Sunday, 22 September 2024

வாழ்க்கையை வழி நடத்தும் ஜோதிடம்

 வாழ்க்கையை வழி நடத்தும் ஜோதிடம் 



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்கள் பல நிறைந்தது.அமைதியாக ஆரவாரம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிற வாழ்க்கையில் ஏதாவது ஒரு எதிர்பாராத சம்பவங்கள் அப்படியே வாழ்வின் திசையையே மாற்றி சென்று விடுவது உண்டு.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா கூறியது போல


"வானம் எப்பொழுதும் 

நீல நிறமாக இருக்கும் என்றோ!

 பாதை முழுவதும் பூக்களே 

பூத்திருக்கும் என்றோ !

இறைவன் உங்களுக்கு 

வாக்கு தரவில்லை! *


    ஒரு மானிட வாழ்வின் திசையே மாற்றிச் செல்லக்கூடிய உருக்குலைக்க செய்யும் அல்லது உயர்வு அடைய செய்யும் ஒரு அமைப்பு தசா புத்தியை சார்ந்து அமைகிறது. தசை மற்றும்  புத்தியே மனித வாழ்வை வழிநடத்தி செல்லும் மனித வாழ்வின் வாழ்வியல் உண்மைகளை அளவிட இந்த தசா புத்திகள் பெரிதும் உதவுகிறது.


  ஒரு மனித வாழ்வின் வாழ்வியல் சம்பவங்களை சுட்டிக் காட்டுவது அல்லது வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது லக்கனத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தசா புத்திகள் ஆகும்.


        உதாரணமாக மீனம்  லக்கனத்தில் பிறந்த ஒருவருக்கு சுக்கிர தசை மற்றும் சூரிய தசை ஆகிய இரண்டு தசைகள் குறிப்பாக வாலிப வயதில் வரும் பொழுது அது அவருடைய வாழ்வின் நிலையை மாற்றி அமைத்து விடும் . அவர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அல்லது எவ்வளவு செயல்கள் செய்ய முயன்றாலும் அது அவரை உயர்வடைய செய்ய விடாமல் பின்னோக்கியே செல்ல வைக்கும்.அவர் அதிலிருந்து போராடி வெற்றி பெற வேண்டும் எனில் அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி ஆனது  வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


         அதே நேரத்தில் துலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு உரிய வாலிப வயதில் சனி, புதன், சுக்கிர திசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்ற நிலையில் இந்த மூன்று கிரகங்களும் குரு பார்வை அல்லது சுப கிரகங்கள் தொடர்பை பெற்ற நிலையில் அவர்கள் குப்பையில் கிடந்தாலும் கோபுரத்தில் உச்சியில் கொண்டு சேர்க்கும் அவர் சகல சௌபாக்கிய வசதிகளையும் அனுபவிக்க கூடிய தன்மையும் இருப்பார்.கிட்டதட்ட அறுபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து யோக தசையையே சந்திக்க கூடிய மனிதனாக இருப்பதால்  இந்த வகையான ஜாதகங்கள் யோகம் தரும் ஜாதக வரிசையில் அமைகிறது.


      பொதுவாக ஒருவருக்கு ஆறு மற்றும் எட்டுக்கு உடைய தசைகள் வாழ்வில் வரக்கூடிய காலங்களில் மிகப்பெரிய தொல்லைகளை அல்லது கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது.


      சில நேரங்களில் யோக தசைகளாக இருந்தாலும் அதை சனி ,செவ்வாய் மற்றும் ராகு, கேது போன்ற கிரகங்களுடைய சேர்க்கை அல்லது பார்வையை பெற்ற நிலையில் அவ யோகத்தை தரக்கூடிய அமைப்பாக மாறிவிடுகிறது.


       சில நேரங்களில் பாவ கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் போன்ற  கிரகங்கள் நேரடியாக உச்சம்  ,ஆட்சி போன்ற  நிலைகளில் நேர் வலு  பெறாமல் மறைமுகமான முறையில் வலுப்பெற்று இருக்கும்போது அதற்குரிய யோகத்தை அதாவது ஆதிபத்திய மற்றும் காரக பலனை அந்த  கிரகங்கள் சிறப்பாக தந்து விடும்.


        மீனம்  லக்னத்திற்கு தன மற்றும் பாக்கிய அதிபதியான செவ்வாய் பகவான் கடகத்தில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த வீட்டிற்குரிய செவ்வாய் லக்னத்தில் இருந்து சம  சப்தமாக  கன்னி வீட்டில் இருக்கும் குருவின் பார்வையை பெறும் பொழுது வீடு கொடுத்தவன்  வலிமை பெற்ற நிலையிலும் மற்றும் செவ்வாய் பகவான் புனர்பூசம் நாலாம் பாதத்தில் இருப்பதால் ராசி ,அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்து வர்க்கோத்தமம் பலமும் பெறுவதாலும் இந்த ஜாதகி டாக்டர் படிப்பு படித்து மருத்துவராக வேலை செய்கிறார் எனவே இங்கு மேம்போக்காக பார்க்கும்போது செவ்வாய் நீசம் போன்ற வகையில் பலமிழந்து இருந்தாலும் மறைமுகமான முறையில் வலுப்பெற்று அதற்குரிய காரக பலனை சிறப்பாக தந்து விட்டது.


மகர லக்கினத்திற்கு குரு பகவான் லக்னத்தில் நீசம் பெற்றே இருந்தாலும் அதே போல மீன லக்கினத்திற்கு புதன் பகவான் லக்னத்தில் நீசம் பெற்று இருந்தாலும் இவ்விரு கிரகங்களும் லக்னத்தில் திக்பலம்  என்பதால் அவை  வலிமை பெற்ற கிரகமாக கருதப்பட வேண்டும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே 

‌‌. 097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     ஸM.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: