Sunday, 7 October 2018

கிரகங்களின் சில விஷேஷ இணைவுகள்

கிரகங்களின் சில விசேஷ இணைவுகள்


                             

செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!

         கிரகங்கள் படுத்தும் பாடு

நன்றி நூல் ஆதாரம் ; ஜோதிட ஆராய்ச்சி திரட்டு

         கிரகங்கள் எப்பொழுதும் ஒரு ராசியில் தனித்து இருப்பதைவிட உடன் கிரகங்கள் இணைந்து இருப்பது நல்லது ஆகும்.இயற்கை சுப கிரகமாக குருபகவான்  இருந்தாலுமே அக்கிரகம் தனித்து நின்றால் நல்லது அல்ல என்பது சோதிட விதி .அதாவது "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசமாகும்" என்கிறார்கள்.

  இவ்வாறு இணைந்து நின்கின்ற பொழுது  "சூரியனுடன் இணையும் கிரகங்கள் அஸ்தங்க தோஷம் பெறும் என்றாலும் மேஷம்,கடகம்,சிம்மம் ,விருச்சிகம் மற்றும் தனுசு போன்ற ராசிகளுக்கு சூரியனுடன் இணைவு பெறும் கிரகங்கள் யோக பலன்களை தருகின்றன.சூரியனுடன் குரு, சந்திரன் ஆகிய முக்கூட்டு கிரகங்களின் இணைவு விசேஷ பலனை தரும்.

 மேஷ ராசிக்கு சூரியன் முதல் திரிகோணமான ஐந்துக்குடைய யோகர் ,கடக ராசிக்கு தன காரகர்,சிம்ம ராசிக்கு லக்கினாதிபதி ,விருட்சக ராசிக்கு ஜீவன காரகர் மற்றும் தனுசு ராசிக்கு இரண்டாவது திரிகோணம் என அழைக்கப்படும் பாக்கியாதிபதி என்பதுடன் ராசிக்கு யோகரும் ஆவார்.ஆதலால் இந்த அடிப்படையில் ஆய்ந்து இந்த ஐந்து ராசிகளுக்கும் சூரியனுடன் இணைவு பெறும் கிரகங்கள் மிகுந்த யோக பலன்களை தருகின்றன்.

 சூரியனுடன் அஷ்டமாதிபதி,ராகு மற்றும் கேதுக்களின் தொடர்பு அறவே சாதகருக்கு ஆகாது.அஷ்டமாதிபதியான ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைந்தாலும் அதன் பலனை இழப்பதில்லை.

  மேஷ ராசிக்கு தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சூரியன்,குரு மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களின் இணைவு விசேஷ பலனை தரும். குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடமானது களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு ஆயுள் ஸ்தானமாக வருவதால் இங்கு ஒரு கிரகம் உச்சம் பெறக்கூடாது என்பது சோதிட விதி எனினும் சில வேளைகளில் விதிவிலக்குகள் ஏற்படுவதும் உண்டு.இங்கு உச்சம் பெற்ற சந்திரனுக்கு குரு பகவானின் இணைவு சமன்செய்து மூலநூல்களில் கூறியுள்ளபடி கெடுபலன்களை தராமல் செய்துவிடும்.

                                

 சில நேரங்களில் பொது விதியானது கிரகங்களின் இணைவு, பார்வைக்கு ஏற்றவாறும் ,லக்கினத்துக்கு சுப,அசுப ஸ்தானங்களுக்கு ஏற்றவாறும் மூல நூல்களில் கூறியுள்ள பொது பலன்களில் சில மாற்றங்கள் உண்டாகலாம்.இதனை "சிறப்பு பலன்கள்" ஆகும்.

 மேஷ ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் இடமான கடக ,சிம்ம வீடுகளுக்கு சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் இணைவு ஆனது விசேஷ பலனை தரும்.

  மேஷ லக்கின காரர்களுக்கு சூரியனுடன் செவ்வாய்,ராகு மற்றும் கேது இணைவு உகந்தது அல்ல.பொதுவாகவே அரவான  ராகு எக்கிரகத்துடன் இணைந்தாலும் அதன் இயல்பான பலனையே மாற்றிவிடக்கூடிய தன்மை உரியது.
உச்சம் அடைந்த சூரியன், ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் சனிபகவானின் இணைவு கூட நல்லது ஆகும்.ஆனால் ராகு பகவானின் இணைவு நல்லதல்ல.இது சம்பாத்தியத்தில் சிக்கலை தர வாய்ப்பு உண்டு.

 ஒருவரது சாதகத்தில் இலக்கினத்திற்து இன்ன இடத்தில் இந்த கிரகம் இருந்தால் இதுபோன்ற பலன்களை தரும் என சோதிடர்கள் உறுதியாக பலன் அளிக்க வேண்டும் என்றால் அக்கிரகம் தனியாக எவர் பார்வை அல்லது இணைவு இன்றி இருக்கும்பொழுது மட்டும்தான் அப்படியே கூறியபடியான பலன்கள் சாதகருக்கு நடக்கும்.

 மேஷ ராசியில் ராசி அதிபதிக்கு ஜென்ம விரோதியான சனி இடம்பெறக்கூடாது என்பது பொதுவான விதி.அத்துடன் உச்சம் அடைந்துள்ள சூரியன் பகவான் உடனும் அவரது மைந்தரான சனி சேர்ந்து இருப்பது நல்லதல்ல என்றாலும் அந்த இடத்தில் சூரியன், சனி இவர்களுடன் குரு பகவானும் இணைவு பெறுவதன் அடிப்படையில் சோதிடர்களாகிய நாம் எதிர்பார்த்த பலனை விட நற்பலன்களை தரும்.

 எனவே ஒரு கிரகம் தரும் தனித்துவ பலன் ஆனது சேர்க்கை அல்லது பார்வை பெறும் கிரகங்களை பொறுத்து பலனில் மாறுதல் அடைகிறது.

மேஷ லக்கனத்திற்கு நான்காம் இடமான  கடகத்தில் சூரியன், குரு மற்றும் சந்திரன் இணைவு தொழஇல் விருத்தியை தந்து சுகபோக வாழ்வினை சாதகருக்கு தரும்.இதேபோல பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் தனுசுராசியிலும் கடகத்தினைப்போல  இம்முக்கூட்டு கிரகங்களின் இணைவானது சிறப்பான பலன்களை தரும்.

                                    

  மேஷ லக்கனத்திற்கு தொழில் ஸ்தானமான மகர வீட்டில் சூரியன், குரு  மற்றும் வளர்பிறை சந்திரன் இணைவு சிறப்பினை தரும். இங்கு சூரியனுடன் இணையும் சனி பகை கிரகம் என்ற பொழுதிலும் நீச பங்கம் பெற்ற குரு பகவான் இணைவு சூரியனுக்கு வலுவினை தந்து பாதிப்பிலிருந்து சமன் செய்து நற்பலனை தர வைக்கிறார்.

 மேஷ லக்கனத்திற்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சனி இணைவானது கெடுபலன்களை தந்துவிடுவதில்லை.
பதினொறாம் அதிபதி ஆட்சி பெற்று நிற்பது நல்லது எனினும் சப்தமாதிபதி பலம் பெறாத சூழலில் தாரதோஷத்தினை தந்துவிடுகிறது.

 இதுவரை மேஷத்தினை லக்கனமாக கொண்டு கிரகங்கள் தனித்து நிற்கின்ற நிலையில் (சுப/அசுப பலன்கள்)  தருகின்ற பலன்கள் அக்கிரகத்துடன் மற்ற கிரகங்களது பார்வை அல்லது சேர்க்கையினை பொறுத்து பலன்கள் எவ்விதம் மாறுபடுகிறது என்பதனை பார்த்தோம்.

 இதேபோல தொடர்ந்து வரும் அடுத்த பதிவுகளிலும் அடுத்தடுத்த ராசிகளை லக்கனமாக கொண்டு ஆராய்ந்து பார்ப்போம்.

  நன்றி!

 (தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
   97 151 89 647

       செல்
  740 257 08 99
    97 151 89 647

                                   

 அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
     M.Sc,MA,BEd,
  ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My email
  masterastroravi@gmail.com

My blogspot

AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com

..........................................

No comments: