காலம் காட்டும் கண்ணாடி.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
ஒருதிசை ஆரம்பிக்கும்போது அந்த திசையில் முதலில் திசை நாதனே புத்தி நாதனாக வருவார்கள்.இதனை" சுய புத்தி" என்பார்கள்.
ஒருதிசை யோக தசையாக இருந்தாலும் முதலில் அந்த சுய புத்தி நல்ல பலனைத் தருவதில்லை.
ஒரு புத்தியானது யோக புத்தியாகவே இருந்தாலும் அதன் திசையில் தரும் யோகம் அளவிற்கு ஏற்றார் போல் அதன் புத்தியில் தருவதில்லை.
ஒரு திசையில் திசை நாதனே கேப்டன் என்பதால் நடக்கும் புத்தியானது திசை நாதனுக்கு நட்பாகவும் ,நல்ல ஸ்தானம் பெற்று , சுப நட்சத்திர சாரம் மற்றும் சுபர் பார்வையினை பெற்றிருந்தால் மட்டுமே அந்த புத்தியானது யோக பலன்களை சாதகருக்கு வழங்குகிறது.
திசை நாதனுக்கு புத்தி நாதன் யோகர் என்ற வகையில் ஒத்திசைவாக இருக்கின்ற பொழுது யோக பலன்களை சாதகருக்கு சிறப்பாக வாரி வழங்குகிறது.
திசை நாதனுக்கு புத்தி நாதன் பாவர் என்ற வகையில் ஒத்திசைவாக இல்லாத பட்சத்தில் திசைநாதன் யோகர் திசை எனும் வகையில் பெரியதாக கெடுபலன்கள் எதனையும் கொடுத்து விடுவதில்லை.
எந்த ஒரு திசையிலும் சுய புத்தி நல்ல பலனை தந்தால் அந்த திசையில் ஏனைய புத்திகள் நல்ல பலனைத் தந்து விடுவதில்லை.
எந்த ஒரு திசையில் அதன் சுய புத்தி நல்ல பலனைத் தரவில்லை என்றால் ஏனைய புத்திகள் அந்ந தசை முழுவதும் நல்ல பலனைத் தரும்.
ஒரு சாதகருக்கு கோணாதிபதிகள் மற்றும் கேந்திர ஆதிபத்திய திசைகள் மட்டுமே யோக பலன்களை தரும் என நாம் தவறாக முடிவு செய்துவிட கூடாது
கோணாதிபதி மற்றும் கேந்திராதிபதி தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று இருக்கும் போதோ அல்லது கோணாதிபதிகள் திசையிலோ அல்லது மறைவிட ஸ்தானாதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நிற்கும் போதும் அதன் திசை நடப்பில் உள்ள போது யோகபலன்களை சாதகருக்கு யோக பலன்களை தருகிறது.
சில நேரங்களில் சாதகருருடைய லக்னாதிபதிக்கு பகை பெற்ற கிரகங்களின் திசையில் கூட நல்ல பலனைத் தந்து விடுகிறது.எவ்வாறு என ஆய்ந்து நோக்கின் அந்தக் கிரகங்கள் உபஜெய ஸ்தானம் 3 ,6 ,10, 11 ஆம் இடங்களில் நட்பு பெற்று நிற்க்கும் போது அது அதன் தசா புத்திகளில் யோக பலன்களை தந்து விடுகிறது.
ஒரு சில சாதகத்தில் சாதகருக்கு யோகாதிபதிகளின் திசையினை விட அந்த லக்கினாதிபதிக்கே பகை பெற்ற கிரகமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் சுபத்துவம் பெற்று அந்த திசை நடத்தும் பொழுது யோகபலன்களை சாதகருக்கு அதிகமாக வழங்குகிறது.
லக்கனாதிபதிக்கு பகை பெற்ற கிரகமாக இருந்தாலும் அல்லது சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும் வளர்பிறைச் சந்திரன் பார்வை பெற்றாலும் அல்லது ஏதேனும் ஒரு வகையில் குரு ,சுக்கிர பகவான் தொடர்பு அந்த கிரகத்திற்கு கிடைத்தாலும் அப் பகை கிரகமே சுபத்தும் பெற்று யோகாதிபதியாக மாறி
நல்ல பலனைத் அந்த திசையில் தந்து விடுகிறது.
எந்த ஒரு திசை நாதனும் அதன் சுய நட்சத்திர சாரம் பெற்று இருந்தாலும் அல்லது சுபருடைய நட்சத்திர சாரம் பெற்று இருந்தாலும் அதன் தசா புத்திகளில் யோக பலனை சாதகருக்கு தருகிறது.
ஒரு திசையானது அதனுடைய ஓளி அளவைக் கொண்டே அதன் யோகம் பலன் கணக்கிடப்படுகிறது.
கீழ்க்கண்ட தசைகளும், அதனுடைய வருடமும்
சூரிய திசை 6 வருடம்
சந்திர தசை 10 வருடம்
செவ்வாய் திசை 7 வருடம்
ராகு திசை 18 வருடம்
குரு தசை 16 வருடம்
சனி திசை 19 வருடம்
புதன் திசை 17 வருடம்
கேது திசை 7 வருடம்
சுக்கிர திசை 20 வருடம்
ஆக மொத்தம் 120 ஆண்டுகளாகும்.
ஒவ்வொரு திசைக்கும் , அதன் புத்தியை கணக்கிடும் எளிய கணிதமுறை பின்வருமாறு பார்ப்போம்.
சூரிய திசை சூரிய புத்தி
சூரிய தசை ஆறு வருடம்
திசை× புத்தி
6×6= 36
இங்கு முதல் இலக்கம் மாதங்கள் . கடைசி இலக்கம் நாட்களாகும். இதனை மூன்றால் பெருக்க வேண்டும்.
6×3=18
முதல் இலக்கம் 3 என்பது மூன்று மாதங்கள் ஆகும்.
சூரிய திசை சூரிய புத்தி (வ.மா.நா)
இதேபோல வேறு ஒரு புத்தி கணக்கியல்
சனி திசையில் ராகு புத்தி
சனி திசை=19
ராகு திசை=18
19×18 =342
இங்கு முதல் இரண்டு இலக்கம் மாதங்கள் ஆகும்.
கடைசி இலக்கம் நாள்கள் ஆகும்.
34 மாதங்கள் =2 வருடங்கள் 10 மாதங்கள்
கடைசி இலக்கம் மூன்றாம் பெருக்க 2×3=6
ஃ சனி திசையில் ராகு புத்தி
2 வருடங்கள் 10 மாதங்கள் 6 நாள்
( 02-10-06 )
மேற்கண்ட எளிய முறை மூலம் சோதிடம் தெரியாதவர்கள் கூட தனக்கு நடக்கக்கூடிய புத்தியின் கால அளவை எளிதாக கண்டறிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளேன்.
நன்றி.
(தங்களது சாதக பலன் திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment