குட்டி சுக்கிரன் குடியை கெடுக்குமா ?
செவ்வாய்பட்டி
- ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 176 )
ஒரு குழந்தையானது இப்பூமியில் ஜெனிக்கும்போது வானவீதியில் பரணி,பூரம் மற்றும் பூராடம் இவற்றுள் ஏதாவது ஒரு நட்சத்திரமானது தொடுவானத்தில் இருப்பின் அதனையே ஜென்ம நட்சத்திரமாக கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.எனவே அவ்வாறு பிறந்த குழந்தைக்கு சுக்கிர திசையே ஜெனன தசை இருப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஒரு குழந்தையானது சுக்கிர திசையில் பிறந்தால் உடனே அக்குழந்தையை பெற்ற பெற்றோரும்,உற்றாரும்
"ஆஹா ! குழந்தை குட்டிசுக்கிரனில் பிறந்துவிட்டது ,குடும்பத்தையே கெடுக்கபோகிறது " என வருத்தப்படுவதோடு இருந்தால் கூட பரவாயில்லை இந்த வருத்தத்தை அந்த குழந்தையிடமும் ,அந்த குழந்தையை பெற்ற தாயிடமும் காட்டுவதை எனது அனுபவத்தில் பல இடங்களில் பார்த்ததன் விளைவாக இவர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற விதத்தில் இப்பதிவினை பகிர்கிறேன்.
எனது அனுபவத்திலும்,ஆராய்ச்சியின் அடிப்படையில் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் எனும் கூற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
". குட்டி சுக்கிரன் குடியைக்கெடுக்கும்" எனும் சொல்லோடை ஏன் வந்தது எனில் சுக்கிரன் என்பவர் களத்திரகாரகர் என்பதோடு மட்டுமல்லாமல் காதல் நாயகர்,மன்மதன் எனும் காம கற்பனைகளுக்கும் சொந்தகாரகர்.சிற்றின்பத்திற்கு சொந்தக்காரகர் ஆவார்.
ஒருவரை சிற்றின்பத்தின் மயக்கத்திற்கு உட்படுத்தி உடலியல் கவர்ச்சியால் காதல் எனும் மாய எண்ணத்தில் விழுந்து இருபது வயதுவரை பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோரையும் மறந்து காதலித்தவனை/காதலித்தவளை இழுத்துக்கொண்டு ஓடி திருமணம் செய்து கொண்டு இன்றைய நவீன உலகின் அபரித பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அவர்களது காதல் என்ற உடலியல் கவர்ச்சி விலகி உண்மை முகம் வெளிப்பட்டு பிரிவுக்கோ அல்லது பிரச்சினைக்கோ உட்படுத்தும் என்ற அர்த்தத்தில்தான் நமது குட்டி சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்றார்கள்.
குட்டி சுக்கிரனில் பிறந்த குழந்தைக்கு சுக்கிர திசை இருபது வருடம் என்பதால் வாலிப வயதுவரை அத்திசை வரும் என்பதால் அவ்வாறு இருக்கும் சுக்கிரன் மேற்கண்ட வகையில் இன்னல்களை தரும் என்ற அர்த்தத்தில்தான் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்றிருப்பார்களே ஒழிய மற்றபடி சுக்கிர திசையில் பிறந்த குழந்தையானது உடல்,உயிர் மற்றும் பொருளாதர கஷ்டங்களை தந்துவிடுவதில்லை.
ஒரு நட்சத்திரத்திற்க்கு நான்கு பாதம் என்பதால் முதல் பாதம் எனில் சுக்கிர திசை 15-20 வருடத்திற்குள் வரும்.சுக்கிரனின் நட்சத்திரமான பரணி,பூரம்,பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு சுக்கிர திசையானது குறைந்த பட்சம் ஐந்து வருடத்திற்குள் வரும் என்பதால் நான் குறிப்பிட்ட மேற்கண்ட வகையிலான பாலியல் சார்ந்த பிரச்சினைகளை குழந்தைகளுக்கு தரபோவதில்லை.
சில நேரங்களில் சுக்கிரன் பெற்றுள்ள ஸ்தான அடிப்படையில் வேறுசில கஷ்டத்தை தரலாமே ஒழிய குட்டி சுக்கிரன் திசை தருவதில்லை.
சுக்கினோடு காமகாரகன் செவ்வாய் சேர்ந்துள்ள நிலையில் காம எண்ணம் மேலோங்கி நிற்கலாம்.சுக்கிரனோடு சனி சேர்ந்த நிலையில் பெண்களால் அவமானம்,தகாத உறவுநிலைகளை தரலாம்.
சுக்கிரனோடு ராகு சேர்ந்துள்ள சூழலில் காதல் மணம்,கலப்பு மணம் மற்றும் அந்நியதேசமனைவி போன்றவை அமையக்கூடும்.சுக்கிரனோடு சனி,செவ்வாய் மற்றும் ராகுசேர்ந்த நிலையில் மதியும் கெட பாலியல் சார்ந்த பிரச்சினைகளில் அடிபட்டு கெட்ட பெயர் வாங்க வைத்துவிடும்.
மேற்கண்ட வகையிலான முறையில் சுக்கிரன் பாதிக்கப்பட்டு குமரபருவத்தில் சுக்கிர திசையும் நடந்தால் வாழ்வில் தடம்புரண்டு,தடுமாறி கெட்ட பெயர் வாங்க வைத்துவிடும்.
இதுபோன்ற பல கருத்துக்களை உள்ளடக்கித்தான் நமது முன்னோர்கள் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் ! என கூறியுள்ளார்கள்.
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
வாட்ஸ்அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc. ,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail. com
My blogpot. click here
AstroRavichandransevvai blogspot com
AstroRavichandran. blogspot com
................................................
........
No comments:
Post a Comment