Sunday, 7 October 2018

தனம் சேர்க்கும் யோகம் எனது சாதகத்தில் உண்டா ?

தனம் சேர்க்கும் யோகம் எனது சாதகத்தில் உண்டா ?

                        

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை !

கிரகங்கள் படுத்தும் பாடு

         ஒருவர் கை நிறைய காசு பணங்களை சம்பாரித்து வெற்றி பாதையினை நோக்கி முன்னேறி சென்றுகொண்டிருக்கும்
போது  அந்த வெற்றிக்கு "தனது அறிவோ அல்லது திறமையோ காரணம" என மார்தட்டிக்கொள்ளும் மானிடர் ,தமக்கு தோல்வி வந்து அடிப்படை தேவைக்கே பொருள் ஈட்ட முடியாத சூழல் உண்டாகக்கூடிய நிலையில் மட்டும் 
"கால நேரம் சரியில்லை" என்ற குற்றசாட்டினை வைப்பதை பெரும்பாலான நபர்களிடம் பொதுவாக காண்கின்றோம்.

    ஒருவர் உயர்வு பாதையினை நோக்கி முன்னேறி செல்வதற்கும்,தாழ்வு பாதையில் சரிந்து விழுவதற்கும் கோள்கள் நடத்தும் கோளாட்டமே காரணம் ஆகும்.

          ஒருவர் உயர்வு பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய கிரகநிலை,மற்றும் நடப்பு திசை ஆகிய உகந்ததாக இருப்பின் அவருக்கு எத்தனை தடைகள் வந்தாலும்,சரியான நிர்வாக மற்றும் கல்விதிறமை இன்றி இருந்தாலும் அவரது யோகபலனால் ஒரு குறிப்பிட்ட திசைக்குள்  நன்கு பொருள் ஈட்டி நல்ல சமூக அந்தஸ்தினை பெற்ற நபராக மாறிவிடுகிறார்.

           எவ்வளவோ அறிவு,திறமை மற்றும் கல்வியறிவு இருந்தும் உகந்த திசையமைப்புகள் அமையாதபட்சத்தில் சகலவற்றையும் இழந்து கடன்காரர் ஆகிவிடுகின்றனர்.

            ஒருவர் நன்கு பொருள் ஈட்ட வேண்டும் எனில் அவரது சாதகத்தில் முக்கியமாக தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம் நன்கு பலமடைந்து இருக்கவேண்டும்.

           அதற்கு அடுத்தபடியாக பாக்கிய ஸ்தானம் (வருமான ஸ்தானம் ) என அழைக்கப்படும் மூன்றாவது திரிகோணமான ஒன்பதாம் இடம் பலமடைந்து நிற்கவேண்டும்.

                             



             ஒருவரது வாழ்வில் ஜீவன ஸ்தானம் என அழைக்ப்படும் தொழி்ல் ஸ்தானமும் பலமடைந்து  நிற்க வேண்டும் .

            லாபஸ்தானமான பதினொறம் இடம் இதனை தொடர்ந்து வலுப்பெற்று நிற்கவேண்டும்.

              இவைமட்டும் அல்லாமல் தனம் சேர்க்கும் யோகத்தினை அளிக்கும் குருபகவானும் பலமடைந்து நிற்கவேண்டும்.
குருபகவான் தனத்தினை தர வழிவகுப்பவர் ஆவார்.ஆனால் சுக்கிரபகவான் செலவு செய்ய வைப்பவர் ஆவார்.

                   மேற்கண்ட நான்கு (2,9,10,11) ஸ்தானங்களும்,தனகாரகர் குருபகவானும்  பலமடைந்து தங்களுக்குள் பரிவர்தனையோ அல்லது பார்வை அல்லது தொடர்பினை பெற்று சுபர் பார்வை பெற்று இவர்கள் நால்வரில்  யாரவது ஒருவரது திசை நடப்பில் இருக்கும் காலங்களில் இவரது ஜீவன ஸ்தானம் காட்டும் தொழிலினை தொடங்கி  நிறைய காசு,பணம்களை சம்பாரித்து பொருளாதர நிலையில் சமூக அந்தஸ்து உடைய நபராக வாழ்வினில் வலம் வருவார்.

             தனயோகம் சிறப்பாக செயல்பட அவரது சாதகத்தில் சாதகரை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டன் என அழைக்கப்படும் லக்கனாதிபதியும் பலமடைந்து நிற்கவேண்டும்.

  ஒருவருக்கு கோசார பலன்களான ஏழரை சனி,அட்டம சனி நடைபெற்றுகொண்டிருக்கும் காலங்களிலும் ஒருவர் பொருள் ஈட்ட முடியாத சூழலையோ அல்லது தனாதிபதியின் வலிமையினை பொறுத்து பணமே சம்பாரித்தாலும் அவர் ஈட்டிய பணம் அனைத்தும் வந்த வழி தெரியாமல் செலவழிந்து மிச்சப்படாத சூழல் அமைந்து விடுவதும் உண்டு.

 இதேபோல ஒருவருக்கு மறைவிட அதிபதிகளின் திசை,புத்தி காலங்களில் (6,8 ) என்னதான் தனயோகம் உடையவர் ஆயினும் சம்பாரித்த பொருள் அனைத்தும் இழந்து நிற்பர்.

           உதாரணமாக  மேஷ ராசிக்கு 3,6 க்கு உடைய புதன்திசையினிலோ ,கன்னி ராசிக்கு 3,8 க்கு உடைய செவ்வாய் திசைகாலங்களிலோ ,துலாம் ராசிக்கு 3,6 க்குடைய குருபகவான் திசையினிலோ ,மீன ராசிக்கு 3,8 க்கு உடைய சுக்கிர திசையிலோ ஒருவர் என்னதான் பொருள் உடைய பெரும் தனக்காரர்களையும் கடுமையாக சோதித்து கஷ்ட ,நஷ்டங்களை தந்துவிடுகிறது.

                         

           மற்ற ராசிகளுக்கு ஓர் இடம் மறைவிடம் ஆக இருந்தாலும் அந்த கிரகத்தின் மற்றொரு வீடு சுப வீடாக அமைந்துவிடுவதுண்டு.
உதாரணமாக
சிம்ம வீட்டிற்கு குருபகவான் அட்டமாதிபதியாக இருந்தாலும் மற்றொரு ஆதிபத்தியம் ஐந்தாமிடம் ஆகி லக்கன யோகர் ஆகிறார் குருபகவான் .ஆதலால் அதன் திசை காலங்களில் முழுவதும் கஷ்டங்களையே தந்துவிடுவதில்லை.

          ஒருவர் பொருள் ஈட்ட வேண்டுமாயின் தன ஸ்தானத்துடன் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ஆம் இடங்களும் பலமடைந்து நிற்கவேண்டும்.

          ஒரு சிலர் எவ்வளவு முயன்று கடினமாக உழைத்தாலும் பணம் அவர்களது கையில் நிற்பதில்லை .இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ஆய்ந்து நோக்கில் அவரது சாதகத்தில் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் வலுப்பெற்று நின்று நல்ல வருமானத்தினை தரக்கூடிய நிலையில் அவரது சாதகத்தில் தனகாரகன் குருபகவானும், தனாதிபதி பலம் இழந்து காணப்படும் அமைப்பினை பெற்றிருப்பார்கள்.

      இது போன்ற தனயோகம் அற்றவர்கள் பரிகாரமாக தாம் சம்பாரிக்கும் பணத்தினை தன் கையில் வைத்திருக்காமல் குடும்பத்தில் யாருக்கு தனத்தினை சேர்த்து வைக்கும் யோகம் உள்ளவர்களிடம் கொடுத்து பணநிர்வாகம் செய்யவைக்கவேண்டும்.

            சிலநேரங்களில் முன்னரே ஏதாவது ஒரு நகையினையோ அல்லது இடமோ அல்லது இவை இரண்டையும் கடனாக வாங்கி தவணைமுறையில் கட்டும்படியான நிலையினை உருவாக்கி கொள்ளவேண்டும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் எழுதி கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஷ் அப்
     97 151 89 647

    செல்
   740 257 08 89
     97 151 89 647

                              


     அன்புடன்
 சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd
 ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.

Email
  masterastroravi@gmail.com

My blog. Google search
  AstroRavichandran. blogspot. com

  AstroRavichandransevvai.blogspot. com

.......

No comments: