உங்கள் ஜாதகம் யோக ஜாதகமாக அமைய?...
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நமது ஜாதகத்தில் ஏதாவது ஒரு யோகம் அமைந்து அது நம் வாழ்வின் தக்க தருணத்தில் வந்து நமது பொருளாதார அந்தஸ்தினை உயர்த்தி விடாதா ?!" என்று ஏங்குபவர்கள் பல பேர் உண்டு.
இவ்வாறு ஏங்குபவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு பயனுள்ள பதிவாக அமையும்.
ஒரு மனிதன் இவ்வுலக வாழ்வை சுகபோகமாக அணுபவிப்பதற்கும், வாழ்வின் இளவயதில் கஷ்டப்பட்டு பிறகு முன்னேறுவதற்கும் மற்றும் பிறந்ததில் இருந்து கடைசி வரை கஷ்டப்படுவதற்கும் காரணமாக அமைகின்ற ஒன்று ஊழ்வினைப் பயன் என்ற உண்டு. இதனை வள்ளுவர் தனது "ஊழ்" என்ற அதிகாரத்தில் அழகுபட விளக்கி இருப்பார்.
ஊழ் என்பது தலைவிதி என்று பரவலாக பேசப்படுகிறது. அதாவது பிறக்கும்போதே பிரம்மன் தலையில் எழுதிவிட்டான் . இதனைதான் திருவள்ளுவர்
"வகுத்தான் வகுத்த வகை" அல்லது "வல்லான் வகுத்த வழி" என்றும் குறிப்பிடுகிறார். இங்கு வகுத்தான் மற்றும் வல்லான் என்று குறிப்பிடுவது விதியின் கர்த்தா(இறைவன்) ஆகும்.
படைக்கும் போதே பிரம்மா தலையில் எழுதி விட்டது. எல்லாம் தலைவிதிப்படி தான் நடக்கும் என்றால் பிறகு படிப்பது எதற்கு?
கடவுள் வழிபாடு எதற்கு?
முயற்சி செய்வது எதற்காக?
எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும். பிறக்கும்போதே தலையில் எழுதியதை மாற்ற முடியாது என்றால் அதற்குப் பிறகு மனிதன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீண் என்றுதானே அர்த்தம். இருப்பினும் விதியே என்று யாரும் இருந்து விட முடியாது.
அந்த விதியையும் மாற்றும் வல்லமை மதிக்கும் உண்டு .
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்".அதனால் விதியை எண்ணி முடங்கி விடக்கூடாது. முடங்கி கிடந்தால் சிலந்தி கூட உன்னை வலை பிடிக்கும்.
சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து கொண்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் .
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
ஒருவரது ஜாதகம் யோக ஜாதகமாக அமைய வேண்டுமானால் அவரது ஜாதகத்தில் யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலமடைந்து வேறு எந்த விதத்திலும் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பங்கம் அடையாத அந்த தசை உரிய காலத்தில் வரும் பொழுது அதிலும் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் தசைகள் யோக தசையாக அமையும் போது லக்கினாதிபதியும் வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் அது யோகமான ஜாதகம் ஆக அமைந்து விடுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் இலக்கனமும், ராசியும் மற்றும் அதன் அதிபதிகளும் பாவ தன்மை மற்றும் பலவீனம் அடையாமல் சுபத்துவ நிலையைப் பெற்று லக்னத்தையும், ராசியையும் மற்றும் அதன் அதிபதிகளையும் குரு பார்த்த அமைப்பிலுள்ள ஜாதகம் ஒரு விதமான யோக ஜாதகம் ஆகும்.
மேற்கண்ட அமைப்பை பெற்று யோக தசைகள் தொடர்ந்து வரவேண்டும். (அதாவது கீழ்க்கண்ட அமைப்பை பெற்றுள்ள கிரகங்கள் தசைகள் தொடர்ந்து வரப்பட வேண்டும்.)
1) எவ்விதத்திலும் பங்கப்படாத குரு பார்த்த கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வருமாயினும் அவை யோக ஜாதகம் ஆகும்.
2) தர்ம-கர்மாதிபதிகள் எவ்விதத்திலும் பங்கப் படாமல் முழுமையான சுபத்துவ நிலையில் அமைந்து அதன் தசைகள் தொடர்ந்துவரும் அமைப்பை பெற்றவர்களும் யோகமான ஜாதகம் ஆகும்.
3)ஒருவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்து சந்திரனுக்கு ஆறு ,ஏழு, எட்டில் இயற்கை சுப கிரகங்களான சுக்கிரன், புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் நின்று எவ்விதத்திலும் பங்கப்படாத நிலையை அடைந்து சந்திர அதியோகத்தில் அமைந்து அதன் தசைகள் தொடர்ந்து வரும் சாதக அமைப்பை பெற்றவர்களும் யோகமான சாதகத்தினை உடையோன் ஆவார்.
4) சுக்கிரன் அணியைச் சேர்ந்த ரிஷபம், துலாம், மிதுனம்,, கன்னி, மகரம் மற்றும் கும்ப லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியைச் சேர்ந்த சுக்கிரன், சனி, புதன் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் எவ்விதத்திலும் பாவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலையைப் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் யோகமான சாதத்தை உடையவர்கள் ஆவார்கள்.
5) இதேபோல குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம் இலக்கனத்தை சேர்ந்தவர்களுக்கு குரு, சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது எவ்விதத்திலும் பாவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலையை பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் யோக ஜாதகம் ஆகும்.
6) ஒருவர் ஜாதகத்தில் உள்ள அவ யோக கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3, 6 ,10, 11 போன்ற இடங்களில் நட்பு நிலையில் அமர்ந்து அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்ற ஜாதகம் ஓரளவு யோக ஜாதகமாக கருதப்படுகிறது.
7) ஒருவரது ஜாதகத்தில் மகாதன யோகம் என்று சொல்லக்கூடிய யோகத்தை தரக்கூடிய ஸ்தானங்களாஆன
தன ஸ்தானமான இரண்டாம் இடம்,
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகிய மூன்று இடங்கள் வலுப்பெற்று மற்றும் லக்னாதிபதியும் வலுவடைந்து நிலையில் இவைகள் தங்களுக்குள் ஏதாவது ஒரு நிலையில் தொடர்பு பெற்று சுபத்துவ நிலையில் நிற்கும் பொழுது அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்களும் யோக ஜாதக அமைப்பை பெற்றவர் ஆவார்.
ஒரு சிலருக்கு யோகமான அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் அதன் தசைகள் வாழ்வில் வராத சூழலில் அது யோக பங்கம் ஆகிவிடுகிறது. எனவே ஒருவர் யோகத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அந்த யோகத்தை தரக்கூடிய தசைகளும் வலுவடைந்து உரிய தருணத்தில் வரவேண்டும். அந்த யோகத்தை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்கினாதிபதியும் வலுவடைந்து இருக்கவேண்டும்.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
( ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment