை செய்கிறார். ஏழாமிடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் அவை  ஏழாமிடத்தை  பாதிப்பதோடு தன் பார்வையால் லக்கன பாவத்தையும்  மற்றும் குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்து பாதிப்படையச் செய்கிறார். மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் மாங்கல்ய ஸ்தானத்தை பாதிப்படையச் செய்கிறது மேலும் தன்  ஏழாம் இட பார்வையால் குடும்ப ஸ்தானத்தைப் பார்த்து பாதிப்படையச் செய்கிறார்.


 மேற்கண்ட இந்த அமைப்புகள் அனைத்தும் களத்திர தடையை உருவாக்கும் . இந்த பாதிப்பு விஷயங்களை உறுதியாக முடிவு செய்துவிட முடியாது. இவற்றை ஏனைய பிற அமைப்புகளை கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும்.


   லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் இருந்து வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்க்கின்ற செவ்வாய் பகவான் கடுமையான கோபக்காரர் ஆகவும்  எதிலும் விடாப்பிடியாக விதண்டாவாதம் பேசக்கூடியவர் ஆகவும் இருப்பார்.


     செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் இருப்பது காரகோ பாவ நாஸ்தியை  தருகிறது. அதாவது சகோதர காரகனான செவ்வாய் பகவான்  சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருப்பது சகோதரனை பாதிக்கும் என்பதே காரக பாவ நாஸ்தி ஆகும்.


     மிதுனம்  மற்றும் கன்னி  இலக்கனங்களுக்கு செவ்வாய் பகவான் தனது தசையில் சொல்ல முடியாத வேதனையை தருகிறது.


    ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலுத்து காணப்பட்டால் பூமி யோகம் உண்டாகும். இதனால் செவ்வாய் பகவானின் "பூமி காரகன்" என்று அழைக்கப் படுகிறது.


  செவ்வாய் பகவான் பாவ கிரகம் என்பதால் நேரடியாக உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலு பெறக்கூடாது.செவ்வாய் பகவான் மறைமுக வலுப்பெற்று சுபத்துவமான நிலைகளில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பில் இருப்பின்  நாட்டைக் காக்கும் ராணுவம்  மற்றும் போலீஸ் போன்றவற்றில் பணிபுரிவார். நாட்டிற்காக தீவிரவாதியை சுட்டுக் கொலை பண்ணும் வலிமை படைத்த நெஞ்சுரம் படைத்தவராக இருப்பார். இதனால் இவருக்கு பதக்கங்களும், பட்டங்களும் கிடைக்கும்.


     உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ துறையில் இருந்து மருத்துவராக பிறரது ரத்தத்தை பார்த்து குணம் செய்யக் கூடியவராக சேவை புரிவார்.


   இதில் செவ்வாய் பகவான் நேரடியாக உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று பாவத்துவமாக இருந்தால் பொது இடங்களில் பலரை சுட்டுக் கொல்லும் மற்றும் வெடிவைத்து தகர்க்கும் தீவிரவாதியாக திகழ்வார்.


 செவ்வாய் பகவான் லக்னாதிபதியாக லக்கினத்தில் இருந்தாலும் அல்லது இலக்கணத்தை பார்த்தாலோ முரட்டுத்தனம் உடையவராக திகழ்வார் பள்ளிகளில் மற்ற மாணவர்கள் இவளன் என்னை அடிக்கிறான் என்று பலவேறு மாணவர்கள் ரிப்போர்ட் செய்யும் மாணவனாகவும் இருப்பான்.


 செவ்வாய் பகவான் வலுவாக பெற்ற நபர்களை விளையாட்டு போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தி மடைமாற்றம் செய்ய எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக திகழக்கூடிய வாய்ப்பையும் செவ்வாய் பகவான் தருவார்.


 செவ்வாய் பகவான் நேரடியாக வலுப்பெற்று இருந்தாலும் அல்லது  சுபத்துவ படிநிலைகளுக்கு ஏற்ற கசாப்பு கடையில் கறி வெட்டி ரத்தம் பார்ப்பவராகவும் மற்றும் சமையல்காரர் ஆகவும் திகழ்கிறார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

  9715189647


  செல்

   9715189647

    7402570899


Email  : masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                                         



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: