Monday, 23 September 2024

உங்கள் நிலையை காட்டும் கால கண்ணாடி ஜோதிடம்

 உங்கள் நிலையினை காட்டும் கால கண்ணாடி ஜாதகமா ?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவரிடம் முதலில் அவருடைய ஜாதகத்தை சரியான முறையில் எழுதப்பட்டு இருக்கிறதா ? என்பதை கணித்து பார்த்து அதன் பிறகு பலன் சொல்ல ஆரம்பிப்பேன்.


  பிறகு அந்த ஜாதகத்தை லக்கன ,ராசி மற்றும் அதிபதியையும்‌ , ஏனைய கிரக பார்வை சேர்க்கை அமைப்புகளையும், கோச்சார பலன்களையும் மற்றும் நடக்கக்கூடிய தசா புத்திகளையும் வைத்துக்கொண்டு அந்த ஜாதகம் யோக ஜாதகமா? அல்லது கஷ்டமான அவ யோகத்தை தரக்கூடிய ஜாதகமா? அல்லது தற்போது நடப்பில் கஷ்டத்தை தரக்கூடிய ஜாதகமாக இருந்தாலும் அதன் பின்னர் யோகத்தை தரக்கூடிய ஜாதகமாக இருக்கிறதா ? இப்படி எல்லாம் இந்த ஜாதகத்தை பார்த்த உடனே தெரிந்து விடும்.


  பெரும்பாலான நபர்கள் கஷ்டமான சூழ்நிலையில் தான் ஜாதகத்தை தேடி பிடித்து ஜாதகம் பார்க்க வருகிறார்கள்.இவர்களது ஜாதகத்தை பார்த்த உடனே தெரிந்து விடும் . இவர்கள் ஜாதகம் பார்க்க வரக்கூடிய காலகட்டங்களில் அஷ்டம சனி, ஏழரை சனி இது போன்ற அமைப்பு கோச்சார ரீதியாக செயல்படும். தசா புத்திகளும் அவ யோக தசை அமைப்புகளில் இருக்கும் . அதாவது மேஷ, விருச்ச லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தால் அவ யோக தசையாக புதன் திசை நடப்பில் இருக்கக்கூடிய கால கட்டங்களையும், ரிஷபம், துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அவ யோக தசையாக குரு தசை நடப்பில் இருக்கக்கூடிய காலங்களிலும் ,மிதுனம், கன்னியாக இருந்தால் செவ்வாய் தசை நடப்பில் உள்ள காலங்களிலோ, தனுசு ,மீனமாக இருந்தால் சுக்கிர தசை நடப்பில் உள்ள காலங்களிலும் , மகர லக்கினத்திற்கு சூரிய தசையும் கும்ப லக்னத்திற்கு சந்திர தசையும் இது போன்ற தசைகள் ஏதாவது ஒரு தசை அவர்களுக்கு நடப்பிலே இருக்கும். அப்படி இருக்கும் போது கோச்சார அடிப்படையிலும் மற்றும் தசாபுத்தி இரண்டு சரியில்லாத நேரத்துல மிகப்பெரிய வேதனைகளை கஷ்டங்களை அவர்கள் அனுபவித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் இந்த பிரச்சனையிலிருந்து எதிர்நீச்சல் போட்டு இந்த குறிப்பிட்ட கால கட்டத்தை தாண்டி வந்து விடுவார்களா ? என்பதை லக்கனாதிபதி உடைய வலிமையும் மற்றும் சுப தன்மையும் முடிவு செய்கிறது.


     இதை அவர் குடும்பத்தில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தை பார்க்கும் போதும் ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பேருக்கு ஏழரை அஷ்டம சனி நடப்பில இருக்கக்கூடிய காலகட்டத்தில் பார்க்கும்போது நிச்சயமாக அவங்க குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பார்கள்.


      அவர்களுடைய இந்த நிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு அந்த நிலையில் உள்ள கஷ்டத்தை சொல்லி அதே நேரத்துல அவர்கள் மீண்டும் ரொம்ப சோர்ந்து விடாமல் இருப்பதற்குரிய சில தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய உளவியல் அமைப்பான சில டிப்ஸை கொடுத்து தான் அனுப்ப வேண்டியதாக உள்ளது. கஷ்டங்களிலிருந்து விடுபட உரிய பரிகார பூஜை அமைப்புகளை எளிய மற்றும் குறைந்த செலவில் பரிகாரம் செய்யும்படியாக சொல்லி அனுப்பி அதன் மூலமாக அவர்கள் அந்த தீர்வை பெற்று அதிலிருந்து விடுபட்டவுடன் நல்ல தசை நான் சொல்லக்கூடிய காலங்களில் வந்த பிறகு மீண்டும் வந்து நம்மை சந்தித்து போகும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


  பெரும்பாலும் கஷ்டபடக்கூடிய சாதகங்களை பார்க்கும் பொழுது அவர்கள் சாதகத்தில் லக்னத்தோடும் ராசியோடும் சனி ,செவ்வாய், ராகு, கேது பார்வை சேர்க்கை போன்ற அமைப்புகளில் தொடர்பு பெற்று இருக்கும். யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலவீனமடைந்து அவயோகத்தை தரக்கூடிய கிரகங்கள் வலிமை படைத்த நிலையிலும் இருக்கும். அவர்களுக்கு பிறந்ததிலிருந்து வரக்கூடிய மனித வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்யக்கூடிய தசா புத்திகளும் பெரும்பாலும் சனி பார்த்த கிரகத்தின் தசையாகவோ அல்லது ஆறு‌ அல்லது எட்டுக்கு உரிய அவ யோக தசையாகவோ இதேபோல குரு அணியை சேர்ந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அணியை சேர்ந்த தசாபுத்திகளும் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் இருக்கும். சிலர் சுக்கிர அணியை சேர்ந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு குரு அணியைச் சேர்ந்த தசா புத்திகள் தொடர்ந்து நடப்பிலிருக்கும்.


  யோக அமைப்பில் பிறந்தவருடைய ஜாதகத்தை பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம். லக்கனம் ,ராசி மற்றும் அதன் அதிபதிகளை குரு பகவான் அல்லது இயற்கை சுப கிரகமான சுக்கிரன், தனித்த புதன் வளர்பிறைச்சந்திரன் போன்றவை பார்வை, சேர்க்கை முறையில் தொடர்பு பெற்றிருக்கும் பௌர்ணமி யோகத்தில் பிறந்திருப்பார்கள். லக்கினத்திற்கு யோகத்தை தரக்கூடிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு வலிமை பெற்று சுப கிரகத்தின் தொடர்பு பெற்ற நிலையில் இருக்கும். அவ யோகத்தை தரக்கூடிய பகை கிரகங்கள் மறைவிடங்களில் அல்லது பலம் இழந்த நிலையினை பெற்றிருக்கும். யோக கிரகங்கள் பலம் பெற்று அவயோகத்தை தரக்கூடிய கிரகங்கள் பலம் இழந்தும் அதேபோல தொடர்ந்து யோகத்தை தரக்கூடிய தசைகளே நடப்பில் இருக்கும்.

பௌர்ணமி சந்திரன் அல்லது பௌர்ணமியை நெருங்கும் அல்லது விட்டு விலகும் சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டில் இயற்கை சுப கிரகங்கள் இருந்து சந்திர அதி யோகம் பெறக்கூடிய ஜாதகத்தினை பெற்று அதன் தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் இருப்பார்கள்.


 இது போன்ற யோகத்தை தரக்கூடிய நபர்கள் வரும்பொழுது அவர்களுக்கு என்னென்ன தசையில் எது போன்ற தொழில்கள் அல்லது எது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக அவர்களுக்கு புரியும்படி விளக்கி அனுப்புவோம். அதாவது நாம் சொல்லும்படியே அவர்கள் அந்த தொழிலை அல்லது அந்த படிப்பை அல்லது செயலை செய்து அதன் மூலமாக வெற்றியை அடைந்து திரும்ப வந்து நம்மை பழம், தட்டு மற்றும் உரிய சன்மானத்தோடு திரும்ப வந்து சந்திக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)





அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: