Wednesday, 13 May 2020

மறைந்திருக்கும் உண்மைகள்

மறைந்திருக்கும் உண்மைகள்


                         

 செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     சோதிடம் என்பது மறை பொருள் ஆகும்.மறை என்பது வேதம் என்றும் அல்லது மறைவான உட்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.

  நம்  கண்ணுக்கும் மற்றும் அறிவுக்கும் புலப்படாத பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் மறைந்துள்ளது.

  எவ்வளவு பெரிய தத்துவங்களும், கொள்கைகளும் ,
பல்துறை ரகசியங்களும் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் இப்புவியில் மனித மூளைக்கும் அப்பாற்பட்ட தியான நிஷ்டையால் கண்டறியப்பட்டுள்ளது.

  பல உண்மைகள் சாதாரண கண்களுக்கும் மற்றும் ஏனைய புலன்களுக்கும் புலப்படுவதில்லை.

 மெய்,கண் ,காது ,நாக்கு மற்றும் மூக்கு போன்ற ஐம்பொறிகளையும் ஞானேந்திரியங்கள் என அழைக்கப்படுகிறது.

 இந்த ஐம்புலன்கள்( Five Sence organ) வழியாக பெறப்படும் தொடுதல் ,பார்த்தல் ,
கேட்டல் ,சுவைத்தல் மற்றும் நுகர்தல் போன்ற ஐந்து உணர்வுகளிலிருந்து(five sence) பெறப்படும் அறிவுகளை தொகுத்து மற்றும் பகுத்து பெறப்படும் அறிவு "பகுத்தறிவு " என்று அழைக்கப்படுகிறது.

 ‌  இந்த மறைபொருள் உண்மைகள்  என்பது ஐம்புலன்களால் உணர முடியாத ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

  மறைபொருள் உண்மையானது
 "  ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டெரிக்க பெறப்படும் உண்மையாகும்.

 ஐம்புலன்களை உள்ளடக்கியாளும் சித்த தன்மை கொண்ட  மாமனிதர்களாலே ஜோதிடம் போன்ற பிரபஞ்ச உண்மைகள் வெளிப்படுகின்றன.

  சோதிடம் சித்தர்களால் அருளப்பட்ட மூலநூல்களை தேடி படித்தாலும் அவர்களால் உணரப்பட்டு அருளப்படும்  கருத்துக்களை அப்படியே இக்காலத்திற்கு பதிலீடு செய்யாமல் கால நேரத்திற்கு ஏற்றார் போல்  பயன்படுத்தும் அனுபவத்தினை பெற முயல வேண்டும்.

  ஜோதிடம் என்பது ஆன்மீகமா ?
விஞ்ஞானமா ? நாத்திகமா ? என நம்மில் பலருக்கு எழும் சந்தேகம் ஆகும்.

  நிறைய ஆன்மீக கருத்துக்கள் விஞ்ஞானம் தழுவியவை ஆகும் ஆனால் அக்கருத்துக்களை விஞ்ஞானமாக போதித்தால் மக்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை.

 அதனால்தான் நமது மூதாதையர்கள் பல விஞ்ஞான உண்மைகளை ஆன்மிகத்திற்கும் திணித்து தந்தார்கள்.

  "அதிகாலை எழுந்து வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவதை நம் வீட்டிற்குள் கிருமிநாசினி அண்டாது" என சொல்லியிருந்ததால் பெரும்பாலான மக்கள் செய்திருக்க மாட்டார்கள்.

இந்த அறிவியல் உண்மைகள் பயன்பட அதிகாலை எழுந்து சாணம் தெளித்து வாசலில் பூ போட்டு படைக்க வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரம்பி வழியும் என்பதால்தான் இன்றும் பல பெண்கள் எழுந்து அதிகாலை கோலம் இடுகிறார்கள்.

  இதுபோல நம் கண்ணிற்குத் தெரியாத பல மைல்களுக்கு அப்பாலுள்ள நவ கோள்களையும் தனது ஞானதிருஷ்டியால் சாதக கட்டத்தில் எந்த இடத்தில் சாதக கட்டத்தில் அமரும்போது என்னென்ன பலன்களை தரும்?" என்பதை தனது பாடல்கள் மூலம் எழுதி வைத்து விட்டுச் சென்றார்கள்.

  ஒவ்வொரு கோள்களையும் நமது மனித வாழ்வோடு இணைத்து உறவு முறைகள் சொல்லி அதற்காக ஒரு புராண உண்மைகளையும் அதில் உள்ளடக்கினார்கள்.

   பார்கடலில் வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு மேரு மலையை மத்தாக கொண்டு தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடையும் புராண கதையை கூறி இக்கதை மூலமாக சுவர்பாணு என்னும் அசுரன் தேவர்களான சூரியன் மற்றும் சந்திரனால் அடையாளம் காட்டப்பட்டு வெட்டுப்பட்டு ,
அந்த வெட்டுப்பட்ட மனித உடம்பும் பாம்பு தலையும் கொண்டது ராகு பகவான் என்றும், மனித தலையும் பாம்பின் வால் பகுதி கொண்டது கேது பகவான் என்றும் அழைக்கப்படுகிறது.

    நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுக்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் எவ்வாறு பகை கிரகங்களாக ஆனது என்பதை விளக்க இது போன்ற ஆன்மீக கதைகளுக்குள் உள்ளடக்கி அதாவது  "சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களால் சுவர்னபானு  என்னும் அசுரன்  காட்டி கொடுக்கப்பட்டதால் ராகு மற்றும் கேதுக்களுக்கு  சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களும் பகை கிரகங்களாக வந்தது என்ற உண்மையை உறவு முறைகள் கொண்டு விளக்கினார்கள்.

  இதேபோல சந்திரனுக்கு புதன் மகன் என்றும் ஆனால் சந்திரன் பகவான் ஆனவர் புதனை பகையாக கருதுவதில்லை .ஆனால் புதன் பகவான் ஆனவர் சந்திரனை பகை கிரகமாக கருதியது ஏன் என்பதற்கு ஆன்மீக உறவுமுறை கதைகளை வானவியல் சாஸ்திர பிரிவான சோதிடவியலோடு பிண்ணி பிணையபட்டது.

  சந்திரன் பகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து கிரக அந்தஸ்தை பெற்றார் யாகத்தில் புகழ்பெற்ற தட்சனின் புத்திரர்களான இருபத்தெழு நட்சத்திரங்களையும் மணந்தார்.

 சந்திரபகவான் தேவ குருவான பிரகஸ்பதியிடம் வித்தை கற்க சென்ற பொழுது அங்கு குருவின் மனைவியான தாரையிடம் நடந்துகொண்ட அன்பு பரிமாற்றத்தால் தாரை கர்ப்பவதியானாள்.தனது மனைவி கர்ப்பவதியானதற்கு யார் ? என்பதை அறிந்து கொண்ட குரு பகவான் தாரையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

 தாரைக்கு சந்திரன் உடன் கொண்ட தொடர்பால் அழகும் ,அறிவும் நிறைந்த புதன் பகவான் மகனாக பிறந்தார்.

  பின்னால் வளர்ந்த புதன்பகவான் தனது பிறப்பின் ரகசியத்தை உணர்ந்த பின்பு தனது தவறான பிறப்பிற்க்கு காரணமான தாயான சந்திரனை தனது பகையாக கருதுகிறது. ஆனால் சந்திர  பகவானோ  தாய் என்பதால் தனது மகனான புதன் பகவானை பகையாக கருதுவதில்லை.

  ஒரு ஜாதக கட்டத்தில் இரண்டு மூன்று கிரகங்கள் இருக்கும்பொழுது அந்த கிரக வலிமையைக் கண்டறிய இதுபோன்ற பகை, நட்பு ,உச்சம்  மற்றும் ஆட்சி போன்ற விஷயங்கள் உதவும் என்பதால் அவற்றை ஆன்மிக கதைகளுடன்  கிரகங்களை உறவு முறையாக தந்து மக்கள் மனதில் நிலைக்கச் செய்தார்கள்.

  இதேபோல பல சோதிட உண்மைகளை உறவுமுறைகள் ஆக்கி மக்களிடம் விஞ்ஞானத்தை மெய்ஞ்ஞானம் கலந்து தந்தார்கள்.

 இதுபோன்ற கதைகளை படிக்கின்ற இன்றைய நவ நாகரீக இளைஞன்  அதனை நாத்திகமாக கருதுகின்றான்.ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு ஆன்மீக கதைகளும் சோதிட உண்மைகளுக்கு ஒரு மறைமுக குறியீடு ஆகும்.

 விஞ்ஞான அடிப்படையில் ஒவ்வொரு மனித மனத்திற்கும் நவகோள்களில் சந்திர பகவானுக்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது.
முழுமதி காலங்களில் வைத்தியத்தை அதிகரிப்பதை வைத்து மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு கொண்டு என்பது நிருபணம் ஆக்கப்பட்டது.

 வானவியலில் ஏற்படக் கூடிய சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்திகும் நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இதனைதான் நமது முன்னோர்கள் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என கதையாக எனது பிள்ளை பருவத்தில் எனது பாட்டன் மற்றும் பாட்டிகளால் கூறப்பட்டது.

 எனவே ஜோதிடவியலை அறிவியல் அறிந்தவர்களால் விஞ்ஞானம் என்றும் அல்லது மெய்ஞானிகளால் ஆன்மீகம் என்றோ அல்லது நவநாகரீக இளைஞனால்  நாத்திகம் என்றோ கருதப்படுகிறது.

  அவரவர் ஜாதகத்தில் உள்ள புதன் பகவான் வலிமையைப் பொறுத்து ஜோதிடத்தின் உண்மையான அடியாழம் அறியப்படுகிறது.

ஒவ்வொரு ஜோதிட விதிகளுக்குள் உள்ள விதிவிலக்குகளையும் , சுபத்துவ  மற்றும் மறைபொருள் உண்மைகளையும் அவரவர் ஜாதகத்தில் உள்ள புத்த பகவானுடைய வலிமையைப் பொருத்து அறிந்து கொள்ளப்படுகிறது.

    புவியை மையமாக கொண்டே எல்லா கோள்களும் சுற்றி வருகிறது என்ற புவி மையகோட்பாட்டை தவிர்த்து கெப்ளர் என்ற விஞ்ஞானி சூரியனை மையமாகக் கொண்டு எல்லா கோள்களும் இடைவிடாமல் சுற்றி வருவதாக கூறியபோது அக்கால மதவாதிகள் எதிர்ப்பு காட்டினார்கள்.

 ஆரம்பகால விஞ்ஞானிகளுக்கு மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
விஞ்ஞானிகள் தமது புலமையால் கண்டறியப்படும் அறிவியல் உண்மைகளை இயற்கைக்கும், இறைவனுக்கும் ‌மாறாக செய்ய நினைப்பதாக எண்ணி மதவாதிகள் தமது பிழைப்புக்கு பங்கம் வந்து விடக்கூடும் என்பதாலே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
 9715189647

   செல்
   9715189647
     7402570899

                         


                           

அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email; masterastroravi@gmail.com
......

No comments: