சந்திராதி யோகம்
சந்திராதி யோகம்
செவ்வாய்ப்பட்டிஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
கிரகங்களில் சந்திர பகவான் இருக்கும் இடத்தையே ராசியாக எடுத்து கொள்ளபடுகிறது.
கோச்சார பலன்கள் அனைத்தும் சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகிறது.
ஜெனன காலத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகின்ற யோகங்களை
" சந்திராதி யோகங்கள்" என அழைக்கப்படுகிறது.
சுனபா யோகம்
'இந்துவுக்(கு) இரண்டாம் வீட்டில்
இனியகோள் இருந்த காலை
முந்திய சுனபா யோகம்
இதன்பலன் மொழியும் காலை
சந்ததம் தனவான் ராஜ்
சன்மானம் புத்தி யுள்ளார்
சுந்தரமப் புவிகள் எங்கும்
துதித்திடு கீர்த்தி மானாம் '
பொருள் ;-
சந்திரன் இருக்கின்ற ராசிக்கு இரண்டாமிடத்தில் சுப கிரகங்களில் ஒன்றோ அல்லது பலவோ நின்று இருந்தால் அது சுனபாயோகம் என்று பெயர்.
சுனபா யோகத்தில் பிறந்தவன் எந்நாளும் செல்வ வசதி உள்ளவனாய் இருப்பான். வேந்தர்களிடம் வெகுமானம் பெறுவான். அறிவாளி. பூமி முழுவதும் போற்றுகின்ற புகழுடையவனாக வாழ்வான்.
சந்திரனுக்கு 2-ல் சுப கிரகங்கள் நின்றால் தான் சுனபாயோகம் ஏற்படும். ஆனால் செவ்வாய் ,புதன், குரு ,சுக்கிரன் மற்றும் சனி என்னும் பஞ்ச மகா புருஷ கிரகங்களில் எவ்வாறிருப்பினும் அதாவது ஒரு கிரகங்கள் இருக்கலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் கூட இருக்கலாம் அதுவும் சுனபா யோகம் தான்.
அனபா யோகம்
சந்திரனுக்கு 12 ஆம் இடத்தில் பஞ்சமஹா புருஷ கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் நின்றிருந்தால் அது அனபா யோகம் எனப்படும்.
துருதரா யோகம்
சந்திரன் இருக்கும் இடத்திற்கு இரண்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் பஞ்சமகா கோள்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தால் அது "துருதரா யோகம்" எனப்படும்.
சந்திரனுக்கு இரண்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் குரு, புதன், சுக்கிரன் போன்ற இயற்கைச் சுபக்கிரகங்கள் நின்று இருப்பின் 'துருதரா யோகம் ' சிறப்பாக செயல்படுகின்றன
சில சமயங்களில் சந்திரனுக்கு இரண்டு புறமும் (2,12 ல்) பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தால் ''சந்திர பாபகர்த்தாரி'' என்னும் அவயோகம் ஆகும்.இவை இராசிகளின் வலிமையை குறைக்கும்.
அதி யோகம்
சந்திரன் இருக்குமிடத்திற்கு ஆறு, ஏழு மற்றும் எட்டில் சுப கிரகங்கள் தொடர்ந்து நின்றால் லக்கின "அதியோகம்" எனப்படும்.
கஜகேசரி யோகம்
"வருசசி கேந்தி ரத்தில்
மன்னவன் நிற்க அந்த
அரசன்தன் கேந்தி ரத்தில்
அம்புலி தானும் நிற்கில்
விரவுமற் றிடத்தில் மற்றோர்
மேவிய தோடம் யானை
ஒரு சிங்கம் கண்ட வாறாம்
ஒதுகே சரியாம் யோகம் !"
பாடல் விளக்கம்
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு நின்றிருக்க அந்த குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் நின்றிருந்தால் அது கேசரி யோகம் ஆகும்.
கேசரி யோகம் ஒரு ஜாதகத்தில் அமையப் பெற்றிருந்தால் அதில் இதர கிரகங்களால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்கள் எல்லாம் சிங்கத்தைக் கண்ட யானை கூட்டம் சிதறி ஓடுவதைப் போல விலகிப் போய்விடும்.
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருப்பது இயல்பாகவே அமைந்து விடும் .
எனவே இவ்விதம் மாற்றிச் சொல்லத் தேவையில்லை.
ஒருவேளை இருவரும் ஒருவருக்கொருவர் சமசப்தமதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லி இருக்கலாம் என எண்ண வேண்டியிருக்கிறது.
சந்திரன் இருக்கும் இடத்திற்கு கேந்திரங்களில் (1,4,7,10) குரு பகவான் நின்றால் கஜகேசரியோகம் .
சந்திர மங்கள யோகம், கஜகேசரி யோகம் மற்றும் துணை ராஜ யோகம்
"சந்திரன்செவ் வாய்கூடிச் சத்தமத்தில் இருக்கச்
சந்திரமங் களயோகம் தரணிஅர சாள்வன்!
இந்திருக்கும் லக்கினகேந் திரத்தில்பொன் இருக்க
இருங்கசகே சரியோகம் !எழில்நிறைந்த மதிக்கும்
சுந்தரம்சேர் விதமாய்ஆ(று) ஏழெட்டா மிடத்தில்
சுபக்கிரகம் பார்க்கநிற்க துரைராச யோகம்!
பந்தமுறும் லக்கினத்தில் சசிசெவ்வா யிருக்கப்
பானுகுரு பத்தொன்ப துறில்ராச யோகம் !"
பாடல் விளக்கம்
சந்திரனும் ,செவ்வாயும் இணைந்து லக்னத்திற்கு 7 ஆம் வீட்டில் இருந்தால் அது" சந்திரமங்கள யோகம்" எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவன் பூமியை ஆளும் வேந்தன் ஆவான்.
சந்திரனுக்கு அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு கேந்திரத்தில் குரு அமர்வதால் கஜகேசரி யோகமாகும்.
வளர்பிறைச் சந்திரனாக இருந்து அந்தச் சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டாம் இடங்களை சுபகிரகங்கள் பார்வையிட்டாலும் அல்லது அந்த இடங்களில் அவை இடம் பெற்றிருந்தாலும் அது "துரை ராஜயோகம் "ஆகும்.
லக்கனத்தில் சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து இருக்க சூரியனும், குருவும் ஒன்பது அல்லது பத்தாம் இடத்தில் சேர்ந்திருந்தால் அது ராஜயோகம் ஆகும்.
சோதிட பாடலில் குறிப்பிட்டுள்ளபடி சசிமங்கள யோகம் என்பது சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஏழாம் இடத்தில் இருந்தால் மட்டுமல்ல கேந்திர ,கோண மற்றும் தன, லாப ஸ்தானத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் சந்திரனும் அல்லது செவ்வாயும் வேறு எந்த வகையிலும் பலம் இழக்காமல் இருப்பின் சசிமங்கள யோகத்தினை தரும்.
சகட யோகம்
''அகடின் மன்னனுக் (கு) ஆறெட் டொடுவியத்(து)
இகடி லாமதி எய்தி இருந்திடின்
சகட யோகம் இதில்பிறந் தார்க்கெல்லாம்
விகட துன்பம் விளையும் அரிட்டமே !''
பாடல் விளக்கம்.
குரு இருக்கும் வீட்டிற்கு மறைவு ஸ்தானமான
6 ,8, 12 ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால் அது "சகட யோகம்" என்று பெயர்.
சகட யோகத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம் பிறர் நகைக்கும் படியான அவமானகரமான துன்பங்களும், உயிர் ஆபத்து ஏற்படும்.
சகடை யோகத்தில் பிறந்தவர்களுக்கு
ஏற்ற- இறக்கமான வாழ்க்கை அமையும்.
நன்றி!
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
. 7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம் ,கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
My blog
AstroRavichandran.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com.
...............................
No comments:
Post a Comment