Sunday, 31 October 2021

மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகம் பெற முடியுமா?

 மனைவியிடம் நீண்ட தாம்பத்ய சுகம் பெற முடியுமா?

                             


   செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவருக்கு தாம்பத்திய சுகத்தை அள்ளித் தரக்கூடிய கிரகம் எதுவாக இருக்க வேண்டும்?  என ஆராய்ந்து பார்த்தால் நவகிரகங்களில் சுக்கிரன் பகவான் மற்றும் செவ்வாய் பகவானுக்கு உண்டு.


  குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் பலம் இழக்கக்கூடாது.


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவான் நீசம், அஸ்தமனம் , வக்கிரம் மற்றும் பகை போன்ற நிலைகளில் நின்று வலுவிழந்து நிற்கக்கூடாது.


   மேலும் சுக்கிரனுடன் சனி ,ராகு போன்ற பாவ கிரகங்கள் நெருக்கமான நிலையில் இணைந்து இருக்கவும் கூடாது.


    மேற்கண்ட வகையில் சுக்கிரன் பலமிழந்த நிலையில் அந்த சுக்கிர பகவான் தன் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், போன்றவற்றின் தொடர்பு பெரும் பொழுது அவை மீண்டும்  பலம் அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


    ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனம் அடைந்த நிலையில் அவர் மனைவியின் மூலமாக நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகம் அற்றவராக காணப்படுகிறார்.


   ஒருவர் நீடித்த தாம்பத்திய சுகத்தை மனைவியின் மூலம் பெறக்கூடிய அமைப்பை தெரிந்து கொள்ள சுக்கிரபகவான் தவிர காம திரிகோணமான மூன்றாம் இடம் , ஏழாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடத்தையும் ஆய்வுசெய்து பார்க்கப்பட வேண்டும்.


   ஒருவரது ஜாதகத்தில் மூன்றாமிடம் அவர் செயல்படும் காம வீரியத்தையும்,

 ஏழாமிடம் கணவன் மனைவி உறவு நிலையையும் மற்றும் அவர்களது கற்பு நிலையையும் காட்டுகிறது. மேலும் 12-ஆம் இடம் ஒருவருக்கு நித்திரை சுகம் காமசுகம் போன்றவற்றில் திருப்தி அடையும் நிலையை தரும்.


  மேற்கண்ட மூன்று ஸ்தான அதிபதிகளையும் அவற்றில் இடம்பெறக்கூடிய கிரகங்களையும் பொருத்தம் ஒருவர் தாம்பத்திய சுகத்தை அல்லது காமசுகத்தை அனுபவிக்கக்கூடிய யோகத்தை அளந்து அறிய முடியும்.


  எனவே ஒருவர் தனது மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவானும் மேற்கண்ட 

3 ,7, 12-ஆம் இடங்கள் நல்ல நிலையில் நிற்க வேண்டும்.


  குறிப்பாக ஒருவர் படுக்கை சுகத்தை அனுபவிக்க அவரது சாதகத்தில் பன்னிரெண்டாம் இடம் மிக முக்கியமானதாகும். அதனால்தான் காலபுருஷ தத்துவத்தின்படி  ஜாதகத்தில் பன்னிரெண்டாம் இடமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்கின்ற பொழுது புதன் நீசம் அடைந்து நிற்கிறது. அதாவது எவரொருவர் மனதில் காமம் மிகுதியாக இருக்கும் பொழுது அறிவு குன்றும் என்பதை சூசகமாக சுட்டிக்காட்டுகிறது.


  நித்திரை சுகம் மற்றும் படுக்கை சுகம் ஆகிவற்றை அனுபவிக்க ஒருவருடைய  ஜாதகத்தில் 12ஆம் இடம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


  ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் சுபத்துவம் பெற்று களத்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்படாத நிலையில் இருப்பின் அவர் மனைவியிடம் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகத்தை பெற்றவராவார்.


  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பகவானுடன் சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் தொடர்பினை பெற்று பலவீனம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது காம திரிகோண ஸ்தானமான மூன்று,,ஏழு மற்றும் -பன்னிரெண்டாம் இடத்தையும் கவனிக்கப்பட. வேண்டும்.


   மேற்கண்ட மூன்று இடங்களில் சனி,ராகு செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறும் பொழுது அல்லது அந்த வீட்டின் அதிபதிகளுடன்  தொடர்பை பெரும்பொழுது பிறகு களத்திரகாரகன் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் பாவர்களுடன் தொடர்பை பெரும்பொழுது நீடித்த தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் யோகம் அற்றவராக காணப்படுவார்.


   களத்திரகாரகன் சுக்கிரனும் மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் நல்ல நிலையில் இருக்க திருமணமான புதிதில் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி மற்றும். மறைவிடஆறு மற்றும் எட்டாம் ஸ்தானத்துடன்  கூடிய தசை நடப்பில் இருப்பினும் அதையும் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் தடை உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப்; 9715189647


செல் : 7402570899

             9715189647


                         



அன்புடன் சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்) 

ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

No comments: