Sunday, 25 February 2018

பெண்கள் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு ?

பெண்கள் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடு ?                                               


கிரகங்கள் படுத்தும் பாடு- ( 125 )


செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்...

அழகுள்ள பெண்


           ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்தில் சந்திரபகவான் அல்லது சுக்கிரபகவான் நின்றால் அவள் "வதனமே சந்திரபிம்பமே "என போற்றும் பேரழகியாக இருப்பாள்.
பெண் ராசியில் அழகு காரக கிரகமான சந்திரபகவான் நின்றாலோ அல்லது இலக்கினத்தில் இருந்து மூன்று வீடுகளில் தொடர்ந்தாற்போல தொடர்ச்சியாக சுபகிரகங்கள் நின்றால் அந்த பெண் பேரழகுடையவளாக இருக்க வாய்ப்பு உண்டு.


          ஒரு ஆடவனின் சாதகத்தில் சந்திரபகவான் ஆனவர் களஸ்திரஸ்தானமான  ஏழாமாதிபதியாகவோ அல்லது ஏழாம் இடத்திலோ இருந்தால் அவனுக்கு வரக்கூடிய மனைவி பேரழகு மிக்கவளாக இருப்பாள்.

மாலையிட்ட கணவனின் உயிருக்கு ஆபத்து

              ஒரு பெண்ணின் சாதகத்தில் லக்கனத்திற்கு ஏழாமிடத்தில் சுக்கிரபகவான்,சனிபகவான் மற்றும் செவ்வாய்பகவான் மூன்று கிரகங்களும் கூடி  நிற்க அந்த பெண்ணிற்கு கட்டிய கணவன் நிலைக்க மாட்டான்.உயிருக்கு ஆபத்து ஏற்படும்.


பரிகாரம்;


   
      
   சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபடல்.
வெள்ளிகிழமை தோறும் வெள்ளிவிரதமிருந்து அம்பாளை வழிபடல் மற்றும் விநாயகருக்கு தீபய் ஏற்றுதல்.இவை கணவனின்  ஆயுளுக்கு பங்கம் ஏற்படாது.
திருமணத்திற்கு பிறகு அலைச்சலை தரும் பெண்:-
             ஒருவரது சாதகத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் களஸ்திரகாரகர் சுக்கிரபகவான் இம்மூவரும் இணைந்து லக்கனத்தில் இருந்தாலோ அல்லது சூரியனும்,சந்திரனும் லக்கனத்தில் இருந்து சுக்கிரன் மூன்றில் இருந்து சூரியன் பார்த்தாலோ அந்த சாதகர் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வேறு பல ஊர்களுக்கு அடிக்கடி இடம்பெயர்ந்து அலைச்சல் மற்றும் திரிச்சலை தரும் மற்றும் தரக்கூடிய சாதகமாகும்.

                                                               


காம சுகம் தர விரும்பாத மனைவி


            ஒருவருடைய சாதகத்தில் களஸ்திரஸ்தானாதிபதி ,களஸ்திரகாரகன் சுக்கிரபகவான் இவ்விரண்டும் ஒன்று கூடி ஆறில் மறைந்தால் காமசுகம் தர விரும்பாத மனைவி அமைவாள்.

             ஒருவரது சாதகத்தில் கேந்திரஸ்தானத்தில் ( 1,4,7,10 )
 சூரியன் +சுக்கிரன் இணைந்து இருந்துவிட்டால் அவர்கள் இல்லற வாழ்வில் இன்பம் அடைவதில்லை.
அல்லது ஏழாமிடத்தில் இருந்தால் இருவருக்கும் சண்டை வந்துகொண்டிருக்கும்.


                                                           


தாமத திருமணம்

         1). ஏழில் செவ்வாய் மற்றும் சனியை கொண்டவர்களுக்கு கால தாமத திருமணம்..

            2)     லக்கனம் அல்லது ராசிக்கு ஒன்று,இரணடு ,ஏழு மற்றும் எட்டாமிடத்தில் பாவகிரகங்கள் இடம்பெற்று
இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தான அதிபதிகள் தொடர்பு பெற்றிருப்பின் தாமததிருமணம் நடைபெறும்.


            3).  களத்திரஸ்தானாதிபதி மறைவு ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது மறைவு ஸ்தான அதிபதி களத்திரஸ்தானங்களில் நின்றாலோ அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசம்,பகை மற்றும் பாவிகளோடு சேர்ந்திருந்தாலும் தாமத திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு.

           4). இரண்டு,எட்டில் ராகு ,கேது தொடர்பு பெறுவது
சந்திரனுக்கு ஏழில் அல்லது இரண்டில் சனிபகவான் இடம்பெறுவது
லக்கனம் மற்றும் ராசி மற்றும் ஏழாமிடத்தில் ராகு மற்றும் கேது தொடர்பு முதலியவை தாமத திருமணத்தை தரும்.


            5) குடும்பாதிபதி மற்றும் ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரபகவான் போன்றவை நீசம்,பகை ,அஸ்தமனம் பெறுவது போன்றவை.சுபர் இவர்களை பாராதிருப்பது.
இதுபோன்ற பல காரணங்கள் உள்ளது.
மேற்கண்ட காரணங்களினால் உண்டாகும் கால தாமத திருமணத்தினை போக்க சோதிடரின் ஆலோசனையை பெற்று பரிகாரத்தினை முடிவு செய்யவேண்டும்.

பரிகாரம்

             திருமண தடையை தவிர்க்க ராகு ,கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம,திருபாள்புரம்,பேரையூர் ,காளஹஸ்தி மற்றும் கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்கள் சென்று ராகுகாலங்களில் பாலபிஷேகம் செய்து வரல்.
திருமண தடையை போக்க பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபடல்.இதுபோல பல பரிகாரங்கள் உள்ளது.



(எந்த நாட்டில் நீங்கள்  இருந்தாலும் போன் வழியாக சாதகபலன்,திருமண பொருத்தம் ..போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை  ஆராய்ச்சி செய்து பலனை போன் வழியாக பெறலாம்.தங்களது
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை  கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறலாம்.)


எனது வாட்ஸ்அப் எண்97 151 89 647


    செல்740 257 08 9997 151 89 647


                                                      


அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: