Wednesday, 22 June 2022

தொழில் மேன்மை பெற தேவையான கிரக அமைப்புகள்.

 தொழில் மேன்மை பெற தேவையான கிரக அமைப்புகள்.


                               



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    சம்பாதிப்பது என்பது புருஷ லட்சணம் ஆகும்.சம்பாரித்து குடும்பத்தை வழி நடத்துவதில் குடும்ப தலைவனுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.தான் ஈட்டிய பொருளாதரத்திற்கேற்ப குடும்பத்தை வழிநடத்தி செல்வதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமமாக வந்து விட்டார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


 ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று நிற்க வேண்டும். எந்த கிரகம்  அதிக சுபத்துவம் பெற்று ராசி ‌மற்றும் லக்கினத்திற்கு  இரண்டு மற்றும் பத்தாம் இடங்களுடன் தொடர்பு கொள்கிறபோது அவை சார்ந்த தொழில் ஜாதகருக்கு அமையும்.


  எவர் ஒருவர் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான பத்தாமிடம் வலுவிழந்து ஆறாம் இடம் வலுப்பெற்று நிற்கின்ற அமைப்பை பெற்றவர்கள் கடைசி வரை பிறரிடம் வேலை செய்தே பிழைக்க கூடியவர்களாக உள்ளார்கள்.


 மாறாக எவர் ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இடம் வலுவிழந்து பத்தாமிடம் வலுப்பெற்ற அமைப்பைப் பெற்றவர்கள் அவர்கள் தன் வாழ்வின் தொழில் செய்து பிழைப்பை உயர்த்திக் கொள்பவர்களாக இருப்பார்கள்.


 ஒருவரது ஜாதகத்தில் அதிக சுபத்துவ பெற்ற கிரகம் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு தொழில் ஸ்தான அதிபதிகள் தன, லாப ,பாக்கிய மற்றும் இலக்கணத்துடன் தொடர்பு கொண்டுள்ள  நிலையில் தொடர்ந்து யோக தசா புக்தி அமைப்புகள் வரும் அமைப்பை பெற்றவர்கள் தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைவார்கள்.


    பெருங் கேந்திரம் என்று அழைக்கப்படும் தொழில் ஸ்தானமான பத்தாமிடம் அதிபதியும்  மற்றும் வருமானம்  அல்லது  பாக்கியத்தை அள்ளித் தருகின்ற  ஸ்தானமான பெரும் கோணம் என்று அழைக்கக்கூடிய ஒன்பதாம்  இட அதிபதியும் பரிவர்த்தனை பெற்று நின்றோ அல்லது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பை அல்லது சேர்ந்துள்ள நிலையில்  1,2,9,10 இடங்களில் இருந்து அவை தொடர்புடைய தசை வரும் பொழுது தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைவார்கள்.


‌ ஒரு சிலருக்கு தொழில் ஸ்தான அமைப்புகள் வலுப்பெற்று இருந்தாலும் உகந்த தசா அமைப்புகள் வராத நேரத்திலோ அல்லது கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஆரம்பித்த தொழில்  நஷ்டத்தில் முடிந்து விடுவது உண்டு.


 "ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு"


  கொக்கு ஆனது சிறுமீன் குஞ்சுகளை எல்லாம் ஓட விட்டு விட்டு  வாடி நின்று காத்திருக்குமாம் ஏன் கொக்குக்கு மீன் பிடிக்கவா தெரியாது.பிறகு ஏன் வாடி நிற்கிறது என்றால் அதன் பசியை போக்க கூடிய பெரிய மீனுக்காக காத்திருக்கிறதாம்.


  ஒருவரது ஜாதகத்தில் தொழில் ஸ்தான அமைப்புகள் வலுப்பெற்று  கீழ் கண்ட ஏதேனும் ஒரு வகையான சுபத்துவம் பெற்ற தசைகள் நடப்பில் இருந்தால் ஒருவர் தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைவார்கள்.


 1)லக்கன யோக தசைகள் நடப்பில் இருக்கும் காலங்களிலும்,


2) பங்கப்படாத குரு பகவான் பார்வை பெற்ற தசை அமைப்புகள் நடப்பில் இருக்கும் காலங்களிலும்,


3) எவ்விதத்திலும் பங்கப்படாத தர்ம-கர்மாதிபதிகள் தசைகள் நடப்பில் உள்ள காலங்களிலும்,


4) வளர்பிறை சந்திரனுக்கு ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகங்களான குரு, தனித்த புதன் மற்றும் சுக்கிரன் இருந்து அதன் தசை நடப்பில் உள்ள காலங்களிலும்,


5) குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு குரு அணியை சேர்ந்த தசைகளோ அல்லது சுக்கிரன் அணியை சேர்ந்த லக்கனங்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த தசைகளே நடப்பில் இருந்தாலும்,


  காலத்தை போல சிறந்த உபாயம் இல்லை.எனவே ஒருவர் வாழ்வில் உயர்வடைய தங்களது மனதிற்கு பிடித்த ஒரு துறையினை தேர்வு செய்து முனைப்புடன் விடாமுயற்சி செய்தால் தான் மேற்கொண்ட தொழிலில் மேன்மை அடைய இயலும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல்

  9715189647


   செல்

‌ 9715189647

. 7402570899


Email : masterastroravi@gmail.com


                                  



 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: