சோதிட கவிகளும் அதன் விளக்கமும்
ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளோடு
சோதிட பா புனைந்து பலனுரைக்க
வந்தேன் நாவிலே நீயே நின்று
நல்வார்த்தை கோர்த்தருள்வாய்தேவி"
சோதிட கவி-(1)
"மந்தனும் கரும்பாம்பும்
வாக்கினிலே நின்று
அம்புலியும் சேயும் ஆசையுடன்
அவ்விடம் நோக்க தந்திடும் பலனைத்தான் தருகிறேன்
நீ உரை கணியா !
வெந்திடும் அவன் இல்லம்தான்
விரயமும் வினயமும் தந்திடும்தான்
விதியின் செயலால் அவன் பதிவிட்டு
வெட்டியாய் ஊர் ஊராய் சுற்றிடுவான்
வேறுவழியில்லை விதிப்பயனே"
விளக்கம்
சனியும்,ராகுவும் இரண்டாமிடத்தில் இருக்க தனஸ்தானத்தை சந்திரனும்,செவ்வாயும் நோக்க அவன் குடும்பத்தில் துயரம் உண்டாவதோடு செல்வமும் நாசமாகும் .ஜாதகன் ஊர் ஊராய் சுற்றி திரிவான்.அவன் இல்லம் தீயால் வெந்து விரயம் ஆகும்
--------------------------------------
சோதிட கவி (2)
"லக்கனாதிபதி ஈராறேற
பாவி சுகத்தில் அமர
மந்தனும் வாக்கினில் அமர
அட்டமத்தில் அம்புலியும்
கரும்பாம்பும் சேர பாவம்
அவன் விதி மோசம்
பாருலகில் விதிவசத்தை
என்ன சொல்ல"
விளக்கம்
லக்கனாதிபதி பணிரெண்டில் இருக்க நான்காமிடத்தில் பாவகோட்கள் நிற்க
இரண்டில் சனியும் எட்டாமிடத்தில் சந்திரனும் ராகுவும் சேர அந்த ஜாதகருக்கு ஆயுள் மத்திபம்
---------------------------
சோதிட கவி-(3)
"ஆறுமி ஆறு தன்னில்
அம்புலி கதிரோன் சேர
கூறுவாய் ஈனமேன்று
கொடும்பிணி விரதனேன்று
சீறுள அன்னைதந்தை
செல்வமும் விரயமாவதோடு
வேறு வேறாவர் என்பது
வேதியர் உரைத்த வாக்கு*
விளக்கம்
சூரியனும் சந்திரனும் பணிரெண்டாம் இடத்தில் சேர்ந்து இருந்தால் அவனது தாயும் தந்தையும் பிரிந்து ஒரே வீட்டில் தனித்தனியாக உலை வைத்து சாபபிடுவார்கள்.இவனை ஈனன் என்ற சொல்வார்கள்.அவனது செல்வம் அனைத்தும் விரயமாகிறது.
சோதிட கவி-(4)
கடன்தொல்லை
" தனத்தோடும்,சுகத்தோடும்
பாவி உறவு கொண்டாட !
தனாதிபதியும்,சுகாதிபதியும்
நீசம்அஸ்தமனம்,பகை கொள்ள !
ருணரோகதிபதி உச்சம் ஆட்சி பெற !
கையில் சேர்த்து வைத்த கால்பணமும்
பிணிகொண்டு போக !
வாங்கிய பணத்திற்கு
வட்டி வாங்க
வங்கிக்காரன் வாசலில் சப்திக்கு வர !
இதுதான் சாக்கு என்று
எதிர் வீட்டுக்காரன் எதிர்த்து நின்று
சண்டை போட !
அடுத்த வேளை உணவுக்கு
அடுப்படி பாத்திரம் மட்டும் சத்தமிட !
அப்பா ஸ்கூலுக்கு பீஸ் என
இளைய மகள் அழுக !
இப்படியாக பல துன்பம்
இல்லத்தில் கொடுக்கும் தானே !
கவி விளக்கம்;
தன ஸ்தானமான இரண்டாம் இடத்திலும்,சுக ஸ்தானமான நான்காம் இடத்திலும் பாவ கிரகம் இடம்பெற்று ,இவ்விரு அதிபதிகளும் நீசம்,பகை மற்றும் அஸ்தங்கம் அடைந்து ஆறுக்குடையவன் உச்சம், ஆட்சி போன்ற பலம்பெற்று நிற்பவன் அடையும் இன்னல்களை இக்கவி விளக்குகிறது.
சோதிட கவி-(5)
பணிரெண்டாம் இடம்
"விரயாதிபதி ஆட்சியுச்சமாக
வெளிநாடு செல்லும் யோகம்!
விருப்பமான சயனசுகம்!
விரயத்தில் ஞானகாரகன்
மறுபிறப்பில்லா முக்தியோகம்!
ருணரோகன் வி்யமேற
மாடமாளிகைபோல வீடு
பொதுவாக பலனை சொன்னேன்
புனிதமான கனியன் கேளு,
வியாதிக்கு ஏற்றாபோல
வைத்தியன் வைத்தியம்
பார்ப்பதுபோல
கோள்கள் நிலையது
ஏற்றார்போல நிகழ்த்துவாய்
பலனைத்தானே"
கவி விளக்கம்
அயன,சயன ,விரய மற்றும் படுக்கை ஸ்தானம் ஆன பணிரெண்டாம் இடம் பலமடைந்து நின்றால் அயன,சயன மற்றும் படுக்கை சுகத்தினையும்,வெளிநாடு செல்லும் யோகத்தினை சாதகர் பெறுவார்.இந்த ஸ்தானத்தில் கேது பகவான் இடம்பெறுவது முக்தி யோகத்தினை தருவார்.ஆறுக்கு உடையவன் விரயம் ஏற அதன் திசை காலங்களில் மாடமாளிகை போன்று வீடு அமையும்.இப்பலனும் வியாதிக்கு தகுந்த மாதிரி மருத்துவர் மாத்திரை தருவதுமாதிரி அக்கோள்களது பார்வை,சேர்க்கை மற்றும் ஸ்தான வலிமைக்கு ஏற்றாற்போல சோதிடர் பலன் உரைக்க பழகவேண்டும்.
நன்றி!
(நீங்கள் வீட்டிலிருந்தபடியே போன்வழியாக எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம்,திருமண தடைக்கான காரணம் மற்றும் பரிகாரவழிபாடு,புத்திரதோஷமும் அதற்குரிய பரிகாரம் மற்றும் குடும்ப பிரச்சினை இதுபோன்ற பல வினாக்களுக்கு விடைபெற தாங்கள் தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடத்தை எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரம் பெறலாம்)
எனது வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd.
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment