Monday, 4 July 2022

ஜாதக பலனை கணிக்க சிக்கலான அமைப்பு

 ஜாதக பலனை கணிக்க சிக்கலான ஜாதக அமைப்பு

                         

செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   மனித வாழ்வை வழிநடத்தி செல்வதில் கிரகங்களின் பங்கு அளப்பரியது.

ஒரு ஜாதக கட்டத்தில் மூன்று கிரகங்களுக்கு மேலாக ஒரு ராசியில் கூடி  இருக்கும் போது பலன் கண்டறிந்து ஜாதகருக்கு துல்லியமான பலன்களை கொடுப்பதில் ஜோதிடர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.


 இவ்வாறு மூன்று கிரகங்களுக்கு மேலாக ஒரு ராசியில் கூடி இருக்கும் போது அவற்றின் பலன் அளிக்க முற்படும் போது முதலில் அந்த கிரகங்களுக்கு இடைப்பட்ட கிரக உறவு நிலைகள் மிக முக்கியமான ஒன்றாகும்.அதாவது அந்த வீட்டிற்கு அந்த கிரகமானது  உச்சமா ? மூல திரிகோண மா ? ஆட்சியா ?நட்பா ? அல்லது பகையா ? அல்லது சமமா ?  நீசமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


 உச்சம் எனில் 100 மதிப்பெண்

மூலதிரிகோணம் இதில் 75 மதிப்பெண், ஆட்சி எனில் 50 மதிப்பெண்,

 நட்பு எனில் 25 மதிப்பெண்,

 சமம் எனில் 12.5 மதிப்பெண்,

 பாகை எனில் 6.5 மதிப்பெண்,

 நீசம் எனில் பூஜ்ஜியம் மதிப்பெண், நீசபங்கம் எனில் 120 மதிப்பெண் ஆகும்.


   இவ்வாறு அவை கொண்டுள்ள‌ ஸ்தான நிலைகளுக்கு ஏற்ப மதிப்பிட வேண்டும்.


 அடுத்தபடியாக ஒரு ஜாதக கட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது பாகை மற்றும் கலையில் நிற்கின்றது என கவனிக்க வேண்டும்.


   முப்பது பாகை கொண்டஒரு ராசியில் ஒன்பது பாதம் அதாவது இரண்டெகால் நட்சத்திரம் அதாவது ஒரு நட்சத்திரம் பாதம் ஒன்றுக்கு 3 பாகை 20 கலை வீதம் ஒரு நட்சத்திரம் முழுமையாக 13 பாகை 20 கலை ஆகும்.


சரி விஷயத்துக்கு வருவோம்.ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்து இருக்கும் போது இரண்டு கிரகத்திற்கு இடையில் எட்டு பாகைக்குள் ஒரு கிரகம் நெருங்கிய நிலையில்  இருக்கும்போது தன்னுடன் இணைந்த கிரகத்தை பலப்படுத்த அல்லது பலமிழக்கச் செய்யும். அதாவது இயற்கை சுப கிரகம் எனில் தன்னுடன் இணைந்த கிரகத்தை பலப்படுத்தும் அல்லது இயற்கைப் பாவக் கிரகங்கள் எனில் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலத்தை இழக்கச் செய்யும்.


 ஒரு நட்சத்திர பாகை அளவுக்கு அதாவது 13 பாகை அளவுக்கு விலகி இருக்கும் பொழுது தன்னுடன் இணைந்த கிரகங்களை 50 சதவீதம் மட்டுமே பாதிப்படையச் செய்யும். இருபத்தி இரண்டு பாகைக்கு மேலாக தன்னுடன் இணைந்த கிரகம் இருப்பின் அவை தான் இணைந்த கிரகத்தை எவ்விதத்திலும் பாதிக்காது.


 மேலும் ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் அந்த வீட்டில் சூரியபகவான் இருப்பின் அவை தன்னுடன் இணைந்த கிரகங்களை அஸ்தமனம் அடையச்செய்யும் என்ற விதியையும் கவனித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


உதாரணமாக ஒரு வீட்டில் இயற்கை சுப கிரகமான சுக்கிர பகவான் இருந்து அதனுடன் சனி, ராகு, சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இணைந்து இருக்கும் போது  ஒட்டுமொத்தமாக சுக்கிர பகவானை பாவ நிலையை அடையச் செய்துள்ளது என்று வைத்துக்கொள்வோம்.  இந்த அமைப்பில் அவற்றுக்கு இடையே உள்ள கிரக பகை நிலைகளையும்  மற்றும் உறவு நிலைகளையும்  கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனித்தும் அவையும் நெருக்கமாக இணைந்து பாவத்துவமாக உள்ளது என்ற நிலையில் அந்த ஒட்டுமொத்த கிரகங்களை குரு பகவான் தனது 5,7,9 ஆகிய ஏதேனும் ஒரு பார்வையால் பார்க்கப்பட ஒட்டுமொத்த கிரகமும் சுபத்துவம் அடைந்து அதன் தசா புத்திகளில் அவை பெற்ற ஆதிபத்தியம் ஏற்ப நல்ல பலன்களை தரும் .


  அதே நேரத்தில் ஒரு ராசியில் குரு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் ஒன்று கூடி நல்ல பலனைத் தரக்கூடிய சுபத்துவ அமைப்பில் இருக்கும் பொழுது இயற்கைப் பாபக் கிரகமான சனி  தனது 3,,7,10 பார்வையால்  பார்க்கின்ற  அல்லது செவ்வாய் பகவான் தனது 4, 7,8 பார்வையால் பார்க்கின்ற அமைப்பை பெரும்பொழுது ஒட்டுமொத்த கிரகங்கள் பாவ நிலையை அடைந்து அதன் தசா புத்திகளில் அவை பெற்ற ஆதிபத்தியம் ஏற்ப கெடுபலன்களை தருகின்ற அமைப்பை பெறும்.


எனவே  பலன்களை கணித்து பலன் அளிப்பதில் சுபத்துவ நிலையே 

முடிவான நிலை  (ultimate resul) ஆகும்.


  இவ்வாறு இணைந்து இருக்கக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசை நடக்கும் பொழுது அந்த கிரகம் பெற்ற 

நட்சத்திர சார நாதனையும்

 அவசியம் கவனிக்கப்பட வேண்டும்.


  ஒரு தசை நடத்தக்கூடிய கிரகத்தின் பலனை கழிப்பதில் சாரநாதன் எவ்வாறு துணைபுரிவார் என்பதை கண்டறிவது மிகவும் சிக்கலான நிலையே ஆகும். அதாவது ஒரு தசை நடக்கக்கூடிய கிரகம்

பெற்ற நட்சத்திர சார நாதனின் ஆதிபத்தியம் பலனை சார் நாதன் இருக்கும் வீட்டின் வழியாக பலனை தரும் என்பதையும் கவனிக்க வேண்டும்.


 தசை நடத்தும் கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரே அந்த வீட்டின் பலனையும் தான் இருக்கும் வீட்டின் வழியாகவும் தர முயல்வார் என்பதையும் கவனிக்க வேண்டும்.


நிறைவாக தசை நடத்தும் கிரகம் அம்சத்தில் சுப வர்க்கம் ஏறி உள்ளாரா ? அல்லது பாவ வர்க்கம் ஏறி உள்ளாரா ? என்பதையும் தசை நடத்தும் கிரகம் அம்சத்தில் எந்த கிரகத்துடன் இணைந்து உள்ளார் என்பதையும் பொறுத்து பலன் அமைகிறது.


  சுப வர்க்கம் என்பது குரு பகவான் வீடுகளான தனுசு மீனம், சுக்கிரன் வீடுகளான ரிஷபம், துலாம் மற்றும் சந்திரனுடைய வீடான கடக வீடு போன்றவற்றில் கிரகம் அம்சத்தில் ஏறி விற்பதை சுப வர்க்கம் ஏறி உள்ளது என்றும்,  அவ்வாறு சுப வர்க்கம் ஏறியிருக்கும் கிரகம் நல்ல பலனை தரும் என்பதும் சோதிட உண்மையாகும்.


 அசுப வர்க்கம் என்பது அம்சத்தில் ஒரு கிரகம் பாவ கிரகமான சனியின் வீடுகளான மகரம், கும்பம், செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சூரியன் வீடான சிம்ம வீடு ஆகியவை ஏறி நிற்பதை அசுப வர்க்கம் ஏறி உள்ளது என்றும். இவ்வாறு அசுப வர்க்கம் ஏறி உள்ள கிரகம் தனது தசா பலனைக் கெடுக்கும் என்பதும் சோதிட உண்மையாகும்.


   கிரகங்களில் ஒளி கிரகமான  சூரியன் மற்றும் சந்திர பகவானை தவிர ஏனைய கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் பெற்ற வீடுகளை கொண்டுள்ளது.இரண்டு ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் ஒரு வீட்டிலிருந்து தசை நடக்கும் போது அவை பாவத்பாவக அமைப்பின்படி அந்த வீட்டிற்கு மறைவிடத்தில் உள்ளதா ? அல்லது கேந்திர கோணங்களில் உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.இவை மட்டுமல்லாமல் அந்த தசை நடத்தக்கூடிய கிரகம் எந்த பாவத்தோடு அதிகமாக தொடர்பு கொண்டு உள்ளதோ அவை தொடர்பான பலன்களை 80 சதவீதமும் தொடர்பில்லாத மற்ற ஆதிபத்தியத்திற்கு உரிய பலனை 20% தரும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 தசை நடத்தக்கூடிய  கிரகம் லக்கன அவ யோகியாக இருப்பின் பாவத் பாவக  அமைப்பின்படி மறைவிடத்தில் நின்று தசை நடத்தினால் யோக பலனைத்தரும்.


  உதாரணமாக கடக லக்கினத்திற்கு குருபகவான்  ஆறு மற்றும் ஒன்பது என இரண்டு ஆதிபத்தியங்கள் கொண்டுள்ளார். லக்கனத்திற்கு ஆறாம் இடம் என்பது ருண, ரோக, பிணி, பீடை ஆகியவற்றை தரக்கூடிய சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.திரிகோணாதிபதியான ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி  என்பது லக்கண யோகராக‌ செயல்படும்.


 குரு பகவான் லக்னத்தில் உச்சம் பெற்று இருப்பது    பாவத் பாவக அமைப்பின்படி மறைவிட  ஸ்தானமான 6-ஆம் இடத்திற்கு எட்டாம் இடத்தில் மறைந்து உச்சம் பெற்று 9-ஆம் இடத்தை பார்வை செய்வதால் இவை 9-ஆம் இடம் நல்ல  ஆதிபத்திய பலனையே 80 சதவீதம் தரும். மீதமுள்ள 20% 6-ஆம் இடத்து கெடு பலனை தரும்.


 அதேநேரத்தில் மாறாக கடக லக்கினத்திற்கு குரு பகவான் இரண்டாம் இடமான சிம்மத்தில் இருப்பது லக்கண யோக ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு ஆறாமிடத்தில் மறைந்து ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் இடத்திற்கு திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் இந்த குரு பகவான் 6-ஆம் இடத்துப் கெடு  பலனை 80% தரும். மீதமுள்ள 20% மட்டுமே திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இட லக்கணம் யோக பலனை தரும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி.


(தங்களது ஜாதகம் பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


வாட்ஸ் அப் & செல்

  9715189647


  செல்

  9715189647

    7402570899


  Email masterastroravi@gmail.com

                           



 அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

                          M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் .

No comments: