உங்களது சாதகத்தில் பலம் இழந்த கிரகங்கள் தரும் பாதிப்புகளும் மற்றும் பரிகார ஆலோசனைகளும் .
கிரகங்கள் படுத்தும் பாடு--( 193 )
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
ஒருவரது சாதகத்தில் உள்ள ஒரு கிரகம் பலவீனம் அடைந்திருக்கும்போது அக்கிரகத்திற்கு உரிய காரக பலன்களும், அக்கிரகத்தின் ஆதிபத்திய பலன்களும் பாதிக்கப்படுகிறது.
ஒருவரது சாதகத்தில் எந்த கிரகம் பலவீனம் அடைந்துள்ளது ? என்பதனை கண்டறிந்து அதன் பலவீனத்தினை சரி செய்யக்கூடிய பரிகாரங்களை சொல்லி அப்பரிகாரத்தினை முழு நம்பிக்கையுடன் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கும் என சொல்லி அனுப்புவதே சோதிடரின் உன்னதமான பணியாகும்.
பலவீனம் அடைந்த கிரகத்தினை கண்டறிவது எப்படி ?
1) ஒரு கிரகமானது நீசம்,பகை,அஸ்தமனம்,வக்கிரம் போன்ற நிலைகளை அடைந்திருந்தால்,
2) ஒரு கிரகமானது மறைவிட ஸ்தானமான 6,8, ஆம் இடங்களை சென்றடைவது,
3)ராசியில் உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்த கிரகம் அம்ச பீடத்தில் பலம் இழந்து நிற்பது,
4) சாதக கட்டத்தில் ஒரு உச்மடைந்த கிரகமானது வக்கிரம் பெற்று இருப்பின் அக்கிரகம் தனது பலத்தினை இழந்து நிற்கும்.
5 ) ஒரு கிரகமானது பலமடைந்து இருந்தாலும் சூரியனுடன் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் அஸ்தமனம் ஆகி இருப்பின் பலம் இழந்து நிற்க வாய்ப்புகள் உண்டு.
சூரியன் தரும் காரக பலன்களும்,அதற்கான பரிகார வழிபாட்டு முறைகளும்,
நவகிரகங்களில் முதன்மையானவர் சூரிய பகவான் ஆவார்.ஆதலால் இவரை கோளரசன் என அழைப்பர்.
இவர் ஆத்மா காரகர் என அழைக்கப்படுவது உண்டு.சூரியன் ஒருவரது சாதகத்தில் தலைமையேற்று வழிநடத்தக்கூடிய ஆத்ம பலத்தை தருபவர்.இவர் பலம் பெற்ற அமைப்பை பெற்றவர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆளுமைத்தன்மை பெற்றவராக இருப்பர்.
சூரியபகவான் ஒருவரை தலைசிறந்த சாணக்கியத்தனமிக்க அரசியல் தலைவராக்கி அழகு பார்க்கும்.அரசாங்கத்தின் உயரிய பதவிகள் அவரை தேடி வரும்.
தந்தைக்கு காரகர் இவரே ஆவார்.ஆதலால் ஒரு நல்ல தந்தை அமைவதற்கும்,தந்தை வழி உறவுகளால் அன்பும், ஆதரவும் மற்றும் சொத்துக்களும் கிடைப்பதற்கு சூரிய பகவனே காரகர்.
உடல் ஆரோக்கியத்திற்கும் இவர் முக்கிய வகிப்பவர்.இவர் தலை,கண்கள்,வயிறு ,வயிறு,பித்தம்,
உஷ்ணம் மற்றும் இரத்த மாறுபாடு போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு இவரே குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
உஷ்ணம் மற்றும் இரத்த மாறுபாடு போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு இவரே குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
உஷ்ணத்துடன் தொடர்பு கொண்ட ஒற்றை தலைவலி,காய்ச்சல்,தலை சம்பந்தப்பட்ட நோய்கள்,மூலம்,நெருப்பால் கண்டம் போன்றவற்றோடு சூரியன் பகவானே காரணம் ஆகும்.
பல்வலி,நெருப்பால் கண்டம்,எதிரிகளால் கண்டம்,,இருதயநோய் போன்றவை இக்கிரக பலவீனத்தல் உருவாகலாம்.
ஒரு சிலர் சிவ வழிபாட்டின் மீது ஐக்கியமாவதற்கு சூரிய பகவானே காரணம் ஆகும்.
ஒருவரது ஆடவரின் சாதகத்தில் சூரியன் பலம்பெற்று நிற்கும்போது அவர் சிறந்த ஆண்மைத்தன்மை மிக்கவராக திகழ்வார்.
ஒருவரது சாதகத்தில் சூரியன் பலம் இழந்து நின்றால் அதற்குரிய காரக பலன்களும்,ஸ்தான பலன்களும் பாதிக்கப்படும் என்பதால் இக்கிரக பாதிப்பினை ஈடு செய்வதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் விடுபடலாம்.
1) சூரியன் பலம் இழந்த அமைப்பை பெற்றவர்கள் ஞாயிறு அன்று விரதமிருந்து சிவன் ஆலயங்கள் சென்று செந்தாமரை மலரால் பூஜை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் விடுபடலாம்.
2) சூரிய காயத்ரி ஜெபம் பண்ணலாம்.
3) ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யலாம்.
4) பிரதோஷ விரதமிருந்து சிவ வழிபாடு செய்யலாம்.
5) சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் செய்யலாம்.
6) சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை என்பதால் பசுக்களுக்கு கோதுமையை உணவாக வழங்கலாம்.மேலும்
கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த்தங்களை தானம் செய்யலாம்.
கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த்தங்களை தானம் செய்யலாம்.
8) அதிகாலை எழுந்து கிழக்கே சூரிய பகவானை மனதில் தியானித்து "சூரியநமஸ்காரம் " செய்யலாம்.
9) அனுமன் வழிபாடு செய்யலாம்.
10) சிவனுக்கு உகந்த உலோகம் தாமிரம் (காப்பர் ) என்பதால் தாமிரத்தால் செய்யப்பட்ட அனுமன் தகடு அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட இஷ்ட தெய்வ தகட்டினை வைத்து வழிபடலாம்.
11 )ஞாயிறு பூஜை அறையில் அதிகாலை பொழுதினில் பசுநெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
12) ஒரு முகம் அல்லது பணிரெண்டு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிதல்.
13 ) கையில் சிவப்பு நிற கைக்குட்டை வைத்திருத்தல்,ஏலக்காய் மென்று வருதல்.
14 ) எருக்கு சமத்தால் ஹோமம் செய்தல்.
15) "ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாஹராய தீமஹி
தன்னே சூரிய பிரசாத்"
இதுபோன்ற சூரிய மூல மந்திரங்களை ஒரு நாளைக்கு நூறு தடவை பக்தியோட உச்சரித்தல்.
திவாஹராய தீமஹி
தன்னே சூரிய பிரசாத்"
இதுபோன்ற சூரிய மூல மந்திரங்களை ஒரு நாளைக்கு நூறு தடவை பக்தியோட உச்சரித்தல்.
16 ) வசதி படைத்தவராக இருப்பின் தான் அணியும் மோதிரத்தில் மாணிக்க கல் பதித்தல்.
சூரியன் வழிபட உகந்த கோவில்கள்.;-
1) சூரியன் கோவில்
கும்பகோணம் அருகில் உள்ளது.
2) திருக்கண்டியூர் வீரட்டம்.
இது தஞ்சையிலிருந்து திருவையாறு போகும் வழியில் ஆறு மைல் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
3) திருப்புறவர் பனங்கரட்டூர்.
விழுப்புரத்திலிருந்து வடக்கே ஐந்தரை கல் தொலைவில் முண்டியம்பக்கம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் இக்கோவில் உள்ளது.
4) இந்தியாவில் ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள "கோனார்க் சூரியன் கோவில் உள்ளது .
கத்தரி காலம்.
சூரியன் பரணி -3-ம் பாதம் முதல் ரோகினி -2-ம் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம் "கத்தரி காலம் " என்பதால் இக்காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்பதால் இதுபோன்ற காலங்களில் வீடு கட்ட முகூர்த்தம் செய்தல் ,புதுமனை புகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்யாமல் இருத்தல் உத்தமம் ஆகும்.
நன்றி நன்றி நன்றி.
அடுத்த பதிவில் சந்திர பகவான் பலம் இழந்தால் தரும் பாதிப்புகளையும்,பரிகார வழிபாட்டினையும் காண்போம்.
(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது
பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் ஆ ப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் ஆ ப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ் அப்
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்,
M.Sc, MA, BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc, MA, BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
..............
No comments:
Post a Comment