Monday, 26 March 2018

சாதக கட்டத்தில் நான்காம் பாவம் தரும் நலமான பயன்கள்

நான்காம் பாவம் தரும் நலமான பயன்கள்.

                              


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 54 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

          ஒருவருடைய சாதகத்தில் இரண்டாவது கேந்திர ஸ்தானமாக இந்த  நான்காம் இடம் அமைகிறது.இயற்கை சுபர்கள் கேந்திரத்திற்கு அதிபதியாகி இந்த கேந்திர ஸ்தானத்தில் (1,4,7,10 ) அமரும்போது அவை "கேந்திராதிபத்திய தோஷத்தை தந்துவிடுவதால் அவை யோகங்களை தருவதற்கு பதிலாக தோஸங்களை தந்துவிடுகிறது.

        நாம் பொதுப்பலனாக நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலம் பெறுவது நல்லது என படித்திருப்போம்.

            உதாரணமாக தனுசு லக்கனத்திற்கு ஒன்று மற்றும் நான்காமிட அதிபதியான இயற்கை சுபரான குரு நான்காமிட கேந்திரத்தில் அமராமல்
இருத்தல் நலம்.

          ஒருவர் சாதகத்தில் நான்காமிடத்தில் பாவி தொடர்பின்றி நான்காமிட அதிபதி பலம் பெற்று சுபர் பார்வை பெறும் ஒருவருக்கு கல்வியால் மேன்மையை அடைய முடியும்.

            ஒருவருக்கு பெற்ற தாயால் சுகம் அடையும் யோகம் உள்ளதா ? என்பதையும் மற்றும் தாயின் கற்புநிலை பற்றியும் அறிந்து கொள்ள இப்பாவகம் உதவுகிறது.இதற்கு நான்காமிடத்தின் சந்திரனின் வலிமையையும் அறியவேண்டும்.

            நான்காமாதிபதி நீசம் ,பகை ,அஸ்தமனம் மற்றும் மறைவு ஸ்தானமேறி மாதுர்காரன் சந்திரனுடனும் அசயர்களான ராகு கேது சேர்க்கை தாய் அன்பு கடைசிவரை கிடைப்பது அரிது.அவ்வாறு உயிரோடு இருந்தாலும் பிணியோடு   இருக்க வாய்புண்டு.இவை அதன் தசை காலங்களில் உண்டாக்கும்.

          நான்காமிடத்தில் ராகு இருந்து  நான்காமாதிபதி சனி ,செவ்வாய் சேர்க்கை பெற்று மனதிற்காரகன் சநதிரனும் கெட்டுவிட்டால் தாயின்  கற்புநிலையில் பங்கம் உண்டாவதோடு தன் சுகமும் கெடும்.இதில் சுப கிரக பார்வை பெறின் பலன் மாறுபடும்.

        நான்காமிடத்தில் சனி ,செவ்வாய் சேர்க்கை பெறுவதும் ,சந்திரனுடன் ராகு ,கேது மற்றும் சனி சேர்க்கை கற்பு நிலையில் பங்கம் உண்டாகலாம்.இதில் நான்காம் அதிபதியின் தன்மை மற்றும் சுப கிரக பார்வை இவற்றை பொறுத்தும் பலன் மாறுபடும்.எனவே சனி ,செவ்வாய் சேர்க்கை பெற்ற எல்லா பெண்களும் மனதால் கெட்டவர்கள் எடுத்துக்கொள்ளகூடாது.

         இதேபோல சுக்கிரன்,செவ்வாய் சேர்க்கையும் காம மிகுதியை உண்டாக்கும்.வழி தவறி மற்றும் தகுதிக்கு கீழான நிலையில் உறவு கொள்ள ஆசையை உண்டாக்கும்.

           நான் சாதக ஆராய்சியில் ஈடுபடாத காலத்தில் கல்லூரியில் படிக்கும் காலங்களில் பல பெண்கள் தைரியமாக அடாவடியான செயலில் ஈடுபடுவதை பார்த்திருக்கிறேன்.எப்படி இந்த பெண்களுக்கு/ஆண்களுக்கு மன தைரியம் வந்தது என எண்ணிப்பார்த்ததுண்டு.

          .இப்பொழுதுதான் அவை அனைத்தும் இது போன்ற கிரகங்கள் சேர்க்கையால் உண்டான பலன் என்பதை தெளிவாக எனக்கு சோதிட ஆராய்சியில் ஈடுபட்டு அதே போன்ற சாதகங்களுக்கு பலன்கூற முற்பட்டதன் விளைவாக உணரமுடிந்தது.எல்லாம் கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்.

.         இதனால் சில முதுநிலை பெறியியல் போன்ற உயர் கல்வி படித்த மாணவிகள் கூட உடலியல் கவர்ச்சியால் கிரகங்கள் உண்டாக்கும் விளைவால் தன்னைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் குறைவான நபர்களோடு வீட்டைவிட்டு ஓடி போவதற்கு காரணமாகிறது.மேலும் அழகான மனைவி வீட்டில் இருந்தும் மனைவியைவிட எந்தவிதத்திலும் அழகில் ஈடுசெய்ய முடியாத நபரோடு தவறாக நடந்து மானபங்கம் உண்டாவதும் இந்த கிரகங்கள் படுத்தும் பாடு ஆகும்.

          நான்காமிடத்தின் அதிபதியை பொறுத்தும் சுபர்பார்வை படும்போது பலனில் மாறுபட்டு குணவாதியாக/குணவானாக இருக்கலாம்.

         நான்காமிடத்தை பொறுத்து ஒருவருக்கு வண்டி வாகனயோகங்களையும் பார்க்கலாம்.நான்காமிடமும் ,வாகனகாரகன் சுக்கிரன் பகவானும் பலம் பெற்று சனி சம்பந்தம் பெறுவதை பொறுத்து வாகன யோகம் உண்டா ? என அறியலாம்.

          நான்காமிடத்தை பொறுத்து சொந்த வீடு உருவாகும் யோகத்தை அறியலாம்.நான்காமாதிபதி நீசம்,மறைவு,பகை மற்றும் அஸ்தமனம் பெற்று நான்காமிடத்தில் கேது மற்றும் மாந்தி இருப்பின் கோலுன்றிய ஒழுங்கான வீடு அவனுக்கு இல்லை எனலாம்.சிலர் சொந்த வீட்டில் வசிக்காமலே கடைசி வரை வாடகை வீட்டிலோ அல்லது ஒண்டு குடித்தனமாக இருப்பதற்கு நான்காமிடமே காரணமாகும்.

          அதேநேரத்தில் நான்காமிடம் பலம்பெற்று சுபர் பார்வை பெற்றவருக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டு.மேலும் நான்காமிட அதிபதியோடு எத்தனை கிரகம் தொடர்பு  பெறுகிறதோ அத்தனை வீடுகள் ஒருவருக்கு அமையும்.

        பொதுவாக நான்காமதிபதி பலவீனமாக பெற்றவர்கள் எவ்வளவதான் பணம் ஈட்டினாலும் அந்த சுகத்தை தான் அனுபவிக்க முடியாமல் யாரோ அனுபவிப்பார்கள்.

          அதேநேரத்தில் தான் சரியாக சாம்பாரிக்காவிட்டாலும் சுகாதிபதியான நான்காமாதிபதி பலம் பெற்றிருந்தால் அந்த கிரகங்களின் சேர்க்கையை பொறுத்து அடுத்தவர் வீட்டில் சொத்தில் சுகமாக  வாழும் யோகம் உண்டு.

        உதாரணமாக ஏழாமாதி சுகாதிபதியோடு  தொடர்பு பெறின் மனைவி வழி சொத்தால் சுகம் பெறலாம்.இது அவரவர் கிரகசேர்க்கையை பொறுத்து பலனில் மாறுபடலாம்.

          நான்காமாதிபதியும் ,பத்தாம் அதிபதியோடு தொடர்பு கொள்ள கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யலாம்.என்ன கோவில் கட்டி குடமுழுக்கு செய்யலாம் என்பதும் அவரவர் கிரகநிலையை பொறுத்தது.

        சிலர் பால் பசு மாடுகள் வைத்துக்கொள்வதும் இந்தபாவகத்தை பொறுத்தது.நான்கில் பாவிகள் தொடர்பும் மற்றும் நான்காமாதி ராகு ,கேது சேர்க்கை ஆடு,மாடு ஜீவசந்துகளை வளர்க்கும் யோகமில்லை.மாறாக சுபர் தொடர்பு பெறின் கால்நடைகள் வைத்திருக்கலாம்.

        தோட்டம் மற்றும் பயிர் நிலங்களை வைத்துக்கொள்ளும் (நன்செய்,புன்செய் நிலங்களை ) யோகமறிய இந்த பாவகமும்,பூமிக்காரன் செவ்வாயின் நிலையை பொறுத்துதான் முடிவு எடுக்கப்படவேண்டும்.

          விவசாய நிலங்கள் வாங்கலமா? இல்லை       வீடு கட்டும் நிலங்களை வாங்கலமா ? என்பதையும் இந்த பாவகத்தில்தான் ஆராய்சி செய்யவேண்டியதாய் உள்ளது.

         சிலர் மந்திர மாயஜால வித்தைகளில் ஈடுபட்டு பணம் ஈட்டுவதற்கு இந்த பாவகத்தையும்,ராகு பகவானையின் நிலை அறியவேண்டும்.நான்காமிடத்தில் ராகு தொடர்பு இருப்பவர்களுக்கு இந்த அமைப்பு உருவாகலாம்.

         சிலர் குதிரை வளர்ப்பதும் ,குதிரை சவாரி செய்யும் யோகமும் இப்பாவகமே காரணமாகும்.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                  
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
           M.SC,MA,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆராய்சி மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
Email
  masterastroravi@gmail.com

No comments: