Wednesday, 13 May 2020

பலனைக் கணிப்பதில் சவாலான நிழற் கிரகங்கள்

பலனை கணிப்பதில்    சவாலான 
நிழற்கிரகங்கள்!

                                

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     ஒரு ஜாதகத்தில் ஜோதிடருக்கு பலன்களை கணிப்பதில்  மிக சவாலாகவே அமையக்கூடிய கிரகங்கள் என்னவாக இருக்கும் என ஆய்ந்து நோக்கின் நவகோள்களில்
  "நிழற் கிரகங்கள்" என்றும்,  "சாயா கிரகங்கள் " என்றும் அழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராகு மற்றும் ஸ்ரீ கேது பகவானை குறிக்கும்.

   ஸ்ரீ ராகு பகவான் எதையும்  பெரிதுபடுத்திக் காட்டுபவர் பிரம்மாண்ட நாயகன் ஆவர்.

 ஸ்ரீ கேது பகவான் எதையும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் தான் என்ற அகங்காரத்தை விடுத்து தன்னை சுருக்கிக் கொள்ளும்  மணநிலையை மனித குலத்துக்கு தருபவர் ஆவார்.

  ஸ்ரீ ராகு பகவான் கண்ணுக்குத் தெரியாத சிறிய நுண்ணியதாக அல்லது நுண்ணுயிரியாக இருந்தாலும் அதை பெரிதுபடுத்தி காட்டுபவர்.

    ஸ்ரீ கேது பகவான் கண்ணுக்குத் தெரியாத பல சூட்சும உண்மைகளை தன் அகக் கண்ணால்  சுருக்கமாக கண்டு துய்ப்பவர் ஆவார்.

   நவகோள்களில் 
ஸ்ரீ ராகு மற்றும் ஸ்ரீ கேது பகவான் மட்டுமே இணைந்து இருக்காத ஒரு கிரகங்களாகும்.
விதிவிலக்காக ஹோரா சக்கரத்தில் மட்டுமே இணைந்து காணப்படும்.

    ஸ்ரீ ராகு மற்றும் கேது பகவான் மட்டுமே கிரகங்களில் பின்னோக்கி நகரக்கூடிய கிரகமாகும் . இவ்வாறு இயற்கையாகவே பின்னோக்கி நகர கூடிய தன்மை நிழல் கிரகங்களுக்கு உண்டு என்பதால் அவற்றுக்கு வக்ர கதி கிடையாது.

 எல்லா ஜாதகக் கட்டங்களிலும்  இராகு பகவான் இருக்குமிடத்திற்கு 180 டிகிரியில் ஸ்ரீ கேது பகவான் அமர்ந்து சஞ்சாரம் செய்வார்.

 சாதகருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாக பொருள் சேர்ந்து கோடீஸ்வரனாக்கும் யோகங்களை தருவதில் ஸ்ரீ ராகு பகவான் முதன்மை முக்கிய கிரகம் ஆகும்.

  ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் சுபத்துவ அமைப்பில் ஆறு மற்றும் எட்டாம் இடத்து உடன் தொடர்புகொண்டு அதன் தசை நடக்கும் காலங்களில் வெளிநாடு சென்று பல கோடிகளை சம்பாதிக்கக்கூடிய யோகத்தைச் சாதகருக்கு வழங்குவார்.

  ஸ்ரீ ராகு பகவானைப் போல ஸ்ரீ கேது பகவான் அந்த அளவுக்கு மிகுந்த எதிர்பாரத அதிர்ஷ்டத்தை சாதகருக்கு தந்து விடுவதில்லை.

 போக மற்றும் ஆடம்பர வாழ்வில் தருவதில்  ஸ்ரீ ராகு பகவானுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஜாதகருக்கு யோக வாழ்வின் பலன்களை தருவததில் ஸ்ரீ கேது பகவானுக்கு முக்கிய பங்கு உண்டு.

     நிழல் கிரகங்களுக்கு என சொந்த வீடு ஜாதக கட்டத்தில் கிடையாது.இவ்விரு கிரகங்களும் எந்த வீட்டில் அமர்ந்து உள்ளதோ அந்த வீட்டையே சொந்த வீடாக கொள்ளும் நிலைமை உள்ளது.

    நிழல் கிரகங்கள் எந்த வீட்டில் அமர்கிறதோ அந்த வீட்டின் அதிபதி உச்சம் பெற மிகுந்த யோக பலன்களை சாதகருக்கு தருகிறது. மாறாக உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்ற கிரகத்துடன் ராகு மற்றும் கேது இணையும் பொழுது அந்த பலமடைந்துள்ள‌ கிரகங்களின் வலிமையை பங்கபடுத்துகிறது.

  ஸ்ரீ ராகு பகவான் மேஷம், ரிஷபம், மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய வீடுகளில் நின்று அதன் திசையை நடத்தும் போது யோக பலனை ஜாதகருக்கு வாரி வழங்குகிறது.

  ஏனைய இடங்களில் ஸ்ரீ ராகு பகவான் இருப்பின் அது நற்பலனைத் தர வேண்டுமாயின் வளர்பிறை சந்திரன் பார்வை,சுபத்துவம் பெற்ற குரு, சுக்கிரன் தொடர்பு சாதகருக்கு சாதகமான பலனைத் தருகிறது.

 இதேபோல ஸ்ரீ கேது பகவான் சாதக கட்டத்தில் தனுசு,மீனம், மேஷம், விருச்சிகம் மற்றும் சிம்மம் ஆகிய இடங்களில் நின்று அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் சாதகருக்கு யோக பலன்களை அளிக்கிறது.

  நிழல் கிரகங்கள் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை பார்க்கின்ற , அந்த ராசியில் இணைந்துள்ள மற்றும்  நிழற் கிரகங்கள் பெறும் சாரநாதன் ஆகிய இவர்களது பலன்களை உறிஞ்சி தனது திசையில் கிரக பலன்களை அளிக்கிறது. எனவேதான் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் நிழல் கிரகங்களுக்கு தசா பலன்களை அளந்து எடுப்பது மிக சவாலாகவே சோதிடருக்கு உள்ளது.

   நிழற்கிரகங்களுடன் இணைந்த மற்றும் பார்க்கின்ற கிரகங்கள்  கொண்டிருக்கும் உறவு நிலை அடிப்படையிலும்,
நிழற்கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் எத்தனை பாகை வித்தியாசத்தில் ஒரு ராசியில் இணைந்துள்ளன ? என்பதை பொருத்தும் நிழல் கிரகங்கள் தரும் திசை பலன் அமையும் என்பதாலும் நிழல் கிரகங்கள் தரும் சாதக பலன்களை கணிப்பது சாதகருக்கு சவாலாக அமைகிறது.

  ஒரு ஜாதக கட்டத்தில் 
ஸ்ரீ ராகு பகவான் மற்ற கிரகங்களுடன் 8 பாகை வித்தியாசத்தில் இணைந்திருப்பின் மிக நெருக்கமான நிலையில் அவ்விரு கிரகங்கள் பிணைந்து உள்ளன என கணக்கில் கொண்டு இணைந்து உள்ள கிரகத்தில் தனது ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தும் தன்மையை பெறுகிறது.

   அதே நேரத்தில் நிழல் கிரகங்கள் உடன் இணைந்து உள்ள கிரகமானது  22 பாகை வித்தியாசத்தில் ஒரு ராசியில் இருந்தாலும் அவ்விரு கிரகங்களையும் இணைந்து உள்ள கிரகமாக கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.
இணைந்துள்ள கிரகத்தின் மீது நிழல் கிரகங்கள் தனது ஆதிக்கத்தை செலுத்துவதில்லை.

  மேலே குறிப்பிட்ட இது போன்ற நுணுக்கமான விஷயங்களை ஆய்வு செய்து நிழல் கிரகங்கள் தரும் பலனை கணிப்பது மிக சிரமமாகவே ஜோதிடர்களுக்கு உள்ளது.

     ஒரு ராசியில் நிழல் கிரகங்கள் உடன் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரக தொடர்பு அதன் தசா புத்தியில் சாதகருக்கு இணைந்து உள்ள கிரகங்களின் காரக பலன்களை  அதிகமாக பாதிக்கிறது.

  ஒரு ராசியில் நிழல் கிரகங்கள்  இயற்கை சுப கிரகங்கள் மற்றும் ஸ்தான அடிப்படையில் சுப கிரகங்கள் உடன் கொண்டு உள்ள தொடர்பு யோக பலன்களை தனது தசா புத்தியில் தருகிறது.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
     செல்
    9715189647
‌‌.     7402570899

                     

    அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
 M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

My email
masterastroravi@gmail.com

My blog

www.
astroravichandran.blogspot.com

www astroravichandransevvai.blogspot.com

........

No comments: