Friday, 23 March 2018

சாதக கட்டத்தில் மூன்றாம் பாவம் எதை ஆய்ந்தறிய உதவுகிறது ?

சாதக கட்டத்தில் மூன்றாம் பாவம் எதை ஆராய்ந்தறிய உதவுகிறது ?


                                                 
                          
கிரகங்கங்கள் படுத்தும் பாடு- ( 53 )

      ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

           ஒரு மனிதன்  கீர்த்தி மற்றும் புகழை அடைவானா ?  அல்லது அடைந்துள்ளானா ?என்பதை அறிய இந்த மூன்றாம் ஸ்தானம் உதவுகிறது.
     
           இந்த மூன்றாம் அதிபதி உச்சம் ,ஆட்சி போன்ற ஸ்தானங்களை பெற்று  வலுப்பெற்று சுபர் பார்வை பெற்று அதன் தசை நடைபெறும் காலங்களில் பெயரும் புகழும் அடையவைக்கிறது.

           ஒருவருடைய  உடன்பிறந்த சகோதர/சகோதரிகளின் நிலைகளை பற்றி அறிந்துகொள்ள இந்த மூன்றாம் ஸ்தானத்திலிருந்து அறியலாம்.

       மூன்றாம் ஸ்தானத்திலும் மற்றும் அதன் அதிபதி ஆகிய கிரகங்கள் சுபகிரகங்களாக இருந்து உச்சம் ஆட்சி பெறும்போது நல்ல உடன்பிறந்த சகோதரர்களை பெறலாம்.

         சிலர் உடன்பிறந்த சகோதரர்களை பெறாமல் இருப்பதற்கும்/அப்படியே பெற்றிருந்தாலும் அவர்களால் எவ்வித பலனும் பெறாமல் இருப்பதற்கு மூன்றாம் இடத்தில் அசயர்களான ராகு ,கேது இருந்து அதன் அதிபதி பலமிழப்பதும் காரணமாகும்.

          மூன்றாம் அதிபதியானது ஆறு மட்டும் எட்டுக்குடையவர்களுடன் தொடர்புபெறும்போது உடன் பிறந்தவர்களே எதிரியாகிவிடுகிறார்கள்.

                           

         ஒருவர் எழுத்து துறையில் புகழ்பெறவேண்டுமாயின் இந்த மூன்றாம் ஸ்தானம் முக்கியமானது.

         மூன்றாம் ஸ்தானத்தில் சகோதரகாரகன் செவ்வாய் இருந்தால் "காரகபாவநாஸ்தியை "உண்டாக்குகிறது.இது ஒரு சகோதரதோஷத்தை உண்டுபண்ணுகிறது.

            மூன்றாமிடம் என்பது ஒருவருக்கு புகழை ஈட்டி தரும் ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் கலைக்காரகன் சுக்கிரன் இருந்து பலம்பெறும்போது ஒருவரை ஓவியம்,ஆடல் மற்றும் பாடல் போன்ற கலைசார்ந்த விஷயங்களில் ஈடுபடவைக்கும்.

            மூன்றாம் இடத்தில் புதன் இருப்பின் எழுத்து,கணிதம் மற்றும் சோதிடம் சார்ந்த துறைகளில் நாட்டத்தை உண்டாக்கும்.

            மூன்றாமிட சூரியன் துணிச்சலை உண்டாக்கும்.சாதகர் வீரியமிக்கவராகவும் பலமிக்கவராகவும் இருப்பர்.

       இந்த மூன்றாமிட அதிபதி ஆறு,எட்டு  மற்றும் பணிரெண்டாமிடங்களில் அமர்ந்தால் அதாவது மறைவுஸ்தானத்தில்  அமர்ந்தால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்"எனும் அடிப்படையில் அதன் தசைகாலங்களில் யோகத்தை அளிக்கும்.

                                  

         இதுவரை நான் கூறி வந்தது     பொதுப்பலனே ஆகும்.அவரவர் சாதகத்தை பொறுத்து மாறுபடும்.
நான் மூன்றாம் அதிபதி பலப்படுவது கீர்த்தி ,புகழ் மற்றும் சகோதரஸ்தானத்திற்கு நல்லது என்றாலும் ஒரு சில ராசிகளை பொறுத்து இந்த கருத்து மாறுபடும்.

           மேஷ லக்கனகாரர்களுக்கு மூன்றுக்குரிய புதன் பகவானே ஆறாம் இடத்திற்கும் அதிபதியாகவும் வருவதால் ஆட்சி மற்றும் உச்சம் போன்ற ஸ்தானம்பெற்று இருப்பது நல்லதல்ல. இந்த ராசிகாரர்களுக்கு மூன்றுக்குரியவர் பலன்பெறக்கூடாது.அவ்வாறு பலம்பெறும்போது கீர்த்தி மற்றும் புகழை தந்தாலும் எதிரியாலோ அல்லது கடன் மற்றும் நோயால் பாதிப்பை உண்டாக்கும்.

            இதேபோல துலாம் லக்கனத்தாருக்கும் மூன்று மற்றும் ஆறுக்குடையவராக இயற்கை சுபரான குருவாக இருந்தாலும் ஆறாம் இடத்தில் ஆட்சியோ ,பத்தாம் இடமான கடகத்தில் உச்சமோ பெறுதல் நல்லதல்ல.எனவே இந்த ராசிக்காரர்களுக்கு மூன்றாமிட பலம்பெறுதல் நல்லதல்ல.
கன்னி லக்கனத்திற்கும்,  மூன்றுக்குடைய சுக்கிரபகவானே அட்டமாதியாக வருவதால் சுக்கிரன் பலம் பெறாமல் இருத்தல் நல்லது.

          மூன்றாம் இடம் கீர்த்தி மற்றும் புகழை தரும் என்பது உண்மைதான் என்றாலும் அவையே இன்னொரு ஸ்தானத்திற்கு ஆதிபத்தியமாக வரும்போது அவை கெட்ட ஸ்தான (6-ம் இடம்) ஆதிபத்தியமாக வரும்போது அவை சார்ந்த கெடுதலையும் தரும் என்பதால் நாம் பொதுப்பலனான மூன்றாம் இடம் பலம் பெறவேண்டும் என்ற விதிவிலக்கிலிருந்து (சிறப்பு காரணம்) சற்று மாறுபட வேண்டியுள்ளது.எனவே இது போன்ற அமைப்பை பெற்றவர்களுக்கு மூன்றாம் இடம் பலம் பெறாமல் இருத்தல் நலம்.

      இதேபோல ரிஷப ராசிக்கு மூன்றாம் இடம்( ஸ்திர ராசிக்கு -3,8 ஆம் அதிபதி மாரகஸ்தானம்) மாரகஸ்தானமாகவும் வருவதால் அந்த திசை நடைபெறும் காலங்களில் மாரகத்திற்கு ஈடான பாதகங்களை தரும் என்பதால் இந்த ராசிக்கும் பொதுவிதியிலிருந்து மாறுபடவேண்டும்.

                              

         மீன ராசிக்கு சுக்கிர பகவான் மூன்றாமிட ஆதிபத்தியத்தோடு அட்டமாதிபத்திய ஆதிக்கம் பெற்றிருப்பதால் சுக்கிர பகவான் பலம் பெறாமல் இருத்தல் ( 3-ம் பாவம்) நலம்.

           கடக ராசிக்கு புதன் பகவான் மூன்று மற்றும் பணிரெண்டாம் இட ஆதிபத்தியம் ஆகும்.மறைவு ஸ்தானங்களில் மூன்று மற்றும் பணிரெண்டாம் நன்மையையே அதிகம் தரும் என்பதால் இங்கு புதன் உச்சம் மற்றும் ஆட்சி பெறும்போது கீர்த்தி மற்றும் புகழோடு வெளிநாடு செல்லும்யோகம் ,சயன சுகத்தை தரும்.

        எனவே மூன்றாம் இடத்திற்கு உரிய கிரகத்தின் மற்றொரு ஸ்தானம் மறைவுஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இட ஆதிபத்தியமோ அல்லது பாதக,மாரகஸ்தானமோ பெறும் நிலைவரின் அப்பொழுது மூன்றாமிடம் பலப்படாமல் இருத்தல் நலம்.

  நன்றி நன்றி நன்றி

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                                   

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc,MA ,BEd.
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்.

வாட்ஸ் அப்
  97 151 89 647

செல் : 740 257 08 99
             97 151 89 647
My email
  masterastroravi@gmail.com

My blogspot
   AstroRavichandran. blogspot. Com
    AstroRavichandransevvai.blogspot. com

............

No comments: