Wednesday, 13 May 2020

டிகிரி அடிப்படையில் சாதக பலன்களை கணிப்பது எப்படி?

டிகிரி அடிப்படையில் சாதக பலன்களை கணிப்பது எப்படி?


                           


செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

     "சாதக கட்டத்தில் ஒரு கிரகமானது எந்த ராசியில் இடம் 
பெறப்போகிறது ? " என்பதனை நட்சத்திர பாத சாரமே முடிவு செய்கிறது.

    அதேபோல ஒரு கிரக வலிமையினை முடிவு செய்ய அந்த கிரகமானது எத்தனை பாகையில் (degree) ராசி சக்கரத்தில்  அமைந்துள்ளது என்பதனை பொறுத்தே அமைகிறது.

    முப்பது பாகை மற்றும் ஒன்பது பாதம் கொண்ட(21/4 நட்சத்திரம்) ஒரு ராசியில் ஒரு கிரகமானது ஒரு பாதம் கடக்க 3 பாகை 20 கலை (3°20') கடக்க வேண்டும்.

    முப்பது பாகை 
கொண்ட  ஒரு ராசியில் ஒரு கிரகமானது எத்தனையாவது பாகையில் நிற்கின்றன என்பதனை பொறுத்தே அக்கிரகமானது அதே ராசியில் மற்ற கிரகங்களுடன் கொண்ட தொடர்பினை அளந்தறிய இயலுகிறது.

     ஒரு ராசியில்
 8 - பாகைக்குள் நிற்கின்ற கிரகமானது மிகவும் நெருங்கிய நிலையில் நிற்பதாக கருதப்படுகிறது.

 ஒரு கிரகமானது ராசி சக்கரத்தில் 
13 -பாகைக்குள் இருக்கும் போது மட்டும் நெருங்கி இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 ஒரு ராசி சக்கரத்தில் ஒரு கிரகமானது 
23 -பாகைக்கு மேல் மற்ற கிரகத்திலிருந்து விலகி  நிற்பின் அக்கிரகமானது ஒரே ராசியில் இரு கிரகங்கள் இணைந்து காணப்பட்டாலும் இணைவாக கருதப்படவில்லை.

   உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் இரண்டு பாகையில் நின்று ராகு பகவான் முதல் எட்டு பாகைக்குள் நிற்கின்ற அந்த ராகு பகவான் சூரியனின் காரக பலனை பாதிக்க செய்வார்.கிரகண தோஷத்தை உண்டாக்குவார்.

   அதே நேரத்தில் 
22 -பாகை
 விலகி நிற்கின்ற ராகு பகவான் சூரியனின் காரக பலன்களை பாதிப்பதில்லை.

  சூரியனை நெருங்கி செல்லும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகின்றன.

    ஸ்தான அடிப்படையில் நீசம் பெற்ற கிரகங்கள் சூரியனை நெருங்கி செல்லும் போது அஸ்தமனம் அடைகின்றானவே  ? என நீங்கள்  கேள்வி எழுப்பினால் அஸ்தமனம் அடைகின்றது என்பதே சரியான பதிலாக அமையும்.

 சூரியனில் இருந்து குறிப்பிட்ட பாகைக்குள் இருக்கின்ற கிரகங்கள் அஸ்தமனம் அடைகின்றன. அஸ்தமனம் அடைந்த கிரகம் பலம் குன்றிப் போகும் .

செவ்வாய்- 17 பாகைக்குள்,

 புதன்- 11 பாகைக்குள்

குரு- 15 பாகைக்குள்,

 சுக்கிரன்- 9 பாகைக்குள்

சனி -17 பாகைக்குள்

 சந்திரனுக்கும், ராகு கேதுக்களுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை. ஒரு சிலர் சூரியனுக்கு 12 பாகைக்குள் சந்திரன் இருந்தால் அஸ்தங்கம் அடையும் என்று சொல்லுகிறார்கள். அது யுக்திக்கும் பொருந்தவில்லை மற்றும் அனுபவத்துக்கும் ஒத்துவரவில்லை. சந்திரன் சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும் கிரகம் அதற்கென்று தனி ஒளி இல்லை . அது சூரியனை நெருங்கும்போது இன்னும் அதிகமாக ஒளியை வாங்கிப் பிரதிபலிக்குமே தவிர ஒளி குன்றிவிட வாய்ப்பில்லை. எனவே சந்திரன் தன் ஒளி மங்கி அஸ்தங்கம் அடைந்து விட்டது என்று சொல்வது பொருந்தாது.

    இதேபோல புதனுக்கும் அஸ்தங்க தோசம் இல்லை என்பது ஒரு சிலரின் கருத்தாகும். எனக்கும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்வதாக அமைகிறது.

     ஒவ்வொரு கிரகமும் எந்த ராசியில் எத்தனை பாகையளவில்  மூலதிரிகோணம் மற்றும் உச்சநிலை  அடைகிறது என்ற விவரத்தை பின்வருமாறு பார்ப்போம்.

 சூரியன்- சிம்ம ராசியில் முதல் 20 பாகைகள் வரை மூலத்திரிகோணம் ஆகும். அடுத்துள்ள 10 பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

  சந்திரன்- ரிஷப ராசியில் பின்னுள்ள 27 பாகையில் மூலத்திரிகோணம்  ஆகும்.
முதல் 3 பாகைகள் வரை உச்ச நிலையில் இருப்பார்.

  செவ்வாய்- மேஷ ராசியில் முதல் 12 பாகைகள் வரை மூலத்திரிகோணம் ஆகும். அடுத்துள்ள 18 பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

  புதன்- கன்னி ராசியில் நடுவில் உள்ள ஐந்து பாதைகள் மூலத்திரிகோணம் ஆகும். இதற்கு முன் 15 பாகைகள் வரை உச்சம் ஆகும்.அதற்குப் பின் பத்து பாகைகள் வரை ஆட்சி நிலையில் இருப்பார்.

  குரு தனுசு ராசியில் முதல் 10 பாகைகள் வரை மூலத்திரிகோணம் ஆகும். பின்னுள்ள 20 பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

  சனி- கும்ப ராசியில் முதல் 20 பாகைகள் மூலத்திரிகோணம் ஆகும். பின் உள்ள பத்து பாகைகள் ஆட்சி நிலையில் இருப்பார்.

நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647

   செல்
    9715189647
      7402570899

                     


      அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
  M.Sc,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை.

Email : masterastroravi@gmail.com

..........

No comments: