Monday, 23 September 2024

சாதாரண மனிதனை சரித்திர சாதனை செய்ய தூண்டும் ஜோதிடம்

 "சாதாரண மனிதனை சரித்திர மனிதனாக்கும் தசா புக்தி "




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவன் விழுந்து விழுந்து படிச்சு நல்ல மார்க் எடுத்து இருப்பான். ஆனால் அவனால் போட்டி தேர்வில் எழுதி பாஸ் பண்ணி வேலைக்கு போக முடியாது. ஆனால் ஒரு சிலர் வந்து ஆவரேஜா, சுமாரா, நடுத்தரமா படிச்சிருக்கக்கூடிய மாணவனாக இருப்பான் போட்டி தேர்வு  நடைபெறும் காலத்துல கடுமையா உழைச்சு படிச்சு வேலைக்கு மேல போயிடுவான்.


அறிவாளி தோற்பதற்கும் ,கீழ்த்தரமா அல்லது  நடுத்தரமா உள்ளவன்  வெற்றி படியில் முன்னேறி செல்வதற்கும் அவர் ஜாதகத்தில் உள்ள தசா புத்திகளும் மற்றும் கிரக அமைப்புகளும் காரணம் ஆகும். சில நேரங்களில் கிரக அமைப்புகள் நன்றாக  இருந்தாலும் அந்த உரிய காலகட்டத்தில் நல்ல தசா அமைப்பு வராமல் இருப்பதும் இதற்கு காரணமாக அமைகிறது.


ஒரு சினிமா பாடல் கூட 

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே !

புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லையே !" என்று அழகாக பாடியிருப்பார்கள்


வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு நல்ல கிரக அமைப்புகளும் மற்றும் உரிய காலத்தில் சரியான தசை புக்தி நடப்பில் வந்த நிலையில் சமூகத்தில் உயரிய அமைப்பில் வரக்கூடிய வாய்ப்பானது அமைகிறது.


உதாரணமாக


   மீனம் லக்கினத்தில் பிறந்த ஒருவருக்கு லக்கனாதிபதி லக்கனத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருந்து கல்வியறிவு தரக்கூடிய ஸ்தானமான 2,4,5 ,9 ஸ்தானங்களும் மற்றும் அதிபதிகளும் நல்ல நிலையில் அமைந்துள்ளது. கல்விக்கு உரிய காரக. கிரகமான குரு  மற்றும் புதன் ஆட்சி உச்சம் பெற்று வலுப்பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் நன்றாக கல்வி பயின்றார்.ஆனால் அரசு வேலைக்கான போட்டி தேர்வு எழுதி வேலைக்கு வரக்கூடிய முக்கியமான காலகட்டத்தில் மீன லக்னத்திற்கு வரக்கூடாத தசை என்று சொல்லக்கூடிய சுக்கிரன் ( 3,8 க்கு உடைய )  மற்றும் சூரிய தசை ( 6 க்கு  உரிய தசைகள்) தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் அந்த காலகட்டத்தில் அவரால் அந்தப் போட்டி தேர்வில் எவ்வளவு தான் அறிவும் திறமையும் உடையவராக இருந்தாலும் அதில் வெற்றி பெற இயலவில்லை ஆனால் அதற்கு அடுத்த. பிறகு 45 வயதுக்கு மேல் வரக்கூடிய சந்திர தசையில் தான் அவரால்  நினைத்த வேலைக்கு போக முடியாமல் போனால் கூட ஆனால் அதே நேரத்தில் ஒரு அரசு வேலையை அவரால் அடைய இயன்றது.


இதே  மீன லக்கனத்தில் பிறந்த ஒருவருக்கு நல்ல கிரக அமைப்புகள் இருந்து தொடர்ந்து குரு ,சந்திர மற்றும் செவ்வாய் போன்ற தசைகள் வந்தால் அவர் அவர் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரியே வெற்றி பெற்று உயரிய பதவியில் அடைந்திருப்பார்.


  ஒருவர் எனதான் அறிவு, திறமை உழைப்பு எல்லாம் பெற்றிருந்தாலும் அந்த வாய்ப்பு வரக்கூடிய காலகட்டத்தில் அவருடைய ஜாதகத்தில் உரிய யோக தச அமைப்புகள் வந்தால் மட்டுமே அவரால் அந்த உழைப்பு ,முயற்சி மற்றும் திறமை போன்றவற்றை பயன்படுத்தி உயரிய எல்லையை அடைந்துவிட முடியும் அந்த உயரிய நிலையை அடைய அவருடைய தசா அமைப்புகளை மிக முக்கிய காரணமாக அமைகிறது.


ஒருவருக்கு நல்ல கிரக அமைப்புகள் இருந்து உகந்த  யோக தசை அமைப்புகள் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்த மனிதன்" சாதாரண மனிதராக இருந்தாலும் சமூகத்தில் சரித்திரம் மனிதனாக மாறுகிறார்".


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: