மனித வாழ்வியலில் நவ கிரகங்களின் பங்கு.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
பல்லாயிரம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் வான் வீதியில் எங்கே இருக்கும் கிரகங்கள் மனித வாழ்வினை வழி நடத்தி செல்கின்றது.
இந்த கிரகங்களின் மீது ஏற்படும் மாற்றம் மனித வாழ்வில் ஏற்ற, இறக்கங்களை தந்து வழி நடத்தி செல்கிறது என்ற உண்மையை அறிவியல் அறிந்த அனைவரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒன்பது கிரகங்கள் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் உடைய கால் வாங்கி பன்னிரெண்டு ராசிகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுற்றி வருகிறது.
சந்திர பகவான் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் வீதம் தங்கி வாசம் செய்கிறது. ஒரு ராசியில் மிகக் குறைந்த கால அளவு இருக்கக்கூடிய ஒரே கிரகம் சந்திர பகவான் மட்டுமே.. எனவே இதனை நாள் கிரகம் என்று அழைக்கிறோம் .
இதன் ஒளி அளவை பொறுத்து வளர்பிறை சந்திரன் மற்றும் தேய்பிறை சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. வளர்பிறை சந்திரன் இயற்கை சுப கிரகமாகவும் மற்றும் தேய்பிறை சந்திரனாக இருந்தால் இயற்கை பாவ கிரகமாக கருதப்படுகிறது.
.சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரு ராசியை ஒரு மாத கால இடைவெளியில் 12 ராசிகளையும் சுற்றி வருகிறது .எனவே இதனை மாதக்கிரகம் என்று அழைக்கிறோம். இவை மட்டுமில்லாமல் சூரியனை ஒட்டியே புதனும் சுக்கிரனும் சுற்றி வருவதால் புதன் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களையும் உள்வட்ட கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது .
புதன் பகவான் சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிக்குள் சுற்றி வருகிறது.சுக்கிர பகவான் சூரியன் உடனோ அல்லது முன் பின் இரண்டு ராசிகளுக்குள்ளேயே சுற்றி வருகிறது.
முக்கால் பாவரான செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் சுற்றி வருகிறது. .எனவே இதுவும் மாத கிரக வரிசையில் சேரும்.
குருபகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் வீதமாகவும், நிழல்கிரகமான ராகு மற்றும் கேதுக்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகளும் அதாவது 18 மாதங்களும் வாசம் செய்கிறது. ஒரு ராசியிலே அதிக ஆண்டு சுழலக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான் ஆகும் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கும். எனவே குரு பகவான் ராகு , கேது பகவான் மற்றும் சனி பகவான் ஆகியவற்றை ஆண்டு கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
நவகிரகங்கள் தங்களது கால அளவுக்கு ஏற்றார் போல 12 ராசிகளையும் சுற்றி வருகிறது. இதில் நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவை தவிர மற்ற எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகரக்கூடிய தன்மையை பெற்றுள்ளது. நிழல் கிரகமான ராகு ,கேது மட்டுமே பின்னோக்கி நகரும் தன்மை பெற்று இருப்பதால் இவற்றிற்கு வக்கிரகதி என்பது கிடையாது.
சூரியனைச் சுற்றியே புதனும் சுக்கிரனும் சுற்றி வருவதால் சூரியனுக்கு அருகில் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட பாகை அளவில் வக்கிரகதி அடைகிறது . குரு செவ்வாய் புதன் சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் பஞ்ச மகா கிரகங்கள் எனப்படும். பஞ்ச மகா கிரகங்களின் சனி செவ்வாய் குரு பகவான் சூரியன் இருக்கும் வீட்டுக்கு ஐந்தாம் வீட்டில் வக்கிர கதி ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர கதி நிவர்த்தி அடைகிறது.
சூரியன் பகவானை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள்ளாக அதாவது 8,11,13 ,15 மற்றும் 17 பாகை பாகை அளவில் சுக்கிரன், புதன்,குரு ,சனி மற்றும் செவ்வாய் நெருக்கமாக நெருங்கும் பொழுது சூரிய பகவானால் அஸ்தங்கம் அடைகிறது.
அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் தனது பலத்தை சூரிய பகவானிடம் இழக்கிறது. சூரியன் பகவானால் அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் உடைய பலனை சூரியன் தனது தசையில் எடுத்து செய்கிறது.
எல்லா கிரகங்களும் தான் இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தை பார்வை செய்கிறது .இதில் சனி ,செவ்வாய் மற்றும் குரு பகவானுக்கு மற்றும் சிறப்பு பார்வை உண்டு குரு பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்தை பார்வை செய்கிறது. சனி பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து மூன்று மற்றும் பத்தாம் இடத்தையும் பார்வை செய்கிறது .செவ்வாய் பகவான் ஏழாம் இடத்தை தவிர்த்து கூடுதலாக நான்கு மற்றும் எட்டாம் இடத்தையும் பார்வை செய்கிறது.
சில நேரங்களில் கிரகங்கள் பின்னோக்கி நகர்வது போல் தெரிவதை வக்ரகதி என்றும் அதேபோல முன்னோக்கி நகர்வது போல் தெரிவதை அதிசாரம் என்று அழைக்கிறோம். பொதுவா கிரகங்கள் பின்னோக்கி நகர்வதைப் போலத்தான் தெரியும் எப்படி சூரியன் உதிப்பதும் ,மறைவதும் இல்லை புவி சுழற்சியினால் அவை உதிப்பது போலவும் மற்றும் மறைவது போலவும் தெரிகிறது . இதனால் இரவு மற்றும் பகல் போன்ற கால மாற்றம் உருவாகிறது.
கிரகங்கள் உச்சம் ,ஆட்சி மூலதிரி கோணம், நட்பு போன்ற நிலைகளில் கேந்திர கோணங்களில் நின்றாலும் நல்ல பலனை தந்து விடும் என்று அறுதியிட்டு கூற முடியாது.பாவ கிரகங்கள் உச்சம் ஆட்சி போன்ற நேர் வலு பெற்று நின்றால் நல்ல பலனை தந்து விடுவதில்லை.மாறாக ஸ்தான வலிமையை இழந்து திக் பலம் பெற்ற நிலையில் இருந்தாலும் அல்லது இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் அதன் தசையில் நல்ல பலனை தந்து விடுகிறது.
உதாரணமாக துலா லக்னத்திற்கு தன அதிபதியான செவ்வாய் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று இருப்பதை விட பத்தாம் இடத்தில் நீசம் பெற்று அதே நேரத்தில் திக்பலம் பெற்று நிற்கும்போது அந்த தசையில் மிகுந்த தனயோகத்தை ஜாதகருக்கு கொடுத்து விடுகிறது.
நன்றி.
செல் & வாட்ஸ் அப் &. கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment