சூரிய பகவானின் சூட்சும உண்மைகள்.
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 195 )
சாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் இடத்தைக்கொண்டே அவன் பிறந்த தமிழ் மாதத்தினை எளிமையாக கண்டறிந்து விடலாம்.சூரிய பகவான் ஒரு ராசிக்கு சுமாராக 30 நாட்கள
( ஒரு மாதம் ) வீதம் பணிரெண்டு ராசிகளை கடக்க பணிரெண்டு மாதம் அதாவது ஒரு வருடம் ஆகிறது.
( ஒரு மாதம் ) வீதம் பணிரெண்டு ராசிகளை கடக்க பணிரெண்டு மாதம் அதாவது ஒரு வருடம் ஆகிறது.
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தவரது சாதக கட்டத்தினை எடுத்து பார்த்தால் மேஷராசியில் சூரியன் உச்சம் பெற்று காணப்படுவர்.இதேபோல பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மீன வீட்டில் சூரியன் இருக்கும்.
சூரியன் இருக்கும் வீட்டினை சந்திரன் சென்று ஒரு ராசியில் சேரும்போது அமாவாசை உருவாகிறது.இதிலிருந்து சந்திர பகவான் நகர்ந்து சூரியனுக்கு நேர்எதிர் சந்திரன் வரும் காலம் பொளர்ணமி ஆகும்.
சூரியனை விட்டு விலகி நேர் எதிர் வரை( சூரியனுக்கு ஏழாம் வீடு) சந்திரன் சஞ்சரிக்கும் காலம் வளர்பிறை காலம் ஆகும்.
சூரிய பகவானுக்கு ஏழாம் வீட்டிலிருந்து சூரிய பகவான் இருக்கும் வீட்டை நோக்கி நகரும் காலம் தேய்பிறை காலம் எனலாம்.
சந்திரன் ஒரு ராசியில் 21/4 நாள்கள் சஞ்சாரம் செய்யும். சூரியன் வாசம் செய்யும் இரண்டாவது வீட்டிலிருந்து ஆறாவது வீடு வரை சந்திரன் இருப்பின் அவை வளர்பிறை சந்திரன் ஆகும். இதேபோல எட்டாம் வீட்டிலிருந்து பணிரெண்டாம் வீடு வரை சஞ்சரிக்கும் காலத்தில் உள்ள சந்திரனை தேய்பிறை சந்திரன் ஆகும்.
சூரியன் ஒரு ஆண்டிற்கு இரு வேறு விதமான சுழற்சிகளை மேற்கொள்கிறது.வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் காலம் "தட்சிணாயனம்"என்றும்,தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலம் " உத்தராயணம் " என்றும் அழைக்கப்படுகிறது.
தட்சிணாயணம்
சூரியபகவான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது. இச்சுழற்சி ஆடி மாதம் தொடங்கி ஆவணி்,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை மாதங்களை தொடர்ந்து மார்கழி மாதத்தில் நிறைவு பெறுகிறது.இந்த காலம் தேவர்களுக்கு ஓர் இரவு பொழுதாக கருதப்படுகிறது.
இக்காலங்களில் சூரியனின் கதிர் வீச்சு பகலில் சற்று குறைவாக இருக்கும். இரவு காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும்.
உத்தராயணம்
தை,மாசி,பங்குனி,சித்திரை ,வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் சூரியபகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்கிறது.இக்காலம் தேவர்களுக்கு ஓர் பகல் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் இறப்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பது ஓர் ஐதீகம் ஆகும்.
சூரியனின் ஆட்சி வீடு-சிம்மம் ஆகும்.
உச்சவீடு-மேஷம் ஆகும்.சூரியன் மேஷ வீட்டில் இருக்கும் போது அது சித்திரை மாதம் என்பதால்தான் அக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி கோடை காலமாக உள்ளது.
உச்சவீடு-மேஷம் ஆகும்.சூரியன் மேஷ வீட்டில் இருக்கும் போது அது சித்திரை மாதம் என்பதால்தான் அக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி கோடை காலமாக உள்ளது.
அதேநேரத்தில் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் வீட்டிற்கு வருகிறார்.அது சூரியனுக்கு நீச வீடு என்பதால் வெயிலின் தாக்கம் அம்மாதத்தில் குறைவான குளிர்காலமாக உள்ளது.
சூரியனுக்கு குரு,சந்திரன், செவ்வாய் நண்பர்கள் ஆவார்.சுக்கிரன்,சனி,ராகு,கேது ஆகியோர் பகை கிரகங்கள் ஆகும்.
கோள்களில் முதன்மையானவர் சூரியபகவான் ஆவார்.சூரியன் இன்றி எந்த ஜீவராசிகளும் உயிர் வாழ முடியாது.
தாவரங்கள எல்லா உயிர்களும் உயிர் வாழ தேவையான உணவு தயாரித்தல் நிகழ்ச்சிக்கு சூரியன்தான் காரணகர்த்தா ஆகும். ஒளிச்சேர்க்கை மூலமாக உணவு தயாரிக்க சூரியன் இன்றி இயலாது.
ஆரம்ப காலத்தில் பூமியை மையமாக கொண்டு கோள்கள் சுற்றுகிறது எனும் "புவி மையக்கோட்பாடு " நிலவி வந்தது.கெப்ளர்,கோபர் நிக்கஸ் போன்றவர்களின் வருகைக்கு பின்னர் கோள்கள் சூரியனை மையமாக கொண்டு நீள் வட்டத்தில் சுற்றிவருகிறது.இதற்கு "சூரியகுடும்பம்" என அழைத்தனர்.
நிறம் - COLOUR ; சிவப்பு
குணம் ; குரூரம்
வடிவம் ; சமன்
திசை ; கிழக்கு
ரத்தினம் : மாணிக்கம்
தான்யம் ; கோதுமை
உலோகம் ; தாமிரம்
புஷ்பம் ; செந்தாமரை
வாகனம் :தேர்
சுவை ; காரம்
தேவதை ; சிவன்
பாஷை ; சமஷ்கிருதம்
ஜாதி ; சத்திரியன்
பிணி ; பித்தம்
திசை ; கிழக்கு
கிழமை ; ஞாயிறு
ஷேத்திரம் ; ஆடுதுறை
திசை அளவு ; ஆறு ஆண்டுகள்
நட்சத்திரங்கள் ;
கார்த்திகை,உத்த்திரம்,உத்திராடம்.
சூரியனின் வேறு பெயர்கள் ;-
திக்கறியோன்,தினகரன்,பகலோன்,
வெய்யோன்,பானு,மார்த்தாண்டன்,அருக்கன்,உதயன்,என்சூழ்,ரவி,பரிதி,
கோளரசன்,ஆதவன், ஞாயிறு, அரஉண்ஊர்தி,அரிபுண்டரியன்,
வெங்கதிர்,செங்கதிர்,பாஸ்கரன் முதலியன.
சூரியனின் அஸ்தங்க காலம்
சூரியன் தன்னை நெருங்கும் கிரகங்களை பலம் இழக்க செய்கிறது.இதனைதான் "அஸ்தங்கம்" என அழைக்கப்படுகிறது.
சூரியனை 12 பாகைக்குள் சந்திரன் அஸ்தங்கம் அடைகிறது.இதனை அமாவாசை காலம் எனலாம்.
சூரியனை 17 பாகைக்குள் சந்திக்கும் செவ்வாய் அஸ்தங்கம் அடைகிறது.இதனால் செவ்வாய் பகவான் தரக்கூடிய காரக மற்றும் ஸ்தான பலன்கள் பாதிக்கப்படுகிறது.
சூரியனை 8 பாகைக்குள் இணையும் சுக்கிரனும்,15 பாகைக்குள் சூரியனுடன் இணையும் சனி பகவானும் அஸ்தங்கம் அடைகிறது.
இவ்வாறு எல்லா கிரகங்களையும் தனனுடன் குறிப்பிட்ட பாகைக்குள் இணையும்போது அஸ்தங்கம் அடையசெய்யும் சூரியன் ராகு பகவான் உடன் மட்டும் இணையும் போது தனது பலத்தினை இழக்கிறது."வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் இருப்பான் " எனும் பழமொழிக்கு ஏற்ப சூரியன் தன் பலத்தினை அரவுகளுடன் இழக்கிறது.
சூரியன் தரும் யோக பலயோகம்
1) சுபவேசி யோகம்
சூரிய பகவானுக்கு இரண்டாம் வீட்டில் சுப கிரகம் இருப்பதால் உருவாகும் யோகம் ஆகும்.இதனால் பெயர்,புகழ்,பெருமை,செல்வாக்கு உண்டாகும்.
2) சுபவாசி யோகம்
சூரிய பகவானுக்கு இரண்டாம் வீட்டில் சுபகிரகம் இருப்பதால் உருவாகிறது.இதனால் எழுத்தாற்றல்,பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.
3) உபயசரி யோகம்
சூரியனுக்கு இருபுறமும் சுப கிரகங்கள் இருப்பது ஆகும்.சுகவாழ்வு,செல்வாக்கு உண்டாகும்.
4) பாபவேசி யோகம்
சூரியனுக்கு இரண்டாம் வீட்டில் அசுப கிரகம் இருப்பது ஆகும்.இதனால் சாதகர் பலவித இன்னல்களை பெறக்கூடும்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ்அப்
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA, BEd.
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc,MA, BEd.
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran.blogspot. in
No comments:
Post a Comment