Sunday, 14 October 2018

சாதகர் உடன் பிறந்தோர்களின் எண்ணிக்கையினை அறிந்து கொள்வது எப்படி ?

சாதகர் உடன்  பிறந்தோர்களின் எண்ணிக்கையினை அறிந்து கொள்வது  எப்படி ?


                                  

 கிரகங்கள் படுத்தும் பாடு

செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
    
             ஒருவரது சாதகத்தில் உடன் பிறந்த சகோதர / சகோதரிகளின் எண்ணிக்கையினை சாதகத்தில் கண்டறிவது எப்படி ? என பல முகநூல் நண்பர்கள் பின்னூட்டத்தின் வழியாக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இப்பதிவினை  கொண்டு செல்கிறேன்.

          ஒரு சாதக கட்டத்தில் சகோதர ஸ்தானத்தினை அறிந்து கொள்ள உதவும் ஸ்தானங்களாவன மூன்றாம் இடமும்,பதினோறாம் இடமும் ஆகும்.

      மூன்றாம் இடம் இளைய சகோதரத்தினை பற்றியும்,மூத்த சகோதரம் பற்றி அறிய பதினொறாம் இடமும் அத்தியாசவசமாகிறது.இதேபோல சகோதர காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானின் நிலையினைக் கொண்டும் உடன் பிறந்தவர்களின் நிலையினை அறிந்து கொள்ளலாம்.

             சாதகர் உடன்  பிறந்தவர்களின் எண்ணிக்கையினை அறிய வேண்டும் எனில் மூன்றாம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள்,மூன்றாம் இடத்தினை பார்க்கும் கிரகங்கள் ,மூன்றாம் இட அதிபதி அமர்ந்த இடம் ,மூன்றாம் இட அதிபதியினை பார்த்த கிரகங்கள் ,் மூன்றாம் இட அதிபதியின் நட்சத்திர நாதன் மற்றும் அதன் சார நாதனுடன்  தொடர்பு கொண்டுள்ள கிரகங்கள் இவை எல்லாவற்றினையும் ஆராய்ந்து பார்த்து சகோதரர்களின் எண்ணிக்கையினை கண்டறிய முயல வேண்டும்.

           இவை மட்டுமல்லாமல் இதேபோல மேற்கண்ட முறையின் அடிப்படையில்  பதினொன்றாம் இடத்தினை பற்றியும் ஆராய வேண்டும். இதனை தொடர்ந்து சகோதரகாரகன் செவ்வாய் பகவானையினையும் இதே வழியில் ஆராய்ந்து அறிய முயலவேண்டும்.

             சகோதரகாரகன் செவ்வாய் பகவான் அமர்ந்து உள்ள இடம்,செவ்வாய் பகவானை பார்க்கும் மற்றும் சேர்க்கை பெறும் கிரகங்ள் ,மேலும் சகோதரகாரகன் செவ்வாய் கொண்டுள்ள நட்சத்திர சாரநாதன் அந்த சார நாதனுடன் தொடர்புடைய கிரகங்கள் ஆகியவற்றினையும் ஆராய்ந்து சகோதர எண்ணிக்கையினை அறிய முயல வேண்டும்..

                                 

  இதேபோல பல வகையில் ஆராய்ந்து உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையினை துல்லியமாக அறியலாம்.

 மூன்று,பதினொன்று மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் ஆகிய மூன்றும் பலமடைந்த சூழலில் ஒருவர் தனது உடன் பிறந்த சகோதரர்களால் பலன் அடையும் யோகம் உண்டு.

 மூன்று, பதினொன்று மற்றும் சகோதரகாரகன் செவ்வாய் ஆகிய மூன்றும் பலம் இழந்த சூழலில் ஒரு சிலருக்கு உடன் பிறந்தவர்கள் இல்லாத நிலையோ அல்லது உடன் பிறந்தவர்கள் இருந்தும் அவர்களால் பயன் அற்ற நிலையோ உருவாகலாம்.

 சகோதரகாரகன் செவ்வாய் பகவான் சகோதர ஸ்தானத்தில் இடம்பெறுவது "காரக பாவ நாஸ்தினை '" தரும் என்ற வகையில் இடம் பெறாமல் இருத்தல் நலம் பயக்கும்.

      மேற்கண்ட கோணங்களில் ஆராய்ந்து அறிந்து மிகவும் துல்லியமாக ஒரு சாதகர் உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையினை அறிந்துவிடலாம்.ஆனால் இதில் தவறு இருப்பின் சோதிடத்தின் குற்றம் அன்று ,சாதகரின் நடவடிக்கையினால் உண்டான தவறே ஆகும்.

           ஒரு தம்பதியினர் தம்மிடம் வந்து சாதகம் பார்க்க வரும்போது அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கையினை கேட்கும்போது எமது அனுபவத்தில் பதிவில் தந்த கோணத்தில் ஆராய்ந்து அந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையினை கூறும்போது ஒரு சிலருக்கு தமது கணிப்பு தவறு என சொல்வார் எனில் அது சாதகர் நடத்தையில் காணும் குற்றமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

        எவ்வாறு எனில் ஒருவருக்கு இரண்டு ஆண் ,ஒரு பெண் என சோதிடர்  கூறும்போது  உடன் பலன் பெற வந்தவர் "இல்லை ஒரு ஆண் ,ஒரு பெண்தான் என பதில் அளிக்கும்போது அவர்களிடம் எந்த விதமான எதிர்விவாதம் செய்யாமல்தான் சோதிடர்களாகிய நாங்கள் இருக்கவேண்டும் ஏனெனில் உண்மை நிலையினை கூறி குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க முடியாது.ஏனெனில் அந்த தம்பதியின் தந்தையின் சாதகத்தினை ஆராய்ந்து அறிய முற்படும்போது மனைவியல்லாத மற்றவருடன் உறவு கொள்பவராக இருப்பதால் நான் கூறிய மற்றொரு ஆண்குழந்தை வேறு பெண்ணுடன் கூடலில் உருவாகி பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

  இதேபோல வேறு சில தம்பதிகள் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பற்றிய ஆராய்ச்சியில் ஆராய்ந்து பார்க்கும்போது அந்த தம்பதிகளில் பெண் பெற்ற கூடுதலான ஒரு குழந்தை "மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மலர்ந்த  மலர"் என கூறி சோதிடர்களாகிய நாங்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க கூடாது .இந்த பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு பெரும்பாலான சோதிடர்கள் சாதகம் எழுதும்போது உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையினை சோதிடர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் துருவகணிதம் பயன்படுத்தி விடுகிறார்கள் .இது சோதிடர்கள் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய சங்கேத குறிகள் ஆகும்.

     சாதகத்திற்கு பலன் பார்க்க செல்லும் நபர்கள் பெரும்பாலோனர்கள் சாதகரின் திறமையினை உரசி பார்க்க அவர்கள் கேட்கும் முதல் கேள்வி " சாதகருடன் உடன் பிறந் ஆண்,பெண் குழந்தைகள் எத்தனை பேர் " என கேட்டு அவர்கள் இதற்கான பதிலை சரியாக அளிக்கும் பட்சத்தில் ஏனைய பலன்கள் சரியான கோணத்தில் ஆராய்ந்து பலன் அளிக்கவில்லை எனினும் தலைசிறந்த சோதிடராக கருதப்படுகிறார்.

 ஏனைய பிற பலன்களை சரியாக ஆராய்ந்து தெளிவாக பலன் அளிக்கக்கூடிய சோதிடராக இருந்தாலும் உடன் பிறந்த சகோதர,சகோதரிகளின் எண்ணிக்கையினை சரியாக சொல்லவில்லை எனில் அவரால் success full astrologer ஆக வலம் வர இயலாது.

  ஆதலால் உடன் பிறந்தவரகளின் எண்ணிக்கையினை துல்லியமாக ஒரு சிலருக்கு சோதிடர்கள் சொல்ல தவறுவதற்கு மேற்கண்ட வகையிலான நிர்வாக சிக்கல்கள் இருப்பதால்தான் ஆகும்.சாதகம் பார்க்க செல்பவர் சாதகத்தில் கேட்கவேண்டிய நல்ல பல கேள்விகள் உள்ளது அதனை கேட்டு பலன் பெற முயலுங்கள் என கூறி இப்பதிவினை நிறைவு செய்கிறேன்.

 நன்றி.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையினை பெறலாம்.)

   வாட்ஸ் அப்
     97 151 89 647

       செல்
     740 257 08 99
       97 151 89 647

                           

 அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd,
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

1 comment:

Unknown said...

Clear information sir