Sunday, 31 October 2021

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தரும் சூட்சும உண்மைகள்

ஜாதக கட்டத்தில் புதன் பகவான் தரும் சூட்சும உண்மைகள்.


                                   


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !


   பழையன கழித்து புதியன புகுதலும், புதுமையை படைக்கவும் மற்றும் இல்லாத ஒன்றை பிரபஞ்சத்திலிருந்து கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தவும் வித்தை காரகன் புதன் பகவானது ஆசியும் மற்றும் ஆதரவும் தேவைப்படுகிறது.


   மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளவும்  மற்றும் புதுமையை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் புதன் பகவான் அருள் ஆசி தேவைப்படுகிறது.


    புதன் பகவானை வலுப்படுத்த அவரோடு  நட்பு கிரகமான சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் அவரது சேர்க்கை வித்தையை அதிகரிக்கச் செய்து வாழ்வில் உயரிய நிலையை அடைய வைக்கும். இதேபோல தனித்த புதன் பலம் அடைந்த நிலையில் பலமடைந்துள்ள கிரகமாக கருதப்படுகிறது இவ்வாறு தனித்த புதன் பாதகாதிபதியாக வரும் பொழுது தனித்து உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருப்பது நல்லதல்ல. அவ்வாறு உச்சம், ஆட்சி பெற்ற கிரகத்தை இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் ஆகியவற்றின் பார்வை  அல்லது சேர்க்கை மிக நல்லது. இவை கேந்திராதிபத்திய தோஷத்தையும் மற்றும் பாதக தன்மையும் மட்டுப்படுத்தும்.


  புதன் பகவானுடன் 

சனி, ராகு சேர்க்கை புதன் பகவானது பலத்தை குறைக்கும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது.


  புதன் பகவான் மிதுனம், கன்னி ,ரிஷபம், துலாம் மகரம் மற்றும் கும்பம் வீடுகளிலிருந்து அதன் தசை நடைபெறும் காலங்களில் யோக பலன்களை வழங்குகிறது.


   புதன் பகவானுடைய அணியை சேர்ந்த கிரகங்களாக சுக்கிரன்,, சனி, மற்றும் ராகு பகவான் போன்றவை ஆகும்.


  புதன் பகவானை சொந்த வீடாக கொண்ட மிதுனம் மற்றும் கன்னி இலக்கனங்களுக்கு சனி, புதன்  மற்றும் சுக்கிரன் தசை தொடர்ந்து வரும் அமைப்பைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்.


  இவ்வாறு யோக தசைகள் வரிசையாக வந்து புதன் பகவான் பலம் பெற்று மற்றும் லக்னாதிபதியும் வலுவடைந்த நிலையில் அதிக சுபத்துவம் 

பெற்றுள்ள நிலையில் புதன் பகவான் இருக்கக்கூடிய பட்சத்தில் புதன் சார்ந்த தொழில் அவரது வாழ்க்கையில் அமையும்.


  புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் கன்னியில் உச்சம் பெற்ற நிலையைவிட மீனத்தில் நீச்சம் பெற்று உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் இந்த நிலையில் மிகுந்த யோக பலனை தருகிறது.

இதேபோல கன்னியில் உச்சம் பெற்ற புதனை விட சூரியன் மற்றும் புதன் பரிவர்த்தனை நிலையில் அதாவது சிம்ம வீட்டில் புதனும் கன்னி வீட்டில் சூரியனும் அமைந்த நிலையில் மிகுந்த யோக பலனை தந்து விடுகிறது.

இதற்கான காரணம் கன்னியில் புதன் பகவான் உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் ஆகிய நிலையில் பலம் பெற்று இருப்பினும் கேந்திராதிபத்திய தோஷம் என்ற வகையில் கன்னியில் இருப்பது நல்லதல்ல.


  புதன் பகவானுடன் கேது இணைவு மற்றும் புதன் பகவானுடன் சூரிய பகவான் இனைவு ஆகியவை நல்ல பலனைத் தருகிறது.புதன் பகவானுடன் சனி அல்லது ராகு இணைந்துள்ள நிலையில் இயற்கை சுப கிரகமான பார்வை பெறும் பொழுது மிகுந்த யோக பலனை சாதகருக்கு கொடுக்கிறது.


  புதன் பகவானுக்கு  செவ்வாய் இணைவு மற்றும் பார்வை உகந்ததல்ல.சந்திர பகவான் புதனை நட்பாக கொண்டாலும், புதனுக்கு சந்திரன் பகை என்ற வகையில் புதன், சந்திரன் இணைவு நல்ல பலனைத் தராது.


  புதன் வீட்டில் செவ்வாய் இடம் பெறுவதோ அல்லது செவ்வாய் வீட்டில் புதன் பகவான் இடம்பெறுவது உகந்தது அல்ல .மீறி இடம்பெறும் போது அவை சுபத்துவம் பெற்று நிலையில் இருக்க வேண்டும்..


 புதன் மற்றும் ராகு சேர்க்கை மாறுபட்ட நிலையில் மாற்றி யோசிக்க வைத்து வித்தியாசமான அணுகு முறையில் அவரை வெற்றிபெற வைக்கும்.


  தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னியில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்றிருப்பது பாதகாதிபதி என்ற வகையில் உகந்ததல்ல. மேலும் பாதகாதிபதி இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை மற்றும் சேர்க்கை பெற்று வலுப்பெறுவது மிகவும் மோசமான பலனை தசை காலங்களில் தரும். புதனின் பாதக தன்மை குறைய சனி, செவ்வாய், ராகு  மற்றும் கேது போன்ற பாவிகள் சேர்க்கை அல்லது பார்வை இடம் பெற அதன் தசை காலங்களில் பாதக தன்மை குறையும்.


நன்றி.


வாட்ஸ் அப்

  9715189647


     செல் & வாட்ஸ் அப்

      9715189647

        74402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

 M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: