அதிர்ஷ்டம் நிறைந்த மனிதன் யார்?
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
" மனிதனாக பிறந்த அனைவரும் வாழ்வில் ஏதாவது ஒரு அதிர்ஷ்டத்தை பெற மாட்டோமா? "என ஏங்குவது மனித இயல்பாகும்.
அதிர்ஷ்டம் என்பது ""அவரவர் எண்ணத்தோடும் மற்றும் வாழ்வியல் சூழ்நிலையயோடும் தொடர்புகொணட ஒன்றாகும்.
அடிப்படைத் தேவைக்கே கஷ்டப்படக் கூடிய ஒருவர் "தினந்தோறும் ஒருவேளை சோறாவது எதிர்பாராத வகையில். அதிர்ஷ்டவசமாக கிடைக்குமா?" என ஏங்குவதும் உண்டு.
உழைக்காமல் பல லட்சங்களை லாட்டரி சீட்டில் அல்லது ஷேர் மார்க்கெட்டில் அல்லது சூதாட்டத்தில் கிடைக்குமா? என எதிர்பார்ப்பதும் ஒருவகை நிலையாகும்.
ஒரு சிலர் கடுமையான உழைப்பையும் மற்றும் முதலீட்டையும் போட்டு அந்த உழைப்புக்கேற்ற உயர்வு நிலை கிடைக்குமா ? என ஏங்குவதும் உண்டு.
சிலர் இருந்த இடத்திலிருந்து முதலீட்டைப் போட்டுவிட்டு உடலுழைப்பு இல்லாமல் தனது மூளையை பயன்படுத்தி பல கோடிகளை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாகவும் இருப்பர்.
ஒருசிலர் கற்ற கல்வியால் அல்லது பெற்ற வித்தையால் அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஆக முடியுமா? என எதிர்பார்ப்பதும் உண்டு.
சிலர் அறிவும், திறமையும் இருந்தும் மற்றும் கடுமையாக உழைத்தும் தோல்வி அடைபவர்களும் உண்டு .ஒரு சிலர் அந்த தொழில் சார்ந்த எந்தவிதமான அதிகப்படியான திறமை இல்லாமல் அந்த தொழிலை ஆரம்பித்து தக்க நேரத்தில் அதிர்ஷ்டம் நிறைந்த தசா அமைப்புகளால் வாழ்வில் முதலாளிகளாக ஆகி. விடுவதும் உண்டு.
எல்லாம் அவரவர் ஜாதகத்தில் உள்ள கோள்களின் கலப்பினால் உண்டாகும் அதிர்வலைகளே அவரது அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கிறது.
வாழ்வில் உயர்வடைந்து வெற்றி பெற்றவர்களது ஜாதகங்களை உற்றுநோக்கும் போது அவை பார்ப்பதற்கு கிரக அமைப்புகள் கண்ணில் ஜொலிப்பதை காணலாம். உரிய யோக தசை அமைப்புகள் வாழக்கூடிய வயதில் வந்து அவரை வாழ்வின் உயரிய நிலைக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம்.
இது போன்றவர்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து வரக்கூடிய தசைகள் யோக தசை காலமாக அமைந்து அந்த யோகத்தை அனுபவிக்க கூடிய இலக்கனம் மற்றும் ராசி ஸ்தானங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் வலுவடைந்து இருப்பதைக் காணலாம்.
ஒருவர் ஜாதகம் அதிர்ஷ்டம் நிறைந்த சாதகமாக அமைய வேண்டுமாயின் அவருடைய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ராசி மற்றும் அதன் அதிபதியும் கெடாமல் இருக்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இட அதிபதிகள் வலுப்பெறாமல் லக்கினாதிபதி வலுவடைந்து இருக்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் இலக்கன யோகர்கள் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோணங்களில் நின்று , இயற்கை சுப கிரகங்கள் தொடர்பு பெற்றும் அதே நேரத்தில் இயற்கை பாவ கிரகங்களான சனி செவ்வாய், ராகு மற்றும் கேது அல்லது லக்கன அவ யோகிகள் தொடர்புகளை பெறாமல் இருக்க வேண்டும். யோகத்தினை கிரகங்களின் தசைகள் தொடர்ந்து வர வேண்டும்.அதிலும் குறிப்பாக குரு பார்த்த தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.
கோச்சார அடிப்படையில் ஏழரை சனி மற்றும் அஷ்டமச்சனி வருங்காலங்களில் மட்டும் யோக தசைகள் நடப்பில் இருப்பினும் அதிர்ஷ்டம் அல்லது யோக நிலை மட்டுப்படுத்தப்படும்.
ஒருவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்து வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ,ஏழு மற்றும் எட்டில் இயற்கை சுப கிரகங்களான குரு ,புதன் சுக்கிரன் அமர்ந்து அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்.
நவ கிரகங்களில் சந்திரன், செவ்வாய், சூரியன் மற்றும் கேது ஆகியவை குரு அணியை சேர்ந்ததாகும்.
சனி, புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் சுக்கிரன் அணியைச் சேர்ந்ததாகும்.
லக்னம் மற்றும் ராசியை குரு அணியாக கொண்டவர்கள் குரு அணியின் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்களும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாவர்.
லக்னம் மற்றும் ராசியை சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களாக இருப்பின் தொடர்ந்து சுக்கிரனை அணியினை சேர்ந்த. கிரக தசைகள் வருமாயின் அவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆவார்கள்.
குரு அணியை சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த கிரக திசைகள் வந்தாலும்,
சுக்கிரன் அணியை சேர்ந்தவர்களுக்கு குரு அணியை சேர்ந்த கிரக தசைகள் நடந்தாலும் அந்த கிரகங்கள் உபஜெய ஸ்தானமான 3, 6, 9 ,10, 11 ஆகிய இடங்களில் நட்பு நிலையில் இருப்பின் அதன் தசைகள் தொடர்ந்து வரும் போதும் யோக பலனை சாதகருக்கு வழங்குகிறது.
குறிப்பாக மேஷ லக்னக்காரர்களுக்கு அவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய குரு, சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்று உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.இதற்கு குரு சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் எவ்விதத்திலும் பாவத்ததுவம் அடையாமல் இருக்க வேண்டும்.
ரிஷப லக்னகாரர்களுக்கு சனி, புதன் மற்றும் சுக்கிரன் திசைகள் தொடர்ந்து வருமாயின் அதிர்ஷ்டசாலிகள் ஆவார். இங்கும் அதே போல சுக்கிரன், சனி ,புதன் ஆகியவை பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவ நிலைபெற்றிருக்க வேண்டும்.
மிதுன லக்கினகாரர்களுக்கு புதன், சனி மற்றும் சுக்கிரன் பாவத்துவம் அடையாமல் சுபத்துவம் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.
கடக லக்கின காரர்களுக்கு சந்திரன், குரு மற்றும் செவ்வாய் தசைகள் பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்ற நிலையில் அதன் தசைகள் தொடர்ந்து வரும் அமைப்பை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.
சிம்ம லக்கின காரர்களுக்கு சூரியன் குரு , செவ்வாய் தசைகள் பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வரும் அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.
கன்னி லக்கின காரர்களுக்கு புதன், சனி மற்றும் சுக்கிரன் தசைகள் சுபத்துவம் பெற்ற நிலையில் தொடர்ந்து வருமாயின் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.
விருச்சிக லக்கின காரர்களுக்கு குரு, சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் பாவத்துவம் அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வரும் அமைப்பு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்.
தனுசு லக்கின காரர்களுக்கு குரு, சந்திர மற்றும் செவ்வாய் தசைகள் பாவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்ற நிலையில் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.
மகர மற்றும் கும்பம் லக்கினக்காரர்களுக்கு சனி, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பாவத்துவ நிலையை அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆவார்கள்.
மீன லக்ன காரர்களுக்கு குரு ,சந்திரன் மற்றும் செவ்வாய் தசைகள் பாவத்துவம் அடையாமல் சுபத்துவம் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பைப் பெற்றவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.
எல்லா லக்கின காரர்களுக்கு மேற்கண்ட தசைகள் மட்டுமல்லாமல் அவர்களது தனம் மற்றும் லாபாதிபதிகளது தசைகளும் அவர்களது வாழ்வினை அதிர்ஷ்டம் நிறைந்தவராக ஆக்குகிறது.
நன்றி.
Whats app
9715189647
Cell
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர் சோ.ப ரவிச்சந்திரன்
(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்சியாளர்)
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் கன்சல்டிங் சென்டர், கரம்பகுடி, புதுக்கோட்டை மாவட்டம்..
No comments:
Post a Comment