Sunday, 22 September 2024

மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் தரும் பலன்கள்

 மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் தரும் பலன்கள் 





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவர் ஜாதகத்தில் மூன்று மற்றும் பதினொன்றாம் இடம் என்பது கேந்திரங்களிலும் வராது அதேபோல கோணத்திலும் வராது.மறைவிட ஸ்தானமாகவும் கருதி விட இயலாது.ஆனால் இதனை உப ஜெய ஸ்தானம் என்று அழைக்கலாம்.மூன்று ,ஆறு , பதினொன்றாம் இடம் உப ஜெய ஸ்தானம் ஆகும்.


 இந்த ஸ்தானத்தில் லக்கன அவ யோகராக இருந்தாலும் அல்லது இயற்கை பாவ கிரகமாக இருந்தாலும் நட்பு நிலையில் நின்றால் அதன் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளி தரக்கூடிய ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.


 மூன்று மற்றும் பதினொன்றாம் இடத்தில் ஒரு கிரகம் நிற்கும் போது பெரும்பாலும் லக்கன நட்பு கிரக சாரத்திலே நிற்க கூடிய நிலையில் இருப்பதால் அந்த கிரகம் அதன் தசையில் யோகத்தை சாதகருக்கு அள்ளி வழங்கக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும்.


 மூன்றாம் இடம் ஒரு மறைவிட ஸ்தானமாக இருந்தாலும் அது ஜாதகருக்கு கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து போன்றவற்றை அள்ளித் தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படுகிறது.

உங்களுடைய பேச்சாற்றல் ,எழுத்து திறமை ,இசையில் நாட்டம் ஃ,கற்பனை உணர்வு ,நல்ல வழியில் கற்பனை அல்லது கெட்ட வழியான கற்பனை‌ மற்றும் காம வீரிய தன்மை போன்றவை அறிய உதவுகிறது.


இளைய சகோதரன் பற்றி அறிய உதவும் ஸ்தானமாகும்.சகோதர காரகன் ஆக செவ்வாய் பகவான் செயல்படுகிறது.


 இதேபோல் பதினொன்றாம் இடத்தை லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மகா தன யோகத்தை வழங்க கூடிய ஸ்தானங்களில் லாப ஸ்தானமும் ஒன்றாகும் . லாப ஸ்தானத்தில் நிற்கக்கூடிய கிரகங்கள் அதன் தசையில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும் . 


     இந்த இடம். மூலமாக மூத்த சகோதரன் மற்றும் இளையதாரம் போன்றவற்றை அறிய உதவுகிறது ஒருவருக்கு இரண்டாம் தாரம் உருவாகுவதற்குரிய அமைப்பு இந்த பதினொன்றாம் இடத்தின் வலிமையை பொருத்து அமைகிறது ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடம் கெட்டு லாப ஸ்தானமான பதினொன்றாம். இடம் வலிமை அடைந்திருந்தால்

 மறு தார அமைப்பு உருவாகும்.


  மூன்று மற்றும் பதினொன்றாம் இட அதிபதிகள் சேர்க்கை பெற்று நின்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அல்லது தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்று நின்றாலும் அதன் தசையில் ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை கொடுக்கும்.


   மூன்றாம் இடத்தின் அதிபதி இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்டு அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் சாதகர் குன்றிலிட்ட விளக்கு போல் "சமூகத்தில் உயர்ந்த புகழ் பெற்ற அந்தஸ்தை பெற்று விலகுவார்.


 ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் எந்தவித பாவ கிரகமும் இல்லாமல் மூன்றாம் இட அதிபதியும் வலுப்பெற்று இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட நிலையில் சகோதரர் காரகன் செவ்வாயும் வலிமை அடைந்து இருந்தால் அதாவது சுபத்துவம் பெற்ற நிலையில் இருந்தால் உடன் பிறந்த சகோதரர்களால் பெரிய ஆதரவு உண்டாகும்.


    மூன்றாம் இடம் வலிமை அடைந்து சுப தன்மை அடைந்த நிலையில் நல்ல பேச்சாற்றல், கற்பனை திறன், எழுத்து உலகில் சாதிக்கக்கூடிய தன்மை, இசையில் ஆர்வம், படைப்பாற்றல் போன்றவை சாதகருக்கு மிகுந்து காணப்படும் அதன் வழியாக கீர்த்தியும் புகழும் அடையக்கூடிய யோகத்தை உரிய யோக தசை அமைப்பில் தரும்.


மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் பெரிய அளவில் அதன் தசை காலங்களில் தீமையை தந்து விடுவதில்லை .ஏனெனில் அவைப் பெற்ற நட்சத்திர சாரம் பெரும்பாலும் லக்கன யோகரின் நட்சத்திரசாரமாக இருக்கக்கூடிய நிலையில் இருக்கும்.


நன்றி.

  

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

       



அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: