Sunday, 31 October 2021

 ஜாதகத்தில் லக்கனம் மற்றும் லக்னாதிபதியின் முக்கியத்துவம் என்ன?


                                          

                                     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜாதக கட்டத்தினை பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காலபுருஷ தத்துவத்தின்படி மேஷலக்னம் முதலாவது இலக்கனமாக கொண்டு , நிறைவான இலக்கனமாக மீனம் வைக்கப்படுகிறது.


  ஒருவரது ஜாதகத்தில் இலக்கனத்தை "உயிர்" என்பார்கள். ராசியை "உடல்" என்று அழைக்கப்படுகிறது. உயிரின்றி உடல் வாழ முடியாது. வெறும் உயிரை மட்டும் கொண்டு ஒரு உயிர் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடியாது. உடலின்றி உயிர் வாழ்ந்தால் அதை ஆவி பேய் என்று அழைத்து விடுவார்கள்.


 உடலும், உயிரும் போல லக்னமும், ராசியும் அவசியமான ஒன்றாகும்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை "ஜென்ம நட்சத்திரமாக" கருதப்படுகிறது. ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அவரது ஜென்ம தசை கண்டறியப்படுகிறது. ஆனால் அந்த ஜென்ம தசை யோக தசையா? அல்லது அவயோகத்தை அள்ளித்தரும் தசையா? என்பதை இலக்கனத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.


    ஜாதகத்தில் நடைபெறும் ஜென்ம தசையானது பாவத் பாவ விதிப்படி சொந்த வீட்டிற்கு எத்தனையாவது இடத்தில் உள்ளது  என்பதையும், லக்னத்திற்கு எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டும்.


 அந்த தசை நாதன் எந்தப் பாவத்தோடு அதிக தொடர்பு கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்களுக்கு  பலாபலன் தரப்படுகிறது.


 இரண்டு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் முதலில் எந்த பாவத்தோடு அதிக தொடர்பு கொண்டுள்ளதோ அதன் பலாபலன் முதலில் நடக்கும் .

பிறகுதான் மற்ற ஆதிபத்திய  பலனைத் தரும்.


   பன்னிரெண்டு  ராசி கட்டங்களில் இலக்கனமும் அதன் அதிபதியும் பலமடைந்து நின்றாலே, ஏனைய பிற அமைப்புகள் பலம் பெறவில்லை என்றாலும் அதாவது வலு பெறவில்லை என்றாலும் அந்த சாதகர் தன் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம். ஆனால் இலக்கனத்தை தவிர ஏனைய பிற கட்டங்கள் வலுப்பெற்று இலக்கனமும் அதன் அதிபதியும் பலம் இழந்த சூழலில் எவ்வளவுதான் யோகங்கள் வந்தாலும் அதனை அனுபவிக்க கூடிய தன்மை சாதகருக்கு இருக்காது.


  ஒருவர் ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்து அதன் தசைகள் நடப்பில் இருக்கும் பொழுது இலக்கனம் மற்றும் அதன் அதிபதி பலம் இழந்துள்ள  சூழலில் அந்த யோகம் ஜாதகருக்குத் ஜொலிக்காது.


  லக்னத்திலேயே லக்னாதிபதி ஆட்சி பெறுவது நல்லது என்று கூறினாலும் லக்னாதிபதி இயற்கைப் பாவக் கிரகங்களாக இருந்து லக்கனத்தில் வலுப்பெற்று நிற்பது நல்லது அல்ல.


  பொதுவாக லக்னாதிபதி 6 ,8 ,12 போன்ற இடங்களில் மறைவதோ அல்லது லக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் இணைவது நல்லதல்ல எனக் கூறினாலும் லக்னாதிபதியானவர் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களை லக்னாதிபதியாக கொண்ட மகர, கும்ப மற்றும் மேஷ, விருச்சிக லக்கனங்களுக்கு லக்கனத்திலே நின்று ஆட்சி பெறுவதோ அல்லது உச்ச வீடுகள் நின்று பலம் பெறுவதோ நல்லதல்ல. 


     லக்னாதிபதி இயற்கைப் பாவக் கிரகங்களாக இருப்பின்  உதாரணமாக 

மகர, கும்பம் லக்கனங்களுக்கு சனி, செவ்வாய் லக்னத்தில் இருந்து ஆட்சி பெறுவதைவிட மறைவிடங்களில் நின்று மறைமுகமாக வலுப்பெற்று இருப்பதே நல்லது ஆகும்.


  பொதுவாக லக்னாதிபதி மறைவிட ஸ்தானமேறி நிற்பின் அவர்கள் வாழ்வு சிறக்காது .வாழ்க்கையில் அடிப்படையான தேவைக்கே போராடி கஷ்டப்பட்டு வாழவேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.


 ஆனால் அதே நேரத்தில் லக்னாதிபதி மறைவிடங்களில் நின்றாலும், நீசம் அல்லது அஸ்தமனம் அடைந்திருந்தாலும் இயற்கை சுப கிரகங்களான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவர்களது தொடர்பினை பெறுகின்றபொழுது சுபத்துவ நிலையை அடைந்து அவை அப்படியே நேர்வழி பெற்று நல்ல பலனை சாதகருக்கு தந்துவிடும்.


  பொதுவாக லக்கனத்தில் பாவக்கிரகங்கள் இடம் பெறாமல் இயற்கை சுப கிரகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அல்லது பார்வை அல்லது சேர்க்கை பெறும் பொழுதும் அவை நல்லதாகும்.


     இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் லக்னாதிபதி பாவ கிரகங்களாக இருப்பின் லக்கனத்தில் இடம்பெறாமல் இருப்பது நல்லது. லக்கனாதிபதி இயற்கை சுப கிரகங்களாக இருந்து அவை இலக்கனத்தில் இடம்பெற்று இலக்கனத்தை வலுப்படுத்துகிறது.


      லக்கனத்தில் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் இருப்பது ஜாதகருக்கு முரட்டுத் தனத்தை தரும். செவ்வாயுடன்  ராகு சேர்ந்து சனி பார்க்கின்ற அமைப்பை பெற்று இருப்பின் சாதகர் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற குணம் உடையவராக இருப்பார் பிற உயிர்களை வஞ்சித்து ரசிக்கும் குணமுடையவராக திகழ்வார்.


   பொதுவாக லக்கனத்தில் இருள் கிரகமான சனி பகவானும் மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது இடம்பெறாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இடம் பெற்றிருப்பின் அதனை இயற்கை சுப கிரகங்கள் பார்த்து சுபத்துவம் படுத்தினால் கெடு பலனை தருவதில்லை.


 பொதுவாக இலக்கனம் பலம்பெற லக்னத்திற்கு இருபுறமும் (2,12)  இயற்கை சுப கிரகங்கள் இருப்பது "சுப கர்த்தாரி யோகம்" ஆகும்.இவ்வாறு இருப்பின் சாதகர் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ கூடிய யோக அமைப்பு உருவாகும்.


      லக்கனத்திற்கு இரு புறமும் இயற்கை பாவ கிரகங்கள் இடம் பெறுவது அவை "பாபகர்த்தாரி யோகம்" எனப்படும். இதனால் சாதகர் மிகவும் கீழான நிலையில் போராடி வாழ வேண்டிய சூழல் உருவாகும்.வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் பெறாத நிலையில் மேற்கண்ட பலன் நடைபெறும்.


  லக்னாதிபதி  லக்கனத்தில் அல்லது கேந்திர கோணங்களில் நின்று உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெறுவது நல்லது எனினும் பாவ கிரகங்களாக இருப்பின் மறைமுக இடங்களில் நின்று உச்சம் , ஆட்சி போன்ற நிலைகளில் நேர்வழி பெறாமல் மறைமுகமாக வலுப் பெறுவது நல்லது. ஆகும்.


  லக்னாதிபதி நீசம் பெற்றிருந்தாலும், அஸ்தமனம் மற்றும் வக்கிரம் போன்ற நிலைகளில் பலமிழந்து இருந்தாலும் லக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு, வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் ஆகியவற்றின் தொடர்பினை பெறும்போது லக்கினாதிபதி ஆனவர் மறைமுகமாக நேர் வலுப்பெறுகிறது.


  லக்கனத்தில் குரு மற்றும் புதன் பகவான் நிற்கும் பொழுது அவை திக் பலம் பெறுகிறது.

லக்னாதிபதியாக

 குரு மற்றும் புதன் பகவானாக இருந்து ஏழாம் இடத்தில் இடம்பெறும் போது அவை நிஷ் பலம் பெறுகிறது.


  ஜென்ம லக்கனம் எந்த நட்சத்திர சாரத்தில் நிற்கிறது என்பதைப் பொருத்தும் அதன் பலாபலன் அமைகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


  வாட்ஸ் அப்

   9715189647

     செல்

  9715189647

    7402570899

                                        


அன்புடன் 

ஜோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்

((M..Sc,M.A,BEd)

 ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,

 ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ கன்சல்டிங் சென்டர், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: