Friday, 24 June 2022

வாழ்வின் சம்பவங்களை முடிவு செய்வது எது?

வாழ்வின் சம்பவங்களை முடிவு செய்வது எது?

                

                               


 செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     மனிதவாழ்வின் சம்பவங்களை முடிவு செய்வதில் பெரும்பங்கு ஆற்றுவது அவரது ஜாதகத்தில் வரக்கூடிய தசாபுத்திகளும் மற்றும் கோச்சார பலன்களுமே  முதன்முதல் காரணமாக அமைகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் எவ்வளவுதான் யோகமான  நிலையில் கிரகங்கள் நின்று இருந்தாலும் அந்த யோகமான தசாபுக்திகள் வராத நிலையில் இருந்தும் பயனில்லாத நிலையே.


  சில நேரங்களில் யோகத்தை தரக்கூடிய அமைப்புகள் அனுபவிக்க இயலாத குழந்தை பருவத்தில் அல்லது அந்திம வயதில் வரும் ஜாதக அமைப்பை பெற்றவர்களும் துரதிஷ்டவாளிகளே ஆவார்.


    ஒருவர் ஜாதகத்தில் யோகாதிபதிகள் என்று சொல்லக்கூடிய கோண அதிபதிகள் தசைகளும் அனைத்தும் நல்லவையே தந்துவிடும் என்று உறுதியாக அறுதியிட்டுக் கூறிவிட முடியாது.


   சில நேரங்களில் கோண அதிபதிகள் நீசம்,பகை, அஸ்தங்கம் மற்றும் மறைவிடம் போன்ற நிலைகளில் இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் தொடர்பினை பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த யோக அதிபதிகள் நற்பலனை தந்துவிடுவதில்லை.


 சிலருக்கு அவ யோகத்தை தரக்கூடிய கிரகங்களாக இருந்தாலும் அவை இயற்கை சுப  கிரகங்களான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பை பெறும்பொழுது அதன் தசை காலங்களில் எதிர்பார்க்காத அளவுக்கு யோகங்களை அள்ளித் தந்து விடுவது உண்டு.


   ஒருவருக்கு யோகத்தை அள்ளித் தருவதில் கேந்திர மற்றும் கோண அதிபதிகள் (யோகர்கள்) மட்டும் என்று முடிவு செய்து விட முடியாது. அதேபோல மறைவு இட  ஸ்தானாதிபதி  எல்லாம் தனது தசையில் இன்னல்களை மட்டுமே தரும் என்பதை அறுதியிட்டு கூறிவிட முடியாது .


  ஒரு கிரகம் நடத்தும் தசை யோகத்தை அள்ளித் தர சுபத்துவ நிலையே மேலோங்கி நிற்கிறது.


  ஒருவரது ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரக அமைப்புகள் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் இருந்தாலும் அந்த தசா அமைப்புகள் அவரது வாழ்வில் வராத நிலையில் இருந்தால் அதனாலும் அந்த யோக அமைப்புகள் இருந்தும் பயனில்லாத நிலையே மேலோங்கி நிற்கிறது.


  எனவே ஒரு கிரகம் நடத்தும் தசை லக்கன யோகராக இருந்தாலும் அல்லது சுபத்துவம் பெற்று நின்றாலும் அந்த தசையானது அவரது வாழ்வில் உரிய வயதில் வந்தால்தான் அந்த ஜாதகத்தை யோக ஜாதகம் வரிசையில் சேர்க்கலாம்.


ஒரு கிரகம் தனது ஆதிபத்தியம் தரும் பலனை அதன் தசை காலங்களில் மட்டுமே தருகிறது.ஆனால் அதன் காரக பலன்களை தனது வாழ்நாள் முழுவதும் தருகிறது.


  ஒரு கிரகம் நடத்தும் தசை யோகத்தை தர அவை இயற்கை சுப கிரகமாக இருந்து கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் யோகத்தை தரும் என்பது பொதுவான விதி ஆகும்.


 ஆனால் இந்த விதிகளுக்குள்ளும்  விதி விலங்குகள் சில உண்டு.


1) இயற்கை சுப கிரகங்களாக இருந்தாலும் கேந்திரத்தில் நின்று உச்சம் அல்லது ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் கேந்திராதிபத்த்திய தோஷ அமைப்பால் பாதிக்கப்பட்டு விடும்.


2) பாவ கிரகங்களாக இருந்தாலும் அவை நேரடியாக உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று இல்லாமல் மறைமுக வலுப்பெற்று இருந்தால் தான் அதன் திசை காலங்களில் யோகத்தைத் தரும்.


3) ஒரு கிரகம் ஆனது பாப கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவற்றுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அல்லது மறைவிடங்களில் நின்றிருந்தாலும் யோகத்தை தராது என்பது பொது விதியாக இருந்தாலும்  ,  

விதி விலக்குகளாக சுபத்துவ  தன்மையின் அடிப்படையில் அவற்றை இயற்கைச் சுபக்கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்புகளை பெரும்பொழுது அவை பாவ தன்மை நீங்கி அதன் தசை காலங்களில் யோக பலனை தந்து விடுகிறது.


    மேற்கண்ட வகையில் ஒவ்வொரு விதிக்குள்ளும் சில விதிவிலக்குகள் மற்றும் சூட்சும உண்மைகள் உள்ளது என்பதை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.


   இதேபோல் ஒருவருக்கு யோக தசை நடக்க கூடிய காலங்களில் கோசார அடிப்படையில் அஷ்டமச் சனி ஏழரைச் சனி நடப்பில் இருப்பின் அந்த யோகம் அதன் தசை காலங்களில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தர இயலாமல் போய் விடுகிறது அதிலும் குறிப்பாக ஜென்ம ராசியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகக்கூடிய காலங்களில் சாதகருக்கு மிகுந்த தொல்லைகளையும் தந்து விடுவது உண்டு.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப் & செல்

    9715189647


      செல்

  9715189647

    7402570899


Email

   masterastroravi@gmail.com


  அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

    M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.


No comments: