Tuesday, 4 February 2025

குரு பகவான் தரும் யோகங்கள்

 குருபகவான் தரும் யோகங்கள்!




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். குரு பகவான் ஒரு மனிதனுக்கு தேவையான பணம், பதவி, பட்டம், புகழ், கல்வி ,ஞானம் ,செல்வம் மற்றும் குழந்தை பாக்கியம் அனைத்தையும் தரக்கூடிய கிரகமாகும்.


  குரு பகவான் தனம் பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய மூன்று ஸ்தானத்திற்கு உரிய ஜட காரக கிரகமாக விளங்குகிறது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு உயிர் காரக கிரகமாக குரு பகவான் விளக்குகிறார். 


 குரு பகவான் எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து அல்லது பார்வை பெற்று இருந்தாலும் அவை யோகம் தரக்கூடிய அமைப்பாக விளங்குகிறது.


குரு பகவான் தனது நட்பு கிரகமான சந்திரனுடன் பார்வை அல்லது சேர்க்கையை பெரும்பொழுது குருசந்திர யோகத்தை தருகிறது.


 குரு பகவான் தனது நட்பு கிரகமான செவ்வாயுடன் இணைவு அல்லது பார்வையை பெறும் பொழுது குருமங்கள யோகம் தருகிறது.


 சந்திர கேந்திரத்தில் குரு பகவான் நிற்கும் பொழுது கஜகேசரி யோகத்தை தருகிறது. இது எதிரியை வெல்லக்கூடிய அமைப்பு ஆகும்.


 குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சிவராஜயோகம் தருகிறது.


 குரு பகவான் கேது உடன் இணைந்த நிலையில் கேளயோகம் என்னும் கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு தருகிறார்.


 குரு பகவான் லக்னத்தில் நிற்கும் போது #திக்பலம் போன்ற அமைப்பை பெற்று வலிமை பெற்ற கிரகமாக விளங்குகிறது.


 குரு பகவான் கேந்திர ஸ்தானமான 1,4,7,10 போன்ற இடங்களில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நிற்கும் போது ஹம்சயோகம் தருகிறது.

இதன் பலன் ஜாதகர் கல்வி கேள்விகளில் வல்லவராகவும், ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும், நிறைந்த நல்ல பண்புகள் உடையவராகவும் திகழ்வார்.


குரு பகவான் கர்ம காரகன் சனி பகவான் மற்றும் ஞான காரகன் கேது பகவான் உடன் தொடர்பு கொள்ளும்போது ஆன்மீக வாதியாக மற்றும் ஆன்மீக எண்ணம் உடையவராக சாதகர் திகழ்வார்.


சந்திரனுக்கு ஆறு ,எட்டு , பன்னிரண்டாம் இடங்களில் குரு பகவான் இருக்கும் பொழுது சகடையோகம் தருகிறது .இது ஏற்ற, இறக்கம் நிறைந்த வாழ்க்கையை தருகிறது.


 குரு பகவான் சனி அல்லது ராகு உடன் நெருக்கமாக இணையும் பொழுது குருசண்டாளயோகம் தருவார். இந்த நிலையில் குரு பகவானுக்கு உரிய இயல்பான பலன்கள் மாறி பாவியாக செயல்பட்டு கெட்ட பலனை தரக்கூடிய அமைப்பை பெறுவார். இந்த நிலையில் தனுடன் இணைந்த சனி அல்லது ராகுவை சுபத்துவப்படுத்தி தான் பாவத்தன்மை அடைவார். இந்த நிலையில் ஆன்மீக எண்ணங்கள் மீது நாட்டம் ஏற்படாது. பகுத்தறிவு நாட்டமுடையவராக திகழ்வார் .


   குருபகவான் முன்னோர்கள் செய்த புண்ணியத்தை குறிக்கும் .சனி பகவான் முன்னோர்கள் செய்த கர்ம பலனை குறிக்கும். அதனால் குரு பகவான் சனி உடன் இணைந்து தரும் யோகம் #ஜீவக்கர்மயோகம் ஆகும்.


   லக்கின அல்லது சந்திர கேந்திரத்தில் குரு சனி இணைவு அமைவது மிகப்பெரிய ஜீவகர்ம யோகம் ஆகும். குருவும் , சனியும் ஐந்து பாகைக்குள் இணைந்து இருக்க வேண்டும் இதன் பலன் சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக திகழ்வார்கள்.


 குரு பகவான் பலம் இழந்து, சனிபகவான் பலம் பெற்றும் குரு மற்றும் சனி ஆகிய இரண்டும் ஐந்து பாகைக்குள் இணைவு அல்லது சமசப்தம பார்வை #பிரம்மஹத்தி தோஷம் ஆகும்.


    குரு பகவானின் பலம் அதிகம் இருந்து சனி ஆனவர் குரு பகவானுடன் இணையும் போது அல்லது சம சப்தம பார்வையை பெரும்போது சனியின் அசுபத்தன்மை குறைந்து சுப தன்மையை அடையும் .அதாவது சூட்சுமமாக இதனை விளக்க வேண்டுமென்றால் குரு 

( பூர்வ புண்ணியம்) பலம் அதிகமாகும்போது சனி ( கர்ம பலன்) குறையும்.


   குருபகவான் லக்னம் , ராசி மற்றும் அதன் அதிபதிகளை பார்வை செய்யும் பொழுது சாதகருக்கு மிகுந்த யோகத்தை அனுபவிக்க கூடிய தன்மையை தருகிறது. ஜாதகர் நீதி, நியாயம் போன்றவற்றிற்கு கட்டுப்பட்டவராகவும், நல்ல தேஜஸ் உடையவராகவும் திகழ்வார்.மற்றவருக்கு ஒரு முன் மாதிரியாகவும் திகழ்வார். வாழ்வில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு நியாயமான முறையில் வெற்றி பெற்று சரித்திரம் படைப்பார்.


குரு பகவான் புதன் பகவானுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல படைப்பாற்றல் மிக்கவராகவும், கணிப்பொறி ,கணித அறிவு மிக்கவராகவும் ,ஜோதிடம், பேச்சு, எழுத்து போன்றவற்றில் படைப்பாற்றல் மிக்கவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் இசையின் மீது நாட்டம் உடையவராகவும், மற்றவர்களை விட மாறுபட்டு சிந்திக்கும் எண்ணம் உடையவராகவும் திகழ்வார்.


குரு பகவான் தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் உடன் இணையும் பொழுது மனைவியானலள் தாம்பத்திய சுவற்றை தர மறுக்கக்கூடிய நிலையில் இருப்பார் அல்லது மனைவியை விட்டு சம்பாதிக்கக்கூடிய நிமித்தமாக வெளிநாடு வெளி மாநிலங்களில் இருக்கக்கூடிய நிலையை உருவாக்குவார்.


நன்றி.


For online appointment 

Cell & WhatsApp & Gpay 

097151 89647 

Another one cell no 7402570899

(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEdஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: