Monday, 23 September 2024

12-ராசி காரர்களுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள்

 12- ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் -2024




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  (குரு பெயர்ச்சி பலன் என்பது ஒரு பொது பலன் ஆகும். இது அவரவருடைய சாதகத்தில் உள்ள லக்கன அடிப்படையில் தசா புத்திகளையும் ஏனைய கிரக அமைப்புகளை ஒப்பிட்டு பார்த்து முழு பலனை எடுக்க வேண்டும்.)


 கடந்த ஓர் ஆண்டுகளாக மேஷத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான் வருகின்ற சித்திரை மாதம் 18 ஆம் தேதி புதன்கிழமை (01.05.2024) வாக்கிய பஞ்சாங்க படி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இவ்வாறு ஓராண்டுக்கு ஒரு ராசி விதம் சுழன்று கொண்டிருக்கக் கூடிய குரு பகவான் 12 ராசிகளுக்கும் தரக்கூடிய  குரு பெயர்ச்சி பலன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


மேஷ ராசி


  மேஷ ராசி நாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான குரு பகவான் இந்த ராசிக்கு லக்கின யோகரான 9ஆம் இடம் மற்றும் விரய ஸ்தானமான 12 ஆம் இட  அதிபதியாவார்.


   கடந்த ஓராண்டுகளாக ஜென்மத்தில் இருந்த இந்த குரு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு கடுமையான கஷ்டங்களை தந்து கொண்டிருந்தது. இந்த குரு பெயர்ச்சி  மேஷ ராசிக்கு ஒரு மிகச் சிறந்த பெயர்ச்சியாக விளங்குகிறது .ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து குரு பகவான் ஆறாம் இடத்தை பார்வை செய்வதால்ஸ இதுவரை உங்களுக்கு இருந்த கடன் கட்டுப்படும். எதனால் நீங்காத தீர முடியாத நோய்கள் தீரும். எதிரி உங்களுடன் சமாதானத்துக்கு வருவார். தீர்க்க முடியாத பகை பிரச்சினைகள் இந்த பெயர்ச்சி மூலம் உங்களுக்கு தீரும்..


ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுடைய எட்டாம் இடத்தை பார்வை செய்வதால் வம்பு ,சண்டை வழக்கு கோர்ட் சம்பந்தமான விஷயங்கள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்து செல்ல முடியாமல் இருந்து கொண்டு இருந்தவர்கள் இந்த பெயர்ச்சி மூலமாக நீங்கள் நிச்சயமாக வெளிநாடு சென்று பொருளை தேடக் கூடிய யோகம் உண்டாகும்.


இதுவரை நீங்கள் மேற்கொண்ட தொழிலில் நஷ்டத்தை சம்பாதித்துக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த குருபகவான் பத்தாம் இடத்தை ஒன்பதாவது பார்வையால் பார்வை செய்வது மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து தொழிலும் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் மேற்கொண்ட தொழில் மூலமாக நல்ல லாபமும்  மற்றும் அதிர்ஷ்டமும் பெறுவீர்கள்.


ரிஷப ராசி


  .ரிஷப ராசிக்காரர்களுக்கு குருபகவான் அஷ்டமாதிபதியாகவும் மற்றும் லாபத்தை தரக்கூடிய லாவாதிபதியாகவும் செயல்படுகிறார்.ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஓராண்டு முழுவதும் ஜென்மத்தில் குரு பகவான் வாசம் செய்வதால் மிகப்பெரிய நன்மைகளை நீங்கள் அடைந்து விடுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் தனது  ஐந்தாம் பார்வை மூலம்  பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்வதால்  பிள்ளைகளால் உண்டான பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும் . விட்டு பிரிந்து சென்ற பிள்ளைகள் உங்களை நாடி வருவார்கள்.கனபூர்வீக சொத்துக்கள் மீது ஏற்பட்ட வழக்குகள் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் .இதுவரை பூர்வீக சொத்து கிடைக்காமல் இருப்பவர்களுக்கு கிடைக்கும். புத்திர பாக்கியம் நீண்ட நாளாக காத்திருக்கக்கூடிய அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


 உங்கள் ராசியில் இருந்து சம  சப்தமாக ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இந்த நாள் திருமணத்திற்காக காத்திருக்கக்கூடிய தம்பதிகளுக்கு நல்ல வரன் அமையும்.இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வியாழன் நோக்கம் உண்டாகி திருமணம் பாக்கியம் உண்டாகும். நல்ல மனைவி / கணவன் உங்களுக்கு வாய்ப்பார். இதுவரை கணவன்- மனைவிக்கு இடையே நிலவி  வந்த உட்பூசல்களும், பிரச்சனைகளும் விலகி ஒரு அன்யோன்யமான உறவை நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஏற்பட்ட பகை விலகும்.


உங்கள் ராசிக்கு பாக்கிய  ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை குரு பார்வை செய்தால் நல்ல பாக்கியம் வருமானம் உண்டாகும். உங்களுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட பகை விலகும் .தந்தை மூலம் ஆதாயம் நடக்கும் .உங்களை விட்டு பிரிந்து இருந்த தந்தை மீண்டும் வந்து சேருவார். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நல்ல உயர் கல்வி உங்களுக்கு வாய்க்கும்.


மிதுன ராசி


 மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் அதிபதியாகவும் மற்றும் ஜீவனஸ்தானதிபதியான பத்தாம் இட அதிபதியாகவும் செயல்படுகிறார்.


     உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த உங்களுக்கு ஒரு நிம்மதியான தூக்கம் உண்டாகும். உங்களுக்கு இதுவரை விரைய செலவுகளாக கெட்ட செலவாக செய்து வந்த நீங்கள் இனிமேல் சுப செலவை மேற்கொள்வீர்கள் .12ஆம் இடத்தில் இருந்து சுகஸ்தானமான நாலாம் இடத்தை பார்வை செய்வதால் நல்ல சுகம் உண்டாகும் .கல்வியால் சுகம், வண்டி வாகன சுகம்  மற்றும் தாய் மூலமாக சுகம் முதலில் உருவாகும் நீண்ட நாள் நோயிலிருந்த உங்களது அம்மா இந்த நோயிலிருந்து விடுபடக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும். உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் இடையே இதை வந்த பிரச்சினைகள் நீங்கி நல்ல ஒரு சமூகமான உறவு உண்டாகும்.


உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்தை பார்வை  செய்வதால் 

    எட்டு மற்றும் பன்னிரண்டாம் ஆம் இடம் இந்த குரு பெயர்ச்சி மூலம் சுப தன்மை அடைவதால் நிச்சயமாக வெளிநாடு முயற்சி செய்து கொண்டிருக்க கூடிய இளைஞர்கள் வெளிநாடு சென்று நல்ல பொருளீட்டி வீடு ,வாசல், மண்ணு மனை அமைப்பீர்கள்.


கடக ராசி


   உங்கள் ராசிநாதன் சந்திரனுக்கு நட்பு கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் சத்ரு  ஸ்தானமான ஆறாம் இடம் மற்றும் லக்கன யோகரான பாக்கியஸ்தானமான ஒன்பதாம் இட அதிபதியாவார்.

  கடந்த ஓராண்டுகளாக ஜீவனஸ்தானமான 10-ஆம் இடத்தில் நட்பு நிலையில் இருந்து கொண்டு நல்ல பலனை தந்த குரு பகவான் மீண்டும் 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து பகை வீடு ஏறி இருப்பதால் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனைத் தரக்கூடிய பெயர்ச்சியாக அமைகிறது.


  பதினோராம் இடத்தில் உள்ள குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் நீங்கும். கீர்த்தி புகழ் உண்டாகும் சகோதர உறவுகளிடையே  நிலவி வந்த இன்னல்கள் மற்றும் உட்பூசல்கள் நீங்கும்.சகோதர உறவுகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.


     உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தை தனது ஏழாம் பார்வையால் குரு பகவான் பார்வை செய்கிறார். இதனால்புத்திர தடை விலகி குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாளாக உங்களுக்கு கைக்கு வந்து சேராத அப்பா வழி சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். பூர்விக இடத்தில் புகழும் பெருமை அடைவீர்கள். பூர்வீக இடத்தை விட்டு விலகி இருந்த நீங்கள் பூர்வீக இடம் நோக்கி பெயர்ச்சி அடையக்கூடிய வாய்ப்பை தரும் .குழந்தைகளால் பெரும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைவீர்கள்.


தனது ஒன்பதாவது பார்வையால் ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் மனைவி/ கணவன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்களை விட்டு கோபமாக பிரிந்து சென்ற மனைவி உங்களை நாடி வருவார். மனைவி வழி சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களுக்கும் உங்களுக்கும் இருந்த பிணக்கு விலகி நண்பருடைய ஆதரவை பெறுவீர்கள் நல்ல சமூக மதிப்பு உங்களுக்கு உருவாகும்.


சிம்ம ராசி


  உங்கள் ராசிநாதன் சூரிய பகவானுக்கு நட்பு கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் லக்கன யோகரான பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடு அதிபதியாகவும் மற்றும் அஷ்டம ஸ்தான அதிபதியாகவும் விளங்குகிறார்.


 கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகமான செவ்வாயில் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்வை செய்த குரு பகவான் மிகுந்த நல்ல பலனை தந்து கொண்டு இருந்தார்‌ இப்பொழுது உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ரிஷபத்தில் பகைவீடு ஏறி இருப்பதால் ஓரளவு சுமாரான பலனைத் தரக்கூடிய பெயர்ச்சியாக உங்களுக்கு அமைகிறது.


 உங்க ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களுடைய தன ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் உங்களுக்கு தன் வரவு உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழக்கூடிய வாய்ப்பை பெறுவீர்கள்.


உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தை குரு பகவான் சம சப்தமாக பார்வை செய்வதால் தன் சுகம், தாய் சுகம் ,கல்வியால்  சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவை உண்டாகும்.


 தனது ஒன்பதாவது பார்வையால் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தை பார்வை செய்வதால் உங்களுக்கும் எதிரிக்கும் இடையே வந்த பிணக்கு விலகும் .கடன் பிரச்சினைகள் தீரும் .நீண்ட நாள் தீராமல் இருந்த நோய்  பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.


கன்னி ராசி


  உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடம் அதிபதியாகவும் மற்றும் வாழ்க்கை துணை தரக்கூடிய களத்திர ஸ்தான அதிபதியாகவும் குரு பகவான் செயல் படுகிறார்.


 உங்கள் ராசிக்கு  எட்டாம் இடத்தில் மறைவிட ஸ்தானத்தில் இருந்து மறைந்து இருந்த குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு  பெயர்ச்சி அடைவதால் 

தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியை பார்வை செய்வதால் மிகுந்த யோகத்தை இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் அடையப் போகிறீர்கள்.


  உங்களுக்கு நல்ல அந்தஸ்து புகழ் கிடைக்க இருக்கிறது இதுவரை தடைபட்ட அனைத்து செயல்களும் இனி சிறப்பாக நடைபெறும்.


 தனது மூன்று சம சப்தம பார்வையால் மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால்  சகோதரர் வழியாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். சகோதரர்கள் மூலமாக அன்பும் ,ஆதரவும் கிடைக்கும். கீர்த்தி ,புகழ் ,அந்தஸ்து கிடைக்கும் உங்களுக்கு.


தனது ஒன்பதாவது பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தை பார்வை செய்தால் பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக மனையில் குடியேறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்த பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும் இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த புத்திர பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும் பிள்ளைகளால் ஆதரவு பெருகும் பிள்ளைகள் நன்றாக படிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.


துலாம் ராசி


  உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஆறுக்குடைய அவ யோக கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மறைவது மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கக்கூடிய அமைப்பாகும்.


  குரு பகவான் எட்டாம் இடத்தில் இருந்து கொண்டு தனது ஐந்தாம் பார்வையார் 12ஆம் இடத்தை பார்வை செய்வது வெளிநாடு செல்லக்கூடிய யோகம் வெளிநாட்டில் இருந்து பணவரவு, சுப செலவு செய்யக்கூடிய அமைப்பு போன்றவை உண்டாகும்.


 தனது சம சப்தம பார்வையால் இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் தான வரவு உண்டாகும் கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய மனிதராக மாறுவீர்கள் கல்வியில் உயர்வடைவீர்கள்  பொருள் தேடும் பொருட்டு குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த நீங்கள் குடும்பத்திற்கு வந்து  சேரக்கூடிய அமைப்பை உண்டாக்கும்.


   தனது ராசிக்கு  எட்டாம் இடத்தில் இருந்து கொண்டு தனது ஒன்பதாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்றவை உருவாகும் கல்வியில் உயர்வடைவீர்கள்.


விருச்சக ராசி


உங்கள் ராசிக்கு தன‌ மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு மிகுந்த யோகத்தை இந்த பெயர்ச்சி உங்களுக்கு வழங்க இருக்கிறது .கடந்த ஓர் ஆண்டுகளாக மறைந்திருந்து நல்ல பலனை தராத நிலையில் உள்ள இந்த குருபகவான் தற்பொழுது உங்களுக்கு ஏழாம் இடத்திற்கு வந்து மிகுந்த யோகத்தை அள்ளித்தர இருக்கிறார்.  இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து மற்றும் கௌரவம் போன்றவற்றில் உயர்வடையச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.


  உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தை அதாவது லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்வை செய்ய  இருப்பதால் தொழில் வரவு புதிய தொழில் தொடக்கம் இதுவரை தொழிலில் பிரச்சனைகளை சந்தித்த நீங்கள் அந்த தொழில் மூலம் லாபத்தை உயர்வை அடையக்கூடிய நேரமாகும்.


 உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை தனது ஒன்பதாவது பார்வையால் பார்வை செய்வதால் சகோதரர் வழியாக நிலவி வந்த பிரச்சினை விலகும்.சகோதரர்களால் ஆதரவு பெருகும். கீர்த்தி, புகழ் உண்டாகும்..


தனுசு ராசி


  உங்கள் ராசி அதிபதியாகவும் மற்றும் சுக ஸ்தான அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் மறைவதால் பெரிய அளவுக்கு நன்மையை இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு தரப் போவதில்லை..


குருபகவான் தனது ஐந்தாவது பார்வையால் உங்கள் ஜீவனஸ்தானத்தை பார்வை செய்வதால் தொழிலில் முன்னேற்றத்தை உங்களுக்கு கொடுக்கும் .புதிய தொழில் தொடங்குவார்கள் தொடங்கலாம்.


தனது ஒன்பதாவது பார்வையா தனஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்வை செய்வதால் தன வர உண்டாகும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சியும் பெருகும் .கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கல்வியில் உயிரடைவார்கள்.


மகர ராசி


 உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் 12 வது அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் உங்கள் ராசிக்கு திரிகோணத்தில் அமர்ந்து உங்கள் ராசியை தனது ஒன்பதாம் பார்வையால் பார்வை செய்வதால் மிகப்பெரிய ஏற்றங்களை நீங்கள் அடைவீர்கள் உங்களுக்கு கீர்த்தி, புகழ், அந்தஸ்து பெருகும் .நல்ல உடல்  ஆரோக்கியம் உண்டாகும்.


தனது ஐந்தாம் பார்வையால் பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடத்தை பார்வை செய்தால் உங்கள் தந்தைக்கு நல்ல முன்னேற்றங்கள் உருவாகும் தந்தை மூலமாக ஆதரவு கிடைக்கும் இதுவரை பிரிந்து இருந்த தந்தை உங்களிடம் வந்து சேர்வார்கள் உயர்நிலை ,மேல்நிலைக் கல்வியில் உயர்வடைவீர்கள். தனது சம சப்தம ஏழாம் இடப்பார்வையால் தனது லாப ஸ்தானத்தை பார்வை  செய்வதால் தான் மேற்கொண்ட தொழிலில் மிகுந்த லாபத்தையும் உயர்வையும் அடைவீர்கள்.


கும்பம் ராசி


      உங்கள் ராசிக்கு தன மற்றும் லாப அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் நின்று 8 12ஆம் இடத்தை தனது ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையால் பார்வை செய்ய இருப்பதால் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு செல்ல வேண்டும் ஆசையில் பலவாறு முயற்சி செய்து தோல்வி அடைந்திருப்பீர்கள் நிச்சயமாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களை தேடி வரும்.

உங்கள் வீட்டில் சுப செலவுகள் உங்களைத் தேடி வரும். ஆயுள் நீடிக்கும்.


தனது சம சப்தம பார்வையால் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தையும் பார்வை செய்வதால் தொழிலில் முன்னேற்ற அடைவீர்கள் புதிய தொழில் தொடங்கி அதன் மூலம் பெரிய லாபத்தை அடைவீர்கள்.


மீன ராசி 


 உங்கள் ராசிக்கு ராசி அதிபதியாகவும் மற்றும் ஜீவன அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சகோதரர்  மூலம் ஆதரவு பெருகும் .கீர்த்தி, புகழ், அந்தஸ்து அடைவீர்கள், தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இதுவரை உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே இருந்த பிணக்குகள் பிரச்சனைகள் நீங்கும். திருமணத்திற்காக காத்திருக்கக்கூடிய நபர்களுக்கு நல்ல மணம் அமையும் .


    குரு பகவான் தனது சம சப்தம பார்வையால் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்வதால் தந்தை மூலமாக ஆதரவு பெருகும்.தொழில் வருமானம் உண்டாகும் .மேல்நிலைக் கல்வியில் உயர்வு .நல்ல பாக்கியங்களையும் மற்றும் சுகங்களையும் அடையக்கூடிய யோகம் போன்றவை உருவாகும்.


   தனது ஒன்பதாவது பார்வையா லாப ஸ்தானத்தை பார்வை செய்வதால் தொழில் மூலம் ம் மிகுந்த லாபத்தையும் அடைவீர்கள் . இதுவரை மறு  திருமணத்திற்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மறு திருமணம் ஆகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

     097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்



சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சாதாரண மனிதனை சரித்திர சாதனை செய்ய தூண்டும் ஜோதிடம்

 "சாதாரண மனிதனை சரித்திர மனிதனாக்கும் தசா புக்தி "




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவன் விழுந்து விழுந்து படிச்சு நல்ல மார்க் எடுத்து இருப்பான். ஆனால் அவனால் போட்டி தேர்வில் எழுதி பாஸ் பண்ணி வேலைக்கு போக முடியாது. ஆனால் ஒரு சிலர் வந்து ஆவரேஜா, சுமாரா, நடுத்தரமா படிச்சிருக்கக்கூடிய மாணவனாக இருப்பான் போட்டி தேர்வு  நடைபெறும் காலத்துல கடுமையா உழைச்சு படிச்சு வேலைக்கு மேல போயிடுவான்.


அறிவாளி தோற்பதற்கும் ,கீழ்த்தரமா அல்லது  நடுத்தரமா உள்ளவன்  வெற்றி படியில் முன்னேறி செல்வதற்கும் அவர் ஜாதகத்தில் உள்ள தசா புத்திகளும் மற்றும் கிரக அமைப்புகளும் காரணம் ஆகும். சில நேரங்களில் கிரக அமைப்புகள் நன்றாக  இருந்தாலும் அந்த உரிய காலகட்டத்தில் நல்ல தசா அமைப்பு வராமல் இருப்பதும் இதற்கு காரணமாக அமைகிறது.


ஒரு சினிமா பாடல் கூட 

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே !

புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லையே !" என்று அழகாக பாடியிருப்பார்கள்


வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு நல்ல கிரக அமைப்புகளும் மற்றும் உரிய காலத்தில் சரியான தசை புக்தி நடப்பில் வந்த நிலையில் சமூகத்தில் உயரிய அமைப்பில் வரக்கூடிய வாய்ப்பானது அமைகிறது.


உதாரணமாக


   மீனம் லக்கினத்தில் பிறந்த ஒருவருக்கு லக்கனாதிபதி லக்கனத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருந்து கல்வியறிவு தரக்கூடிய ஸ்தானமான 2,4,5 ,9 ஸ்தானங்களும் மற்றும் அதிபதிகளும் நல்ல நிலையில் அமைந்துள்ளது. கல்விக்கு உரிய காரக. கிரகமான குரு  மற்றும் புதன் ஆட்சி உச்சம் பெற்று வலுப்பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் நன்றாக கல்வி பயின்றார்.ஆனால் அரசு வேலைக்கான போட்டி தேர்வு எழுதி வேலைக்கு வரக்கூடிய முக்கியமான காலகட்டத்தில் மீன லக்னத்திற்கு வரக்கூடாத தசை என்று சொல்லக்கூடிய சுக்கிரன் ( 3,8 க்கு உடைய )  மற்றும் சூரிய தசை ( 6 க்கு  உரிய தசைகள்) தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் அந்த காலகட்டத்தில் அவரால் அந்தப் போட்டி தேர்வில் எவ்வளவு தான் அறிவும் திறமையும் உடையவராக இருந்தாலும் அதில் வெற்றி பெற இயலவில்லை ஆனால் அதற்கு அடுத்த. பிறகு 45 வயதுக்கு மேல் வரக்கூடிய சந்திர தசையில் தான் அவரால்  நினைத்த வேலைக்கு போக முடியாமல் போனால் கூட ஆனால் அதே நேரத்தில் ஒரு அரசு வேலையை அவரால் அடைய இயன்றது.


இதே  மீன லக்கனத்தில் பிறந்த ஒருவருக்கு நல்ல கிரக அமைப்புகள் இருந்து தொடர்ந்து குரு ,சந்திர மற்றும் செவ்வாய் போன்ற தசைகள் வந்தால் அவர் அவர் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரியே வெற்றி பெற்று உயரிய பதவியில் அடைந்திருப்பார்.


  ஒருவர் எனதான் அறிவு, திறமை உழைப்பு எல்லாம் பெற்றிருந்தாலும் அந்த வாய்ப்பு வரக்கூடிய காலகட்டத்தில் அவருடைய ஜாதகத்தில் உரிய யோக தச அமைப்புகள் வந்தால் மட்டுமே அவரால் அந்த உழைப்பு ,முயற்சி மற்றும் திறமை போன்றவற்றை பயன்படுத்தி உயரிய எல்லையை அடைந்துவிட முடியும் அந்த உயரிய நிலையை அடைய அவருடைய தசா அமைப்புகளை மிக முக்கிய காரணமாக அமைகிறது.


ஒருவருக்கு நல்ல கிரக அமைப்புகள் இருந்து உகந்த  யோக தசை அமைப்புகள் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்த மனிதன்" சாதாரண மனிதராக இருந்தாலும் சமூகத்தில் சரித்திரம் மனிதனாக மாறுகிறார்".


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உங்கள் நிலையை காட்டும் கால கண்ணாடி ஜோதிடம்

 உங்கள் நிலையினை காட்டும் கால கண்ணாடி ஜாதகமா ?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவரிடம் முதலில் அவருடைய ஜாதகத்தை சரியான முறையில் எழுதப்பட்டு இருக்கிறதா ? என்பதை கணித்து பார்த்து அதன் பிறகு பலன் சொல்ல ஆரம்பிப்பேன்.


  பிறகு அந்த ஜாதகத்தை லக்கன ,ராசி மற்றும் அதிபதியையும்‌ , ஏனைய கிரக பார்வை சேர்க்கை அமைப்புகளையும், கோச்சார பலன்களையும் மற்றும் நடக்கக்கூடிய தசா புத்திகளையும் வைத்துக்கொண்டு அந்த ஜாதகம் யோக ஜாதகமா? அல்லது கஷ்டமான அவ யோகத்தை தரக்கூடிய ஜாதகமா? அல்லது தற்போது நடப்பில் கஷ்டத்தை தரக்கூடிய ஜாதகமாக இருந்தாலும் அதன் பின்னர் யோகத்தை தரக்கூடிய ஜாதகமாக இருக்கிறதா ? இப்படி எல்லாம் இந்த ஜாதகத்தை பார்த்த உடனே தெரிந்து விடும்.


  பெரும்பாலான நபர்கள் கஷ்டமான சூழ்நிலையில் தான் ஜாதகத்தை தேடி பிடித்து ஜாதகம் பார்க்க வருகிறார்கள்.இவர்களது ஜாதகத்தை பார்த்த உடனே தெரிந்து விடும் . இவர்கள் ஜாதகம் பார்க்க வரக்கூடிய காலகட்டங்களில் அஷ்டம சனி, ஏழரை சனி இது போன்ற அமைப்பு கோச்சார ரீதியாக செயல்படும். தசா புத்திகளும் அவ யோக தசை அமைப்புகளில் இருக்கும் . அதாவது மேஷ, விருச்ச லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தால் அவ யோக தசையாக புதன் திசை நடப்பில் இருக்கக்கூடிய கால கட்டங்களையும், ரிஷபம், துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அவ யோக தசையாக குரு தசை நடப்பில் இருக்கக்கூடிய காலங்களிலும் ,மிதுனம், கன்னியாக இருந்தால் செவ்வாய் தசை நடப்பில் உள்ள காலங்களிலோ, தனுசு ,மீனமாக இருந்தால் சுக்கிர தசை நடப்பில் உள்ள காலங்களிலும் , மகர லக்கினத்திற்கு சூரிய தசையும் கும்ப லக்னத்திற்கு சந்திர தசையும் இது போன்ற தசைகள் ஏதாவது ஒரு தசை அவர்களுக்கு நடப்பிலே இருக்கும். அப்படி இருக்கும் போது கோச்சார அடிப்படையிலும் மற்றும் தசாபுத்தி இரண்டு சரியில்லாத நேரத்துல மிகப்பெரிய வேதனைகளை கஷ்டங்களை அவர்கள் அனுபவித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் இந்த பிரச்சனையிலிருந்து எதிர்நீச்சல் போட்டு இந்த குறிப்பிட்ட கால கட்டத்தை தாண்டி வந்து விடுவார்களா ? என்பதை லக்கனாதிபதி உடைய வலிமையும் மற்றும் சுப தன்மையும் முடிவு செய்கிறது.


     இதை அவர் குடும்பத்தில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தை பார்க்கும் போதும் ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பேருக்கு ஏழரை அஷ்டம சனி நடப்பில இருக்கக்கூடிய காலகட்டத்தில் பார்க்கும்போது நிச்சயமாக அவங்க குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பார்கள்.


      அவர்களுடைய இந்த நிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு அந்த நிலையில் உள்ள கஷ்டத்தை சொல்லி அதே நேரத்துல அவர்கள் மீண்டும் ரொம்ப சோர்ந்து விடாமல் இருப்பதற்குரிய சில தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய உளவியல் அமைப்பான சில டிப்ஸை கொடுத்து தான் அனுப்ப வேண்டியதாக உள்ளது. கஷ்டங்களிலிருந்து விடுபட உரிய பரிகார பூஜை அமைப்புகளை எளிய மற்றும் குறைந்த செலவில் பரிகாரம் செய்யும்படியாக சொல்லி அனுப்பி அதன் மூலமாக அவர்கள் அந்த தீர்வை பெற்று அதிலிருந்து விடுபட்டவுடன் நல்ல தசை நான் சொல்லக்கூடிய காலங்களில் வந்த பிறகு மீண்டும் வந்து நம்மை சந்தித்து போகும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


  பெரும்பாலும் கஷ்டபடக்கூடிய சாதகங்களை பார்க்கும் பொழுது அவர்கள் சாதகத்தில் லக்னத்தோடும் ராசியோடும் சனி ,செவ்வாய், ராகு, கேது பார்வை சேர்க்கை போன்ற அமைப்புகளில் தொடர்பு பெற்று இருக்கும். யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலவீனமடைந்து அவயோகத்தை தரக்கூடிய கிரகங்கள் வலிமை படைத்த நிலையிலும் இருக்கும். அவர்களுக்கு பிறந்ததிலிருந்து வரக்கூடிய மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்யக்கூடிய தசா புத்திகளும் பெரும்பாலும் சனி பார்த்த கிரகத்தின் தசையாகவோ அல்லது ஆறு‌ அல்லது எட்டுக்கு உரிய அவ யோக தசையாகவோ இதேபோல குரு அணியை சேர்ந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த தசாபுத்திகளும் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் இருக்கும். சிலர் சுக்கிர அணியை சேர்ந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு குரு அணியைச் சேர்ந்த தசா புத்திகள் தொடர்ந்து நடப்பிலிருக்கும்.


  யோக அமைப்பில் பிறந்தவருடைய ஜாதகத்தை பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம். லக்கனம் ,ராசி மற்றும் அதன் அதிபதிகளை குரு பகவான் அல்லது இயற்கை சுப கிரகமான சுக்கிரன், தனித்த புதன் வளர்பிறைச்சந்திரன் போன்றவை பார்வை, சேர்க்கை முறையில் தொடர்பு பெற்றிருக்கும் பௌர்ணமி யோகத்தில் பிறந்திருப்பார்கள். லக்கினத்திற்கு யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு வலிமை பெற்று சுப கிரகத்தின் தொடர்பு பெற்ற நிலையில் இருக்கும். அவ யோகத்தை தரக்கூடிய பகை கிரகங்கள் மறைவிடங்களில் அல்லது பலம் இழந்த நிலையினை பெற்றிருக்கும். யோக கிரகங்கள் பலம் பெற்று அவயோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலம் இழந்தும் அதேபோல தொடர்ந்து யோகத்தை தரக்கூடிய தசைகளே நடப்பில் இருக்கும்.

பௌர்ணமி சந்திரன் அல்லது பௌர்ணமியை நெருங்கும் அல்லது விட்டு விலகும் சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டில் இயற்கை சுப கிரகங்கள் இருந்து சந்திர அதி யோகம் பெறக்கூடிய ஜாதகத்தினை பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் இருப்பார்கள்.


 இது போன்ற யோகத்தை தரக்கூடிய நபர்கள் வரும்பொழுது அவர்களுக்கு என்னென்ன தசையில் எது போன்ற தொழில்கள் அல்லது எது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக அவர்களுக்கு புரியும்படி விளக்கி அனுப்புவோம். அதாவது நாம் சொல்லும்படியே அவர்கள் அந்த தொழிலை அல்லது அந்த படிப்பை அல்லது செயலை செய்து அதன் மூலமாக வெற்றியை அடைந்து திரும்ப வந்து நம்மை பழம், தட்டு மற்றும் உரிய சன்மானத்தோடு திரும்ப வந்து சந்திக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)





அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நாக சாபத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் அதற்கு உரிய பரிகாரம்

 நாக சாபத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் அதற்குரிய பரிகாரம்.




.


செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   கீழ்க்கண்ட கோள் அமைப்பு உடையவர்கள் நாக சாபத்தால் குழந்தை பேரு இல்லாதவர்கள்  ஆகும்.சிலருக்கு குழந்தை இருந்தும் ஊனம் ,சுய நினைவு இன்மை மற்றும் அற்ப ஆயுள் போன்ற குறைபாடுகள் இருக்கும்.


              1) லக்கினத்தில் ராகு இருந்து செவ்வாயின் பார்வையை பெறுவது அல்லது செவ்வாயில் வீடுகளான மேஷம், விருச்சகத்தில் ராகு பகவான் இருப்பது.


            2) புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பது அல்லது புத்திர ஸ்தான அதிபதி ராகுவுடன் சேர , 

சனி பகவான் ஐந்தில் இருக்க பதினொன்றில்  சந்திரன்  இருந்து  சனியை பார்ப்பது.


             3) புத்திர காரகன் குருபகவான் லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்தில் அமர்ந்து ராகுவுடன் சேர லக்கனாதிபதி உடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது .


             4) குரு பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்க, ராகுவும் லக்ன அபதியும் சேர்ந்து எங்கு வேண்டுமானாலும் இருக்க ஐந்தில் சந்திரன் இருப்பது புத்திர தோஷம் ஆகும்.


         5) கடகம், தனுசு லக்கினமாகி ஐந்தாம் வீடான செவ்வாய் வீட்டில் ராகு இருக்கக்கூடியது . புதன் சனியால் பார்க்கப்படுவது புத்திர தோஷம் ஆகும்.


        6) ஐந்தாம் இடத்தில் ராகு ,குரு ,புதன் ,சனி செவ்வாய் சூரியன் ஆகியவை இருப்பது புத்திர தோஷத்தை கொடுக்கும்.


      7) புத்திர ஸ்தானமான ஐந்தாம் இட அதிபதி , சத்ரு ஸ்தான அதிபதியான ஆறாவது அதிபர் உடன் இணைந்து நற்கோள்கள் பார்க்காமல் நின்றால் கொடிய பகைவரின் சாபத்தால் சாதகற்கு பிள்ளை பாக்கியம் இல்லை. 


      8)  புத்திர ஸ்தான அதிபதி ஆறாம் இடத்தில்  சுப கோள்கள் பார்க்காமல் தீயவை மட்டும் பார்க்கப்படுமானால் தெய்வ சாபத்தால் ஆண் பிள்ளை பிறக்காது.


        9) குரு பகவானும், செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்க, 

 ராகுவும் லக்னாதிபதியும் சேர்ந்து எங்கு வேண்டுமானாலும் இருக்க மற்றும் ஐந்தில் சந்திரன் இருப்பது புத்திர தோஷம்.


         10 ). புத்திர ஸ்தானமான ஐந்தில் ராகு, குரு புதன் ,சனி, ,செவ்வாய் மற்றும் சூரியன்  இருக்கக்கூடாது.அவ்வாறு இருந்து சுப தன்மை அடையவில்லை எனில் புத்திர தோஷம் ஆகும்


    1 1  ) புத்திர ஸ்தானாதிபதி ,சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இட அதிபதியுடன் இணைந்து நற்கோள்கள் பார்க்காமல் நின்றால் கொடிய பகைவரின் சாபத்தால் புத்திரம் இல்லை.  


  12 ) புத்திர  ஸ்தான  அதிபதி ஆறில் சுப கோள்  பார்க்காமல் பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு ,கேது மற்றும் தேய்பிறை சந்திரன் பார்வை மற்றும் சேர்க்கைகள்  முறையில் தொடர்பு கொள்வது தெய்வ  சாபத்தால் சாதகருக்கு ஆண் பிள்ளை இல்லை.


  நாக சாபத்துக்கு உள்ளாகி புத்திர பாக்கியம் தடைப்படக்கூடிய சாதக அமைப்பை பெற்றவர்கள் கீழ்கண்ட பரிகாரத்தின் மூலமாக சர்ப்ப சாந்தி செய்து புத்திர பாக்கியத்தை பெறலாம்.


    1) கணவன் மனைவி இருவரும் முழு விரதம் இருந்து பிள்ளையார் உள்ள அரச மர குளக்கரையில் குளித்து அந்த அரச மரத்தை ஐந்து முறை வலம் வந்து அவ்வாறு வரும்பொழுது விநாயகர் ஸ்துதி செய்து குழந்தை பாக்கியத்தை வேண்டி பிறகு ஒரு ஐந்து ஏழு அல்லது ஒன்பது என்ற வகையில் சுமங்கலி பெண்களுக்கு பூ ,பொட்டு, மஞ்சள், குங்குமம்  மற்றும் வஸ்திரம் அடங்கிய பொருட்களை ஒரு தட்டில் வைத்து அந்த பெண்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற அந்த புத்திர தோஷம் விலகும் அந்த சர்ப்ப சாந்தி பெரும்.


  2). ராகு காலத்தில் ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம், பேரையூர், ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளகஸ்தி மற்றும் திருப்பாம்புரம் போன்ற ஸ்தலங்களில் ஏதாவது ஒரு ஸ்தலம் சென்று வெள்ளியில் நாகப்படமடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வரவும் .அவ்வாறு  செய்து வந்தால் சர்ப்ப சாந்தி நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



       

அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Sunday, 22 September 2024

வாழ்க்கையை வழி நடத்தும் ஜோதிடம்

 வாழ்க்கையை வழி நடத்தும் ஜோதிடம் 



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்கள் பல நிறைந்தது.அமைதியாக ஆரவாரம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிற வாழ்க்கையில் ஏதாவது ஒரு எதிர்பாராத சம்பவங்கள் அப்படியே வாழ்வின் திசையையே மாற்றி சென்று விடுவது உண்டு.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா கூறியது போல


"வானம் எப்பொழுதும் 

நீல நிறமாக இருக்கும் என்றோ!

 பாதை முழுவதும் பூக்களே 

பூத்திருக்கும் என்றோ !

இறைவன் உங்களுக்கு 

வாக்கு தரவில்லை! *


    ஒரு மானிட வாழ்வின் திசையே மாற்றிச் செல்லக்கூடிய உருக்குலைக்க செய்யும் அல்லது உயர்வு அடைய செய்யும் ஒரு அமைப்பு தசா புத்தியை சார்ந்து அமைகிறது. தசை மற்றும்  புத்தியே மனித வாழ்வை வழிநடத்தி செல்லும் மனித வாழ்வின் வாழ்வியல் உண்மைகளை அளவிட இந்த தசா புத்திகள் பெரிதும் உதவுகிறது.


  ஒரு மனித வாழ்வின் வாழ்வியல் சம்பவங்களை சுட்டிக் காட்டுவது அல்லது வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது லக்கனத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தசா புத்திகள் ஆகும்.


        உதாரணமாக மீனம்  லக்கனத்தில் பிறந்த ஒருவருக்கு சுக்கிர தசை மற்றும் சூரிய தசை ஆகிய இரண்டு தசைகள் குறிப்பாக வாலிப வயதில் வரும் பொழுது அது அவருடைய வாழ்வின் நிலையை மாற்றி அமைத்து விடும் . அவர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அல்லது எவ்வளவு செயல்கள் செய்ய முயன்றாலும் அது அவரை உயர்வடைய செய்ய விடாமல் பின்னோக்கியே செல்ல வைக்கும்.அவர் அதிலிருந்து போராடி வெற்றி பெற வேண்டும் எனில் அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி ஆனது  வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


         அதே நேரத்தில் துலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு உரிய வாலிப வயதில் சனி, புதன், சுக்கிர திசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்ற நிலையில் இந்த மூன்று கிரகங்களும் குரு பார்வை அல்லது சுப கிரகங்கள் தொடர்பை பெற்ற நிலையில் அவர்கள் குப்பையில் கிடந்தாலும் கோபுரத்தில் உச்சியில் கொண்டு சேர்க்கும் அவர் சகல சௌபாக்கிய வசதிகளையும் அனுபவிக்க கூடிய தன்மையும் இருப்பார்.கிட்டதட்ட அறுபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து யோக தசையையே சந்திக்க கூடிய மனிதனாக இருப்பதால்  இந்த வகையான ஜாதகங்கள் யோகம் தரும் ஜாதக வரிசையில் அமைகிறது.


      பொதுவாக ஒருவருக்கு ஆறு மற்றும் எட்டுக்கு உடைய தசைகள் வாழ்வில் வரக்கூடிய காலங்களில் மிகப்பெரிய தொல்லைகளை அல்லது கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது.


      சில நேரங்களில் யோக தசைகளாக இருந்தாலும் அதை சனி ,செவ்வாய் மற்றும் ராகு, கேது போன்ற கிரகங்களுடைய சேர்க்கை அல்லது பார்வையை பெற்ற நிலையில் அவ யோகத்தை தரக்கூடிய அமைப்பாக மாறிவிடுகிறது.


       சில நேரங்களில் பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் போன்ற  கிரகங்கள் நேரடியாக உச்சம்  ,ஆட்சி போன்ற  நிலைகளில் நேர் வலு  பெறாமல் மறைமுகமான முறையில் வலுப்பெற்று இருக்கும்போது அதற்குரிய யோகத்தை அதாவது ஆதிபத்திய மற்றும் காரக பலனை அந்த  கிரகங்கள் சிறப்பாக தந்து விடும்.


        மீனம்  லக்னத்திற்கு தன மற்றும் பாக்கிய அதிபதியான செவ்வாய் பகவான் கடகத்தில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த வீட்டிற்குரிய செவ்வாய் லக்னத்தில் இருந்து சம  சப்தமாக  கன்னி வீட்டில் இருக்கும் குருவின் பார்வையை பெறும் பொழுது வீடு கொடுத்தவன்  வலிமை பெற்ற நிலையிலும் மற்றும் செவ்வாய் பகவான் புனர்பூசம் நாலாம் பாதத்தில் இருப்பதால் ராசி ,அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்து வர்க்கோத்தமம் பலமும் பெறுவதாலும் இந்த ஜாதகி டாக்டர் படிப்பு படித்து மருத்துவராக வேலை செய்கிறார் எனவே இங்கு மேம்போக்காக பார்க்கும்போது செவ்வாய் நீசம் போன்ற வகையில் பலமிழந்து இருந்தாலும் மறைமுகமான முறையில் வலுப்பெற்று அதற்குரிய காரக பலனை சிறப்பாக தந்து விட்டது.


மகர லக்கினத்திற்கு குரு பகவான் லக்னத்தில் நீசம் பெற்றே இருந்தாலும் அதே போல மீன லக்கினத்திற்கு புதன் பகவான் லக்னத்தில் நீசம் பெற்று இருந்தாலும் இவ்விரு கிரகங்களும் லக்னத்தில் திக்பலம்  என்பதால் அவை  வலிமை பெற்ற கிரகமாக கருதப்பட வேண்டும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

‌‌. 097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     ஸM.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சொத்து சேரும் யோகம்

          சொத்து சேரும் யோகம் 




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை சிலர் பணமாகவோ சிலர் பொருளாகவோ உடைமைகளை சேர்த்து வைக்கவே ஆசைப்படுகிறார்கள் .இவ்வாறு சேர்த்து வைக்கக்கூடிய ஆசை இருந்தால் மட்டும் போதுமா  ? அதற்கான ஜாதக அமைப்பு அவருடைய ஜாதக கட்டத்தில் வேண்டும் அல்லவா ? அதற்கான ஜாதகம் அமைப்பை என்னவென்று பார்ப்பதே இந்த பதிவில் தலையாய நோக்கமாகும்.


 ஒருவர் பூமி வாங்கி சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவருடைய ஜாதகத்தில் நான்காம் இடம் ,அதனுடைய அதிபதி   மற்றும் பூமி காரகன் செவ்வாய் ஆகிய மூன்றும் வலிமை அடைந்து இருக்க வேண்டும். லக்கனாதிபதியின்  வலிமையும் மிகவும் முக்கியமாகும். அவ்வாறு வலிமை அடைந்த கிரகத்தை அல்லது ஸ்தானத்தை இயற்கை சுப கிரகமான  குரு பகவான் அல்லது  இயற்கை சுப கிரகங்களான புதன் , சுக்கிரன் வளர்பிறை சந்திரன் ஆகிய  கிரகங்கள் உடைய பார்வை. அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்


 இவ்வாறு நான்காம் இடம் அதிபதி செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டும் போதுமா அதற்குரிய தசா புத்திகள் அல்லது யோக தசைகள் நடப்பில் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் தான் அந்த யோகத்தை ஒருவர் முழுவதும் அனுபவிக்க முடியும் என்னதான் லக்கனாதிபதி வலிமை இன்றி அதற்குரிய தசா புத்திகள் வரவில்லை என்றால் நான்காம் இடம் , அதன் அதிபதி மற்றும் தசெவ்வாய் வலுப்பற்று இருந்தாலும் பூமி வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் அற்று போய்விடும்.


ஒருவர் நிறைய வண்டி வாகனங்களை வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் எனப் பார்த்தால் உயிர் ஜீவ சந்துகளை ஏற்றக்கூடிய கார், பேருந்து, வேன் , டாட்டா சுமோ. போன்றவை நான்காவது இடம் அதன் அதிபதி மற்றும் வாகன காரகன் சுக்கிரன் ஆகியவற்றின் வலிமையை அவசியம்  ஆராய்ந்து பார்க்க வேண்டும்


   சனி பகவான் சுபத்துவமான நிலையில் வலுப்பெற்று இருந்தால் JCB  , போன்ற கனரக வாகனங்கள் வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.


  நான்காம் இடத்தில் எத்தனை கிரகங்கள் தொடர்பு கொள்கின்றதோ அந்த கிரக எண்ணிக்கை களுக்கு ஏற்ப  சொந்த வீடு அமையும்.வாடகைக்கு வீடு கட்டி விடும் யோகம் உண்டாகும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் சொகுசு வாழ்க்கையையும் மற்றும்  சொத்து சேரக்கூடிய அமைப்பையும் தரக்கூடிய ஒரே காரக கிரகம் சுக்கிரன் பகவான் ஆவார். சுக்கிர பகவான் நன்முறையில் வலுப்பெற்று சுபத்துவமான நிலையில் அமைந்து விட்டால் வண்டி ,வாகனம், ஆடம்பரமான பங்களா, புதுவிதமான மாடல் கார்கள் வாங்கி சேர்க்கக்கூடிய யோகம், உடல் முழுவதும் நகைகளை அணியக்கூடிய யோகம் போன்ற அனைத்தும் ஜாதகருக்கு உண்டாகும்.


 நான்காம் இடம் அதன் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்றும் வலிமை அடைந்து சுப தன்மை அடைந்து யோக தசைகள் நடப்பில் இருந்தால் ஹோட்டல், ட்ரான்ஸ்போர்ட் ,நகைக்கடை ,வண்டி வாகனம் மூலம்  வருமானம், டிராவல்ஸ்,நடனம், சினிமா ,கணிப்பொறி அழகியல் சாதனங்கள் மற்றும் பல சரக்கு கடை போன்றவற்றை தொழிலாக செய்து அதன் மூலம் பெரும் தனம். ஈட்ட இயலும்.


ஒரு வழியாகத்தில் புதன் பகவான் வலுப்பெற்று சுவதன்மையடைந்து தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் கணிப்பொறி கணிதம் எடிட்டிங் ,சோசியல் மீடியா பயன்படுத்தி சம்பாதிக்கிறது ,புள்ளி விவரங்களை சேகரித்தல்,இசை , பேச்சு, இலக்கிய உரை ,மேடை பேச்சாளர்,ஆன்மீக உரை போன்றவற்றின் வாயிலாக பெரும் தனம் சேர்க்கும் யோகம் உண்டாகும்.


ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல முறையில் வலிமை  அடைந்து சுப தன்மை அடைந்து தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் பேச்சு ,ஆசிரியர் தொழில் மூலம் ,நகைக்கடை மூலம் மற்றும் நீதிபதியாக ,வழக்கறிஞராக நீதித் துறை மூலம், நிதி துறையின் மூலம் பெரும் தனம் ஈட்டும் யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான் நன்முறையில் வலுப்பெற்று சுபதன்மையடைந்து தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் அரசியல், அரசாங்கம் தலைமை பதவி போன்றவற்றின் மூலமாக பெரும்பாலும் சொத்து சேர்க்கக்கூடிய யோகம் உண்டாகும்.


பொதுவாக மகா தன யோகம் அடைய ஒரு ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை அடைந்து தனம் ,பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்கள் அதன் அதிபதிகள் உச்சம் ஆட்சி போன்ற நிலையில் வலுப்பெற்று சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு தன காரகன் குருவும் இவர்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில்  மிகப்பெரிய கோடீஸ்வர யோகம் ஜாதகருக்கு உண்டாகும். இந்த யோகம் பெற தனம், பாக்கியம் மற்றும் லாப அதிபதிகள் ஒன்றுக்கொன்று பார்வை ,சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை மூலம் தொடர்பு கொண்டு சுப கிரகங்களுடைய பார்வை  அல்லது சேர்க்கையை பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய தசைகளும் நடப்பில் இருந்தால் நிச்சயமாக பெரும் தனம். ஈட்டி அதன் மூலமாக அவர்களுக்கு சொத்து சேரக்கூடிய யோகம் ஜாதகருக்கு உண்டாகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


    



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மனித வாழ்வியலில் நவ கிரகங்களின் பங்கு

 மனித வாழ்வியலில் நவ கிரகங்களின் பங்கு.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  பல்லாயிரம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் வான் வீதியில் எங்கே இருக்கும் கிரகங்கள் மனித வாழ்வினை வழி நடத்தி செல்கின்றது.


 இந்த கிரகங்களின் மீது ஏற்படும் மாற்றம் மனித வாழ்வில் ஏற்ற, இறக்கங்களை தந்து வழி  நடத்தி செல்கிறது என்ற உண்மையை அறிவியல் அறிந்த அனைவரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.


  ஒன்பது கிரகங்கள்  இருபத்தி ஏழு  நட்சத்திரங்கள் உடைய கால் வாங்கி பன்னிரெண்டு  ராசிகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில்  சுற்றி வருகிறது.


     சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால்  நாட்கள் வீதம் தங்கி வாசம் செய்கிறது. ஒரு ராசியில் மிகக் குறைந்த கால அளவு இருக்கக்கூடிய ஒரே கிரகம் சந்திர பகவான் மட்டுமே.. எனவே இதனை நாள் கிரகம் என்று அழைக்கிறோம் .


     இதன் ஒளி  அளவை பொறுத்து வளர்பிறை சந்திரன் மற்றும் தேய்பிறை சந்திரன் என்று அழைக்கப்படுகிறது.  வளர்பிறை சந்திரன் இயற்கை சுப கிரகமாகவும்  மற்றும் தேய்பிறை சந்திரனாக இருந்தால் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது.


.சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரு ராசியை ஒரு மாத கால இடைவெளியில் 12 ராசிகளையும் சுற்றி வருகிறது .எனவே இதனை மாதக்கிரகம் என்று அழைக்கிறோம். இவை மட்டுமில்லாமல் சூரியனை ஒட்டியே புதனும் சுக்கிரனும் சுற்றி வருவதால் புதன் சுக்கிரன்  ஆகிய இரு கிரகங்களையும் உள்வட்ட கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது .


    புதன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிக்குள் சுற்றி வருகிறது.சுக்கிர பகவான் சூரியன் உடனோ அல்லது முன் பின் இரண்டு ராசிகளுக்குள்ளேயே சுற்றி வருகிறது.


முக்கால் பாவரான செவ்வாய் பகவான் ஒரு ராசியில்  45 நாட்கள் சுற்றி வருகிறது. .எனவே இதுவும் மாத கிரக வரிசையில் சேரும்.


    குருபகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் வீதமாகவும், நிழல்கிரகமான ராகு மற்றும் கேதுக்கள் ஒரு ராசியில் ஒன்றரை  ஆண்டுகளும் அதாவது 18 மாதங்களும் வாசம் செய்கிறது. ஒரு ராசியிலே அதிக ஆண்டு சுழலக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான் ஆகும் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கும். எனவே குரு பகவான் ராகு , கேது பகவான் மற்றும் சனி பகவான் ஆகியவற்றை ஆண்டு கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


  நவகிரகங்கள் தங்களது கால அளவுக்கு ஏற்றார் போல 12 ராசிகளையும் சுற்றி வருகிறது. இதில் நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவை தவிர மற்ற எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகரக்கூடிய தன்மையை பெற்றுள்ளது. நிழல் கிரகமான ராகு ,கேது மட்டுமே பின்னோக்கி நகரும் தன்மை பெற்று இருப்பதால் இவற்றிற்கு வக்கிரகதி என்பது கிடையாது.


 சூரியனைச் சுற்றியே புதனும் சுக்கிரனும் சுற்றி வருவதால் சூரியனுக்கு அருகில் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட பாகை அளவில் வக்கிரகதி அடைகிறது . குரு செவ்வாய் புதன் சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் பஞ்ச மகா கிரகங்கள் எனப்படும். பஞ்ச மகா கிரகங்களின் சனி செவ்வாய் குரு பகவான்  சூரியன் இருக்கும் வீட்டுக்கு ஐந்தாம் வீட்டில் வக்கிர கதி ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர கதி நிவர்த்தி அடைகிறது.


  சூரியன் பகவானை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள்ளாக அதாவது 8,11,13 ,15 மற்றும் 17 பாகை பாகை அளவில் சுக்கிரன், புதன்,குரு ,சனி மற்றும் செவ்வாய் நெருக்கமாக நெருங்கும் பொழுது சூரிய பகவானால் அஸ்தங்கம் அடைகிறது.


 அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் தனது பலத்தை சூரிய பகவானிடம்  இழக்கிறது. சூரியன் பகவானால் அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் உடைய பலனை சூரியன் தனது தசையில் எடுத்து செய்கிறது.


 எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தை பார்வை செய்கிறது .இதில் சனி ,செவ்வாய் மற்றும் குரு பகவானுக்கு மற்றும் சிறப்பு பார்வை உண்டு குரு பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்கிறது. சனி பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து மூன்று மற்றும் பத்தாம் இடத்தையும் பார்வை செய்கிறது .செவ்வாய் பகவான் ஏழாம் இடத்தை  தவிர்த்து கூடுதலாக நான்கு மற்றும் எட்டாம் இடத்தையும் பார்வை செய்கிறது.


சில நேரங்களில் கிரகங்கள் பின்னோக்கி நகர்வது போல் தெரிவதை வக்ரகதி என்றும் அதேபோல முன்னோக்கி நகர்வது போல் தெரிவதை அதிசாரம் என்று அழைக்கிறோம். பொதுவா கிரகங்கள் பின்னோக்கி நகர்வதைப் போலத்தான் தெரியும் எப்படி சூரியன் உதிப்பதும் ,மறைவதும் இல்லை புவி சுழற்சியினால் அவை உதிப்பது போலவும்  ‌மற்றும் மறைவது போலவும் தெரிகிறது . இதனால் இரவு மற்றும் பகல் போன்ற கால மாற்றம் உருவாகிறது.


 கிரகங்கள் உச்சம் ,ஆட்சி மூலதிரி கோணம், நட்பு போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்றாலும் நல்ல பலனை தந்து விடும் என்று அறுதியிட்டு கூற முடியாது.பாவ கிரகங்கள் உச்சம் ஆட்சி போன்ற நேர் வலு பெற்று நின்றால் நல்ல பலனை தந்து விடுவதில்லை.மாறாக  ஸ்தான வலிமையை இழந்து திக் பலம் பெற்ற நிலையில் இருந்தாலும் அல்லது இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் அதன் தசையில் நல்ல பலனை தந்து விடுகிறது.


உதாரணமாக துலா லக்னத்திற்கு தன அதிபதியான செவ்வாய் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று இருப்பதை விட பத்தாம் இடத்தில் நீசம் பெற்று அதே நேரத்தில் திக்பலம் பெற்று நிற்கும்போது அந்த தசையில் மிகுந்த தனயோகத்தை ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.


நன்றி.


செல் & வாட்ஸ் அப் &. கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்




 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் தரும் பலன்கள்

 மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் தரும் பலன்கள் 





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவர் ஜாதகத்தில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் என்பது கேந்திரங்களிலும் வராது அதேபோல கோணத்திலும் வராது.மறைவிட ஸ்தானமாகவும் கருதி விட இயலாது.ஆனால் இதனை உப ஜெய ஸ்தானம் என்று அழைக்கலாம்.மூன்று ,ஆறு , பதினொன்றாம் இடம் உப ஜெய ஸ்தானம் ஆகும்.


 இந்த ஸ்தானத்தில் லக்கன அவ யோகராக இருந்தாலும் அல்லது இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் நட்பு நிலையில் நின்றால் அதன் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளி தரக்கூடிய ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.


 மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் ஒரு கிரகம் நிற்கும் போது பெரும்பாலும் லக்கன நட்பு கிரக சாரத்திலே நிற்க கூடிய நிலையில் இருப்பதால் அந்த கிரகம் அதன் தசையில் யோகத்தை சாதகருக்கு அள்ளி வழங்கக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும்.


 மூன்றாம் இடம் ஒரு மறைவிட ஸ்தானமாக இருந்தாலும் அது ஜாதகருக்கு கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து போன்றவற்றை அள்ளித் தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படுகிறது.

உங்களுடைய பேச்சாற்றல் ,எழுத்து திறமை ,இசையில் நாட்டம் ஃ,கற்பனை உணர்வு ,நல்ல வழியில் கற்பனை அல்லது கெட்ட வழியான கற்பனை‌ மற்றும் காம வீரிய தன்மை போன்றவை அறிய உதவுகிறது.


இளைய சகோதரன் பற்றி அறிய உதவும் ஸ்தானமாகும்.சகோதர காரகன் ஆக செவ்வாய் பகவான் செயல்படுகிறது.


 இதேபோல் பதினொன்றாம் இடத்தை லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மகா தன யோகத்தை வழங்க கூடிய ஸ்தானங்களில் லாப ஸ்தானமும் ஒன்றாகும் . லாப ஸ்தானத்தில் நிற்கக்கூடிய கிரகங்கள் அதன் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும் . 


     இந்த இடம். மூலமாக மூத்த சகோதரன் மற்றும் இளையதாரம் போன்றவற்றை அறிய உதவுகிறது ஒருவருக்கு இரண்டாம் தாரம் உருவாகுவதற்குரிய அமைப்பு இந்த பதினொன்றாம் இடத்தின் வலிமையை பொருத்து அமைகிறது ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடம் கெட்டு லாப ஸ்தானமான பதினொன்றாம். இடம் வலிமை அடைந்திருந்தால்

 மறு தார அமைப்பு உருவாகும்.


  மூன்று மற்றும் பதினொன்றாம் இட அதிபதிகள் சேர்க்கை பெற்று நின்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அல்லது தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நின்றாலும் அதன் தசையில் ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை கொடுக்கும்.


   மூன்றாம் இடத்தின் அதிபதி இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் சாதகர் குன்றிலிட்ட விளக்கு போல் "சமூகத்தில் உயர்ந்த புகழ் பெற்ற அந்தஸ்தை பெற்று விலகுவார்.


 ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் எந்தவித பாவ கிரகமும் இல்லாமல் மூன்றாம் இட அதிபதியும் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட நிலையில் சகோதரர் காரகன் செவ்வாயும் வலிமை அடைந்து இருந்தால் அதாவது சுபத்துவம் பெற்ற நிலையில் இருந்தால் உடன் பிறந்த சகோதரர்களால் பெரிய ஆதரவு உண்டாகும்.


    மூன்றாம் இடம் வலிமை அடைந்து சுப தன்மை அடைந்த நிலையில் நல்ல பேச்சாற்றல், கற்பனை திறன், எழுத்து உலகில் சாதிக்கக்கூடிய தன்மை, இசையில் ஆர்வம், படைப்பாற்றல் போன்றவை சாதகருக்கு மிகுந்து காணப்படும் அதன் வழியாக கீர்த்தியும் புகழும் அடையக்கூடிய யோகத்தை உரிய யோக தசை அமைப்பில் தரும்.


மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் பெரிய அளவில் அதன் தசை காலங்களில் தீமையை தந்து விடுவதில்லை .ஏனெனில் அவைப் பெற்ற நட்சத்திர சாரம் பெரும்பாலும் லக்கன யோகரின் நட்சத்திரசாரமாக இருக்கக்கூடிய நிலையில் இருக்கும்.


நன்றி.

  

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

       



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.