Monday, 18 December 2017

கிரகங்கள் படுத்தும் பாடு--( 21 )

கிரகங்கள் படுத்தும் பாடு -( 21 )


                                                                   
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
                                         ஒரு சில மனிதர்கள் தனது ஹார்மோன்களின் ஆட்டத்திற்கு ஏற்ப அதிக காம வயப்படுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் ?  அதற்கு கிரகங்கள் படுத்தும் பாடு என்ன? என்பதை அறிவியல் மற்றும் ஜோதிட அடிப்படையில்  ஆய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து நோக்கும் போது "மனித உடலில் உள்ள சுரப்பிகளாவன கல்லீரல் மற்றும் கணையம் ஆகும். இதில் கணையம் என்பது நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்புகளின் மையமாக உள்ளது.நாளமுள்ள சுரப்பிகள் என்சைம்களையும்,நாளமில்லா சுரப்பிகள் ஹார்மோன்களையும் சுரக்கிறது.

                                    இனப்பெருக்க ஹார்மோன்களை தவிர ஏனைய ஹார்மோன்கள் பிறந்ததிலிருந்து உற்பத்தியாகி மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது.ஆனால் இந்த இனப்பெருக்க ஹார்மோன்கள் மட்டும் ஒரு மனிதர் பருவ வயதை அடைந்தவுடன் சுரக்கிறது.
இவையே ஒரு மானிடரை இனப்பெருக்கம் செய்து தனது சந்ததிகளை பெருக்கிக்கொள்ள  உதவியாக உள்ளது.இந்த பருவநிலை அடைவதையே நாம் குமரபருவம் என்கிறோம்.

                                  .இக்ககாலத்தில்தான் இருபாலருக்கும் பாலியல் எண்ணத்தை உண்டாக்கி எதிர் பாலரின் மீது கவர்ச்சியை உண்டாக்குகிறது.
ஓரு  ஆடவருக்கு  மனைவி காரகனாகவும் ,மனைக்கு அதிபதியாகவும் இருக்கும் கிரகம் சுக்கிர பகவான் ஆகும்.

                                       இதே சுக்கிர பகவான்தான் காமத்திற்கும்,,பால் வினை நோய்க்கும் காரகராக உள்ளார்.

                                   இதேபோல ஒரு பெண்ணிற்கு கணவன் காரகர் மற்றும் மனைக்காரகர் செவ்வாய் பகவான் ஆவார்.

                                                                     

                                 எனவே இந்த சுக்கிர பகவானும் ,செவ்வாய் பகவானும் பாவிகள் சேர்க்கை மற்றும்  பார்வை பெறுவதால்தான் ஒரு சிலர் காம வயப்படுவதற்கும் தரம் தாழ்ந்து நடப்பதற்கும் காரணமாகிவிடுகிறது.
காமம் என்பதை "ஹார்மோன்களின் ஆட்டம் "என அறிவியல் கூறினாலும் இந்த ஆண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஆண்ட்ரோஸன் (டெஸ்ட்ரோஸன்)
மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான புரோஸேஸ்டிரான் ,ரிலாக்ஸின் போன்ற நாளமில்லா சுரப்பிகளை தூண்டி காம வயப்படும் செயலை ஜெனன காலத்தில்  பணிரெண்டு ராசிக்குள் அடைபட்ட கிரகங்களே செய்கின்றன்.

                                        சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவு இதேபோல செவ்வாய் மற்றும் சனி
இணைவு ஏழாமிடத்தில் இருந்தாலும் அல்லது ஏழாமிடத்தை பார்த்தாலும் இது போன்ற அமைப்புடையவர்கள் காமவயப்பட்டு தன்னிலும் தரம் தாழ்ந்த நபரிடம் காம ஈடுபாடு வைத்துக்கொள்ள தூண்டும்.

                                              இதேபோல ஒருவரது சாதகத்தில் சந்திரன் ,சுக்கிரன் மற்றும் ராகு இணைவு காம எண்ணம் மேலோங்கி இருக்கும்.
செவ்வாய்,சுக்கிரன் மற்றும் ராகு பகவான் சேர்க்கை வெட்கம் கெட்ட காம உணர்வை கொடுக்கும்.

                                             சுக்கிர பகவானின் இணைவு 1,5,9 அல்லது 3, 7, 11 தொடர்பு ஒரு மனிதனை இயல்பான காம உணர்வை விட சற்று கூடுதலான உணர்வைக் கொடுக்கும்.

                                        சுக்கிர பகவான் 5,8 தொடர்பு பெண்களால் அசிங்கம் மற்றும் அவமானத்தை ஒரு மனிதனுக்கு வழங்கும்.
சுக்கிர பகவான் 8,12 ஆம் பாவ தொடர்பு ஒருவரை பெண்களால் வலி ,வேதனை ,பிரச்சனை ,டென்ஷன் மற்றும் விரயம் கொடுக்கும்.
லக்கனத்திற்கு இரண்டு ,ஆறாம் அதிபதி பாவரோடு சேர்ந்தாலும் அல்லது பாவர் சாரம் பெற்றாலும் இந்த அமைப்பானது இரண்டு அல்லது ஏழில் உண்டானால் காம எண்ணம் மிகும்.

                                  ஏழாமிடத்தில் இரண்டு மற்றும் ஆறுக்குடையவன் சேர காமி.
                            லக்கனத்தின் கோளும் ஆறின் கோளும்  பாவியோட சேர்ந்து நின்றாலும் காம எண்ணம் அதிகமாகும் வாய்ப்புண்டு.

                                     ஒரு மனிதனுக்கு நான்காமிடம் கற்பு ஸ்தானம்.இந்த ஸ்தானம் கெட்டு பாவர் சேர்க்கை மற்றும் பார்வை .இத்துடன் சுக்கிரன் /செவ்வாய் பாவி சேர்க்கை.பல மலர் கண்ட வண்டாவார்.மேலும் கற்பு ஸ்தானம் ஆறு,பணிரெண்டில் அமர்ந்தாலும் மேற்கண்ட பலனைத்தான் தரும்.

                                       சூரியன் ,சந்திரன் இணைந்து அமாவசை யோகம் பெற்று உடன் நான்கின் கோளும் சேர்ந்தால் காம எண்ணம் கூட வாய்ப்புண்டு.
ஏழாமதிபதியும் ,மூன்றாமாதிபதி தொடர்பு காம எண்ணத்தை தூண்டும்.
ஏழு மற்றும் இரண்டாம் அதிபதி பாவி உடன் சேர்க்கை.

                                 ஆறில் சுபர் இருந்து மூன்றில் சந்திரன் ,செவ்வாய் இணைவு தவறாக நடக்க தூண்டும்.

                            இது போன்ற அமைப்பை பெற்றிருப்பதால்தான் சிலர் வரம்பு மீறிய மற்றும் வேலி தாண்டிய வெளளாடாய் மாறி போய் விடுகிறார்கள்.
"அன்பு மட்டுமே போதும் என்றால் ஒரு செல்ல பிராணி நாயை மட்டும் வளர்த்தாலே போதும் !

                                  வெறும் காமம் மட்டுமே போதும் என்றால் ஒரு விபச்சாரி போதும் !
எங்கு காமமும்-காதலும் சரிபாதியாக சங்கமித்துக்கொள்ளும்போது உண்மையான இல்லறம் பிறக்கும்.
"நமது தமிழரின் பண்பாடான "ஒருவனுக்கு ஒருத்தி "எனும் உயரிய கொள்கையை பின்பற்றுவோம்.
காமமும் ,காதலும் கலந்து உடல் நலத்திலும் அக்கறையோடு இன்பத்தை தருபவள் மனைவி மட்டுமே!
ஒருவனுக்கு ஒருத்தியான திருமண பந்தத்தோடு இணைந்து சுகம் பெறுவோம் !
எய்ட்ஸ் அரக்கனை விரட்டுவோம்!"


                                                                             
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியி யல் ஆசிரியர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு,இந்தியா.
தொடர்பு கொள்ள
          செல்
97151 89 647
                740 257 08 99
     வாட்ஸ்அப் எண்
97 151 89 647
My Email
masterastroravi@gmail.com
(போனின் வழியாக தங்களது சாதகத்தின் பலனை கேட்டு பலன் பெற மேற்கண்ட செல் எண்ணிற்கு தொடர்பு கொள்க.திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து தருதல் போன்ற சேவைகளையும் பெறலாம்.கட்டணம் உண்டு.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம் )
விரிவான சோதிட தகவல் பெற
Click my wrbsite
***********************************
AstroRavichandransevvai.blogspot.com
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""::::""":"""""""""""""""""""""""""

No comments: