ஒரு ஜாதகம் யோக ஜாதகமாக அமைய......
செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை
ஒரு ஜாதகம் யோகமான ஜாதகமாக அமைய லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி ஆகிய இரண்டும் பலம் பெற்று அமைய வேண்டும்.
லக்கினாதிபதியும், ராசியாதிபதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
லக்கனம், லக்னாதிபதி ராசி மற்றும் ராசியாதிபதி ஆகிய இவற்றுள் ஏதாவது ஒன்றின் மீது குருவின் பார்வை விழ வேண்டும்.
ஒரு ஜாதகம் யோக சாதகமாக என்பதை அறிய வேண்டின் அந்த ஜாதகத்தில் 1, 5 ,9 மற்றும் 10 ஆகிய நான்கு ஸ்தானங்களும் வலுவுடன் இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் .
இந்த ஸ்தானாதிபதிகள் பலவீனப்படாமல் இந்த ஸ்தானங்களில் பாவர்கள் மற்றும் பகைவர்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இல்லாது இருக்க வேண்டும்.
இந்த ஸ்தானங்களில் இலக்கன பகைவர்கள் அமராமல் ஒரு ஜாதகம் அமைந்திருக்குமானால் அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் நினைத்ததெல்லாம் அடைய கூடியவராகவும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து எதிர்நீச்சல் போட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழக் கூடியவராகவும், சுகபோகங்களை அனுபவிக்க கூடியவராகவும் வாழ்வார்.
இப்படி ஒரு ஜாதகம் அமைவது மிக அபூர்வம் ஆகும். ஏதாவது ஒன்றோ இரண்டோ பாதிக்கவே செய்யும். வாழ்க்கையின் அடிமட்டத்திலேயே கிடந்து உழள்பவர்களின் ஜாதகத்தினை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மேற்கண்ட நான்கு ஸ்தானங்களும் பாதிப்படைந்து இருப்பதை காணலாம்.
ஜாதகத்தில் இந்த நான்கு ஸ்தானங்களும் பலமடைந்து இருந்தால் மட்டும் போதாது ,அதன் திசைகள் உரிய பருவத்தில் வந்து அவர்களுக்கு யோக பலனை தருவதாக அமைய வேண்டும்.
இள வயதிலிருந்து அவர்களுக்கு இலக்கனப் பகைவர்களின் திசையோ அல்லது பாவர்களின் திசையோ வந்து கொண்டிருந்தால் இந்த யோகங்கள் ஜாதகத்தில் இருந்தும் பலன் இல்லை.
தாண்டவமாலை என்னும் சோதிட நூலில் மேற்கண்ட இக்கருத்தை வலியுறுத்தும் ஒரு ஜோதிட பாடல் உள்ளது.
''ஒப்பரிய யோகத் துடனே பிறந்தோர்க்கும் தப்புசுபர் யோக திசை தானில்லையேல்-எப்பயனாம் ? கொத்தலரும் செங்குங் குமப்பூ பொதிசுமக்கும் கத்தபத்தை ஒப்பர்அவர் காண்"
பாடல் விளக்கம்
ஒரு ஜாதகத்தில் 1 ,5 ,9 மற்றும் 10 ஆகிய இடங்கள் பலமடைந்து நின்று அதே நேரத்தில் அத்திசைகள் உரிய வயதில் வராமல், ஜெனன காலத்தில் இருந்து பாவர்களின் திசையோ அல்லது பகைவர்களின் திசையோ நடப்பில் இருப்பின் அந்த உயரிய யோக பலன்கள் இருந்தும் பலன் இல்லை.
இதனை கழுதையானது வாசனையான குங்குமத்தை முதுகில் சுமந்தது போல் ஆகும். வாசனையான குங்குமப்பூவை முதுகில் சுமந்தாலும் அப்பூவின் அருமை, பெருமை கழுதைக்கு தெரியாது அதேபோல இந்த யோக பலன்கள் இருந்தும் பயனில்லை.
அதன் புத்திகளில் நன்மையை தராதா ? என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அதாவது பாவர்கள் அல்லது பகைவர்களின் திசையில் யோக புத்திகள் அந்த அளவுக்கு யோக பலனை தருவதில்லை.
யோக திசையில் அதன் யோக புத்திகள் மட்டுமே அதிக யோக பலன்களை தருகிறது.
நன்றி!
(தங்களது சாதகப்பலன், திருமணப்பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோதிடர்
சோ.ப. ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் ,
கரம்பக்குடி ,
புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment